வியாழன், 10 பிப்ரவரி, 2022

 இன்குலாப் ஜிந்தாபாத் என்பது 

பிற்போக்கான முழக்கம்!

அல்லாஹு அக்பர் என்பதே புரட்சிகரமான முழக்கம்!

------------------------------------------------------------------------

 1) தடுப்பூசியை எதிர்ப்பான். தடுப்பூசி 

போடக்கூடாது என்று மூர்க்கத் தனமாகப் 

பிரச்சாரம் செய்வான். ஆனால் தன்னை 

இடதுசாரி என்று சொல்லிக் கொள்ளுவான்.

இவன் எப்படி இடதுசாரி ஆவான்??

  . 

2) ஹோமியோபதி என்பது ஒரு போலி அறிவியல்.

அது ஒரு பித்தலாட்டம். எனவேதான் சோவியத் 

ஒன்றியத்தில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சியில் 

ஹோமியோபதி தடை செய்யப் பட்டது.

ஹோமியோபதியை மார்க்சியம் ஏற்கவில்லை.

அப்படியிருக்க ஹோமியோபதியை ஆதரிப்பவன் 

எப்படி இடதுசாரி ஆவான்? அவன் மார்க்சிய விரோதி 

அல்லவா!


3) மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை எதிர்ப்பான.

அறிவியலை எதிர்க்கும் இப்பிற்போக்காளன் எங்ஙனம் 

இடதுசாரி ஆவான்?


4) பெண்களுக்கு முக்காட்டை விதிக்கும் 

நிலவுடைமைக்கால இஸ்லாமியப் 

பிற்போக்குவாதத்தை ஆதரித்து, பெண்களே

முக்காடு அணியுங்கள் என்பான். இவன் எப்படி 

இடதுசாரி ஆவான்?

  

5) இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் 

தவறான முழக்கம்; எனவே நீங்கள் அல்லாஹு 

அக்பர் என்று முழங்குங்கள். அதுவே புரட்சிகரமானது 

என்பான். இவன் எப்படி இடதுசாரி ஆவான்?


சகல பிற்போக்குவாதத்தையும் 

சகல மூட நம்பிக்கைகளையும் 

ஆதரிப்பான். அவற்றைப் பாதுகாப்பான்.

இவன் எப்படி இடதுசாரி ஆவான்?

******************************************************  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக