ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

 1) நீட் தேர்வுக்கான அரசாணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ; அரசாணை எண் என்ன ?

21.12.2010 ; MCI -31(1)/2010-MED/49068
2) 2010 இல் மத்திய அரசு யார் ?
காங்கிரஸ் + திமுக
3) நீட் அரசாணை வெளியிட்ட MCI எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
சுகாதார துறை அமைச்சர்
4) மத்திய சுகாதார துறை அமைச்சர்/இணை அமைச்சர் யார் ?
குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ்
காந்தி செல்வன் - திமுக
5) ஆனால் 2011 இலிருந்து 2016 வரை நீட் அமலுக்கு வரவில்லையே.
அமலுக்கு வராததற்கு காரணம் உச்ச நீதிமன்றம் கொடுத்த இடைக்கால தடையும், 2013இல் நீட் அரசாணையை செல்லாது என்று அறிவித்ததும்.
6) பின் ஏன் 2017 இல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது.
😎 NEET தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (அரசு கல்லூரிகள்) வேறு மாநிலத்தவர் சேர முடியுமா ?
இல்லை. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள் தமிழக மாணவர்கள்/தமிழகதில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும். நீட் தேர்வு தான் அகில இந்திய தேர்வு. ஆனால், மெரிட் லிஸ்ட் மாநில வாரியாக தான் . 15% சீட்கள் அகில இந்திய ஒதுக்கீடு. நீட்க்கு முன்பும் இதே நிலை தான் ; நீட் அமல்படுத்த பட்ட பின்பும் அதே நிலை தான் .
9. தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு தொடருமா ?
69% இட ஒதுக்கீடு தொடரும் .
10. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தலாமா? அது மாநில உரிமையில் தலையிடுவது ஆகாதா ?
இந்திய அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையில் உள்ள மத்திய பட்டியலில் உள்ள 66 Entry "Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions." அதாவது உயர் கல்வி தரத்தை முடிவு செய்வது மத்திய அரசு. UGC, AICTE , NCVT ,NMC (முன்பு MCI ) ITI , polytechnic , பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கலை கல்லூரி (பல்கலைக்கழகம் ) - மத்திய அரசின்/மத்திய அரசின் நிறுவனங்களின் அனுமதி தேவை.
11. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் யார் வழக்கு தொடர்ந்தார்கள்.
டிசம்பர் 2010,இல் MCI நீட் தேர்வின் மூலம் மட்டும் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை நடைபெறும் என்று அரசாணை வெளியிட்டவுடன், 80 க்கு மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கு தொடுத்தன . 2 மாநில அரசுகளும்.
12. தனியார் மருத்துவ கல்லூரிகள் ஏன் வழக்கு தொடுத்தன ?
அவர்களாகவே நுழைவு தேர்வு நடத்தியபொழுது , நன்கொடை, கேபிடேஷன் fee என்று ஒவ்வொரு seatக்கும் 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரை பெற்றனர்.
13) தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறைகேடுகளை கதையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
எய்தவன்; பைரவா
14) நாமக்கல் பள்ளிகளின் கதையை வைத்து எடுக்க பட்ட படம்
அப்பா
15) நீட் தேர்வு அமலானதால் 2016இல், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் கைதானவர் -
பூரி வேந்தர்
16) 2011 இல் நீட் தேர்வுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த தனியார் மருத்துவ கல்லூரிகளிலேயே முக்கியமானவர் யார்.
DD மருத்துவ கல்லூரி. அங்கீகாரமே இல்லாத இந்த கல்லூரி, 2 ஆண்டுகள் @ 160 மாணவர்களின் வாழக்கையை பாழாக்கிய கல்லூரி , நீட்டுக்கு தடை கோரி வழக்கு
L
நீட்டுக்கு முன்பு,இந்த மாணவி தங்கபேச்சி மருத்துவ படிப்புக்கு தேர்வாகி அதே சமயம் பணமில்லாமல் அந்த சீட்டை எடுக்கவில்லை என்றால்,அதை Management quota விற்கு Surrender செய்துவிடுவார்கள்..
அந்த சீட்டினை வெளிமாநிலத்திலோ அல்லது உள்ளுரிலோ உள்ள வலுத்த கை ஒன்றுக்கு கல்லூரி நிர்வாகத்தால் கைமாற்றி விட முடியும்..
ஆனால் நீட் வந்த பிறகு தங்கபேச்சி ஏதோ ஒரு காரணத்தால் தனக்குரிய இடத்தை வேண்டாமென்றால்,நீட்டில் பாஸான இதே தகுதியை கொண்ட இன்னொரு நபருக்கே அந்த சீட்டினை கொடுக்க முடியும்..
இப்போது தனியார் கல்லூரிகள் சிக்கி நிற்கும் இடம் இதுதான்..இதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.தனியார் கல்லூரி நிறுவனரின் மகனோ,மகளோ,பேரனோ,பேத்தியோ என யாராக இருந்தாலும் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பை வென்றெடுக்க முடியும்..
ஆகவேதான் இந்த தேர்வுமுறை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்..
May be a Twitter screenshot of 7 people, people standing and text that says 'Dr.P.Saravanan @mdrsaravana... ・1d மதுரை மாவட்டம், பணமுப்பன்பட்டியில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவி தங்கபேச்சி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரி இடம் பெற்றுள்ளார். @BJP4TamilNadu @BJP4Delhi @annamalai_k Dr.P.Saravanan @mdrsaravana.. 1d அந்த மாணவிக்கு மாநில தலைவர் திரு. அண்ணாமலை Ex.IPS அவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நானும்,மாநிலதலைவர் அவர்களும் மாணவியின் கல்விக்கு தேவையான எந்த உதவினாலும் செய்ய தயராக உள்ளோம் என்று உறுதி அளித்தேன்.@apmbjp அளித்தேன். @annamalai_k @CTR_Nirmalkumar @amarprasadreddy ANI ANI திய மர'
Mayakooththan Govindarajan, Ravikumar J and 1.4K others
22 Comments
617 Shares
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக