திங்கள், 7 பிப்ரவரி, 2022

 மூணாவது முறையும் நாலாவது முறையும்!
அமித்ஷாவும் சிதம்பரமும்!
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்கு சமாதி!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
1) கூடங்குளம் அணுஉலையை நிர்மாணித்து 
அணுமின்சாரம் எடுக்க மன்மோகன்சிங் அரசு 
தீர்மானித்தது. கூடங்குளம் அணுஉலை ரஷ்ய 
அணுஉலை என்பதால் இதை எதிர்த்து ஒரு பெரும் 
போராட்டத்தைக் கட்டமைக்க அமெரிக்கா திட்டமிட்டது.    
இப் போராட்டத்துக்கு அமெரிக்கா பெரும் பணத்தை 
வாரி இறைத்தது. 

2) ரஷ்ய அணுஉலை எதிர்ப்பாளரான 
சுப உதயகுமார் என்பவர் சுற்றுச் சூழல் 
போராளியாக வேடம் தரித்து நடித்தார். 
ஆஸ்கார் விருதுக்குரிய நடிப்பு அது.

3) அமெரிக்காவின் அஜெண்டாவின்படி நடந்த 
இந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில்  
கலந்து கொண்டவன், கலந்து கொள்வதாகப் 
போக்குக் காட்டியவன் எல்லோரும் நிறையக் 
காசு பார்த்து விட்டான்.    

4) சகல போலி முற்போக்கு, சகல போலி இடதுசாரி,
போலி மாவோயிஸ்ட், போலி நக்சல்பாரி என்று 
பலரும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் 
பணக்காரனாகி விட்டான். 

5) கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போலிப் 
போராட்டத்தை முடிவுக்குக்  கொண்டு வந்தவர்களில் 
ப சிதம்பரமும் நாராயணசாமியும் முக்கியமானவர்கள்.

6) சாம பேத தான தண்டம் என்று நான்கு முறைகளில்
ஒரு காரியத்தைச் சாதிக்கலாம். இதில் நான்காவது 
முறையைக் கையாண்டு போலிப் போராட்டத்தை 
முறியடித்து போலிப் போராளிகளை மொட்டை 
அடித்து மூலையில் தள்ளினார் ப சிதம்பரம்.

7)  தற்போது கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம் அணுஉலைகள்
கட்டப்பட்டு வருகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு 
வண்ணமுமாக அணுஉலைகள் வளர்ந்து வருகின்றன.
ஆனால் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் செத்துப் 
போய் விட்டது.

8) கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை 
நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வந்து சமாதி கட்டி 
விட்டார் அமித் ஷா. அணுஉலை எதிர்ப்புப் போலிப் 
போராளிகளை மலிவாக விலைக்கு வாங்கிப் போட்டு 
விட்டார் அமித் ஷா. நான்கு முறைகளில் மூன்றாவது 
முறையைக் கையாண்டு அணுஉலை எதிர்ப்புப் 
போராட்டத்திற்குக் கொள்ளி வைத்து விட்டார் அமித் ஷா.

9) இன்றைக்கு கூடங்குளம் போராளி(??)களில்  அவனவன்
கோடீஸ்வரன் ஆயிட்டான். முகிலன் கற்பழிப்பில் 
இறங்கி விட்டான். அதன் விளைவாக ஜெயிலில் 
அடைபட்டு இப்போது ஜாமீனில் இருக்கிறான். இவனெல்லாம் 
ஒரு போராளி!! பாதிரியாராக இருந்த ஒருவன் அமெரிக்கப்
பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்க முடிவு செய்து,
துறவைத்  துறந்து கிரகஸ்தன் ஆகி விட்டான்.

10) எல்லோருடைய சாயமும் வெளுத்துப் போய்
சந்தி சிரித்துப் போச்சு. சிதம்பரம் அடி உதை மூலம்
சாதித்ததை, அமித்ஷா காசை விட்டெறிந்து 
சாதித்து விட்டார்.
 
கூடங்குளம் இங்கே!
போராட்டம் எங்கே!

வளருது வளருது அணு உலைகள்!
செத்துப் போனது எதிர்ப்பு!

உதயகுமார் அண்ணாச்சி!
அணுஉலை எதிப்பு என்னாச்சி?
****************************************



 


       
 
       
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக