திங்கள், 28 பிப்ரவரி, 2022

ராமன் விளைவு!

------------------------- 

கிருஷ்ணன் என்பவர் கொல்கொத்தா 

பல்கலையில் சி வி ராமனின் மாணவர். 

ஆய்வுக்காக (research) அவர் 1920ல் 

ராமனிடம் பதிவு செய்துகொண்டு 

பயின்று வந்தார். ராமனின் ஒளிச்சிதறல் 

ஆராய்ச்சியில் அவர் ராமனுக்கு 

உதவியாளராக இருந்தார். அவ்வளவுதான்.


தான் மறைக்கப்பட்டு விட்டதாகவோ 

தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் 

இருந்ததாகவோ கிருஷ்ணனுக்கு எந்தவிதமான 

மனக்குறையும் இருந்தது இல்லை. 


ராமன் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

scattering of light பற்றி ராமன் 1920 முதலே 

பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தார்.


தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பின் 

filament உருவாக்கத்திற்காக நூற்றுக் 

கணக்கான materialsஐ ஒன்று மாற்றி 

இன்னொன்றாக பரிசோதனை செய்து 

பார்த்தார். அதைப் போலவே ராமனும் 

கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரவங்களில் 

பரிசோதனை செய்து பார்த்தார்.


ஒருவன் எழுதிய கதையை அல்லது 

கவிதையை இன்னொருவன் தன் பெயரில்

போட்டுக் கொள்வதைப்போல, அறிவியலில் 

செய்வது கடினம்.


ராமன் விளைவு முர்ரா முழுக்க ராமனின் 

கண்டுபிடிப்பு. கிருஷ்ணன் இந்த ஆராய்ச்சியில் 

ராமனின் உதவியாளராக சிறப்பாகப் 

பணியாற்றினார். அவ்வளவுதான்.

      



ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

 உலக சதுரங்கப் போட்டிகளில்  

இந்தி மொழிப்பற்றாளர்களின் செலவில்  

இந்தி வர்ணனை உண்டு. தாலியறுத்த தமிழில் 

சதுரங்க வர்ணனை ஏண்டா இல்லை?



பதில் சொல்லுங்கடா கணிகைக்குப் 

பிறந்த பயல்களே! பதில் எங்கேடா 

கருவின் குற்றங்களே?


டிசம்பர் 2021ல் உலக சதுரங்க 

சாம்பியன் போட்டி துபாயில் நடந்தபோது 

தமிழி சதுரங்க வர்ணனைக்கு நான் 

முயற்சி செய்தேன்.ஆனால் என்னிடம் 

அதற்குத் தேவையான பணம் இல்லை.

எனவே முயற்சியைக் கைவிட்டேன்.


இப்போதுதான் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி 

முடிவடைந்தது. தமிழ்ச் சிறுவன் பிரக்ஞனந்தா 

இப்போட்டியில்தான் உலக சாம்பியன் 

கார்ல்சனை வென்றான். இப்போட்டிக்கு 

இந்தி வர்ணனை இருந்தது. ஆனால் 

தமிழில் இல்லை.


இந்தி வர்ணனையை அரசு செய்யவில்லை.

மொழிப்பற்று உடைய இந்தி இளைஞர்கள் 

பலர் சேர்ந்து தங்கள் செலவில் இந்தி 

வர்ணனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


தமிழில் அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்ய 

நான் முனைந்தேன். மூத்த ஊடகவியலாளர் 

தோழர் ஜோதிராமலிங்கம் அவர்களின் 

துணையுடன். கடைசியில் பணம் இல்லாததால் 

அம்முயற்சியைக் கைவிட்டோம்.


சீமானும் பெ மணியரசனும் இன்ன பிற 

தமிழ்ப் போலிகளும் என்ன செய்து 

கொண்டு இருக்கின்றனர்? தமிழ் தேசியம் 

பேசும் போலிப் பயல்களே, என்னடா 

செய்து கொண்டு இருக்கிறீர்கள்?


நாண்டுக்கிட்டு நின்னு சாவுங்கலே 

புழுத்த ஈனப் பயல்களே! 




    



சனி, 26 பிப்ரவரி, 2022

 லக்னோ, பிப். 25 - 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 10-ஆம் தேதி துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை நான்கு கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு பிப்ரவரி 27 அன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், உ.பி. தேர்தல் முடிவில் பாஜக-வுக்கு பெரும்பான்மை பலம் கிடைக் காது என்ற உண்மை பாஜக-வே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது பாஜக தலை வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஊடகங்கள் மூலமான கருத்துக் கணிப்புகள் மூலம் பாஜக வெற்றி பெற்று விடும் என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சி களை பிரச்சாரத்திற்கு முன்பே பாஜக கையில் எடுத்தது.
அந்த முயற்சிகள் வெற்றியைத் தர வில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ வெளி யிட்டுள்ள செய்தியில், பாஜக நடத்திய ஆய்வின் முடிவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், பாஜக தலைவர்கள் 300 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று முழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பெரும்பான்மையே கிடைக்காது என்ற ஆய்வுத் தகவல் அக்கட்சிக்குக் கிடைத்து ள்ளதாக, எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு காரணங்கள் ஆய்வில் முக்கிய இடம் பிடித்துள்ளன.
ஒன்று, “சமாஜ்வாதிக் கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் வைத்துக் கொண்ட கூட்டணி மற்றும் விவசாயிகளுக்கு எதிராக லக்கீம்பூர்-கெரியில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் ஆகிய இரண்டும், பாஜக-வுக்கு எதிராகத் திரும்பியதோடு, அக்கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மற்றொன்று, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாதவர்கள் மற்றும் உயர்சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் முழுமையாக சமாஜ்வாதி தலை மையிலான கூட்டணியை ஆதரிக்கிறார்கள்.
வாக்குகளைப் பிரிக்கும் வகையில் நிறுத்தப்பட்ட ஒவைசியின் வேட்பாளர்கள் சிறுபான்மையினர் வாக்குகளில் எந்தப் பிளவையும் ஏற்படுத்தவில்லை.
சிறுபான்மை யினர் சமாஜ்வாதிக் கட்சியின் பக்கமே அதிக மாக நிற்கிறார்கள். பட்டியல் வகுப்பினரின் வாக்குகளை ஒருங்கிணைத்து விட்டதாக பாஜக நினைத்திருந்தது. ஆனால், அதுவும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் அளவில் சென்று விடும்” என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது
. “பிரதமர் மோடியின் பிரச்சாரம் தங்கள் கட்சிக்கு உதவுகிறது” என்று பாஜக-வின் ஆய்வு தெரிவித்தாலும், சமாஜ்வாதி - ராஷ்டிரிய லோக் தளம் கூட்டணியால், பாஜக-வுக்கு 150 இடங்களில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது” என்ற உண்மை பாஜக தலைவர்களை அதிர்ச்சி யில் தள்ளியிருக்கிறது.
ஆய்வு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவர், “முதல் மூன்று கட்டங்களை நாங்கள் நம்பியிருக்கவில்லை. குறிப்பாக, இரண்டாவது கட்டம் சமாஜ்வாதியின் கட்டமாகும்” என்று வெளிப்படையாக கூறி யிருப்பதுடன், “ஆட்சியைத் தக்க வைப்பதற்கு, தேர்தலுக்குப் பின் புதிய கூட்டாளிகளைத் தேட வேண்டியிருக்கும்” என்றும், யதார்த்தத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த ஆய்வு உண்மைகள் தெரியவந்த தால்தானோ என்னவோ, “தேர்தல் முடிவு களுக்கு பின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்காக தமது கட்சி யின் (பாஜக) கதவுகள் திறந்திருக்கும்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பே உள்துறை அமைச்சர் அமித்ஷா வெட்கத்தை விட்டு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், “அதற்கு சிறிதும் வாய்ப்பில்லை” என்று ஜெயந்த் சவுத்ரி, வழக்கம்போல, முகத்தில் அடித்தாற்போல கூறிவிட்டார். இதன்பின், அமித்ஷா தனது வலையை பகுஜன் சமாஜ் கட்சியை நோக்கி வீசினார்
. “உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்றும் குறைந்துவிடவில் லை. பகுஜன் சமாஜ் கட்சி மக்களிடையே தனது செல்வாக்கை இழந்து விட்டதாக கூறுவது தவறு. அவர்கள் வாக்குகளைப் பெறுவார்கள் என நம்புகிறேன்” என்று அமித்ஷா நேசக்கரம் நீட்டினார்.
ஆனால், “தேர்தலுக்கு முன்போ, அல்லது பின்போ நான் பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுக்கு எதிராக செயல்படும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது’’ என்று மாயாவதியும் தற்போது கதவுகளை அடைத்து விட்டார்.
இதனால் தற்போதைய சூழலில் செய்வத றியாது பாஜக தவித்துக் கொண்டிருக்கிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷோ, இது வரையிலான நான்கு கட்ட வாக்குப் பதிவிலேயே இரட்டைச்சதம் (200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி) அடித்துவிட்டதாக நம்பிக்கை
தெரி வித்துள்ளார்.

நாஷ் சமநிலை பேணப்படும்வரை 
உலகப்போர் வராது!
-------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------- 
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 
உலகப்போர் வருமா என்ற கேள்வியை எழுப்பி 
உள்ளது. ஒருவேளை உலகப்போர் வந்தால் அதில் 
அணுஆயுதங்கள் பயன்படுத்தப் படுமா என்ற 
கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. 

இக்கேள்விகளுக்கு அறிவியல் துல்லியமான 
பதில்களை வைத்திருக்கிறது. உலகப்போர் 
குறித்தோ, அணுஆயுதப் பிரயோகம் குறித்தோ 
பேசவேண்டுமெனில், நாஷ் சமநிலை 
(Nash equilibrium) பற்றித் தெரிந்திருக்க வேண்டும் 
என்பது முன்நிபந்தனை ஆகும். உலகப்போரும் 
நாஷ் சமநிலையும் மிகவும் நெருக்கமான தொடர்பு 
உடையவை. எனவே நாஷ் சமநிலை பற்றித் 
தெரியாமல் உலகப்போர் பற்றிப் பேச இயலாது.

நாஷ் சமநிலை பேணப்படும் வரை அணுஆயுத 
உலகப்போர் வராது. நாஷ் சமநிலை 
மீறப்படுமானால் அணு ஆயுத உலகப்போர் வரும். 
இதுதான் நிலவரம்! ஆக உலகப்போரின் 
சூட்சுமம் நாஷ் சமநிலையில் இருக்கிறது. 
எனவே அது பற்றிப் பார்ப்போம். 

மூன்றாம் உலகப்போர் ஏன் இன்னும் நிகழவில்லை?
-----------------------------------------------------------------------------------
முதல் உலகப்போர் 1914 ஜூலையில் தொடங்கி 1918 
நவம்பர் வரை நடந்தது. இரண்டாம் உலகப்போர் 
செப்டம்பர் 1939ல் தொடங்கி செப்டம்பர் 1945ல் 
முடிந்தது. முதல் உலகப்போர் முடிந்த 20 ஆண்டுகளில் 
இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டது.

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில்,  
அதுவரையான  மானுட வரலாறு கண்டிராத 
புதுமையாக அணுகுண்டு வீசப்பட்டது.
1945 ஆகஸ்டு 6ல் ஹிரோஷிமா மீதும், ஆகஸ்டு 9ல் 
நாகசாகி மீதும் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் 
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணம் 
அடைந்தனர். உடனடியாக ஜப்பான் சரண் அடைந்தது. 
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. 
இது வரலாறு.

ஆனால் இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிவடைந்து, 
இன்று  75 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் 
மூன்றாம் உலகப்போர் எதுவும் உலகில் இன்னும் 
மூளவில்லை. இதன் காரணம் என்ன?  

30 ஆண்டுகளுக்குள் (1914-1945) இரண்டு உலகப் 
போர்களைப் பார்த்த இந்த உலகம், இன்று 
75 ஆண்டுகளாக இன்னொரு உலகப்போர் 
நிகழ்ந்து விடாமல் தவிர்த்து வருகிறதே, அது 
எப்படி சாத்தியமானது? 

அணுகுண்டின் தந்தை ஓப்பன்ஹீமர்!
----------------------------------------------------------
லட்சக்கணக்கான மக்களை ஒரு நொடியில் 
கொன்றுவிடும் பெரும் அழிவு சக்தியான 
அணுகுண்டு 1945ல் பிறந்தது.

ஐன்ஸ்டினின் பொருளும் ஆற்றலும் சமம் என்ற 
கோட்பாடே அணுகுண்டைப் பிறப்பித்தது. 
ஐன்ஸ்டினின் E = mc^2 என்ற சமன்பாடுதான் 
பேராற்றல் மிக்க ஒரு அணுகுண்டை உருவாக்க 
முடியும் என்று கோட்பாட்டு ரீதியாக உலகிற்குப் 
போதித்தது.

1939 ஆகஸ்டில், அன்றைய அமெரிக்க அதிபர் 
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கு (Franklin D Roosevelt 1982-1945)
ஐன்ஸ்டின் எழுதிய கடிதமே உலகின் தலைவிதியை 
மாற்றியமைத்த கடிதம் ஆகும். அக்கடிதத்தில், 
அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஹிட்லர் 
இறங்கியிருப்பதால், அமெரிக்காவும் அணுகுண்டு 
தயாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ஐன்ஸ்டின். 
அவரின் கருத்தை  ஏற்றுக்கொண்ட ரூஸ்வெல்ட், 
அணுகுண்டு தயாரிக்க முடிவு செய்தார். 

அதற்காக மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) 
என்றொரு திட்டத்தை 1942 ஆகஸ்டில் ஏற்படுத்தினார் 
ரூஸ்வெல்ட்.  மூன்று ஆண்டுகள் ஆய்வின் இறுதியில், 
அமெரிக்காவின் தலைசிறந்த அணுக்கரு விஞ்ஞானி 
ராபர்ட் ஓப்பன்ஹீமர் (Robert Oppenheimer 1904-1967) 
உலகின் முதல் அணுகுண்டை வெற்றிகரமாக 
உருவாக்கினார். இவரே அணுகுண்டின் 
தந்தை (Father of Atom bomb) என்று அழைக்கப் படுகிறார். 

நியூ மெக்சிகோவில் இருந்து 56 கிமீ தொலைவிலுள்ள 
ஒரு பாலைவனத்தில் உலகின் முதல் அணுகுண்டை 
அமெரிக்கா வெடித்துச் சோதனை செய்து பார்த்தது. 
டிரினிட்டி சோதனை (Trinity test) என்ற சங்கேதப் 
பெயர் பெற்ற இச்சோதனை ஜூலை 16, 1945ல் 
நடந்தது. அந்நாள் உலக வரலாற்றில் அழியா இடம் 
பெற்று விட்டது. டிரினிட்டி சோதனை நடந்து 
முடிந்த 21ஆம் நாளிலேயே ஆகஸ்டு 6ல் ஹிரோஷிமா மீது 
அணுகுண்டை வீசியது அமெரிக்கா. தான் தயாரித்த 
அணுகுண்டு எப்படிச் செயல்படுகிறது என்று அறியும் 
பொருட்டே அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா.  

காலந்தோறும் அணுகுண்டு!
--------------------------------------------
அணுகுண்டின் காலக்கோட்டை (Timeline) அறிந்திடுவோம்.
1) 1905 செப்டம்பர்: ஐன்ஸ்டின் E= mc^2 ஆய்வறிக்கை 
சமர்ப்பித்தல்.

2) 1939 ஏப்ரல்: யுரேனியம் கிளப் (Uranium Club) என்ற பெயரில் 
ஒரு விஞ்ஞானிகள் குழுவை அமைத்து அணுகுண்டு 
தயாரிக்க ஹிட்லர் முயற்சி.

3) 1939 ஆகஸ்டு: ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டின் கடிதம்.

4) 1942 ஆகஸ்டு: மன்ஹாட்டன் திட்டம் தொடக்கம்.

5) 1945 ஜூலை: அமெரிக்காவின் அணுவெடிப்புச் சோதனை.

6) 1945 ஆகஸ்டு: ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு.

7) 1945 ஆகஸ்டு: அணுகுண்டால் 2 லட்சம் பேர் மரணம்.       

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் வீழ்ச்சியைத் 
தொடர்ந்து, யுரேனியம் கிளப்பைச் சேர்ந்த பத்து 
ஜெர்மானிய விஞ்ஞானிகளைக் கைது செய்து சிறையில் 
அடைத்தனர் நேச நாட்டினர் (The Allies).

வெர்னர் ஹெய்சன்பெர்க் உட்பட அனைவரும் 
இங்கிலாந்தில் சிறையில் தள்ளப் பட்டனர்.பின்னர் 
1946 ஜனவரியில் ஹெய்சன்பெர்க் விடுதலை 
செய்யப்பட்டார். உறுதியின்மைக் கோட்பாட்டை
(uncertainty principle) கண்டறிந்து அதற்காக நோபல் பரிசு 
(1932ஆம் ஆண்டிற்கானது) பெற்றவர் ஹெய்சன்பெர்க் 
என்பது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.            

அணுஆயுத நாடுகள் எவை?
--------------------------------------------
இன்று இக்கட்டுரையை எழுதும் 2022 மார்ச்சு 
நிலவரப்படி, உலகில் எட்டே எட்டு நாடுகளிடம் 
மட்டுமே அணுகுண்டுகள் உள்ளன.

1) அமெரிக்கா 2) ரஷ்யா 3) இங்கிலாந்து 4) பிரான்சு 
5) சீனா  6) இந்தியா 7) பாகிஸ்தான் 8) வடகொரியா 
ஆகிய எட்டு நாடுகள் மட்டுமே இன்றைய உலகின் 
அணுஆயுத நாடுகள். சோவியத் ஒன்றியத்தின் 
தகர்வுக்குப் பின்னர் அதன் முந்நாளையக் 
குடியரசுகளான உக்ரைன் போன்றவை தங்கள் 
நாடுகளில் இருந்த அணுஆயுதங்கள் அனைத்தையும் 
ரஷ்யாவிடம் திரும்ப ஒப்படைத்து விட்டன. 

இஸ்ரேலிடம் அணுஆயுதம் உள்ளதாக ஒரு சந்தேகம் 
உள்ளது. இது வெறும் சந்தேகம்தான்! ஆதாரமோ 
நிரூபணமோ இதற்கில்லை. அடுத்து ஈரான் 
ஆணுஆயுதம் தயாரித்து விடக்கூடாது என்பதற்காக 
அந்நாட்டின் மீதான கண்காணிப்பும் கெடுபிடிகளும் 
அதிகரித்து வருகின்றன.    

எனவே அணுஆயுத நாடுகளின் எண்ணிக்கை 
எட்டுக்கு மேல் செல்ல வாய்ப்பில்லை. 

முதலில் வீசுவது நான் அல்ல!
----------------------------------------------
இந்தியாவின் அணுஆயுதக் கொள்கை No First use policy 
ஆகும். முதல் பிரயோகம் எமதல்ல என்பது இதன் 
பொருள். அதாவது ஒரு போரின்போது, அணு ஆயுதத்தை 
முதலில் பிரயோகிக்கும் நாடாக இந்தியா இருக்காது 
என்பது இதன் பொருளாகும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அணுஆயுதங்கள் 
என்பவை அச்சுறுத்தலுக்கு மட்டுமே ஆனவை 
(for the purpose of deterrence only).  எனவே இந்தியா 
அவற்றை ஒருபோதும் முதலில் பிரயோகிக்காது. 

அதே நேரத்தில் எவரேனும் இந்தியா மீது 
அணு ஆயுதங்களைப் பிரயோகித்தால் மிகக் 
கடுமையாக இந்தியா திருப்பித் தாக்கும். 
இந்தியாவின் இரண்டாவது அணுவெடிப்புச் 
சோதனை (பொக்ரான்-2)  1998ல் நடைபெற்றது. 
1999ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக
இருந்தார். அப்போது இந்தியாவின் அணுஆயுதக் 
கொள்கையாக இக்கொள்கை (No First use policy) 
இந்திய அரசால் வெளியிடப் பட்டது.


காலாவதி ஆகிவிட்ட உலகப்போர்கள்!
------------------------------------------------------------  
ஆக, அணுகுண்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள 
வேண்டிய  அடிப்படையான விவரங்களில் 
முக்கியமான சிலவற்றைப் பார்த்தோம். இந்தப் 
புரிதல் இல்லாமல் நவீன ராணுவப் 
போர்த்தந்திரத்தில் (modern military strategy) 
அணுகுண்டுகளின் பாத்திரம் பற்றிப் புரிந்து 
கொள்ள இயலாது.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் 
ஆகியும், மூன்றாம் உலகப்போர் மூளவில்லை. 
அது மட்டுமல்ல, இனி உலகப்போர் என்ற ஒன்றே 
இந்த உலகில் இருக்க இயலாது.

உலகப்போர் என்பது காலாவதியாகிவிட்ட 
ஒரு கோட்பாடாக (a lapsed doctrine) ஆகிவிட்டது. 
நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், 
இதுதான் உண்மை.

இதன் பொருள் போர்களே இல்லாத ஓர் உலகை 
நாம் சமைத்து விட்டோம் என்பதல்ல. போர்கள் 
இருக்கும். ஆனால் ஒவ்வொரு கண்டத்திலும் 
ஒவ்வொரு கடலிலும் நடக்கும் உலகளாவிய 
போர், ஒவ்வொரு நாட்டையும் உள்ளே இழுக்கின்ற  
உலகப் போர் இனிமேல்  ஏற்பட வழியில்லை. 

உலகப் போர்களின் சகாப்தம் (the era of world wars) 
முற்றிலுமாக முடிந்து விட்டது. அதிர்ச்சியில் 
மூச்சடைத்துப் போகிறது, நம்பவே முடியவில்லை 
என்றெல்லாம் சொன்னாலும் மேலே சொன்னது 
தெளிந்த உண்மை ஆகும்.

அமைதியை அருளும் அணுகுண்டு!
-------------------------------------------------------
உலகப் போர்களுக்குக் கொள்ளி வைத்தது யார்?
உலகப்போர் என்ற கோட்பாடே இன்றைய உலகில்
செல்லுபடி ஆகாது என்ற நிலையை ஏற்படுத்தியது யார்?
அணுகுண்டு என்பதுதான் விடை! 

அப்படியானால் கடந்த 75 ஆண்டுகளாக உலகில் 
நிலவும் அமைதிக்குக் காரணம் அணுகுண்டுதானா?
மூன்றாம் உலகப்போர் ஏற்படாமல் இருப்பதற்குக் 
காரணம் அணுகுண்டுதானா? ஓர் அழிவு சக்தியான 
அணுகுண்டு எப்படி அமைதிக்குக் காரணமாக 
இருக்க முடியும்? 

அணுகுண்டால் எப்படி அமைதியை நிலைநாட்ட 
முடியும்? நெருப்பை நெருப்பு அணைக்குமா? 
அணைக்குமென்றால் எப்படி?

அணுகுண்டின் மீதான அச்சம்தான் போர் 
வெறியர்களை சமாதானப் பிரியர்களாக 
மாற்றியுள்ளது  அணுகுண்டின் மிகவும் உக்கிரமான 
அச்சுறுத்தும் தன்மையானது (deterrence)
மொத்த உலகத்தையும் பீதியில் ஆழ்த்தி போருக்கு 
எதிரானவைகளாக எல்லா நாடுகளையும் 
மாற்றியுள்ளது. 

இவ்வாறு அணுகுண்டானது ஒரு எதிர்மறைப் 
பாத்திரத்தை வகித்து போருக்கு எதிரான 
உளவியலை உலக நாடுகளிடம் 
ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.  
  
லிட்டில் பாய், ஃபேட் மேன்!
------------------------------------------   
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட லிட்டில் பாய் (Little Boy) 
என்ற பெயருடைய அணுகுண்டின் ஆற்றல் 
15 கிலோ டன் TNT ஆகும்.  
(TNT = Tri Nitro Toluene என்னும் வெடி மருந்து).  
அதாவது 63 Tera Joule ஆற்றல் ஆகும். 

நாகசாகியில் வீசப்பட்ட ஃபேட்மேன் (Fat Man) என்ற 
பெயருடைய அணுகுண்டு 21 கிலோ டன் TNT ஆற்றலை 
உடையது அதாவது 88 Tera Joule ஆற்றல் ஆகும். இந்த 
அணுகுண்டின் ஆற்றலைப் புரிந்து கொள்ள 
முடிகிறதா? 1 கிராம் TNT வெடித்தால் தோராயமாக 
4000 ஜுல் ஆற்றல் வெளிப்படும் என்று புரிந்து 
கொள்ளவும்.  

1945ல் அணுகுண்டின் ஆரம்பக் கட்டத்தில்   
21 கிலோ டன் TNT என்ற அளவு ஆற்றல் கொண்ட 
அணுகுண்டுகளைத்தான் தயாரிக்க முடிந்தது. 
அப்போது அமெரிக்கா மட்டும்தான் அணுகுண்டுகளை 
வைத்திருந்தது. தொடர்ந்து பிற நாடுகளும் 
அணுகுண்டுகளைத் தயாரித்தன. அணுகுண்டுகளின் 
ஆற்றலும்  எண்ணிக்கையும் அதிகரித்துக் 
கொண்டே சென்றன. 1953ல் 1000 அணுகுண்டுகளை 
மட்டுமே வைத்திருந்த அமெரிக்கா, 1961ல் 
18,000 அணுகுண்டுகளைத் தயாரித்து விட்டது. 

ஹைட்ரஜன் குண்டுகள்!
--------------------------------------
ஆரம்ப கால அணுகுண்டுகள் யாவும் அணுக்கருப் 
பிளவு (nuclear fission) வகையிலானவை.  1952 நவம்பர் 1ல் 
அணுக்கருச் சேர்ப்பு முறையிலான குண்டை 
(Thermonuclear fusion bomb) உலகிலேயே முதன்முறையாக 
அமெரிக்கா உருவாக்கி வெடித்துச் சோதனை 
செய்தது. இது ஹைட்ரஜன் குண்டு என்று மக்களால் 
அழைக்கப் படுகிறது. ஹங்கேரிய அமெரிக்க 
விஞ்ஞானியான எட்வர்ட் டெல்லர் (Edward Teller 1908-2003)
ஹைட்ரஜன் குண்டை உருவாக்கினார். அவரே 
ஹைட்ரஜன் குண்டுகளின் தந்தை என்று கருதப் 
படுகிறார். 
    
அமெரிக்காவைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 
1953 ஆகஸ்டிலும், இங்கிலாந்து 1957 மேயிலும் 
ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்கின. சீனா 
1967ல், பிரான்சு 1968ல் என்று அடுத்தடுத்து 
ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்கிக் கொண்டன.     

அணுகுண்டுகளை விட ஹைட்ரஜன் குண்டுகள்  
ஆயிரம் மடங்கு ஆற்றல் மிக்கவை. 
குண்டுவெடிப்பின்போது வெளிப்படும் ஆற்றலை 
அணுகுண்டுகளில் கிலோ டன் TNT என்று 
குறிப்பிடுவதும், ஹைட்ரஜன் குண்டுகளில் 
மெகா டன் TNT என்று குறிப்பிடுவதும் வழக்கம். 
இதுவே இவ்விருவகை குண்டுகளின் ஆற்றலை 
உணர்த்தும். 
(1 கிலோ டன் = 1000 டன்; 1 மெகா டன் = 10 லட்சம் டன்).       


அணு ஆயுதம் தந்த படிப்பினை!
-------------------------------------------------
1970களில் அமெரிக்கா தயாரித்த B83 எனப்படும் 
அணுஆயுதம் 1.2 மெகா டன் TNT ஆற்றல் உடையது. 
அதாவது 5.0 Peta Joule ஆற்றல் உடையது. முன்னதாக 
சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா) மிகவும் 
பிரம்மாண்டமான ஒரு அணுஆயுதத்தை 1960களில் 
தயாரித்து இருந்தது. 

அதன் பெயர் ஜார் பம்பா (Tsar Bomba) என்பதாகும். 
இதன் பொருள் குண்டுகளின் அரசன் என்பது. 
100 மெகா டன் TNT ஆற்றலுடன் தயாரிக்கப்பட்ட 
அக்குண்டு பின்னர் நடைமுறை சாத்தியம் 
கருதி, 50 மெகா டன் TNT ஆற்றலுக்கு குறைக்கப் பட்டது. 

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட லிட்டில்பாய் குண்டின் 
ஆற்றலைப் போல 3800 மடங்கு ஆற்றல் உடையதாக 
இது இருந்தது. 

இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் உலகில் 
ஒரே ஒரு நாடு (அமெரிக்கா) மட்டுமே 
அணுகுண்டுகளைக் கொண்டிருந்தது.
காலப்போக்கில் எட்டு நாடுகளிடம் 
அணுகுண்டுகள் வந்து விட்டன. அவற்றின் 
ஆற்றலும் பல்லாயிரம் மடங்கு அதிகரித்து 
விட்டது. அவற்றின் எண்ணிக்கையும் 
அசுரத்தனமாகக் கூடி விட்டது. சுருங்கக் கூறின், 
ஒரே ஒரு அணுகுண்டை வீசினாலே 
கோடிக்கணக்கான மக்களை ஒரே நொடியில்
கொன்று விட முடியும் என்ற நிலை இன்று 
ஏற்பட்டு விட்டது. அதாவது இரண்டு நாடுகளுக்கு 
இடையிலான ஒரு போரில் அணுஆயுதம்  
பிரயோகிக்கப் பட்டால், கண்ணிமைக்கும் 
நேரத்துக்குள் இரு தரப்பிலும் சர்வ நாசம் ஏற்பட்டு விடும் 
என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இது அனைவராலும் 
உணரப் பட்டு விட்டது.

எனவே அணுஆயுதப் பிரயோகம் எந்த நிலையிலும் 
தவிர்க்கப் பட வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு 
அணுஆயுத நாடுகள் இயற்கையாக வந்து சேர்ந்தன. 
இது காலத்தின் கட்டாயம் என்று அனைவரும் 
உணர்ந்தனர். மனித குலத்தின் மொத்தச்  
சிந்தனையில் இவ்வாறு ஒரு அடிப்படை விலகல்  
(paradigm shift)  ஏற்பட்டது. அது அணுஆயுதப் 
பிரயோகத்துக்கு முடிவு கட்டுகிறது. 
இதன் பின்விளைவாக உலகப் போர்களும் 
முடிவுக்கு வருகின்றன.

இவ்வாறு உலகப் போர்கள் ஏற்படுத்தும் பேரழிவை 
அணுகுண்டானது தடுத்து விடுகிறது. அணுகுண்டு 
கண்டுபிடிக்கப் படாமல் போயிருந்தால், தடுப்பதற்கு 
யாருமின்றி உலகப் போர்கள் நடந்து கொண்டே 
இருந்திருக்கும். ஆனால் காலம் மாறிவிட்டது.

இனி உலகப்போருக்கு வாய்ப்பில்லை! உலகப்போர்களின் 
சகாப்தம் முற்றுப்பெற்று விட்டது. ஆக, அமைதியை 
அருளுவது அணுகுண்டே என்ற கூற்று வலுவான 
தர்க்கங்களின் மூலம் நிருபிக்கப் பட்டுள்ளது. 
ஒரு மாபெரும் அழிவு சக்தியாகப் பிறப்பெடுத்த 
அணுகுண்டு ஆக்க சக்தியாக மாறி, மூன்றாம் 
உலகப் போரைத் தடுத்து, கடந்த முக்கால் 
நூற்றாண்டு காலமாக உலக அமைதியை உறுதி செய்துள்ளது.

பேரழிவு உறுதி!
-------------------------
பித்தகோரஸ் தேற்றத்துக்கு மொத்தம் 367 நிரூபணங்கள் 
இருக்கின்றன. அதிர்ச்சி அடைய வேண்டாம். 
367 நிரூபணங்கள்!  அந்த அளவுக்கு இல்லாவிடினும்,  
இனி உலகப்போர்களே இருக்காது என்ற நமது 
தேற்றத்திற்கு மேலும் சில நிரூபணங்களைப் பார்ப்போம்.  

நவீன ராணுவப் போர்த் தந்திரத்தில் (Modern military strategy)
MAD doctrine என்னும் பிரசித்தி பெற்ற ஒரு கோட்பாடு 
உண்டு.(MAD = Mutually Assured Destruction). 

அணுஆயுதம் வைத்துள்ள இரண்டு நாடுகள் ஒரு போரில் 
ஒருவர் மீது ஒருவர் அணுஆயுதங்களைப் 
பயன்படுத்தினால்,இரு தரப்புக்கும் பரஸ்பரம் 
முழுமையான பேரழிவு ஏற்படும். எனவே அணுஆயுதப் 
பிரயோகத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே 
MAD கோட்பாடு. 

அணுஆயுதங்கள் உலகில் இருக்கும்வரை MAD கோட்பாடு 
செல்லுபடியாகும்   உலகின் அணுஆயுத நாடுகள் 
அனைத்தும் உணர்வுபூர்வமாக நடைமுறைப் 
படுத்துகின்ற ஒரு கோட்பாடு இது.

இதன் காரணமாகவே இரண்டாம் உலகப்போருக்குப் 
பின், அணுஆயுதப் பிரயோகமும் இல்லை; உலகப் 
போர்களும் இல்லை.  இவ்வாறு  MAD கோட்பாடு 
உலகப் போர்களை ஒழித்து, மானுடத்தின் மாபெரும் 
சமாதானத் தூதுவனாகத் திகழ்கிறது.

ஜான் வான் நியூமேன்!
----------------------------------
விளையாட்டுக் கோட்பாட்டின் (Game theory) முன்னோடி 
அமெரிக்காவின் கணித, இயற்பியல் மற்றும் பல்துறை 
அறிஞரான ஜான் வான் நியூமேன் (John von Neumann 1903-1957) 
ஆவார்.  

MAD கோட்பாடு, நாஷ் சமநிலை ஆகியவை 
விளையாட்டுக் கோட்பாட்டின் பெறுபேறுகளே 
(derivatives). இங்கு "விளையாட்டு" என்பது கிரிக்கெட், 
கால்பந்து, சதுரங்கம் போன்றவற்றைக் குறிக்காது.

மாறாக, உலகின் சமூக, அரசியல், பொருளியல், 
ராணுவ, வணிகச் சிக்கல்களையே "விளையாட்டு"  
என்ற பதம் குறிக்கிறது.    

நியூமேன் வகுத்தளித்த விளையாட்டுக் கோட்பாட்டின்
அடிப்படைத் தேற்றம் இதுதான். 
"பல்வேறு வகையான விளையாட்டுக்களில் ஒரு 
சமநிலையைக் கண்டறிவது எப்போதுமே 
சாத்தியம் ஆகும். இந்தச் சமநிலையில் 
இருந்து எந்தத் தரப்பு ஆட்டக்காரரும் 
ஒருதலைப் பட்சமாக விலகிச் செல்லக்கூடாது".   

(In a broad category of games it is always possible to find an 
equilibrium from which neither player should deviate unilaterally.
---Fundamental theorem of Game theory) 

நாஷ் சமநிலை!
------------------------
இத்தேற்றத்தின்படியே "நாஷ் சமநிலை" (Nash equilibrium) 
உருவாக்கப் பட்டது. இத்தகைய சமநிலைகளை 
ஏற்படுத்துவது சாத்தியமே என்று நியூமேனின் 
அடிப்படைத் தேற்றம் கூறுகிறது.

அமெரிக்கக் கணித மேதையான ஜான் நாஷ் 
(John Nash Jr 1928-2015) பல்வேறு விளையாட்டுகளுக்குத் 
தீர்வாக முன்வைத்த ஒரு சமநிலை அவரின் பெயரால் 
நாஷ் சமநிலை (Nash equilibrium) என்று வழங்கப் படுகிறது. 

நோபல் பரிசு (1994), ஏபெல் பரிசு (2015) இரண்டையும் 
பெற்றவர் ஜான் நாஷ். அவரின் வாழ்க்கை வரலாறு 
A beautiful mind என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் 
திரைப்படமாக 2001ல் எடுக்கப் பட்டது.
கணித அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் பார்க்க 
வேண்டிய ஒரு திரைக்காவியம் இப்படம். 

நாஷ் சமநிலைக்குப் பல்வேறு வரையறைகள் உள்ளன. 
எல்லோரும் புரிந்து கொள்ள வசதியாக நாம் 
பின்வருமாறு எளிமையாக வரையறுப்போம். 

"எந்த ஒரு முடிவுறு விளையாட்டிலும் அதில் 
பங்கேற்றுள்ள அத்தனை ஆட்டக்காரர்களும் 
அதிகபட்சமான ஆதாயத்தைப் பெற இயலும். 
இந்த அதிகபட்ச ஆதாயமே நாஷ் சமநிலை ஆகும்.
இதைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆட்டக்காரரும் மற்ற 
ஆட்டக்காரர்களின் சாத்தியமான நடவடிக்கைகளைக் 
கருத்தில் கொண்டிருக்க வேண்டும்".


ஒத்துழைப்பற்ற விளையாட்டுக்கள்!
----------------------------------------------------------
இந்தியா சீனா போர் வருமா?
போர் வந்தால் இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா?
உலகப்போர் மூளுமா?
அமெரிக்கா ரஷ்யா மீது போர் தொடுக்குமா?

கழுத்தை நெரிக்கும் கேள்விகள் இவை. இவற்றுக்குப் 
பதில் தேடாமல் வெறுமனே கடந்து போக முடியாது.
இக்கேள்விகளை விளையாட்டுக்கள் என்று 
எடுத்துக் கொள்வோம். இவற்றை ஒத்துழைப்பற்ற  
விளையாட்டுக்கள் (non cooperative games) என்கிறார் நாஷ்.
இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா என்ற கேள்விக்கு 
சீனா பதில் சொல்லாது. எனவே இது ஒத்துழைப்பற்ற 
விளையாட்டு. எனவே பதிலை நாம்தான் தேட வேண்டும்.

பதிலை எப்படித் தேடுவது? முடிவெடுப்பவர்கள் அல்லது 
எழுத்தாளர் ஜெயமோகன் பாணியில் சொன்னால் 
விதி சமைப்பவர்கள் (decision makers) என்ன செய்வார்கள் 
என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இங்குதான் நாஷ் சமநிலை பயன்படுகிறது.
கொடுக்கப்பட்ட சூழல் (இந்தியா மீது சீனா அணுகுண்டு 
வீசுமா?)  ஒரு முடிவுறு விளையாட்டு (finite game) 
என்கிறார் நாஷ். ஒவ்வொரு முடிவுறு விளையாட்டுக்கும் 
ஒரு  தீர்வு உண்டு என்கிறார் நாஷ். 
.  
இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 
நயன்தாராவுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்குமா 
என்று கேட்கிறான் ஒரு இளைஞன்.
இந்தக் கேள்வியை ஒரு விளையாட்டு என்கிறார் நாஷ். 
இது முடிவுறு விளையாட்டு! எனவே இதற்குத் தீர்வு 
உண்டு. மேலும் இது ஒத்துழைப்பற்ற விளையாட்டு. 
ஏனெனில் விதி சமைப்பவரான நயன்தாரா 
இளைஞனின் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டார். 
எனவே  நாஷ் சமநிலையைப் பயன்படுத்தி நாம்தான் 
இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும். அன்றாட 
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இதுபோன்ற அத்தனை 
சிக்கல்களுக்கும் ஒரு நாஷ் சமநிலையை 
உருவாக்கித்  தீர்வு காண இயலும். இதுதான் 
விளையாட்டுக் கோட்பாட்டின் மகிமை! 

இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா?
-------------------------------------------------------------
இக்கேள்விக்கு நாஷ் சமநிலையைப் பயன்படுத்தி 
விடை காணலாம். இந்தியா சீனா இரண்டுமே அணுஆயுத 
நாடுகள். அணுஆயுதங்களைப் பிரயோகிப்பது என்றால் 
இருதரப்பும் பிரயோகிக்கும். அத்தோடு இருதரப்பும் 
பரஸ்பரம் சர்வ நாசத்தைச் சந்தித்து மண்ணோடு 
மண்ணாகப் போகும்..

இரண்டு நாடுகளுமே அறிவார்ந்த நாடுகள். எனவே 
இவ்விருவரும் மிகச் சிறந்த முடிவையே எடுப்பார்கள்.
அதாவது அணுஆயுதங்களைப் பிரயோகிக்கக் கூடாது 
என்ற முடிவையே எடுப்பார்கள். அதன் மூலம் நாஷ் 
சமநிலையை இருவரும்  பேணிக் கொள்வார்கள் 

ஒவ்வொரு தரப்பும் நாஷ் சமநிலையில் 
இருக்கும்போதுதான் அதிகபட்ச ஆதாயத்தைப் பெற 
முடியும். நாஷ் சமநிலையில் இருந்து விலகினால் 
இழப்புத்தான் ஏற்படும். 

அணுஆயுதங்களைப் பிரயோகிப்பது என்பது 
நாஷ் சமநிலையில் இருந்து விலகுவதாகும்.
அது இழப்பை ஏற்படுத்துவதால் அதை  யாரும் 
விரும்ப மாட்டார்கள்.

எனவே எந்த நிலையிலும் சீனா இந்தியா மீது 
அணுகுண்டை வீசாது. சீனா மட்டுமல்ல, உலகின் 
எந்த ஒரு அணுஆயுத நாடும் பிறிதொரு அணுஆயுத 
நாட்டின் மீது அணுகுண்டை வீசாது. எந்த ஒரு 
நாடும் நாஷ் சமநிலையில் இருந்து 
விலக முன்வராது. கனியிருப்பக் காய் கவர்ந்து 
இழப்பை ஏற்க  எந்த நாடும் தயாராக இருக்காது.  

ஆக இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் 
நாஷ் சமநிலையைப் பேணுவதையே விரும்பும். 
இவ்வாறு நாஷ் சமநிலை நிரந்தரமாகப் 
பேணப்படுவதால் இனி இந்த பூமியில் 
அணுஆயுதப் பிரயோகம் இருக்காது. 
போர்களும் இருக்காது. 
ஏனெனில் இது புதியதோர் உலகம்!
***********************************----------------
(நன்றி: அறிவியல் ஒளி மார்ச் 2022) 

   
 
 

 

    
       



  

  
 
        
  
 
       
  




 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

உலக சதுரங்க சாம்பியன் கார்ல்சனை 
ஒரு ஆட்டத்தில் வென்று
பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற 
தமிழ்ச் சிறுவன்  பிரக்ஞானந்தா!   
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
பிரக்ஞானந்தா குறித்து சில நாட்களுக்கு முன்பே 
பலரும் எழுதி விட்டார்களே! நீங்கள் தாமதமாக 
எழுதுகிறீர்களே என்று சிலர் கேட்கலாம்!

அவர்கள் போட்டி முடியும் முன்னரே எழுதினார்கள்.
நான் போட்டியின் காலிறுதி (QUARTER FINAL)
முடிந்ததும் எழுதுகிறேன். அதுதானே முறை!

பிரக்ஞானந்தா பங்கேற்ற சதுரங்கப் போட்டி 
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் (AIRTHINGS MASTERS 2022)
என்னும் போட்டியாகும். இது Champions Chess Tour என்னும் 
போட்டியின் பகுதியாகும். கொரோனா காரணமாக 
பயணக் கெடுபிடிகள் இருப்பதால் இப்போட்டி 
ஆன் லைன் மூலமாக தற்போது நடந்து வருகிறது.

சதுரங்கப் போட்டிகள் மூன்று formatகளில் நடைபெறும்.
Classical, Rapid, Lightning என்னும் மூன்றே அவை. இதில் 
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் என்னும் இப்போட்டியானது 
விரைவுச் சதுரங்கம் (Rapid Chess) ஆகும்.

அறிவியல் ஒளியின் அண்மைய இதழ் ஒன்றில் 
"அறிவியலாய் ஒளிரும் சதுரங்கம்" என்ற என் 
கட்டுரையில் இம்மூவகைப் போட்டிகள் குறித்தும் 
விரிவாய் எழுதி இருக்கிறேன். அதைப் படியுங்கள்.  

காலிறுதி, அரையிறுதி, இறுதி என்று மூன்று கட்டமாக 
பெப்ரவரி 19 முதல் 26 வரை இப்போட்டி நடந்து வருகிறது. 
பெப்ரவரி 19-23 காலிறுதி; பெப்ரவரி 24 அரையிறுதி;
பெப்ரவரி 25-26 இறுதி! தற்போது அரையிறுதி நடந்து 
வருகிறது. இது நாக் அவுட் முறைப்படி நடக்கிறது.

காலிறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் சிறுவன் 
பிரக்ஞானந்தா உட்பட 16 வீரர்கள் பங்கேற்றனர்.
இது ரவுண்ட் ராபின் முறையிலான ஆட்டம் ஆகும்.
எனவே ஒவ்வொருவரும் 15 ஆட்டங்கள் ஆட வேண்டும்.

இந்த 15 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில், அதாவது 
எட்டாவது ஆட்டத்தில், பிரக்ஞானந்தா 
உலக சாம்பியன் மாக்னஸ்  கார்ல்சனை எதிர்கொண்டார்.
அந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா  வென்றார்; கார்ல்சன் 
தோற்றார். உலக சாம்பியனை எதிர்த்து ஒரு ஆட்டத்தில் 
பிரக்ஞானந்தா  வெற்றி பெற்றதால் அது பெரும் 
சாதனையாக இந்தியாவில் பார்க்கப் படுகிறது.

அதே நேரத்தில் 16 வீரர்கள் பங்கேற்ற காலிறுதியில் 
தர வரிசைப்படியான முதல் 8 பேர் மட்டுமே 
அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். 19 புள்ளிகள் 
பெற்று 11ஆவது இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா 
அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்பதை 
நாம் உணர வேண்டும். இதிலொன்றும் குறையில்லை!
ஏனெனில் பிரக்ஞானந்தா 16 வயதுச் சிறுவன்தான்!
இன்னும் அவன் மைனர்தான்! 

நெப்போ 29 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் 
கார்ல்சன் 25 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் 
உள்ளனர். எட்டாம் இடத்தில் வின்சென்ட் கெய்மேர் 
22 புள்ளிகளுடன் உள்ளார். இந்த 8 பேரும் 
அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.   
(வெற்றி = 3 புள்ளி; டிரா = 1 புள்ளி; தோல்வி = 0 புள்ளி) 
 
15 ஆட்டங்கள் ஆடியதில், பிரக்ஞானந்தா 5 வெற்றிகள் 
(15 புள்ளிகள்), 4 டிராக்கள் (4 புள்ளிகள்) மற்றும் 6 தோல்விகள் 
(0 புள்ளிகள்) அடைந்து மொத்தம் 19 புள்ளிகளைப் 
பெற்றுள்ளார். 

பிரக்ஞானந்தா யார்? இவன் ஒரு தமிழ்ச் சிறுவன்! 
சென்னையைச் சேர்ந்தவன். பச்சைத் தமிழன்.
தற்போது வயது 16 (DOB: 10 ஆகஸ்டு 2005).
இவனின் தந்தை கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு.
இவனின் அக்காள் வைஷாலி பெண் கிராண்ட் மாஸ்டர் 
(WGM = Woman Grand Master) ஆவார். 

மிக்க இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் 
வென்றவர்களில் இவனும் ஒருவன். ஜூன் 2018ல் தனது 
12 வயது 10 மாதம் 13 நாளில் பிரக்ஞானந்தா கிராண்ட் 
மாஸ்டர் பட்டம் வென்றான்.

மாக்னஸ் கார்ல்சனை இதுவரை மூன்று இந்தியர்கள் 
மட்டுமே தோற்கடித்துள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த்,
ஹரிபாபு, பிரக்ஞானந்தா ஆகிய மூவர்!

பிரக்ஞானந்தா மகத்தான உலக சாதனையை 
நிகழ்த்தி இருந்தும், இந்திய அரசு அவனைக் 
கண்டுகொள்ளவில்லை என்று சில கருவின் குற்றங்கள் 
எழுதி அரிப்புத் தீர்த்தன. புழுத்த தற்குறிகள் அவர்கள்.
ஆனால் உண்மையானது இவர்களின் வக்கிர புத்தியின் 
மூளைக் கழிவுக்கு எதிராக இருக்கிறது.

நாட்டின் பிரதமர் மோடி தமது டுவிட்டர் செய்தியில் 
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி முடியும் முன்னரே,
எட்டாம் ஆட்டத்தில் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா
பெற்ற வெற்றியைப் பாராட்டி எழுதி உள்ளார்.

கடந்த காலத்தில் இந்தியப் பிரதமர்கள் யாரும் 
இவ்வாறு quick response செய்ததில்லை. அப்படிச் 
செய்வது இந்தியப் பிரதமர்களின் வழக்கமாகவோ 
நடைமுறையாகவோ இருந்ததில்லை. மத்திய 
அரசின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனிப்போர் 
இதை நன்கறிவார்கள். அந்த வகையில் பிரதமர் 
மோடி பெரிதும் வேறுபட்டவராக இருக்கிறார்.
விளையாட்டு வீரர்கள் பிரதமரின் நேரடி 
கவனத்தையும் பாராட்டையும் எளிதில் பெற்று 
விடுகின்றனர்.

15 ஆட்டங்கள் கொண்ட போட்டி முடியும் முன்னரே 
எட்டாவது ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றவுடனே 
பிரதமரே முன்வந்து பாராட்டுகிறார் என்றால் 
பிரக்ஞானந்தா கொடுத்து வைத்தவர் என்பதே பொருள்.

குவார்ட்டர் பைனலில் தோற்றுவிட்ட ஒரு பையனை, 
நாட்டின் பிரதமர் முந்திரிக் கொட்டை போல முந்திக் 
கொண்டு பாராட்டுவது சரியான மரபு அல்ல 
என்கிறார் ஒய்வு பெற்ற ஒரு மூத்த மத்திய அரசு 
அதிகாரி! உண்மை இப்படியிருக்க, இந்திய அரசு 
தமிழனாக பிரக்ஞானந்தாவைக் கண்டு கொள்ளாது 
என்று எழுதினான் ஒரு கருவின் குற்றம்! அவன் 
திருந்துவானா? நாணுவானா? ஒருநாளும் மாட்டான்!
They are INCORRIGIBLE! 

பிரக்ஞானந்தா நிச்சயம் சாம்பியனை எதிர்த்து ஆடும் 
சாலஞ்சராகவும் தொடர்ந்து உலக சாம்பியனாகவும்
ஆவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. என்னுடைய 
ஆயுளுக்குள் அது நடந்தால் மகிழ்வேன். ஆனந்தக் 
களிநடம் புரிவேன்!
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
டானியா சக்தேவ் குறித்து முன்பே பலமுறை எழுதி 
இருக்கிறேன். டானியா ஒரு பெண். சதுரங்க 
அனைத்துலக மாஸ்டர். மிகச் சிறந்த சதுரங்க 
வர்ணனையாளர். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில்  
அவர் வர்ணனை செய்து வருகிறார். அதைக் கேட்டீர்களா?

கேட்கவில்லை! நல்ல காரியம் எதையுமே வாழ்க்கையில் 
செய்தது இல்லை, அப்படித்தானே! ஆங்கிலம் தெரியாதோ?
இங்கிலீஷ் தெரிந்தால்தான் டானியாவின் போதையூட்டும் 
வர்ணனையைக் கேட்க முடியும்.

CHESSBASE இணையதளத்தில் இந்தியில் வர்ணனை உண்டு.
தாலியறுத்த தமிழில் ஏன் சதுரங்க வர்ணனை இல்லை?
பதில் சொல்லுங்கடா தமிழ தமிழ் என்று போலிக்கூச்சல் 
போடும் கருவின் குற்றங்களே!

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டிகள் குறித்து 
தமிழில் ஏதாவது கட்டுரையை யாராவது எழுதி 
இருக்கிறார்களா? என்னுடைய இந்தக் கட்டுரையைத் 
தவிர இப்போட்டி குறித்து யாரும் எழுதவில்லை!
என்னைத்தவிர ஒருவரும் எழுத மாட்டார்கள்!
*****************************************************
   
சீமான், பெ மணியரசன் இன்ன பிற 
தமிழ்ப் போலிகளுக்கு ஒரு தமிழ்ச் சிறுவன் 
இப்படி  ஒரு சாதனையை நிகழ்த்தி இருப்பது 
தெரியுமா? பேப்பர் கீப்பர் படிப்பார்களா 
இவர்கள்? 
  

தானியா ஸக்தேவ் குறித்து இதே முகநூலில் 
நான் டிசம்பர் 2021ல் எழுதிய கட்டுரைகளைத் 
தேடி எடுத்துப் படியுங்கள்.  


அறிவியலாய் ஒளிரும் சதுரங்கம் என்ற என் 
கட்டுரையை அறிவியல் ஒளி இதழில் 
படியுங்கள். அறிவியல் ஒளிக்குச் சந்தா 
கட்டுங்கள். நந்தனம் புத்தகச் சந்தைக்குச் 
சென்று அங்கே டெக்னோ புக்ஸ் கடையில் 
ஸ்டால் எண்: 485, 486 அறிவியல் ஒளி 
ஏட்டுக்குச் சந்தா கட்டுங்கள்.  

            அறிவியல் ஒளி ஏட்டின் ஆசிரியர்
திரு நா சு சிதம்பரம் அவர்கள்.
தொடர்புக்கான அலைபேசி: 94440 63497. 
    


  

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

Why we need a casteless society? 
--------------------------------------- 
Caste is a regressive social system which is undemocratic in every aspect
and untouchability is its most cruel form.  The slogans of the French revolution 
Liberty, Equality and Fraternity have aroused the entire humanity to fight against 
the social evils. Caste, the social evil of India is yet to be abolished. 

Caste is like a slow acting poison. It divides! It divides the people, divides 
the society, divides the country. Caste places one section of the society 
against another. Caste never unifies the society as a whole. Caste always 
disunites. So naturally caste is a hindrance to the development of the society.

The legendary Greek philosopher Aristotle has said that "Man is a social 
animal". He  said “Man is by nature a social animal; an individual who is 
unsocial naturally is beneath our notice. Society is something that precedes 
the individual.” Aristotle has clearly said that man cannot live in isolation.
Man cannot advance individually. 

Our caste system works against the concept of Aristotle. It has  made  
India into a sectarian society.  The men of India are unsocial. The unification 
of the society and  the feeling of oneness is must for any society to advance. 
Caste works against all these spirits and therefore advancement of the 
society is seriously compromised.           

A caste ridden society and casteless society are distinctly different.
A casteless society will move forward while a caste society moves 
backward. Caste is a stumbling block and no meaningful development 
is possible  with caste centred society. A caste society is a CURSE while 
a casteless society is a BLESSED one.

Mahatma Gandhi has considered the untouchability as a SIN. He had revolted 
against it since his young age. In independent India, laws were enacted 
terming untouchability a criminal  offence and stringent penal actions 
were prescribed. Consequently untouchability in India was eradicated 
to a great extent.

Legal actions and punitive measures have proved to be successful 
in eradicating the untouchability. But annihilation of caste is not easy.
Caste works in the mind; it dwells in the brain. it comes right from the 
birth. When a child is born, caste is also born along with. A birth 
without caste is unthinkable in India now. 

Annihilation of caste as dreamt by Dr Ambedkar is still an unfinished 
agenda. Dr Ambedkar had valiantly fought against the caste system and
untouchability and succeeded significantly. He gas guaranteed social justice 
to some extent through reservations in education and employment. But then 
caste is not yet annihilated. 

Our history shows that in various parts of India many social reformers had 
fought against the evil caste system. In Tamilnadu, to quote a few, 
EVR Periyar, Ramalinga Vallalar, Poet Bharathiyar, Iyaa Vaikundar and 
Narayana Guru in Kerala are exemplary fighters. 

Caste is still alive but the fight against it is on and on. Indian people 
will succeed one day in their fight against the caste, and the day will 
dawn and we all will witness the birth of a new India which is CASTELESS,
CREEDLESS and CLASSLESS. Let us strive hard and march on. 
I earnestly hope that such a mighty India will blossom within our lifetime. 
************************************************   
       

சனி, 19 பிப்ரவரி, 2022

 வெண்பா வெண்பா  வெண்பா 

இப்போது இங்கு ஐந்து வெண்பாக்களைத் 

தந்துள்ளேன். அவற்றைப் படியுங்கள்!

--------------------------------------------------

வளையணிந்த பெண்ணே தொகைஎட்டும் கேளாய்

திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்

சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை

சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.

------------------------------------------------

திருமுருகு சீர்பொருநர் நற்சிறுபாண் நற்பெரும்

பாண்எனஆற் றுப்படை மீன்மதுரைக் காஞ்சிமுல்லைப்  

பாட்டுநெடு நல்வாடை பட்டினப்பா லைகுறிஞ்சிப்

பாட்டும லைபடுக டாம்.

------------------------------

பாடா வதியே தரக்குறைவே வேண்டாமே 

கேடான மென்பொருளே இந்தியா --நாடா  

பெகாசசே  பேயே பிசாசே இகழ்வோமே  

ஆகாதென் றுன்னை யே.     

----------------------------------------

பசும்பொன்னில் தோன்றிய ஆடகப்பொன் தெய்விகமும் 

தேசியமும் கண்ணிரண்டாய்க் கொண்டகோ- காசுபணம் 

தேடாமல் மாசெதுவும் அண்டாமல் வாழ்ந்தொளிர்ந்த 

தேவரையா வாழியவே நீடு.

------------------------------------------

வாங்கிய கோடிபத்தில் என்பங்கு எங்கேகூறு

வீங்கிடும் கன்னம் என்றுகையிலே --ஓங்கிய

வாளுடன் அங்கே பொலிட்பீரோ கூட்டத்தில்

தோள்தட்டும் நம்அருணன் பார்.

-----------------------------------------

வெண்பாவுக்கோர்  புகழேந்தி!

புகழேந்திப் புலவர் பாண்டி நாட்டவர்.

அவர்தான் நான்!

--------------------------------------------------------


ethu uyarthamizh en



தீர்மானிப்பது யார்?
-----------------------------
எது உயர்தமிழ் என்பதை யார் 
தீர்மானிப்பது? தமிழ்ச் சமூகத்தின் 
உற்பத்தி முறை தீர்மானிக்கிறது.
இது யாருடைய உரிமையும் 
சார்ந்த விஷயம் அல்ல.

மார்க்சியம் ஒரு சமூகத்தை 
அதன் உற்பத்திமுறை கொண்டு 
ஆய்கிறது. இன்று இந்த 2022ல் 
பொருள் உற்பத்தியின் மொழியாக 
தமிழ் இல்லை. தமிழ்ச் சமூகத்தின்
இந்தியச் சமூகத்தின் பொருள் 
உற்பத்தியின் மொழியாக தமிழ் 
இல்லை. ஆங்கிலமே உள்ளது. 

எது பொருள் உற்பத்தியின் 
மொழியோ அதுவே தலைமையில் 
இருக்கும். அந்த மொழி மட்டுமே 
வாழும்; ஏனைய மொழிகள் வழக்கு 
வீழ்ந்து விடும். எனவே 
பொருளுற்பத்தியின் மொழியாக. 
அறிவியலின் மொழியாக தமிழை 
ஆக்க வேண்டும். அதைச் 
செய்பவன் யான்.

ஒளவையாரின் தமிழுக்கு தமிழ்ச் 
சமூகத்தின் இன்றைய 
பொருளுற்பத்தியில் என்ன 
மதிப்பு உள்ளது என்பதைப் 
பொறுத்துத்தான் அது உயர்தமிழா 
அல்லவா என்று தீர்மானிக்க இயலும்.

இன்றைய பொருளுற்பத்தியில் பயன்படும் 
அறிவியல் தமிழே உயர் தமிழ் ஆகும். 
இது நிலைபேறு உடைய உண்மை. வெறும் 
குட்டி முதலாளித்துவக் கோபத்தால் 
உண்மையை மறைத்து விட முடியாது.

தமிழுக்கு எந்த நல்லதும் செய்ய 
முடியாதவர்கள், அருள்கூர்ந்து 
அல்லது செய்யாமல் இருங்கள்.

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்.
...................புறம்.................   

வியாழன், 17 பிப்ரவரி, 2022

 சீனாவின் உறுபேறுகள் தடை!

----------------------------------------------

மார்க்சியத்தின் இருந்து முற்றிலும் விலகி 

ஏகாதிபத்திய நாடாகச் சீரழிந்து போன 

சீனா! சீனாவின் உறுபேறுகள் ஏற்கனவே 

இரண்டு/மூன்று முறை தடை செய்யப் 

பட்டுள்ளன. அவை குறித்து அறிவியல் 

ஒளியில் எழுதிய கட்டுரையில் படியுங்கள்.


தற்போது மீண்டும் மத்திய அரசு, ஏகாதிபத்திய 

சீனாவின் 54 உறுபேறுகளை (App) தடை 

செய்துள்ளது.


சீனா ஒரு ஏகாதிபத்திய நாடு என்று ஒரு 

நூல் வெளியாகி உள்ளது. CPI ML போல்ஷ்விக்

கட்சியின் வெளியீடு அது. அதை வாங்கிப் படியுங்கள்.


இல்லை, இல்லை, சீனா ஏகாதிபத்திய நாடு அல்ல;

அது இன்னும் கம்யூனிஸ்ட் நாடுதான் என்று 

உன் மூளையில் ஏதாவது கழிவு கசிகிறதா!

நாண்டுக்கிட்டு நில்லுலே ஈனப்பயலே!

---------------------------------------------------------    



திங்கள், 14 பிப்ரவரி, 2022

 டி சிட்டர் மற்றும் மின்கோவ்ஸ்கி!

----------------------------------------------------

இரு விஞ்ஞானிகளின் மிகவும் பிரபலமான 

படங்களையே இங்கு கொடுத்துள்ளேன்.


முதல் படத்தில் இருப்பவர் (வலப்பக்கம்)

வில்லம் டி சிட்டர் (Willem de Sitter 1872-1934) 

இவர் டச்சு கணித நிபுணர் மற்றும் 

இயற்பியலாளர்.


இவர் டி சிட்டர் வெளியை (de Sitter space) 

உருவாக்கியவர். முப்பரிமாண வெளி

என்பது நியூட்டன் காலத்தோடு போய் 

விட்டது. பிரபஞ்சத்தைச் சரியாகப் 

புரிந்து கொள்ள வேண்டுமெனில்,

மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களைப் 

புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு டி சிட்டர் 

வெளி பயன்படும்.


இரண்டாம் படத்தில் (இடப் பக்கம்) இருப்பவர் 

மின்கோவ்ஸ்கி (Hermaan Minkowski 1964-1909).

இவர் ரஷ்யாவில் பிறந்தவர். இவர் ஐன்ஸ்டினின் 

ஆசிரியர். இவர் காலத்தை ஒரு பரிமாணமாகக் 

கொண்ட ஒரு வெளியை உண்டாக்கினார். அது 

இவர் பெயராலேயே மின்கோவ்ஸ்கி வெளி என்று 

அழைக்கப் படுகிறது.      

  

ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரியைப் புரிந்து 

கொள்ள மேற்கூறிய இரண்டு விஞ்ஞானிகளும் 

உருவாக்கிய இரண்டு வெளிகளும் பயன்படும்.


மறவாதீர்!

டி சிட்டர் வெளி, மின்கோவ்ஸ்கி வெளி.


மறவாதீர்!

டி சிட்டர், மின்கோவ்ஸ்கி.


இந்தப் பெயர்கள் உங்களுக்கு நன்கு பரிச்சயமாகி 

விட வேண்டும். இவர்களின் வெளி (space) குறித்து 

மேலும் தேடிப் படியுங்கள்.


நீங்கள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தேடினாலும்,

நான் எழுதியதைத் தவிர்த்து உங்களுக்கு 

எதுவும் தமிழில் கிடைக்காது.

******************************************************   




 



 


 

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

 1757ல் நிகழ்ந்த பிளாசிப் போரை அடுத்து 

ஆங்கிலேயே ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது.

அன்று முதலே அதை எதிர்த்த போராட்டங்கள் 

பகுதியளவில் சுதேசி மன்னர்களால் 

மேற்கொள்ளப் பட்டன. 


ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட காலத்தில் 

(1757 முதல் 1947 வரை) அம்பேத்காரும் 

ஈ வெ ராமசாமியும் முற்ற முழுக்க

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தீவிர 

விசுவாசிகளாக இருந்தார்கள். ஏகாதிபத்தியத்தை 

எதிர்த்தனுப்பி போராடிய மக்களின் தரப்பில் 

நிற்காமல், கொடிய வெறிபிடித்த ஏகாதிபத்தியத்தின் 

தரப்பில் நின்று பிரிட்டிசாரின் தாசானுதாசர்களாக 

இருந்தார்கள். 


ஆக அரசியல் ரீதியாக, மக்களுக்கு எதிராகவும்

ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவும் நின்றவர்கள்

அம்பேத்காரும் ஈ வெ ராமசாமியும். அவர்கள் 

முழுநிறைவான முதலாளித்துவ 

சீர்திருத்தங்களுக்காக நின்றவர்களும் அல்ல.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் 

போராட்டத்தில் வைத்தியநாத ஐயருக்கு

உறுதுணையாக இருந்தவர் முத்துராமலிங்கத் 

தேவர். அப்போராட்டத்தில் ஈ வெ ராமசாமியின் 

பங்கு என்ன?


1965ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் 

போராட்டத்தை வெறித்தனமாகவும் மூர்க்கத் 

தனமாகவும் எதிர்த்தாரே ஈ வே ராமசாமி!

அவரை எப்படி முதலாளித்துவ சீர்த்திருத்தவாதி 

என்று வரையறுக்கிறீர்கள்?



அம்பேத்காரும் ஈ வெ ராமசாமியும் pro imperialistஆக 

இருந்தவர்கள். Pro imperialist எவரும் முதலாளித்துவ 

சீர்திருத்தங்களுக்காக நிற்க முடியாது. ஏனெனில் 

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது 

நிலப்பிரபுத்துவ எதிர்ப்புச் செயல்பாடுகளை 

தீவிரமாக மேற்கொள்ளவில்லை. அப்படி 

மேற்கொள்ள வேண்டிய தேவையும் பிரிட்டிஷ் 

ஏகாதிபத்தியத்துக்கு இல்லை. எனவே பிரிட்டிஷின் 

வேலைத்திட்டத்துக்கு உட்பட்டுத்தான் அம்பேத்காரும் 

ஈ வெ ராமசாமியும் செயல்பட்டார்கள். இதையெல்லாம் 

மறைத்து விட்டு, அம்பேத்காரும் ஈ வெ ராமசாமியும் 

முழுநிறைவான முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் 

என்று வெள்ளையடிக்க முயல்வது சரியான மதிப்பீடு அல்ல.


.               

   

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

 பித்தைத்தரு தத்தித்தருதலை

விக்கையணி மக்குப்பயலிவன்
சட்டைக்கிழி சட்டச்சபையது
எனவோதும்..

 கோவை குண்டுவெடிப்பை நிகழ்த்திய 

பயங்கரவாதிகளை முன்கூட்டியே 

விடுதலை செய்ய முடியாது!

அவர்களுக்கு ஜாமீனும் வழங்கக் கூடாது!

முதல்வர் ஸ்டாலின் உறுதி!

-------------------------------------------------------- 

பல ஆண்டுகளுக்கு முன்பு, 1998ல்

பெப்ரவரி 14ஆம் நாளில், 

கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு 

வைத்து அப்பாவிகளைக் கொன்றது 

அல் உம்மா என்னும் இஸ்லாமிய 

பயங்கரவாத அமைப்பு. 


கோவையில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 

13 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான 

அல் உம்மா. குண்டு வெடிப்பில் 46 பேர் 

இறந்து போயினர். 2000 பேர் காயமுற்றனர்.


ஆண் பெண் குழந்தைகள் என்று 46 பேரைக் 

கொலை செய்த அல் உம்மா பயங்கரவாத

அமைப்பை அன்றைய தமிழக முதல்வர் 

(1996-2001) கலைஞர் அவர்கள் உடனடியாகத் 

தடை செய்தார்.


கலைஞரின் தலைமையில் இயங்கிய காவல்துறை 

முழுவீச்சில் செயல்பட்டு, குண்டு வைத்த 

பயங்கரவாதிகளின் தலைவன் எஸ் ஏ பாட்சா

உள்ளிட்ட 72 பேரைக் கைது செய்தது.


கொடிய இந்தக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் 

ஆயுள் தண்டனை விதித்தது. அதைத்தான் 

இக்கொலைகாரர்கள் இன்று வரை அனுபவித்துக் 

கொண்டு இருக்கிறார்கள்.

 

கலைஞர் என்றுமே சிறுபான்மையினரின் 

காவலராக இருந்து வந்தார். ஆனால் கலைஞரின் 

ஆடசியைக் கலைக்கும் அளவுக்கு, இஸ்லாமிய 

பயங்கரவாதிகள், பொது மக்களைக் 

குண்டு வைத்துக் கொலை செய்தால் அதைப் 

பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு 

கலைஞர் முட்டாள் அல்ல. கலைஞரின் காவல்துறை 

வெகு சிறப்பாகச் செயல்பட்டு, கொடிய 

பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி 

தண்டனை வாங்கிக் கொடுத்தது.


இஸ்லாமிய சிறைவாசிகளை முன்கூட்டியே 

விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு 

இயக்கத்தைத் தமிழ்நாட்டில் இஸ்லாமிய 

அடிப்படைவாதிகள் நடத்தி வருகின்றனர்.

கோவை குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 

72 பேரையும் முன்கூட்டியே விடுதலை 

செய்வதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்.


இது பல நூறு கோடி ரூபாய் ப்ராஜக்ட்.

தமிழ்நாட்டில் போலி முற்போக்குகள் மற்றும் 

வேஷதாரிகள் நிறைய உண்டு. அவர்களில் 

பலர் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை 

செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி 

செமத்தியாக காசு பார்த்து விட்டனர். 


கைதிகளுக்கு சிறைத் தண்டனையில் தளர்வு,

சலுகை, தள்ளுபடி ஆகியவற்றை வழங்க 

தமிழக அரசுக்கு சட்டப்படி உரிமை உண்டு. 

ஆனால் குண்டு வைத்து அப்பாவிப் பொதுமக்களைக் 

கொன்ற பயங்கரவாதிகளுக்கு இந்தச் சட்டம் 

பொருந்தாது.


இதை அன்றைய முதல்வர் கலைஞரும் 

இன்றைய முதல்வர் ஸ்டாலினும் நன்கு 

அறிவார்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளை 

முன்கூட்டியே விடுதலை செய்ய எந்தச்

சட்டமும் இடம் தரவில்லை.


தற்போது கொடிய பயங்கரவாதியான 

அல் உம்மா பாட்சா உச்ச நீதிமன்றத்தில் 

ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு 

விசாரணைக்கு வர உள்ளது. அதில் தமிழக 

அரசு தனது தரப்பை முன்வைத்து, இக்கொடிய 

பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது 

என்று தெரிவித்து உள்ளது.


மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 

சட்டப்படிதான் நடந்து கொள்கிறார். அவரை 

இங்குள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் 

மிரட்ட முடியாது.


இங்குள்ள போலி முற்போக்குகள், போலி 

இடதுசாரிகள், போலி மாவோயிஸ்டுகள், 

போலி நக்சல்பாரிகள் ஆகியோர் இஸ்லாமிய 

அடிப்படைவாதிகளிடம் காசு வாங்கிக் கொண்டு 

புரட்சி வேஷம் போடுவார்கள். அவர்களை 

அம்பலப் படுத்துங்கள். அவர்களிடம் ஏமாந்து 

போய் விடாதீர்கள்.       

 ******************************************************       

    

வியாழன், 10 பிப்ரவரி, 2022

 இன்குலாப் ஜிந்தாபாத் என்பது 

பிற்போக்கான முழக்கம்!

அல்லாஹு அக்பர் என்பதே புரட்சிகரமான முழக்கம்!

------------------------------------------------------------------------

 1) தடுப்பூசியை எதிர்ப்பான். தடுப்பூசி 

போடக்கூடாது என்று மூர்க்கத் தனமாகப் 

பிரச்சாரம் செய்வான். ஆனால் தன்னை 

இடதுசாரி என்று சொல்லிக் கொள்ளுவான்.

இவன் எப்படி இடதுசாரி ஆவான்??

  . 

2) ஹோமியோபதி என்பது ஒரு போலி அறிவியல்.

அது ஒரு பித்தலாட்டம். எனவேதான் சோவியத் 

ஒன்றியத்தில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சியில் 

ஹோமியோபதி தடை செய்யப் பட்டது.

ஹோமியோபதியை மார்க்சியம் ஏற்கவில்லை.

அப்படியிருக்க ஹோமியோபதியை ஆதரிப்பவன் 

எப்படி இடதுசாரி ஆவான்? அவன் மார்க்சிய விரோதி 

அல்லவா!


3) மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை எதிர்ப்பான.

அறிவியலை எதிர்க்கும் இப்பிற்போக்காளன் எங்ஙனம் 

இடதுசாரி ஆவான்?


4) பெண்களுக்கு முக்காட்டை விதிக்கும் 

நிலவுடைமைக்கால இஸ்லாமியப் 

பிற்போக்குவாதத்தை ஆதரித்து, பெண்களே

முக்காடு அணியுங்கள் என்பான். இவன் எப்படி 

இடதுசாரி ஆவான்?

  

5) இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் 

தவறான முழக்கம்; எனவே நீங்கள் அல்லாஹு 

அக்பர் என்று முழங்குங்கள். அதுவே புரட்சிகரமானது 

என்பான். இவன் எப்படி இடதுசாரி ஆவான்?


சகல பிற்போக்குவாதத்தையும் 

சகல மூட நம்பிக்கைகளையும் 

ஆதரிப்பான். அவற்றைப் பாதுகாப்பான்.

இவன் எப்படி இடதுசாரி ஆவான்?

******************************************************  


செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

 இதற்கு மாறானது டிஜிட்டல் எனப்படும் ஈரிலக்க முறையிலான 

கடிகாரம். இக்கடிகாரத்தில் நேரமானது எண்களின் மூலமாகக் 
காட்டப்படும். மேலே குறிப்பிட்ட 10 மணி 10 நிமிடம் என்பது 
டிஜிட்டல் கடிகாரத்தில் 10:10 என்று எண்களின் மூலமாகக் 
காட்டப்படும். இதுவே டிஜிட்டல் முறையாகும். 

மேலும் இம்முறையில் ஒரு செய்தியானது ஈரிலக்க எண்களாக 
மாற்றப்பட்டு அனுப்பப் படும். அதாவது "அம்மா நலமாக 
வந்து சேர்ந்தாள்" என்ற செய்தியானது  0,1, 0,1,,1, 0, 1,1,0, 0,1 என்பது 
போன்று ஈரிலக்க வடிவில் மாற்றப்படும். பழைய அனலாக் 
முறையில் செய்திகள் இவ்வாறு மாற்றம் அடைவதில்லை.   

திங்கள், 7 பிப்ரவரி, 2022

 மூணாவது முறையும் நாலாவது முறையும்!
அமித்ஷாவும் சிதம்பரமும்!
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்கு சமாதி!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
1) கூடங்குளம் அணுஉலையை நிர்மாணித்து 
அணுமின்சாரம் எடுக்க மன்மோகன்சிங் அரசு 
தீர்மானித்தது. கூடங்குளம் அணுஉலை ரஷ்ய 
அணுஉலை என்பதால் இதை எதிர்த்து ஒரு பெரும் 
போராட்டத்தைக் கட்டமைக்க அமெரிக்கா திட்டமிட்டது.    
இப் போராட்டத்துக்கு அமெரிக்கா பெரும் பணத்தை 
வாரி இறைத்தது. 

2) ரஷ்ய அணுஉலை எதிர்ப்பாளரான 
சுப உதயகுமார் என்பவர் சுற்றுச் சூழல் 
போராளியாக வேடம் தரித்து நடித்தார். 
ஆஸ்கார் விருதுக்குரிய நடிப்பு அது.

3) அமெரிக்காவின் அஜெண்டாவின்படி நடந்த 
இந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில்  
கலந்து கொண்டவன், கலந்து கொள்வதாகப் 
போக்குக் காட்டியவன் எல்லோரும் நிறையக் 
காசு பார்த்து விட்டான்.    

4) சகல போலி முற்போக்கு, சகல போலி இடதுசாரி,
போலி மாவோயிஸ்ட், போலி நக்சல்பாரி என்று 
பலரும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் 
பணக்காரனாகி விட்டான். 

5) கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போலிப் 
போராட்டத்தை முடிவுக்குக்  கொண்டு வந்தவர்களில் 
ப சிதம்பரமும் நாராயணசாமியும் முக்கியமானவர்கள்.

6) சாம பேத தான தண்டம் என்று நான்கு முறைகளில்
ஒரு காரியத்தைச் சாதிக்கலாம். இதில் நான்காவது 
முறையைக் கையாண்டு போலிப் போராட்டத்தை 
முறியடித்து போலிப் போராளிகளை மொட்டை 
அடித்து மூலையில் தள்ளினார் ப சிதம்பரம்.

7)  தற்போது கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம் அணுஉலைகள்
கட்டப்பட்டு வருகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு 
வண்ணமுமாக அணுஉலைகள் வளர்ந்து வருகின்றன.
ஆனால் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் செத்துப் 
போய் விட்டது.

8) கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை 
நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வந்து சமாதி கட்டி 
விட்டார் அமித் ஷா. அணுஉலை எதிர்ப்புப் போலிப் 
போராளிகளை மலிவாக விலைக்கு வாங்கிப் போட்டு 
விட்டார் அமித் ஷா. நான்கு முறைகளில் மூன்றாவது 
முறையைக் கையாண்டு அணுஉலை எதிர்ப்புப் 
போராட்டத்திற்குக் கொள்ளி வைத்து விட்டார் அமித் ஷா.

9) இன்றைக்கு கூடங்குளம் போராளி(??)களில்  அவனவன்
கோடீஸ்வரன் ஆயிட்டான். முகிலன் கற்பழிப்பில் 
இறங்கி விட்டான். அதன் விளைவாக ஜெயிலில் 
அடைபட்டு இப்போது ஜாமீனில் இருக்கிறான். இவனெல்லாம் 
ஒரு போராளி!! பாதிரியாராக இருந்த ஒருவன் அமெரிக்கப்
பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்க முடிவு செய்து,
துறவைத்  துறந்து கிரகஸ்தன் ஆகி விட்டான்.

10) எல்லோருடைய சாயமும் வெளுத்துப் போய்
சந்தி சிரித்துப் போச்சு. சிதம்பரம் அடி உதை மூலம்
சாதித்ததை, அமித்ஷா காசை விட்டெறிந்து 
சாதித்து விட்டார்.
 
கூடங்குளம் இங்கே!
போராட்டம் எங்கே!

வளருது வளருது அணு உலைகள்!
செத்துப் போனது எதிர்ப்பு!

உதயகுமார் அண்ணாச்சி!
அணுஉலை எதிப்பு என்னாச்சி?
****************************************



 


       
 
       
 
 

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

 ஆட்டுக்கும் தாடி அவசியம்!

அன்றைய ஆளுநர் பர்னாலாவும் அவசியம்!

மோசடியும் பித்தலாட்டமும் அதன் உச்சத்தில்!

-----------------------------------------------------------------

படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா?

இவர்தான் சுர்ஜித் சிங் பர்னாலா!


தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர்.

எப்போது இருந்தார்? 1990-91 காலக்கட்டத்தில் 

தமிழக ஆளுநராக இருந்தார்.


பின், 2004 முதல் 2011 வரை ஏழாண்டுகள் மீண்டும் 

தமிழக ஆளுநராக இருந்தார்.


2006 ஜனவரியில் ஜெயலலிதா முதல்வராக 

இருந்தபோது, கேபிள் டிவி தொழிலில் 

ஏகபோகத்தை ஒழிக்கும் நோக்குடன் அரசு 

கேபிள் டிவி சட்டத்தைக் கொண்டு வந்தார்.

தமிழக செட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 

இச்சட்டத்தை ஆளுநரின் கையெழுத்துக்காக 

பர்னாலாவுக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.


உடனே கருணாநிதிக்கு அடிவயிறு கலங்கியது.

கேபிள் டிவி தொழிலில் ஏகபோகத்துடன் 

அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்களையும் 

சுரண்டிக் கொழுக்கும் தன்னுடைய பேரன்களின் 

வருமானத்துக்கு அரசு கேபிளால் பாதிப்பு 

வருமே என்று கலங்கினார் கருணாநிதி.


உடனடியாக ஆளுநர் பர்னாலாவைச் சந்தித்தார்

கருணாநிதி. எக்காரணம் கொண்டும் ஜெயலாலிதா 

அரசு நிறைவேற்றிய இந்த அரசு கேபிள் 

சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்கக் 

கூடாது என்று கோரிக்கை வைத்தார்.


சுர்ஜித் சிங் பர்னாலா திமுகவின் பரிந்துரையால் 

ஆளுநர் ஆனவர். 1990-91 அன்றைய திமுக அரசைக் 

கலைக்க மத்திய காங்கிரஸ் அரசு விரும்பியது. 

அதற்காக ஆளுநரிடம் அறிக்கை கோரியது. 

ஆனால் அறிக்கை கொடுக்க மறுத்தார் பர்னாலா.

அதைக் கருத்தில் கொண்டு மீண்டும் பர்னாலாவே 

எங்களுக்கு ஆளுநராக வேண்டும் என்று 

மத்திய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 

கோரிக்கை வைத்தார் கருணாநிதி. இக்கோரிக்கையை 

ஏற்று பர்னாலா தமிழக ஆளுநராக நியமிக்கப் பட்டார்.


ஜெயலலிதா அரசு நிறைவேற்றிய கேபிள் டிவி 

சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற 

கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றுக் 

கொண்ட பர்னாலா, அச்சட்டத்துக்கு ஒப்புதல் 

வழங்கவில்லை.


இதுதான் திமுகவின் இரட்டை வேடம்!

ஏமாற்று வேலை! பித்தலாட்டம்! மோசடி!

ஏதோ ஆளுநர் பதவியை எதிர்ப்பது போல் வேஷம் 

போட்டுக்கொண்டு திரியும் இவர்களின் 

யோக்கியதை 2006ல் எங்கே போனது?

அன்று பர்னாலாவை எதிர்க்க வேண்டியதுதானே!


ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் 

வேண்டாம் என்றால், அன்று பர்னாலாவை 

எதிர்த்திருக்க வேண்டியதுதானே!

******************************************************* 

 பின்குறிப்பு:

புழுத்த அரசியல்வாதிகளுக்கு ஒரே நோக்கம்தான்!

அது சம்பாதிப்பதுதான்! அவர்களுக்கு 

கொள்கை என்பதெல்லாம் ஒரு மயிரும் கிடையாது.

போலி முற்போக்குச் சொங்கிகள், போலி இடதுசாரிச் 

சொங்கிகள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள 

வேண்டும்.

-----------------------------------------------------------------------   

 



     


 NEET

நீட்டுக்கு முன்பு,இந்த மாணவி தங்கபேச்சி மருத்துவ படிப்புக்கு தேர்வாகி அதே சமயம் பணமில்லாமல் அந்த சீட்டை எடுக்கவில்லை என்றால்,அதை Management quota விற்கு Surrender செய்துவிடுவார்கள்..
அந்த சீட்டினை வெளிமாநிலத்திலோ அல்லது உள்ளுரிலோ உள்ள வலுத்த கை ஒன்றுக்கு கல்லூரி நிர்வாகத்தால் கைமாற்றி விட முடியும்..
ஆனால் நீட் வந்த பிறகு தங்கபேச்சி ஏதோ ஒரு காரணத்தால் தனக்குரிய இடத்தை வேண்டாமென்றால்,நீட்டில் பாஸான இதே தகுதியை கொண்ட இன்னொரு நபருக்கே அந்த சீட்டினை கொடுக்க முடியும்..
இப்போது தனியார் கல்லூரிகள் சிக்கி நிற்கும் இடம் இதுதான்..இதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.தனியார் கல்லூரி நிறுவனரின் மகனோ,மகளோ,பேரனோ,பேத்தியோ என யாராக இருந்தாலும் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பை வென்றெடுக்க முடியும்..
ஆகவேதான் இந்த தேர்வுமுறை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்..
May be a Twitter screenshot of 7 people, people standing and text that says 'Dr.P.Saravanan @mdrsaravana... ・1d மதுரை மாவட்டம், பணமுப்பன்பட்டியில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவி தங்கபேச்சி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரி இடம் பெற்றுள்ளார். @BJP4TamilNadu @BJP4Delhi @annamalai_k Dr.P.Saravanan @mdrsaravana.. 1d அந்த மாணவிக்கு மாநில தலைவர் திரு. அண்ணாமலை Ex.IPS அவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நானும்,மாநிலதலைவர் அவர்களும் மாணவியின் கல்விக்கு தேவையான எந்த உதவினாலும் செய்ய தயராக உள்ளோம் என்று உறுதி அளித்தேன்.@apmbjp அளித்தேன். @annamalai_k @CTR_Nirmalkumar @amarprasadreddy ANI ANI திய மர'
Mayakooththan Govindarajan, Ravikumar J and 1.4K others
22 Comments
617 Shares
Like
Comment
Share