வியாழன், 31 மார்ச், 2016

முந்தைய பதிவைப் பார்க்கவும்.
திருமா கேட்பது 32! கிடைப்பது 12தானா?
--------------------------------------------------------------------
திருமா 32 தொகுதிகளைக் கேட்கிறார்.
அதிலும் 16 பொதுத் தொகுதிகள் வேண்டுமாம்.
ஆனால், வைகோ மறுக்கிறார். முத்தரசனும்
ஜீயாரும் முகம் சுளிக்கின்றனாராம்.

வைகோ 12 தொகுதிகள்தான் தர முடியும் என்கிறாராம்.
இந்த 12இல் பொதுத்தொகுதி 2 தானாம்.
12க்கு ஒத்துக் கொள்ளுமாறு முத்தரசனும் ஜீயாரும்
திருமாவுக்கு நெருக்குதல் கொடுக்கின்றனர் ஆனால்
32 என்பதில் திருமா பிடிவாதமாக இருக்கிறாராம்.

எனவே வைகோ-திருமா பஞ்சாயத்து தற்போது
சுத்தீஷிடம் போய் இருக்கிறது. சுத்தீஷின் முடிவுக்கு
எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என்று முடிவாகி உள்ளதாம்.
--------------------------------------------------------------------------------------------------------




தேமுதிக கிச்சன் காபினெட் கூடி தொகுதிகளை
இறுதி செய்தது! படுபட்சி இல்லாத நாளில்
தொகுதிகளை அறிவிக்க சுத்தீஷின் மாமியார் உத்தரவு!
---------------------------------------------------------------------------------------
தேமுதிக தான் போட்டியிடும் 124 தொகுதிகளை இறுதி
செய்து விட்டது. வைகோ முத்தரசன் கம்பெனிக்கு
ஒதுக்க வேண்டிய 110 தொகுதிகளும் அடையாளம்
காணப்பட்டு விட்டன. தேமுதிக கிச்சன் காபினெட்
சுத்தீஷின் கொழுந்தியாள் தலைமையில் கூடி
தொகுதிகளை இறுதி செய்து விட்டது.

எனினும் தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப் படுவது
தாமதம் ஆகிறது. இதற்கான காரணத்தை விசாரித்து
அறிந்தோம். சுத்தீஷின் மாமியார் ஒரு முக்கிய
உத்தரவைப் பிறப்பித்து உள்ளார். படுபட்சி இல்லாத
நாளாகப் பார்க்க வேண்டும் என்றும் சித்த நாம யோகம்
உள்ள நாளாக இருக்க வேண்டும் என்றும் சுத்தீஷின்
மாமியார் கறாரான உத்தரவைப் பிறப்பித்து உள்ளாராம்.

அண்ணியார் பிரேமலதாவின் குடும்ப ஜோதிடர்
தலைமையில் ஜோதிட பூஷணங்களும் வேத
விற்பன்னர்களும் கேப்டனுக்கு ராசியான முஹூர்த்த
நாளை ஜோதிட ரீதியில் கணித்துக் கொண்டு
இருக்கின்றனர். விரைவில் பட்டியல் வெளியாகும்.
-------------------------------------------------------------------------------------------

110 தொகுதிகளின் பெயர்களை எழுதி
அந்த 110 தொகுதிகளின் பட்டியலையும் வைகோ
பார்வையிட்டு விட்டார் unofficially. படுபட்சி இல்லாத
நாளில்தான், நாங்கள் உங்களுக்கான 110 தொகுதிகளின்
பட்டியலையும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்  என்று
சுத்தீஷ் சொல்லி விட்டார். திருமாவளவனுக்கு எந்தத்
தொகுதிகள் என்பதை வைகோவும் முத்தரசனும் ஜீயாரும்
முடிவு செய்வார்கள். அதை தேமுதிக கிச்சன் காபினெட்
முடிவு செய்யாது.
**
ஆனால், சுத்தீஷ் ஒரு முக்கியமான
ஆலோசனையை வைகோ-முத்தரசன்-ஜீயார் கம்பெனியிடம்
கூறியுள்ளாராம். அது இதுதான். எந்தக் காரணம் கொண்டும்
திருமாவுக்கு அதிகம் தொகுதிகளைக் கொடுத்து விடாதீர்கள்;
பிரசாதியினரின் வாக்குகளை நாம் இழக்க நேரிடும் என்று.
இதற்கு வைகோ-முத்தரசன்-ஜீயார் சம்மதித்து உள்ளனராம்.


படுபட்சி என்றால் என்ன என்று விளக்கம் அளித்துக்
கொண்டிருக்க என்னால் இயலாது. உங்கள் ஊரில்
உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் பாஜகவின் பிராமணப்
பிரமுகர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தத்ரூபம்


    

புதன், 30 மார்ச், 2016

தேமுதிகவைத் தடை செய்ய வேண்டும்!
இனிப் பொறுப்பதில்லை, எரிதழல் கொண்டு வா!
-------------------------------------------------------------------------------
என் கணவர் காந்தியாகவும் இருப்பார்!
தவறுகளைத் தட்டிக் கேட்க தேவைப்பட்டால்
கோட்சேயாகவும் மாறுவார்!
----அண்ணியார் பிரேமலதா (பொதுக்கூட்டப் பேச்சு)

கோட்சே ஆதரவு பிரேமலதாவே, நாட்டை விட்டு ஓடு!
தேமுதிகவை தடை செய்யக்கோரி போராடுவோம்.

ஆர். எஸ்.எஸ்.சின் பினாமி கட்சி தேமுதிகவை
வேரோடு பிடுங்கி எறிவோம்!

ஆர்.எஸ்.எஸ். பினாமி கட்சிக்குப் பல்லக்குத்
தூக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளை
ஒழித்துக் கட்டுவோம்!
---------------------------------------------------------------------------------------    
NGO PROJECT குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில்
பல ஆதாரங்கள் எனக்குத் தெரிய வந்துள்ளன.
அன்புமணி ராமதாசின் CM PROJECT ஒரு என்.ஜி.ஓ
முன்னெடுப்பே. விரிவாக எழுத இருக்கிறேன்.
அய்யா,
சிவகாமி அம்மையார் திமுகவில் இணைய விரும்பவில்லை.
காரணம் அவரின் என்.ஜி.ஓ தொடர்பு. அவர் "நடத்தி" வரும்
புதிய கோடங்கி இதழ் உண்மையில் ஒரு ப்ராஜெக்ட் ஆகும்.
இது குறித்து அ மார்க்ஸ் நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பே
கவிதாசரண் இதழில் எழுதி வந்ததை தாங்கள் அறியாமல்
இருக்க வாய்ப்பில்லை.
**
மனுஷ்ய புத்திரனைப் போல, சிவகாமியும் திமுகவில்
இணைவதை யார் தடுத்தார்கள்? யாரும் தடுக்கவில்லை.
திமுகவில் இணைந்த பின்னால், என்.ஜி.ஓ நிதியுதவி
கிடைக்குமா? சமூக சமத்துவப் படை என்ற அமைப்பை
நடத்தினால் மட்டுமே அந்நிய நிதியுதவி கிடைக்கும்.
**
பெரியாரை கேவலமாகப் பேசி வந்த சிவகாமி,
விடுதலைப் புலிகளைக் கேவலமாகப் பேசிவந்த சிவகாமி
மன்னிப்புக் கேட்கத் தயாரா? எம்.எல்.ஏ போன்ற பதவிகளை இருந்தால், என்.ஜி.ஒக்களின் மூலம் மேலதிகமான நிதியைப்
பெறலாம் என்பதற்காகவே மேத்தா  பட்கர், உதயகுமார்
போன்றோர் ஆம் ஆத்மியில் சேர்ந்தனர்.
**
உதயகுமார் ராதாபுரம் தொகுதியில் போட்டி இடுவதற்கும்,
சிவகாமி திமுக வேட்பாளராகப் போட்டி இடுவதற்கும் ஒரே
காரணம்  தங்களின் என்.ஜி.ஓ மூலம் கோடி கோடியாக
அந்நிய நிதி பெறுவதற்கே.
**
எனவே ஐயா அவர்களே,
புண்ணுக்குப் புனுகு பூச வேண்டாம்!
புளித்த கள்ளுக்குப் புனிதம் கற்பிக்க வேண்டாம்!!         
புரட்சிகர கொழுந்தியாள்களும் மார்க்சியமும்!
--------------------------------------------------------------------------
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம் உ.பி.
இங்குள்ள சட்டமன்றத் தொகுதில 403.
2012 தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில்
224 தொகுதிகளில் வென்று முதல்வர் ஆனார் அகிலேஷ் யாதவ்.
முதல்வராகும் பொது இவரின் வயது 38 மட்டுமே.

இவரின் மனைவி டிம்பிள் யாதவ் மக்களவையில் எம்.பி.யாக
இருக்கிறார். மக்களவைப் புரட்சிக்கு இவர் பொறுப்பேற்றுள்ளார்.

அகிலேஷ் யாதவ்வின் கொழுந்தியாள் அபர்ணா யாதவ்.
உ.பி அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் இவர் மிக
முக்கியப் புள்ளி. உ.பி  சட்டமன்றத்திற்கான  இடைத் 
தேர்தலில் அபர்ணா யாதவ் போட்டி இடுகிறார். இதற்கான
டிக்கட்டை கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வழங்கி
விட்டார். அபர்ணா யாதவ்வின் வெற்றி உறுதி. அவர்
அமைச்சராவதும் உறுதி.

உ.பி.யைப் போல தமிழ்நாட்டு அரசியலிலும் ஒரு
புரட்சிகர கொழுந்தியாள் இன்றைய நிலையில்
முக்கியத்துவம் பெற்று வருகிறார். தமிழகத்தின் லெனின்
என்று போற்றப்படும் விஜயகாந்த்தின் மச்சான் சுத்தீஷ்
அவர்களின் கொழுந்தியாள் ரம்யாதான் அவர்.
(சான்றிதழ் பிரகாரம் இவரின் பெயர் நமக்கு சரியாகத்
தெரியவில்லை, ஜோதிடப்படியான பெயரையே
அனைவரும் குறிப்பிடுவதால் நாமும் அப்படியே குறிப்பிட வேண்டியதாகிறது) 

சுத்தீஷின் கொழுந்தியாளுக்கு அரசியலில் பிரகாசமான
எதிர்காலம்  இருப்பதாக மார்க்சியக் கட்சியின்
சித்தாந்த்தச்  சிங்கம் எச்சூரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

வைகோ போன்ற சிறந்த பார்லிமென்டேரியன்களை,
முத்தரசன், ஜீயார், திருமா போன்ற பழுத்த
அரசியல்வாதிகளை கட்டி வைத்து அடிக்கும் வல்லமை
வாய்ந்தவர் சுத்தீஷ் என்பதை  நாடறியும். அப்படிப்பட்ட
சுத்தீஷின் கொழுந்தியாள் தமிழகத்தில் ஒரு மாற்று
அரசியல் புரட்சி நடத்த இருக்கிறார் என்ற செய்தி
மார்க்சியத்தின் வளர்ச்சிக்கு நல்லதொரு உதாரணம்
ஆகும் என்கிறாராம் தா பாண்டியன்.

காரல் மார்க்சின் லூயி போனபார்ட்டின் பதினெட்டாம்
புருமேர்  என்ற நூலைப் படித்துப் புரிந்து கொண்டு
இருப்பவர்களால் நமது கட்டுரையை எளிதில்
புரிந்து கொள்ள முடியும்.

நடப்பது ஏகாதிபத்திய யுகம் என்றார் லெனின்.
புரட்சிகர கொழுந்தியாள்களின் யுகம் என்கின்றனர்
மார்க்சிஸ்ட் தலைவர்கள். எப்படியோ, சுத்தீஷின்
கொழுந்தியாள் தயவில் கம்யூனிசம் வளர்ந்தால் சரி
என்கின்றனர் ஆப்டிமிஸ்ட்டுகள்.
----------------------------------------------------------------------------------------- 





சக்தி வாய்ந்த தேமுதிக கிச்சன் காபினெட்!
-----------------------------------------------------------------------
தேமுதிக குறித்த எந்தவொரு முக்கியமான முடிவையும்
(INCLUDING POLICY DECISIONS) எடுப்பது கட்சித் தலைவர்
விஜயகாந்த் அல்ல.மாறாக, அக்கட்சியின் கிச்சன்
காபினெட்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறது.

ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் கிச்சன் காபினெட்
கூடி கொள்கை முடிவுகளை எடுக்குமாம். மற்ற
முடிவுகளை அவ்வப்போது கூடி எடுக்குமாம்.

இந்த கிச்சன் காபினெட்டில், 1) அண்ணியார் பிரேமலதா
2) மச்சான் சுத்தீஷ் 3) சுத்தீஷின் மனைவி 4) சுத்தீஷின்
மாமியார் 5) சுத்தீஷின் கொழுந்தியாள் ஆக மொத்தம்
ஐந்து பேர் இருக்கின்றனராம்.

இந்த அடிப்படையில்தான் எங்கள் அணி பஞ்ச பாண்டவர்
அணி என்று கம்யூனிஸ்ட் பெருந்தலைகள் கூறினராம்.

கிச்சன் காபினெட் கூட்டத்திற்கு எப்போதும் சுத்தீஷின்
கொழுந்தியாள்தான் தலைமை தாங்குவாராம்.
யார் யாருக்கு என்னென்ன பதவி என்பதை இந்த கிச்சன்
காபிநெட்தான் முடிவு செய்யுமாம்.

வைகோ துணை முதல்வர், முத்தரசன் உள்ளாட்சி அமைச்சர்
என்றெல்லாம் முடிவு செய்வது இந்த கிச்சன்
காபிநெட்தானாம். ஜி ராமகிருஷ்ணனுக்கு நிதித்துறையை
ஒதுக்கலாம் என்று  முதன்முதலில் புரப்போஸ்
பண்ணியது யார் தெரியுமா? சுத்தீஷின் மாமியார்தானாம்.

வாழ்க கிச்சன் காபினெட்! வளர்க கம்யூனிசம்!
---------------------------------------------------------------------------------------------------------   
ஜி ராமகிருஷ்ணனுக்கு நிதித்துறை ஒதுக்கிய
விஜயகாந்த் மச்சான் சுத்தீஷுக்கு நன்றி தெரிவிக்க
சீத்தாராம் எச்சூரி சென்னை வருகை!
சுத்தீசுக்கு நன்றி தெரிவித்து பொலிட்பீரோ தீர்மானம்!
---------------------------------------------------------------------------------------
கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய சுத்தீஷ்
மார்க்சிஸ்ட் தலைவர் ஜி ராமகிருஷ்ணனுக்கு
நிதியமைச்சர் பதவியை வழங்கினார்.

இதற்காக சுத்தீசுக்கு நன்றி தெரிவித்து , மார்க்சிஸ்ட்
கட்சியின் பொலிட்பீரோ ஏகமனதாக தீர்மானம்
நிறைவேற்றி உள்ளது. விஜயகாந்த் மச்சான் சுத்தீஷுக்குப்
புகழாரம் சூட்டும் இத்தீர்மானம் சுத்தீஷை
தமிழகத்தின் மாவோ என்று வர்ணிக்கிறது.

அடுத்த வார பீப்பிள்ஸ் டிமாக்ரசி இதழில்தான் தீர்மானம்
வெளியாகும் என்பதால், தீர்மான நகலை எடுத்துக் கொண்டு
நேரில் புறப்பட்டு விமானத்தில் வருகிறார் எச்சூரி.

இருப்பினும் எச்சூரியைச் சந்திக்க சுத்தீஷ் இன்னும்
அப்பாயின்ட்மென்ட் கொடுக்காதலால், எச்சூரி அவர்கள்
கட்சி அலுவலகத்தில் தங்கி இருக்கிறாராம்.

என்னே எச்சூரியின் எளிமை!
என்னே அவர்தம் பெருந்தன்மை! பொறுமை!!
------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: நமது பதிவைப் படித்துப் பார்த்த இசக்கி முத்து
அண்ணாச்சி "கேவலப் படுங்கடா, டேய், உங்களுக்கு
இதுவும் வேணும், இன்னமும் வேணும்" என்று கூறிக்
கொண்டே, மேசை மீது கிடந்த பீப்பிள்ஸ் டிமாக்ரசி இதழின்
மீது காரித் துப்பினார்.
-------------------------------------------------------------------------------------------------------


சட்டத்தின் பெயரால் மகா பெரியவாளைத்
துன்புறுத்துதல் தகாத காரியம்!
எச்சூரி நன்னா சூடு கொடுத்தாரோன்னோ!
------------------------------------------------------------------------
மஹா  பெரியவா ஜகத்குரு ஜெயேந்திர
சுவாமிகளிடம் இருந்து ஏதேனும் தகவல்
வேண்டுமென்றால் மேதகு நீதியரசர்கள் மடத்துக்கே
நேரில் சென்று கேட்டுத் தெளிவு பெறலாமே!

மஹா பெரியவா மௌன விரதம் இருக்காத தேதிகள்
என்ன என்ன என்று மடத்துக் காரியஸ்தரை
விசாரித்துத் தெரிந்து கொண்டு மேதகு
நீதியரசர்கள் மடத்துக்கே நேரில் சென்றால்
பெரியவா தரிசனமும் கிட்டும்; அவா தர்ற
வியாக்கியானமும் கிட்டுமோன்னோ!

இத விட்டு சாட்சிக் கூண்டு குற்றவாளிக் கூண்டு
இப்படிக் கூண்டுலல்லாம் அடைக்கறதுக்கு
பெரியவா என்ன பட்சியோன்னோ!

அவா இவாளக் கைது பண்றச்சேயே கைது பண்ணப்
படாதுன்னுட்டு சூட்டோட சூடா அறிக்கை
கொடுத்தாரோன்னோ எச்சூரி! எச்சூரில்லாம் எப்பேர்ப்பட்ட
ப்ராமண சிரேஷ்டா! ராமாமூர்த்திக்கு அப்புறம் இவாதானே
நமக்கெல்லாம் ஆபத்பாந்தவனா இருக்கா!
------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இப்படி உரையாடல் நீண்டு கொண்டே
செல்கிறது. மயிலாப்பூர், மேற்கு மாம்பலம்,
திருவல்லிக்கேணி ஏரியாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட்
கட்சிப் பிரமுகர்களின் உரையாடல்.
-----------------------------------------------------------------------------------------------------   

    
கௌசல்யா நியூஸ் 7 பெட்டி
கல்லோர்ரியில் சேர்ந்த 3ஆம் நாளே ப்ரோபோசே பண்ணினார் 
CPI, CPM போலிக் கம்யூனிஸ்டுகள் கேவலப் படுவதற்கு 
தகுதியானவர்களாக ஆகி விட்டார்கள். எனவே கேவலப் 
படுத்தப் படுகிறார்கள்.
**
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்.
95 ஆண்டு கால வரலாறு படைத்த இரண்டு கம்யூனிஸ்ட்
கட்சிகளும் ஒரு கோமாளிப் பயலை, ஒரு லூசுப்பயலை
ஒரு கருப்புப்பண முதலையை முதல்வர் ஆக்குவதுதான்
கம்யூனிசம் என்று சமூகத்திற்கு
ஒரு செய்தியைச் சொல்லும்போது, அந்தச் சிறுமையைக்
கண்டிக்காமல் கடந்து போவது தடித்த தோல்
உடையவர்களால் மட்டுமே இயலும். போலிக் கம்யூனிஸ்டுகள்
பட வேண்டிய கேவலத்தைப் பட்டுத்தான் ஆக வேண்டும்.
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு கேடயமாகச் செயல்பட
முயல்வது நாணத் தக்கது.

செவ்வாய், 29 மார்ச், 2016

மார்க்சிஸ்ட் 
1) புரட்சிகர கொழுந்தியால்கள்
2)கண்டதைச் சொல்கிறேன் கதை
3) அறிவுஜீவி இடதுசாரி
4) கருத்து சுதந்திரம் இல்லை
லூயி போனபார்ட் 18

இந்தக் கேவலம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
---------------------------------------------------
யார் யாருக்கு என்ன பதவி என்பதை விஜயகாந்த்தின் 
மச்சான் சுத்தீஷ் அறிவிக்கிறார். 
வைகோ துணை முதல்வராம். திருமா கல்வித் துறையாம்.
ஜீயார்-நிதி! முத்தரசன்-உள்ளாட்சி!
(தகவல் ஆதாரம்: நியூஸ் 7 டி.வி நேரலை)

யாருக்கு யார் கொடுப்பது? கொடுக்கிற இடத்தில் இருக்கும் 
சுத்தீஷ் கொடுக்கிறார். கையேந்தி மடிப்பிச்சை எடுக்கும் 
இடத்தில் கம்யூனிஸ்ட்களும் வைகோ திருமாவும் 
இருக்கிறார்கள்.

இதற்கு மேல் இவர்களை யாராவது கேவலப் படுத்த 
முடியுமா?

விஜயகாந்த் மச்சான் சுத்தீஷும் அவரின் கொழுந்தியாளும்
காலால் இடுகிற உத்தரவைத் தலையால் நிறைவேற்றும் 
ஈனப் பிழைப்பு இவர்களுக்குத் தகும்.
---------------------------------------------------------------------------------------------------  
விஜயகாந்த் கூட்டணி பெயர்க் குழப்பம்!
சுமுகத் தீர்வுக்கான சமரச முயற்சிகள் தீவிரம்!
----------------------------------------------------------------------------
என்னைப் பொறுத்த மட்டில் விஜயகாந்த் கூட்டணி என்று
அழைப்பதில் எவ்விதமான கௌரவக் குறைச்சலும் இல்லை
என்பதை ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளேன். தற்போது
ஒரு சமரச முயற்சியாக, அம்பேத்கர் வழி நடக்கும்
விஜயகாந்த்தின் மச்சான் சுத்தீஷ் அவர்களின்
கொழுந்தியாள் ரம்யா அவர்களின் பெயரில் ரம்யா நலக்
கூட்டணி என்று பெயர் சூட்ட ஒரு முயற்சி நடந்து வருகிறது.

எனக்கு இதிலும் ஆட்சேபம் இல்லை. என்றாலும் இதில் ஒரு
சித்தாந்தப் பிரச்சினை இருப்பதால், கருத்தியல் ரீதியாக
இதைத் தீர்மானித்து இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை
சீத்தாரம் எச்சூரியிடம் ஒப்படைத்து விட்டோம்.

இவ்வாறு சிறுத்தைகள் தரப்பு தெரிவிக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------

எல்லாம் சிறுத்தைகள் உபயம்!



உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்.
95 ஆண்டு கால வரலாறு படைத்த இரண்டு கம்யூனிஸ்ட்
கட்சிகளும் ஒரு கோமாளிப் பயலை, ஒரு லூசுப்பயலை
ஒரு கருப்புப்பண முதலையை முதல்வர் ஆக்குவதுதான்
கம்யூனிசம் என்று சமூகத்திற்கு
ஒரு செய்தியைச் சொல்லும்போது, அந்தச் சிறுமையைக்
கண்டிக்காமல் கடந்து போவது தடித்த தோல்
உடையவர்களால் மட்டுமே இயலும். போலிக் கம்யூனிஸ்டுகள்
பட வேண்டிய கேவலத்தைப் பட்டுத்தான் ஆக வேண்டும்.
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு கேடயமாகச் செயல்பட
முயல்வது நாணத் தக்கது.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க துடைத்து.



தங்களைப் போன்ற குட்டி முதலாளித்துவ நபர்கள்
கம்யூனிசம் மார்க்சிசம் பற்றி உபதேசம் பண்ண உரிமை
இல்லை. உங்களின் வரம்பை அறிந்து பேசவும். புரட்சி
என்றால் உனக்கு என்ன என்று தெரியுமா?  அண்ணியார்
பிரேமலதாவை ஆதரித்து ஓட்டுப் போடுவதுதான்
புரட்சியா, குட்டி முதலாளித்துவ அற்பனே!

2021 தேர்தலில் சிம்பு முதல்வர் வேட்பாளர்!
கம்யூனிஸ்டுகள், வைகோ, திருமா முயற்சி!
-------------------------------------------------------------------------
தொலைநோக்குப் பார்வையுடன் நீண்டகாலத் திட்டத்தை
வகுத்துச் செயல்படுவது தமிழக கம்யூனிஸ்டுகளின் பண்பு.
அந்த அடிப்படையில் 2021 தேர்தலில் நடிகர் சிம்பு அவர்களை
முதல்வர் வேட்பாளராக அறிவித்து, அவரை முதல்வராக்க
உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத்
தயாராக இருப்பதாக தலைவர்கள் முத்தரசன்-ராமகிருஷ்ணன்-
வைகோ-திருமா ஆகியோர் திட்டம் தீட்டி உள்ளனர்.

இதற்கு சிம்பு ஒப்புதல் அளித்துள்ளாராம்.
2021இல் முதல்வர் சிம்புவே!
இன்குலாப் ஜிந்தாபாத்!
------------------------------------------------------------------------------------

இது நடக்காது என்று யாராவது உத்தரவாதம் தர முடியுமா?
உலக ரெட்டியார்களே ஒன்றுபடுங்கள்!
ரெட்டியார் ஓட்டுக்களைக் கவர
தா பாண்டியன் முத்தரசன் திட்டம்!
----------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் 
பொதுச் செயலாளராக பெருமதிப்பிற்குரிய
சுதாகர் ரெட்டியார் அவர்கள் இருக்கிறார். இந்த 
நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, ரெட்டியார் சமூக 
வாக்குகளைக் கவர ஒரு மாஸ்டர் பிளானை 
வகுத்துள்ளனர் தா பாண்டியனும் முத்தரசனும்.

ரெட்டியார் சமூகத்தினர் கணிசமாக வாழும் தொகுதிகளை 
விஜயகாந்த்-வைகோவிடம் கேட்டுப் பெறுவது என்றும், 
சுதாகர் ரெட்டியார் தலைமையில் ஆந்திராவில் உள்ள புரட்சிகர  ரெட்டியார்களை அழைத்து வந்து சூறாவளிப் பிரச்சாரத்தில்
ஈடுபடுத்துவது என்றும் தா பாண்டியன் முடிவு செய்துள்ளார்.

தளி எம்.எல்.ஏவும் புரட்சிகர ரெட்டியாரும் ஆகிய 
ராமச்சந்திர ரெட்டியார் இதற்கான நிதி உதவியை 
அளிக்கச் சம்மதித்து விட்டார் என்பது எங்களுக்கு 
கிடைத்துள்ள முதல் வெற்றி என்கிறாராம் முத்தரசன்.

உலக ரெட்டியார்களே ஒன்று படுங்கள் என்ற கொள்கை 
முழக்கமும் புரட்சிப்பாடலும் தயாரித்து முடித்து 
விட்டார்களாம் கலை இலக்கியப் பெருமன்றத்தினர்.

ரெட்டியார்களைத் திரட்டாமல் இந்தியப் புரட்சி 
ஒருநாளும் வெற்றி பெறாது என்று அடித்துக் 
கூறுகிறார் தா பாண்டியன். உண்மைதானே!
----------------------------------------------------------------------------------------------------------      
முலாயம் சிங்கின் வாரிசு அரசியல்!
வாழ்த்துச் சொல்லும் எச்சூரி!
----------------------------------------------------------------------
அபர்ணா யாதவ்! இவர்தான் முலாயம்சிங் யாதவ்வின்
இளைய மருமகள். இவருக்கு தற்போது எம்.எல்.ஏ
தேர்தலில் போட்டியிட முலாயம் டிக்கட் வழங்கி உள்ளார்.

ஏற்கனவே முலாயம்மின் மூத்த மருமகள் டிம்பிள் யாதவ்
எம்.பி.யாக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

முலாயம்மின் மகன் அகிலேஷ் யாதவ் உ.பி முதல்வராக
இருந்து வருகிறார். அவரது அமைச்சரவையில் அவரின்
சித்தப்பா, பெரியப்பா, தாய்மாமன் உள்ளிட்ட நெருங்கிய
உறவினர்கள் சமூகநீதியைக் காத்து வருகின்றனர்.

அபர்ணா யாதவ்வின் வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்துச்
சொல்லி உள்ளாராம் சீத்தாராம் எச்சூரி.

காரித் துப்புகிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி!
------------------------------------------------------------------------------------------------------


விஸ்வநாதன் ஆனந்த் தோற்று விட்டார்!
ஆனந்த்துக்காக நாங்கள் அழுகிறோம்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------------
உலக சதுரங்க சாம்பியனாக நார்வே நாட்டு இளம் வீரர் 
மாக்னஸ் கார்ல்சன் 2013 நவம்பர் முதல் இருந்து வருகிறார்.
இவ்வாண்டு 2016 நவம்பரில் அமெரிக்காவில் உலக சாம்பியன் 
போட்டி நடைபெற உள்ளது.

இதில் நடப்பு சாம்பியனான கார்ல்சனை எதிர்த்து 
விளையாடுவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 
Candidates Tournament மாஸ்கோவில் நடந்து வருகிறது. 
எட்டு வீரர்கள் பங்கு பெறும் 14 சுற்றுகளைக் 
கொண்ட (double round robin) இப்போட்டி இன்று (28.03.2016)
நிறைவுற்றது.

இதில் ரஷ்யாவின் இளம் வீரர் செர்ஜி கர்ஜகின் 
8.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்று Challengerஆக 
வெற்றி பெற்றார். இவ்வாண்டு நவம்பரில் இவரே 
கார்ல்சனை எதிர்த்து விளையாடுவார்.

ஈற்றயல் சுற்று வரை (penultimate round), அதாவது 13ஆவது 
சுற்று வரை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்க 
இயலவில்லை. செர்ஜி, கரௌனா, ஆனந்த் ஆகிய 
மூவருக்கும் இடையில் டைபிரேக்கர் ஆட்டங்களை நடத்த 
வேண்டி இருக்கும் என்ற சூழல் நிலவியது. இறுதிச் சுற்றில் 
ஆனந்த் டிரா செய்தார் (7.5 புள்ளிகள்). செர்ஜி -கரௌனா 
ஆட்டத்தில் கரௌனா தோற்றார்(7.5 புள்ளிகள்); செர்ஜி 
வெற்றி பெற்று challenger ஆனார் (8.5 புள்ளிகள்).

1990இல் பிறந்த செர்ஜிக்கு தற்போது 26 வயதுதான் ஆகிறது.
46 வயதிலும் ஆனந்த் இவரைப் போன்ற இளம் வீரர்களுடன் 
ஈடு கொடுக்கிறார் என்பது அசாதாரணமானது.

முன்னாள் உலக சாம்பியன் வாசெலின் டோபலோவ் 
இன்னமும் இந்தச் சுற்றிலும் விளையாடினார். அதுபோல் 
ஆனந்த்தும் இன்னும் ஓரிரு challenger போட்டிகளில் 
பங்கேற்கலாம். அல்லது தமது ஓய்வை அறிவிக்கலாம். 

அடுத்தடுத்து வரும் challenger போட்டிகள் இளம் வீரர்களால் 
நிரம்பி வழியும். இளம் இருபதுகளிலும் பிந்தைய 
இருபதுகளிலும் உள்ள வீரர்களுடன் ஆனந்த் ஈடு கொடுத்து 
நிற்பது சுலபமல்ல என்பது ஆனந்த் உட்பட அனைவருக்கும் 
தெரியும். ஆனந்த் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
என்றாலும் கண்களில் கண்ணீர் திரையிடுவதை மறைக்க 
முடியவில்லை.
---------------------------------------------------------------------------------------------------

        

திங்கள், 28 மார்ச், 2016

மார்க்சிய லெனினிய தோழர் டி எஸ் குமார் அவர்களின்
மறைவுக்கு அஞ்சலி!
---------------------------------------------------------------------------------------------
BSNL தொழிற்சங்கமான  NFTE சங்கத்திலும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்
(போல்ஷ்விக்) அமைப்பிலும் உறுதியாகப் பணியாற்றிய
கடந்த ஓராண்டு காலமாகவே உடல்நலம் குன்றியிருந்த
தோழர் டி.எஸ்.குமார் அவர்கள்
கடந்த செவ்வாய் அன்று 22.03.2016 காலை காலமானார்.
மறைந்த தோழருக்கு சிவப்பு அஞ்சலி!
=======================================================
தயவு செய்து ஆதாரம் தரவும். செய்தித்தாள் கட்டிங்
அல்லது வீடியோ கிளிப்... 
போலிக் கம்யூனிஸ்ட்களின் பித்தலாட்டம்!
----------------------------------------------------------------------
பதிவில் யாகம் நடத்தப்பட இருக்கிறது என்று எதிர்காலத்தில்
(FUTURE  TENSE) சொல்லப் பட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள
கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று
எதிர்காலத்தில் சொல்லப் பட்டுள்ளது. தெலுங்கானா  முதல்வர்
சந்திரசேகரராவ் நடத்திய யாகம் பற்றியும் பதிவு குறிப்பிடுகிறது.
எனவே இதில் எங்கு இருக்கிறது பித்தலாட்டம்? விஜயகாந்த்
எந்த நேரமும் நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு இருக்கும்
ஆத்திக ஆசாமி. அவர் என்ன பெரியாரிஸ்டா? மூத்திரம்
பெய்வதற்குக்கூட சாஸ்திரம் பார்க்கும் விஜயகாந்த்தின்
மூட நம்பிக்கையைக் கண்டிக்கும் பதிவு இது. இதில் எங்கே
இருக்கிறது பித்தலாட்டம்? பித்தலாட்டம் என்பது போலிக்
கம்யூநிச்டுகளுக்குச் சொந்தமானது.   
அதிமுகவுடன் கூட்டணி என்பது கிணற்றில் போட்ட கல்லாகக்
கிடக்கிறது. ஏற்கனவே பீட்டர் அல்போன்ஸ் தலைமையில்
ஒரு கோஷ்டி ஸ்டாலினிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திக்
கொண்டிருக்கிறது. வாசனுக்கு வேறு என்ன வழி? விஜயகாந்துடன்
சேர்ந்து தற்கொலை செய்ய வாசன் தயாராக இல்லை.

மறைந்த இல கோவிந்தசாமி இன்னொன்றையும் சொன்னார்;
அதுதான் யதுகுல மனப்பான்மை! நினைவு இருக்கிறதா?

வைகோ மருமகன் 450 கோடிக்கு வாங்கிய சொத்து
------------------------------------------------------------------------------
தோழரே, இதெல்லாம் நான் கிளப்பி விட்டதுதான்.
மேற்படி டெக்ஸ்டைல் கம்பெனி loan defaulter. SBIயால்
ஏலத்துக்கு வந்த சொத்து. தினகரன் பத்திரிக்கை
எனது முகநூல் பதிவை மேற்கோள் காட்டி ஒரு
கட்டுரையும் வெளியிட்டு விட்டதால் விஷயம்
காட்டுத்தீயாய்ப் பரவி விட்டது. எனவே இதை மேற்கொண்டு
கிளறவேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.  


எது பித்தலாட்டம்?
கொடுப்பது தொகுதிகள் அல்ல, ஆக்சிஜன்!
மடிப்பிச்சை கேட்கும் சோனியா அம்மையாரே!
ராகுல் காந்தியே, குலாம் நபி ஆசாத் அவர்களே!
-------------------------------------------------------------------------------
1967இல் தமிழக மக்கள் காங்கிரசை ஓட ஓட விரட்டி
அடித்தார்கள். கொம்மளி ராமச்சந்திர மேனனும்
போலி கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரமும் சேர்ந்து
மீண்டும் காங்கிரசுக்கு செல்வாக்குச் சேர்த்தார்கள்.

ஒரு மைனாரிட்டி ஆட்சியை நடத்திய போதும்கூட,
உங்களுக்கு கலைஞர் ஆட்சியில் பங்கு தரவில்லை.
இன்றைக்கு மாறிய சூழ்நிலையை நினைத்துப் பார்த்து,
கலைஞர் கொடுபாதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில், கலைஞர் கொடுப்பது தொகுதிகள்  அல்ல;
ஆக்சிஜன்! 

கலைஞர் கழகத் தலைவர் மட்டும் அல்ல.
கடவுளும் கூட.

கரங்களை உங்களுக்கு இறைவன் படைத்தது
கலைஞரிடம் கையேந்தவே..

மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் உரிமை
பேத்திகளுக்கு மட்டுமே பாட்டிகளுக்கு அல்ல.

இரவலர் புலவு கோருதல் இல்.

சோனியாவின் கலிங்கம் குலையாமல்
பட்டணத்தில் இருத்தி
தூது வந்த நும் மடியில்
நுகர்ச்சிப் பண்டங்களை இடும் கலைஞருக்கன்றோ
நும் அவைக்களப் புலவர் பரணி பாடுதல் வேண்டும்!
 

நிஜ யுத்தமும் நிழல் யுத்தமும்!
-----------------------------------------------------
2016 தமிழக சட்ட மன்றத் தேர்தலில்
நிஜ யுத்தம் திமுக, அண்ணா திமுகவுக்கு இடையில் நடப்பது.

மற்றக் கட்சிகள் கூட்டணிகள் எல்லாம்
(பாஜக, பாமக, விஜயகாந்த், நாம் தமிழர்)
நிழல் யுத்தம் செய்பவையே!  
----------------------------------------------------------------------------------------------------


போலிக் கம்யூனிஸ்டுகளை முதலில் அடையாளம் காண வேண்டும்.
பின்பு அம்பலப் படுத்த வேண்டும். பிறகு தாக்கித் தகர்க்க வேண்டும் .
இறுதியில் முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும். இதைச்
செய்யாமல் கம்யூனிசத்தை நோக்கி ஒரு அங்குலம் கூட
நகர முடியாது.
தொகுதிப் பங்கீடு பற்றியது அறிவாலயத் தகவல்.
பின்பகுதி அறிவியல் கணிப்பு. அதாவது செபாலாஜி
(Psephology) என்னும் தேர்தல் முடிவுக் கணிப்பியல்.
செபாலசிக் கணிப்பை நியூட்டன் அறிவியல் மன்றம்
செய்து வருகிறது. 
குலாம் நபி ஆசாத் அவர்களே,


கலைஞர் கொடுக்க விரும்புவதை
யாரும் தடுக்க முடியாது.
கலைஞர் கொடுக்க விரும்பாததை
யாரும் தந்து விட முடியாது.

கலைஞரின் காலடியே
காங்கிரசுக்கு சுவர்க்கம்!

BEGGARS CANNOT BE THE CHOOSERS!

கலைஞர் தருவதை வணங்கி ஏற்றுக் கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------  
திமுக கூட்டணியின் தற்போதைய நிலை!
உத்தேச தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல்!
முத்துவேல் கருணாநிதி என்னும் நான்.......
-----------------------------------------------------------------------
1) திமுக......= 174
2) காங்கிரஸ் = 26
3) தமாகா (வாசன்) =14
4) முஸ்லிம் லீக் (காதர் மொய்தீன்) = 5
5) ம.ம.க (ஜவஹரில்லா) = 5
6) புதிய தமிழகம் = 7
7) எஸ்.டி.பி.ஐ = 3
------------------------------
மொத்தம் =234
----------------------------------------
குறிப்பு-1: சில சிறிய கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்
குறிப்பு-2: இது உத்தேசப் பட்டியலே. கடைசி நேர மாறுதலுக்கு
உட்பட்டது.
குறிப்பு-3: கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற
பேச்சுக்கே இடம் கிடையாது என்ற திமுகவின் நிபந்தனையை
எல்லாக் கட்சிகளும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன.
குறிப்பு-4: 2016 மே 21இல் கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்கிறார்.
ஸ்டாலின் துணை முதல்வர்; 21 பேர் கொண்ட அமைச்சரவை
பதவி ஏற்கிறது. துணை முதல்வர் ஸ்டாலின் நிதி அமைச்சராகப்
பொறுப்பேற்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------- 
பிரேமலதா குடும்ப ஜோதிடருடன்
வைகோ ரகசிய சந்திப்பு!
--------------------------------------------------------------
விஜயகாந்த்தின் மச்சான் சுத்தீஷின் கட்டளைக்கு
கீழ்ப்படிந்து பிரேமலதா குடும்ப ஜோதிடரை,
வைகோ நேற்று முன்னிரவு சந்தித்தார்.

சுத்தீஷின் கட்டளைப்படி, இரண்டு கவுளி வெற்றிலை
வாங்கிக் கொண்டு சென்றார் வைகோ.

வைகோ தரப்பு போட்டியிடும் 110 தொகுதிகளுக்குமான
வேட்பாளர் பட்டியலை திரிகால பூஜையில் வைத்து,
உரிய சடங்குகளைச் செய்து, எல்லா நிகழ்வுகளுக்குமான
நல்ல நேரத்தை (முஹூர்த்தம்) குறிப்பது குறித்தே
இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக சுத்தீஷ் தரப்பு
தெரிவித்தது.
-----------------------------------------------------------------------------------------------------       
கேப்டன் விஜயகாந்த் கூட்டணி வெற்றி பெற
மாபெரும் யாகம்! சுத்தீஷ் தீவிர முனைப்பு!
சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டிக்கு சிறப்பு அழைப்பு!
---------------------------------------------------------------------------------------------
கேப்டன் விஜயகாந்த் கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி
பெற்று, ஆட்சியைப் பிடிப்பதற்காக மாபெரும் யாகம்
நடத்தப்பட உள்ளது. 1008 புரோஹிதர்கள், வேத விற்பன்னர்கள்
பங்கேற்று நடத்தும் இந்த யாகத்தில் கேப்டன் விஜயகாந்த்
கூட்டணியின்  தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று
சுத்தீஷுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த யாகத்தில் பங்கேற்க சீத்தாராம் யெச்சூரி, சுதாகர்
ரெட்டி, முன்னாள்  நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத்
சட்டர்ஜி  உள்ளிட்ட கம்யூனிஸ்ட் பெருந்தலைவர்களுக்கு
அழைப்பு விடுக்கப்படும் என்று அண்ணியார் பிரேமலதா
அவர்களின் குடும்ப ஜோதிடர் தெரிவித்தார்.

ஜெயலலிதா நடத்திய யாகத்தை விட,
தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் நடத்திய
மஹா யக்ஞத்தை விட, இது மிகச் சிறந்ததாக இருக்க
வேண்டும் என்று சுத்தீஷ் மிகுந்த பிரயாசை எடுத்து
வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாழ்க கம்யூனிசம்! வெல்க விஜயகாந்த் நடத்தும் யாகம்!
--------------------------------------------------------------------------------------------------       
லெனின் விருது பெற்றதில் மகிழ்ச்சி இல்லை!
கேப்டன் விஜயகாந்த் கருத்து!
--------------------------------------------------------------------------
கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து இந்த
லெனின் விருதை நமக்கு கொடுத்துட்டாங்க.
தமிழ்நாட்டு லெனின் விஜயகாந்த் தான் என்று
சொல்லிக்கிட்டு இருக்காங்க.

எனக்கு இதிலே சந்தோசம் எதுவும் இல்லை.
தனியார் மயமே கூடாதுன்னு சொன்னவராமே லெனின்.
இதெல்லாம் நம்ம நாட்டுக்கு சரிப்பட்டு வருமா?

எல்லாத்தையும் விட எனக்கு ரொம்ப வருத்தம் என்ன
தெரியுமா?

லெனின் புகைப்படத்த நல்ல குளோசப்லே பாத்தேன்.
அவருக்கு தல பயங்கர வழுக்கையா இருக்கு. என் தலையப்
பாருங்க! முடி நெறைய இருக்கும். எல்லாம் ஒரிஜினல்
முடி சார். எவ்வளவு அடர்த்தியா இருக்கு பாருங்க.

இவ்வளவு அடர்த்தியா முடி உள்ள எனக்கு, வழுக்கைத்
தலையா இருக்கிற லெனின் விருது கொடுத்ததுல
நியாயம் இருக்குதான்னு நீங்களே சொல்லுங்க.

இவ்வாறு கேப்டன் விஜயகாந்த் கூறினார்.
-------------------------------------------------------------------------------------------------------   
என்னய்யா, அடி மடிலே கையை வைக்கிறீங்க?
பதவி, அதுவும் எம்.பி பதவி எவ்வளவு பெருசு!
பதவிக்காக சோரம் போவதுதானே நாங்கள் அறிந்த
கம்யூனிசம்! அதுதானே எங்கள் குலத்தொழில்!!
நிச்சயமாக. இடஒதுக்கீட்டுக் கொள்கை சமூகத்தில்
செல்வாக்குப் பெற்று இருக்காவிட்டால், BC வகுப்பைச்
சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்காண போட்டியிலேயே
இருக்க முடியாது. 

ஞாயிறு, 27 மார்ச், 2016

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி புது வியூகம்!
விஜயகாந்த் கூட்டணி மைனஸ் கம்யூனிஸ்ட் ப்ளஸ் பாஜக!
இப்புதிய கூட்டணிக்கு அண்ணியார் பரிபூரண சம்மதம்!
சுத்தீஷ் ராஜ்யசபா எம்.பி ஆவாரா?
-----------------------------------------------------------------------------------------------
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப் போல,
டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தேமுதிக-பாஜக கூட்டணிக்கு
முயற்சி செய்து வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளைக்
கழற்றி விட்டு விட்டால், பாஜக-தேமுதிக கூட்டணி உறுதி
என்கிறார் சுவாமி.

விஜயகாந்த் கூட்டணி என்ற பெயருக்கு கடுமையான ஆட்சேபம்
தெரிவிக்கும் நல்லகண்ணு, ஜி ராமகிருஷ்ணன் ஆகிய
தலைவர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம்
அண்ணியார் பிரேமலதா.

இந்த சூழலைப் பயன்படுத்தி பாஜக-தேமுதிக கூட்டணியை
மீண்டும் உருவாக்க டாக்டர் சுவாமி முயற்சி செய்து
வருகிறார். இந்த முயற்சிக்கு அண்ணியார் மற்றும் சுத்தீஷ்
ஆதரவு தெரிவித்துள்ளனராம்.
---------------------------------------------------------------------------------------------------  
கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்!
மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணனுக்கு
அண்ணியார் பிரேமலதா கடும் எச்சரிக்கை!
--------------------------------------------------------------------------
தேமுதிக தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சிகள்,
வி.சி.க, மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
இது புதிய கூட்டணி. எனவே இதற்கு "கேப்டன் விஜயகாந்த்
கூட்டணி" என்று கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்
அண்ணன் வைகோ பெயர் வைத்துள்ளார்.

ஆனால் மார்க்சிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் கேப்டன்
விஜயகாந்த் கூட்டணி என்ற பெயரை ஏற்க முடியாது என்று
கூறுகிறார். இது சரியல்ல. ஒருங்கிணைப்பாளர் வைகோ
அறிவித்த பெயரையே  கம்யூனிஸ்ட் தலைவர்கள்  ஏற்றுக்
கொள்ள வேண்டும். இதற்கு சம்மதம் இல்லை என்றால்
கம்யூனிஸ்ட்கள் கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று
அண்ணியார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கம்யூனிஸ்டுகள் வெளியேறினால் பாஜகவுடன் தேமுதிக
கூட்டணி அமைக்கும் என்பது  அண்ணியாரின்
மன ஓட்டம் என்கின்றனர் தேமுதிகவினர்.
----------------------------------------------------------------------------------------------------
1925 முதல் 1985 வரை தமிழ்நாட்டில் பெரியாரியமும்
மார்க்சியமும் (மார்க்சிய லெனினிஸ்டுகள் உட்பட)
மேற்கொண்ட சாதி ஒழிப்புப் பணிகளை பின்நவீனத்துவம்
முன்வைத்த அடையாள அரசியல்  முறியடித்து விட்டது.
1925-85 காலக் கட்டத்தில் ஏன் ஆணவக் கொலைகள் இல்லை?
தற்கொலைக்கு நான் பொறுப்பல்ல!
--------------------------------------------------------------
சீத்தாராம் எச்சூரியின் பூணூலிய மார்க்சியம் குறித்து
அம்பலப்படுத்தும் தொடர் கட்டுரைகள் ஏப்ரல் மாத
நடுவில் வெளியாகும்.

தொடர் கட்டுரைகளைப் படித்த எச்சூரி ரசிகர்கள்
எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு
இக்கட்டுரையாசிரியர் பொறுப்பாக மாட்டார்.

முன்பதிவுக்கு முந்துங்கள்.
---------------------------------------------------------------------------------------------------  
பிரபல சினிமா விமர்சகர் எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்
திருமாவளவன் மீது கடும் தாக்கு!
கேவலத்தின் எல்லையைத் தொடுவதா?
சுரேஷ் கண்ணன் கண்டனம்!
தொப்புளில் பம்பரம் விடும் காட்சி புகழ்
நடிகர் சண்முக பாண்டியன் சூறாவளிப் பிரச்சாரம்!
விஜயகாந்த் கூட்டணியின் நட்சத்திரப் பிரச்சாரகர்!
சீத்தாராம் எச்சூரியுடன் ஒரே மேடையில் பேசுகிறார்!
---------------------------------------------------------------------------------------
நடிகர் சண்முக பாண்டியன் யாரென்று உங்களுக்குத்
தெரியவில்லையா? அப்படியானால் நீங்கள் ஒரு
பிற்போக்குப் பிண்டம் என்கிறார் தா பாண்டியன்.
ஆம் என்று வழிமொழிகிறார்கள் முத்தரசனும் ஜீயாரும்.

தமிழ்நாட்டின் லெனின் என்று CPI, CPM கட்சியினரால்
போற்றப்படும் கேப்டன் விஜயகாந்த்தின் கனிஷ்ட
புத்திரர்தான் நடிகர் சண்முக பாண்டியன். கதாநாயகியின்
தொப்புளில் பம்பரம் விடும் காட்சிகள் மூலமாக, பட்டி
தொட்டி எங்கும் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்து
வருபவர் சண்முக பாண்டியன் என்று CPI, CPM கட்சித்
தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.

தற்போது விஜயகாந்த் கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடெங்கும்
சண்முக பாண்டியன் சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்க
இருக்கிறார். இவரது கால்ஷீட் மன்னிக்கவும் சுற்றுப் பயணத்
திட்டத்தை வகுப்பதில் முத்தரசனும் ஜி ராமகிருஷ்ணனும்
மும்முரமாக இருந்து வருகிறார்கள்.

சண்முக பாண்டியனின் கம்யூனிசப் பிடிப்பைக் கண்டு
வியந்து போன சீத்தாராம் எச்சூரி, அவருடன் ஒரே மேடையில்
பேச மிகவும் ஆர்வமாக உள்ளாராம். ஆனாலும்
அக்கூட்டத்திற்கு நடிகர் சண்முக பாண்டியன் இன்னும் தேதி கொடுக்கவில்லையாம். இதனால் வருத்தத்தில்
இருக்கிறார்களாம் காம்ரேடுகள்!
-------------------------------------------------------------------------------------------------------------
  
முத்தரசன் ராமகிருஷ்ணனுக்கு புதிய பதவி!
வழங்கினார் விஜயகாந்த் மச்சான் சுத்தீஷ்!
பெருமிதத்துடன் ஏற்றனர் கம்யூனிஸ்ட் தலைவர்கள்!
-----------------------------------------------------------------------------------------
கோயம்பேடு தேமுதிக அலுவலகலத்தில் அமர்ந்து தேர்தல் 
வியூகங்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, 
விஜயகாந்த் மச்சான் சுத்தீஷ் திடீரென்று அங்கு வந்ததுமே 
எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர் முத்தரசனும் 
ஜி ராமகிருஷ்ணனும். பதில் வணக்கம் செலுத்தாத சுத்தீஷ்,
"சகாப்தம் பாத்துட்டீங்கதானே, எப்படி இருக்கு/" என்று 
கேட்டதும் திணறிப் போன முத்தரசன் "சகாப்தம்" என்று
இழுத்தார்.

"இன்னுமா நீங்க சகாப்தம் பாக்கல?" என்று மிரட்டும் தொனியில் 
சுத்தீஷ் கேட்டதுமே குற்ற உணர்வுக்கு இலக்கான தமிழகத்தின் 
மாபெரும் "கம்யூனிஸ்ட்" தலைவர்கள் கையைப் பிசைந்தனர்.
அப்போது குறுக்கிட்ட தேமுதிக அலுவலகப் பொறுப்பாளர், 
"விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த வெற்றிப் 
படம்தான் சகாப்தம்" என்றும் "அப்படத்தை இன்னும் பார்க்காமல் 
இருப்பது தேச விரோதம்" என்றும் தெரிவித்தார்.

குலை நடுங்கிப்போன "கம்யூனிஸ்ட்" தலைவர்களோ உடனடியாக 
சண்முக பாண்டியனின் படத்தைப் பார்க்கத் துடித்தனர்.
உடனே அப்படம் அவர்களுக்குப் போட்டுக் காட்டப் பட்டது.
படம் பார்த்து முடித்ததும், "இதைப் போன்ற ஒரு புரட்சிகரமான 
படத்தை எங்கள் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை" 
என்று ஒருசேரக் கூவினார்கள் முத்தரசனும் ஜியாரும்.

இதில் மகிழ்ந்து போன சுத்தீஷ், முத்தரசனுக்கும் ஜியாருக்கும் 
புதிய பதவிகளை வழங்கி கௌரவித்தார்.

ஆம், வடசென்னை மாவட்ட சண்முகபாண்டியன் ரசிகர் 
மன்றத் தலைவர் பதவி முத்தரசனுக்கும், தென்சென்னை 
மாவட்டத் தலைவர் பதவி ஜியாருக்கும் வழங்கப் பட்டது.

நடிகர் சண்முக பாண்டியன் ரசிகர் மன்றத் தலைவர் பதவியை 
ஏற்பதன் மூலம் தமிழ்நாட்டில் மார்க்சியத்தைப் பரப்ப 
முடியும் என்று கருத்துத் தெரிவித்தனர் வட தென் சென்னை
மாவட்ட சண்முக பாண்டியன் ரசிகர் மன்றத் தலைவர்கள்.

வாழ்க சண்முக பாண்டியன் புகழ்!
வளர்க மார்க்சிசம்!
------------------------------------------------------------------------------------------------------------
              

சனி, 26 மார்ச், 2016

கலைஞரிடம் கையேந்துங்கள்!
குலாம் நபி ஆசாத் அவர்களே!
-------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------
கலைஞரிடம் கையேந்துங்கள்-அவர்
இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்-அவர்
பொக்கிஷத்தை மூடுவதில்லை.

அல்லல்படும் காங்கிரசாரே அயராதீர்கள்
கலைஞரின் திருவருளை நம்பி நில்லுங்கள்
அவரிடத்தில் குறையனைத்தும் சொல்லிக் காட்டுங்கள் 
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்.

கலைஞரிடம் கையேந்துங்கள்-அவர்
ஈடு இணை இல்லாத கருணை உடையவர்
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவர்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவர்.

கலைஞரிடம் கையேந்துங்கள்-அவர்
இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்-அவர்
பொக்கிஷத்தை மூடுவதில்லை.
-----------------------------------------------------------------------------------------

  

வெள்ளி, 25 மார்ச், 2016

வைகோ சிங்கப்பூர் பயணம்!
--------------------------------------------------
தமிழகத்தின் லெனின் கேப்டன் விஜயகாந்த்தின்
புதல்வரும் நடிகருமான சண்முக பாண்டியன்
ரசிகர் மன்றம் சிங்கப்பூரில் தொடங்கப்பட உள்ளது.

சிங்கப்பூர் செல்லவிருக்கும் வைகோ இந்த ரசிகர்
மன்றத்தைத் தொடங்கி வைக்கிறார் என்று
தாயக வட்டாரங்கள் தெரிவித்தன.

வாழ்க தமிழகத்து லெனின் விஜயகாந்த்!
வளர்க நடிகர் சண்முக பாண்டியன் புகழ்!
------------------------------------------------------------------------- 
அரசியலில் இருந்து விலக நல்லகண்ணு முடிவு!
--------------------------------------------------------------------------------
1) இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விஜயகாந்த்திடம்
கொண்டு போய் அடகு வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை.
2) கூட்டணிக்குப் பெயர் கேப்டன் விஜயகாந்த் அணி என்று
பெயர் மாற்றி விஜயகாந்திடம் சரணாகதி அடைந்தது
எனக்குப் பிடிக்கவில்லை.
3) குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மாமன்-மச்சான்-மனைவி
தவிர வேறு யாரும் இல்லாத கேப்டனிடம் சரணாகதி ஆனதால்
என்னால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.

மேற்கூறிய காரணங்களால் அரசியலை விட்டு விலகலாம்
என்று முடிவு செய்துள்ளேன்.
------------------------------------------------------------------------------------------------------  

பின்நவீனத்துவக் கருத்து!

போலிக் கம்யூனிஸ்டுகளின் தலை வழியே மலத்தைக்
கரைத்து ஊற்றி அடிக்கும் வினவு  தளத்தின் கட்டுரை. 2014இல்
எழுதப் பட்டது. இன்றைய சூழலுக்குப் பொருந்துகிறது.


மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களின்
மனச்சாட்சியின் குரலை எவரும் கொச்சைப் படுத்த வேண்டாம்
என்பதே எமது வேண்டுகோள்!


80 இடங்கள் மற்றும் 500 கோடி ரூபாய் பேரம் என்ற வைகோவின்
அவதூறு குறித்து வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி
உள்ளார் கலைஞர். வக்கீல் நோட்டீஸ் வந்த உடன், அந்தர் பல்டி
அடித்துள்ளார் வைகோ. அனைத்தும் செய்திகளாக வந்த பிறகு,
இந்த விவாதம் தேவையா? இது அர்த்தமற்றது அல்லவா?
சமூகத்திற்கு வதந்தியைப் பரப்புவது என்ன நியாயம்?


வைகோவின் தற்கொலை முயற்சி வெற்றியா , தோல்வியா?

பின்நவீனத்துவக் கருத்து (post modernist) என்று கூறினேன்.
அது உண்மை. பின்நவீனத்துவக் கருத்து என்றாலே தீண்டத்தகாத
கருத்து என்று தாங்கள் கருதுவதற்கு நான் எங்ஙனம் பொறுப்பேற்க
இயலும்? மார்க்சியம் ஒரு தத்துவம்; பின்நவீனத்துவம் என்பதும்
ஒரு தத்துவம். மார்க்சியம் நவீன தத்துவமாகக் கருதப் பட்டது.
எனவே மார்க்சியத்திற்குப் பின் வந்த தத்துவம் பின்நவீனத்துவம்
என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள
கருத்து சர்வ நிச்சயமாக மார்க்சியக் கருத்து அல்ல. அந்தக்
கருத்தின் வகைமை பின்நவீ னத்துவ வகைமையே ஆகும். நிற்க.
This statement is made without prejudicial to my viewpoint on postmodernism.  

அதிகாரம் எந்த விதத்தில் வெளிப்படுவதையும் பின்நவீனத்துவம்
ஏற்கவில்லை. தாய்-சேய் உறவில் கூட அதிகாரத்தைக் கண்டு
அடையாள படுத்துகிறது பி.நத்துவம். ஆனால் மார்க்சியம்
பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்காக நிற்கிறது.
ஆக, அதிகாரம் என்ற விடயத்தில் மார்க்சியமும் பி.நத்துவமும்
பயங்கரமான எதிரெதிர் நிலையை (diameterically opposite) கொண்டுள்ளன.
இரண்டும் சரியாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்றுதான்
சரியாக இருக்க முடியும்.

ழான் போத்ரியாரின் கருத்து புறக்கணிக்கத் தக்கதல்ல.
அதாவது, இதன் பொருள் அது பரிசீலிக்கத் தக்கது என்பதே.
ஒன்று, அவரின் கருத்து சரியெனில் ஏற்று ஒழுகப்பட வேண்டும்.
தவறு எனில் மூர்க்கத்தனமாக முறியடிக்கப் பட வேண்டும்.
அவர் கூறிய வாக்கியம் வெற்று ஆரவார அலங்கார வாக்கியம்
அல்ல. This warrants a very serious and deep discussion. And I do hope that I am
not deviating from the centre.

நெல்லை மாவட்டத்தில் இப்படிப் பெயர்கள் மிகவும் அதிகம்.
இதில் சிரிக்க ஏதுமில்லை. பூல் பாண்டி என்றால் பூரித்த பாண்டி
என்று பொருள். மாவீரன் பூலித்தேவன் வரலாறு பலருக்கும்
தெரியாது. வீரத்தின் காரணமாக உடல் பூரிக்கும். அப்படிப்பட்ட
பூரிப்பை உடையவனே பூலித் தேவன். எனவே வீணாகச் சிரித்து
நெல்லை மக்களை அவமானப் படுத்த வேண்டாம். சென்னையில்
வாழும் தெலுங்கு நாய்கள் பூல் என்றால் கெட்ட வார்த்தை
என்று ஆக்கி விட்டார்கள் என்றால், அதற்காக தமிழர்கள்
என்ன செய்ய முடியும்?


வைகோ திருமா கம்யூனிஸ்டுகளுக்கு
பிரேமலதா கண்டிப்பான உத்தரவு!
-----------------------------------------------------------------
பழக்க தோஷத்தில் குடும்ப அரசியலை ஒழிப்போம்,
வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று நீங்கள் யாரும்
பேசி விடக் கூடாது. அப்படிப் பேசினால் உங்கள் மீது
நடவடிக்கை எடுப்பேன் என்று வைகோ, திருமா,
முத்தரசன், ஜியார் ஆகிய நான்கு பேரிடமும்
மிகவும் கறாராக உத்தரவு போட்டுள்ளாராம்
அண்ணியார் பிரேமலதா.

அன்புச் சகோதரியின் உத்தரவை தலை மேல் ஏற்று
நடப்போம், அம்மா, இனி நாங்கள் கனவில் கூட
குடும்ப அரசியல்  வாரிசு அரசியல் பற்றி எல்லாம்
பேச மாட்டோம்   என்று பிரேமலதாவின் காலில்
விழுந்து உறுதி கூறி இருக்கின்றனர் மாற்று அரசியல்
மாணிக்கங்களான வைகோ திருமா மற்றும் போலிக்
கம்யூனிஸ்டுகள்.
------------------------------------------------------------------------------------------------

வைகோவின் ஸ்டெரிலைட் தொடர்பு குறித்த மற்றும்
அவரின் மருமகன் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தேவை.
முழு விவரமும் எனக்கு அளிக்கவும். அம்பலப் படுத்த வேண்டும்.

சரி அவரிடம் பேசுகிறேன்.

திமுகவுடன் கேப்டன் சேர்ந்து இருந்தால், நிலைமை
தலைகீழாக மாறிப் போயிருக்கும். கேப்டன் அடி வாங்குவார்.
மிக நல்ல கோரிக்கை; நியாயமான கோரிக்கை.
பாலன் இல்லத்திற்குச் சென்று இக்கோரிக்கையை
வலியுறுத்தும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்று
அறிந்து கொள்ள விரும்புகிறேன். அல்லது 1க்கு 8
அளவில் 1000 பிரதிகள் துண்டறிக்கை அடித்து
தலைமைக்குத் தெரிவிக்கலாமா?


அண்ணியாருக்கு ஏற்ற விருது என்ன என்பது இன்னும்
முடிவாகவில்லை. காரசாரமாக விவாதம் நடந்துவருகிறது.
விஜயகாந்த் மச்சான் சுத்தீஷுக்கு
அம்பேத்கார் விருது வழங்க
சிறுத்தைகள் ஏற்பாடு!
------------------------------------------------------------
எதிர்வரும் ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளன்று
விஜயகாந்த்தின் மச்சான் சுத்தீஷ் அவர்கள் தாழ்த்தப்பட்டோர்
நலனுக்கு  ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி,
சுத்தீஷ் அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கிச்
சிறப்பிக்க உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள்
வட்டாரம் தெரிவிக்கிறது.

அண்ணல் சுத்தீஷ் புகழ் ஓங்குக!
-----------------------------------------------------------------------------------------------------  

வியாழன், 24 மார்ச், 2016

அறிவித்தது அறிவித்ததுதான். அதை ஏற்காதவர்கள் மீது
கட்சி நடவடிக்கை எடுக்கும்.
விஜயகாந்த் முதல்வர் என்பதை ஏற்க முடியாது.
அது நிகழவும் போவதில்லை.
சவுண்டிப் பாப்பான் செத்துப்போன உமாநாத் என்பவனின்
மகள்தான் இந்த வாசுகி. 2014இல் வடசென்னையில் போட்டியிட்டு படு கேவலாமாகத் தோற்று தேப்ப்சிட்டை இழந்தவள் இவர்.
சிம்பு என்னும் நடிகரின் பாடலைக் கண்டித்து புரட்சி
நடத்தியவள் இவள். ஆனால் விழுப்புரம் SVS கல்லுரியில்
மூன்று பெண்கள் தற்கொலை/கொலை யைக் கண்டித்து
ஒரு துரும்பைக் கூடத் தூக்கவில்லை. காரணம் கல்லூரித்
தாளாளர் எறிந்த எலும்பு. தாடிக்காரன் டி  ராஜேந்தர்
ஒன்றிரண்டு எலும்புகளை எறிந்து இருந்தால், இவள்
சிம்புவை எதிர்த்து இருக்கவே மாட்டாள்.   
"எதிர்ப்பு" என்று அடக்கி வாசிப்பதன் மூலம்
உண்மையை மறைக்கலாமா? நடந்தது என்ன
என்று சங்கரன்கோவில் வாழ் மக்கள் அறிவார்கள்.
சாணியைக் கரைத்து ஊற்றி அல்லவா அடித்தார்கள்?

வாசு திவா தி.தி 
விஜயகாந்த்துக்கு லெனின் விருது!
தா பாண்டியன் ஏற்பாடு!
---------------------------------------------------------
வரும் ஏப்ரல் 22இல் லெனின் பிறந்தநாளை முன்னிட்டு
புரட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு
லெனின் விருது வழங்கப்பட இருப்பதாக காம்ரேடுகள்
மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை
தா பாண்டியன் அவர்கள் முன்னின்று நடத்தி வருகிறாராம்.

சுதாகர் ரெட்டி மற்றும் எச்சூரி ஆகிய அகில இந்தியத்
தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இருப்பதாகக்
கூறப் படுகிறது.
 தமிழகத்தின் லெனின் விஜயகாந்த் ஜிந்தாபாத்!
ஜிந்தாபாத் ஜிந்தாபாத் கேப்டன் விஜயகாந்த் ஜிந்தாபாத்!
-------------------------------------------------------------------------------------------------
தேர்தல் பிரச்சாரம் செய்ய நல்லகண்ணு மறுப்பு!
--------------------------------------------------------------------------------
கேப்டன் விஜயகாந்த் அணியை ஆதரித்து நான்
பிரச்சாரம் செய்ய மாட்டேன்; என்னை விட்டு விடுங்கள்
என்று கறாராகச் சொல்லி விட்டாராம் நல்லகண்ணு.

இரண்டு காரணம் சொல்கிறாராம் நல்ல கண்ணு.
1) மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரை மாற்றி
கேப்டன் விஜயகாந்த் அணி என்று மாற்றியது
எனக்குப் பிடிக்கவில்லை.
2) விஜயகாந்த்திடம் என்னால் அடி வாங்க முடியாது.
---------------------------------------------------------------------------------

சுத்தீஷிடம் மன்னிப்புக் கேட்ட முத்தரசன்!
----------------------------------------------------------------------
"என்ன, இந்தப் பய்யன் (சுத்தீஷ்) இவ்வளவு முரடனாகவும்
கோபக்காரனாகவும் இருக்கிறான்" என்று ஜி ராமகிருஷ்ணனிடம்
காதுக்குள் சொன்னார் முத்தரசன்.

என்ன நடந்தது? தேமுதிக அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்
முத்தரசன். அவருடன் சென்ற சில தோழர்கள் காரல் மார்க்சின்
படத்தை அங்கு வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

மார்க்ஸ் படத்தைப் பார்த்ததும் சுத்தீஷுக்கு ஆத்திரம்
ஆத்திரமாக வந்து, மார்க்ஸ் படத்தின் மீது சுத்தீஷ்
காறித் துப்பி உள்ளான். இதை ஆட்சேபித்த முத்தரசனை
அடிக்கக் கையை ஓங்கி உள்ளான் சுத்தீஷ்.

சேராத  இடந்தனிலே சேர வேண்டாம். 
------------------------------------------------------------------------------------------------------------------

அப்படி இல்லையடா, ராம்நாத் ராஜா, தேவடியாள் மகனே,
உன்னை பிளாக் செய்துள்ளேன். 
உயர்ந்த சாதி நாயுடுவுக்கு சேவை செய்வதன் மூலமே
தலித் திருமாவளவன் பிறவிப்பயன் எய்த முடியும்!
...இப்படிக்கு கோபால்சாமி நாயுடு.......
கேப்டன் விஜய காந்த் அணியில் சிக்கல்!
---------------------------------------------------------------
தாம் விரும்பிய 124 தொகுதிகளை எடுத்துக் கொண்ட பிறகு,
மீதி 110 தொகுதிகளை கேப்டன் நமக்கு ஒதுக்குவார்.
அந்த 110 ஐ நாம் பகிர்ந்து கொள்ளலாம் என்றார் வைகோ.

நமக்குரிய 110ஐ எடுத்துக் கொண்ட பிறகு மீதி 124ஐ
தேமுதிகவுக்கு ஒதுக்கலாம் என்றார்  திருமா. இதை
வைகோ ஏற்கவில்லை.

விஜயகாந்த் சாப்பிட்ட எச்சில் இலையில் நான் ஏன் சாப்பிட
வேண்டும் என்றார் திருமா கோபத்துடன். கோபப் பட்டுப்
பயனில்லை. கேப்டன் சாப்பிட்ட எச்சில் இலையில்தான்
நாம் சாப்பிட வேண்டும் என்றார் வைகோ. இதுதான்
அம்மாவின் கட்டளை என்றார் வைகோ, மிரட்டும் தொனியில்.
அம்மா என்ற பெயரை உச்சரித்தவுடன் சப்த நாடியும்
ஒடுங்கிப்போன திருமா சரி அண்ணே கேப்டன் சாப்பிட்ட
எச்சில் இலை எனக்கு தேவாமிர்தம் என்றாராம்.
---------------------------------------------------------------------------------------------------

எச்சில் இலையை வழித்து நக்கும் ஈனப் பிறவிகள்.
உக்ரைனில் உள்ள லெனின் சிலை உடைத்துத் தகர்ப்பு!


புதன், 23 மார்ச், 2016

அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி வீச 
விரைசெறி கமலத்தார் சேர்
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுப்ப வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.
(கம்ப ராமாயணம், திருமுடி சூட்டு படலம்)
-------------------------------------------------------------------------
மானங்கெட்ட வைகோ,
பிரேமலதாவின் காலடியில் உட்கார்ந்து இருக்கும்
மானமற்ற திருமாவளவன்,
கவரி வீசும் ஜியார், முத்தரசன் கோமாளிகள்!
புழுவினும் கீழான ஈனப் பயல்கள்!
--------------------------------------------------------------------------------------

உண்மையே!
சுத்தீஷின் புதுக் கோரிக்கை!
விஜயகாந்த் ஆதரவு! வைகோ கலக்கம்!
-------------------------------------------------------------------
தேமுதிகவுடன் இணைந்த பிறகு இக்கூட்டணி
கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்று அறிவிக்கப் படும்
என்று மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்தார் வைகோ.

இக்கூட்டணி கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்று பெயர்
பெற்றுள்ள படியால், இக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக
தேமுதிகவைச் சேர்ந்த ஒருவரே இருக்க வேண்டும் என்று
சுத்தீஷ் தமது மாமாவிடம் கூறியுள்ளார். இதற்கு பிரேமலதாவும்
ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் அவர்கள் வைகோவுக்கு போன்
செய்து, தன் மச்சான் சுத்தீஷுக்கு கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கொடுக்குமாறு கண்டிப்புடன்
கூறியுள்ளார்.

இதைக் கேட்ட வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளார். தம்பியிடம்
(சுத்தீஷ்) நானே பேசி சமாதானப் படுத்துகிறேன் என்று கூறிவிட்டு
சுத்தீஷிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். சுத்தீஷ்
தாறுமாறாக நாகூசும் வார்த்தைகளால் வைகோவைத் திட்டி
உள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------     
விஜயகாந்த் ஜெயிப்பதில் கஷ்டம்!
விடுதலைச் சிறுத்தைக் கட்சியின்
தொண்டர்கள் விஜயகாந்த் முதல்வர் என்பதை
ஏற்கவில்லை. எனவே வி.சி.க தொண்டர்களின்
வாக்கு விஜயகாந்த் மற்றும் சுத்தீஷுக்கு விழாது
என்பது இன்றைய கள  நிலவரம் ஆகும்.

இதனால் அண்ணியார் பிரேமலதா அதிர்ச்சி
அடைந்துள்ளாராம்!
---------------------------------------------------------------------------

ஆம், அது உண்மையே. ராமச்சந்திர மேனன் காலத்தில்
இருந்து கொங்கு மண்டல தலித்துகள் தங்களுக்குக்
கொடுமை இழைக்கும் கட்சிக்கே வாக்களித்து வருகிறார்கள்.
ஜவஹரில்லாவுக்கு அதிக இடங்கள் கொடுப்பது
திமுகவை பலவீனப் படுத்தும்!
---------------------------------------------------------------------------
ஜவஹரில்லாவுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள்
ஒதுக்கலாம். அதற்கு மேல் பெற அவருக்கு எந்தத்
தகுதியும் இல்லை. 2 இடங்களை ஏற்க விரும்பவில்லை என்றால்,
ஜவஹரில்லா மீண்டும் போயஸ் கழிப்பறைக்குச் செல்லட்டும்.
இதனால் எதுவும் குடி முழுகி விடாது.

தமீமுன் அன்சாரிக்கோ, கூட்டணியில் நிரந்தரமாக இருந்து
வரும் முஸ்லிம் லீக் அமைப்புக்கோ கொடுக்கலாம்.
புழுவினும் கீழான ஈனத்தனமான சந்தர்ப்பவாதியான
ஜவஹரில்லாவுக்கு அதிக இடம் தேவையில்லை.

தேவைப்பட்டால் ஜவஹரில்லா தமிழிசையிடமோ ஹெச்
ராஜாவிடமோ வேண்டிய சீட்டுக்கள் வாங்கிக் கொள்ளட்டும்.
கழிவு தின்பதில் விருப்பம் உடையவன் தானே
ஜவஹரில்லா.
----------------------------------------------------------------------------------------------------------- 
குறைந்தபட்ச செயல் திட்டம் கிடையாது!
சுத்தீஷ் அதிரடி!
------------------------------------------------------------------------
மக்கள் நலக் கூட்டணி அறிவித்த குறைந்த பட்ச
செயல் திட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம்
கிடையாது என்று சுத்தீஷ் அதிரடியாக அறிவித்து
உள்ளார்.

வைகோ, திருமா, போலி கம்யூனிஸ்டுகள் மௌனம்!
கபட வேடதாரிகளை அம்பலப் படுத்திய சுத்தீஷ்!
---------------------------------------------------------------------------------- 
அவமானப் படுத்தும் சுத்தீஷ்!
-------------------------------------------------
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவை
அதிக அளவுக்கு அவமானப் படுத்தியவர் சுத்தீஷ்தான்
என்பது நாடறிந்ததே.

தற்போது வைகோ, திருமா, முத்தரசன், ஜியார் ஆகிய
மூத்த தலைவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாராம்
சுத்தீஷ். இது அவமானமாக இருக்கிறதாம் கம்யூனிஸ்டுகளுக்கு.

இது குறித்து முத்தரசன் வைகோவிடம் புகார் கூறியபோது,
இதெல்லாம் அனுசரிச்சுப் போங்க தோழர், அந்தப் பய்யன்
(சுத்தீஷ்) நம்மை விடப் பெரிய கட்சி; கொஞ்சம் திமிர்
இருக்கத்தான் செய்யும்; நாம்தான் அனுசரிச்சுப் போகணும்
என்றாராம் வைகோ.
------------------------------------------------------------------------------------------------
2014 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையின்போது,
பொன்னாரிடம் வைகோவைச் சுட்டிக் காட்டி, இவருக்கெல்லாம்
ஆறு சீட்டு எதுக்கு? ரெண்டு சீட்டு கொடுத்தால் போதாதா என்று
சத்தம் போட்டு வைகோ காதுபடக் கேட்டு கேவலப் படுத்தியவன்
சுத்தீஷ். அந்த அவமானங்களை எல்லாம்  ஒரு எம்.பி பதவிக்காக
சகித்துக் கொண்டு இருந்தவர்தான் வைகோ.

மேலே நான் சொன்னது ஒரு மாதிரி (sample)  தான்.
வைகோவை அடிக்க சுத்தீஷ் கையை ஓங்கியபோது
தடுத்த புரோக்கர் தமிழருவி மனியனிடம் கேளுங்கள்;
கதை கதையாகச் சொல்லுவார்.


ஜி கே வாசனுக்குப் பட்டை நாமம்!
---------------------------------------------------------
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி,
ஜெயா-வாசன் சந்திப்பு ரத்தாகி விட்டதாம்.
வாசனுக்குப் பட்டை நாமம் சாத்த இருப்பதாகச்
செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

வாசனின் அடுத்த முடிவு என்ன?
பாஜக பக்கம் சாய்வாரா?
--------------------------------------------------------------------------------
கேப்டன் விஜயகாந்த் அணி ஆட்சிக்கு வந்தால்....
யார் யாருக்கு என்ன பதவி?
--------------------------------------------------------------------------
முதல்வர்: விஜயகாந்த்
மற்றும் காவல்துறை (Home)

துணை முதல்வர்: சுத்தீஷ்
 மற்றும் நிதித்துறை
வைகோ: பால்வளத்துறை

திருமா: ஆதி திராவிடர் நலம்

மீதி உள்ள துறைகள் அனைத்தும்
தேமுதிகவினருக்கு ஒதுக்கப் படும்.
-----------------------------------------------------------
ஆதாரம்: பிரேமலதாவின் குடும்ப சோதிடர் கணிப்பு ..
---------------------------------------------------------------------------------

ஏன், ஒரு தலித் முதல்வராக வரக்கூடாதா?
குடிகார லூசுப்பயல் விஜயகாந்த் முதல்வராக வரலாம்
என்றால் திருமாவளவன் ஏன் வரக் கூடாது?

சற்று நேரத்தில் விரிவான பதில் தரப்படும்.


விஜயகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும்
அவரைத் தோற்கடிக்க ஜெயலலிதா உத்தரவு!
----------------------------------------------------------------------------------
வெற்றி வாய்ப்பு உள்ளவர் எந்தக் கட்சி வேட்பாளராக
இருந்தாலும், அவருக்கு நமது வாக்குகளை அளித்து
விஜயகாந்த்தைத் தோற்கடிக்க வேண்டும் என்று
ஜெயலலிதா தம் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்து
உள்ளார்.

இதே உத்தரவை பாஜகவின் ஹெச் ராஜாவும்,
பாமகவின் அன்புமணியும் பிறப்பித்து உள்ளனர்.
உதாரணமாக, விஜயகாந்த்தை எதிர்த்து நிற்கும்
பல வேட்பாளர்களில், திமுக வேட்பாளருக்கு வெற்றி
வாய்ப்பு இருந்தால், பாமக மற்றும் பாஜக கட்சியினர்
திமுக வேட்பாளருக்குத் தங்கள் வாக்குகளை அளித்து
விஜயகாந்த்தைப் படுதோல்வி அடையச் செய்வார்கள்.

ஒருவேளை விஜயகாந்த்தை எதிர்க்கும் வேட்பாளர்களில்
அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தால்
பாஜக, பாமக கட்சியினர் தங்கள் வாக்குகளை அதிமுக
வேட்பாளருக்கு அளிப்பதன் மூலம் விஜயகாந்த்தைப்
படுதோல்வி அடையச் செய்வார்கள்.

இந்தத் திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர்
சீமானும் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆக விஜயகாந்த்தின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.
----------------------------------------------------------------------------------------------------
கோஷம்


கூட்டணி உடன்பாடு கையெழுத்தானதுமே பிரேமலதா
தமது குடும்ப ஜோதிடரிடம் கருத்துக் கேட்டுள்ளார்.
அவர் 131 தான் ராசி என்று சொல்லி உள்ளார். எனவே
பிரேமலதா 131 தொகுதி என்று தன்னிச்சையாக அறிவித்து
விட்டாராம்.

மக்கள் நலக் கூட்டணியை அதை உருவாக்கிய வைகோவே
கலைத்து விட்ட பிறகு, இனி இந்த அணியின் பெயர் கேப்டன்
விஜயகாந்த் அணி என்று வைகோவே அறிவித்த பிறகு,
நீங்கள் இன்னும் மக்கள் நலக் கூட்டணி என்று சொல்லக் கூடாது.


நியூமராலஜிப்படி 124 தொகுதிகள் ராசியில்லை!
எனவே 131 தொகுதி வேண்டும் என சுத்தீஷ் கோரிக்கை!
------------------------------------------------------------------------------------------
124 என்பதில் கூட்டுத்தொகை 7 வருகிறது. கேப்டனின்
ஜாதகப்படி,  எண் 5 தான் கேப்டனுக்கு ராசியானது.
எனவே, கூட்டுத்தொகை 5 வரும்படியாக 131 தொகுதிகளில்
தேமுதிக போட்டியிடும் என்று சுத்தீஷ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------

விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக விமர்சனம்
செய்யவில்லை. பீடி, தீப்பெட்டி, பட்டாசு தொழில்களில்
உள்ள தெலுங்குத் தொழிலதிபர்கள் அனைவரும் ஏனைய
தொழில்களில் உள்ள தெலுங்கு முதலாளிகள் அனைவரும்
அன்று வைகோவுக்கும் இன்று விஜயகாந்த்துக்கும்
கோடி கோடியாக நிதியை வாரிக் கொடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு ஒரு நாயுடு முதல்வர்!
--------------------------------------------------------------
விஜயகாந்த் நாயுடுவும் வை கோபால்சாமி நாயுடுவும்
ஒன்றிணைந்து தமிழகத்திற்கு ஒரு நாயுடு முதல்வரைப்
பெற்றுத்தரும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
இதைக் கண்டு தமிழ்நாட்டில் உள்ள நாயுடு மற்றும்
தெலுங்குத் தொழில் அதிபர்கள் பெரு மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

தங்களிடம் உள்ள கறுப்புப் பணம் முழுவதையும்
விஜயகாந்த் நாயுடுவை முதல்வர் ஆக்குவதற்காகச்
செலவிடப் போவதாக நாயுடுக்கள் தெரிவித்து உள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------

வைகோ வைத்த பெயரை மாற்ற யாருக்கும் உரிமை
கிடையாது. மக்கள் நலன் என்ற வார்த்தையை சாக்கடையில்
வீசியாயிர்று. இனி அது விஜயகாந்த் அணிதான்.
சுத்தீஷ் கண்டிப்பு!
வைகோ-திருமா-முத்தரசன்-ஜியார் பணிந்து ஏற்பு!
------------------------------------------------------------------------------------
அறிஞர் அண்ணா வாழ்க என்றோ
அண்ணல் அம்பேத்கர் வாழ்க என்றோ
மார்க்ஸ் லெனின் வாழ்க என்றோ
இனி விஜயகாந்த் கூட்டங்களில் யாரும்
கொழம் போடக் கூடாது என்று விஜயகாந்த் மச்சான்
சுத்தீஷ் கட்டளை இட்டுள்ளார்.

சுத்தீஷின் கட்டளையை ஏற்பதாக வைகோ- ஜியார்-
திருமா-முத்தரசன் ஆகியோர் உறுதி கூறியுள்ளனர்.

இனி இக்கூட்டணியின் கோஷங்கள்:
----------------------------------------------------------
கேப்டன் வாழ்க!
முதல்வர் கேப்டன் வாழ்க!
அண்ணியார் வாழ்க!
அண்ணன் சுத்தீஷ் வாழ்க!
-------------------------------------------------------------------------------------------  
இனி இதன் பெயர் விஜயகாந்த் அணி!
----------------------------------------------------------------
மக்கள் நலக் கூட்டணி கலைப்பு!
இனி இந்த அணி விஜயகாந்த் அணி என்று அழைக்கப் படும்!
வைகோ அறிவிப்பு!
இதைத் தொடர்ந்து தாயகத்தில் ஆளுயுர விஜயகாந்த்
படத்தை சுத்தீஷ் திறந்து வைக்கிறார்!
-----------------------------------------------------------------------------------------------
விஜயகாந்த்துக்குப் பல்லக்குத் தூக்கும்
போலி கம்யூனிஸ்ட்டுகள்!
-----------------------------------------------------------------------
மக்கள் நலக் கூட்டணியை விஜயகாந்திடம் அடகு
வைத்ததை எதிர்த்து மார்க்சிஸ்ட் தொண்டர்களும்
விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்நாடெங்கும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 
மக்கள் நலக் கூட்டணி கலைக்கப் பட்டது!
விஜயகாந்தை முதல்வராக ஏற்றார் வைகோ!
விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி!
-------------------------------------------------------------------------------- 
மின்னல் செய்தி! FLASH NEWS! காலை 10.30 மணி 23.03.2016
---------------------------------------------------------------------------------
தேமுதிக தலைமையில் இன்று காலை புதிய கூட்டணி
அமைந்தது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள நான்கு
கட்சிகளும் தேமுதிக தலைமையில் உதயமான புதிய
கூட்டணியில் இணைந்தன. தேமுதிக 124 இடங்கள் என்றும்
மக்கள்நலக் கூட்டணியின் நான்கு  கட்சிகளுக்கும் 110 இடங்கள்
என்றும் கூட்டணி இடப் பகிர்வு அமைந்துள்ளது.

நடிகர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார்.
நடிகர் விஜயகாந்தை முதல்வர் ஆக்குவதற்காக
 உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பதாக
வைகோ, திருமா, ஜியார், முத்தரசன் ஆகிய தலைவர்கள்
உறுதி ஏற்றனர்.
-------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 22 மார்ச், 2016

ஜவஹிருல்லாவுடன் வைகோ பேச்சுவார்த்தை!
மானம் கெட்டவர் யார்? தீர்ப்பளிக்க முடியாமல்
சாலமன் பாப்பய்யா கலக்கம்!
-------------------------------------------------------------------------------
மனிதநேய மக்கள் கட்சி அதிமுகவைத் தவிர்த்து விட்டு
திமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து வைகோவைக்
கடுமையாகக் கண்டித்துள்ளார் ஜெயலலிதா. வைகோவின்
மெத்தனமே இதற்குக் காரணம் என்று வைகோவை
ஜெயாவும் சசியும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜவஹிருல்லாவை மீண்டும் அதிமுக
கூட்டணிக்கு அழைத்து  வருவதாக வைகோ சசிக்கு
சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதன் பிறகு
நடராசனைத் தொடர்பு கொண்ட வைகோ, அவரின்
ஆலோசனையின் பேரில் ஜவஹரில்லாவிடம்
பேசி வருகிறார்.

திமுக கூட்டணியில் மமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்
பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப்
பெற்றுத் தருவதாக வைகோ ஜவஹரில்லாவிடம்
வாக்குறுதி அளித்துள்ளார்.

ஜவஹரில்லா ஒன்றும் கொள்கைக் கோமான் அல்ல.
ஒன்றிரண்டு  சீட்டுக்காக  மலம் தின்னக் கூடியவர்
என்பதை நாடே அறியும். நடராசனின் திட்டப்படி,
1) இரண்டு சீட்டுகளைக் கொடுத்து மமகவை அதிமுக
கூட்டணிக்கு வரவழைப்பது,  2) வந்தவுடன் சீட்டுத்
தராமல் இழுத்தடிப்பது என்ற நிலையை ஏற்படுத்துவது.
அதன்  பிறகு,ஜவஹரில்லா மீண்டும் திமுகவுக்கு ஓடுவார்.
அங்கு போனால், கலைஞர் இதயத்தில் மட்டும் இடம் கொடுப்பார்.

எனவே மீண்டும் வேறு எங்காவது ஜவஹரில்லா ஓடுவார்.
கடைசியில் பாஜகவில் தமிழிசை ஐந்து எலும்புகளைத்
தருவார்.அதைக் கவ்விக் கொண்டு ஜவஹரில்லா
பெருமையோடு நகர் வலம் வருவார். இது நடக்க வேண்டும்
என்று நடராசன் வைகோவுக்கு அறிவுறுத்தி உள்ளாராம்.

மானம் கெட்டவர் யார், வைகோவா ஜவஹரில்லாவா
என்பதில் தீர்ப்பு வழங்க முடியாமல் சாலமன் பாப்பய்யா
கலங்கிப் போய் இருக்கிறாராம்.
**********************************************************************

தேர்தல் குறித்து
கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை!
------------------------------------------------------------------
புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி.
------------------------------------------------------------------
இப்புதுக் கவிதையை இயற்றிய கவிக்கோ
தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.
புகழேந்திப் புலவரின் நளவெண்பாவை
ஆழ்ந்து கற்காமல் இப்படியொரு கவிதையைப்
படைக்க இயலாது.

போலி நளன்களை விலக்கி, மெய்யான நளனை
எவ்வாறு கண்டு பிடித்தாள் தமயந்தி என்று
விளக்குகிறார் புகழேந்திப் புலவர்.

கண்ணிமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால்-- ....................
நறுந்தாமரை விரும்பும் நன்னுதலே யன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை யாங்கு.

குறிப்பு: பொருள் தெரியாதோர் தமிழறிந்தோரிடம்
கேட்டு அறிந்திடுக.  
------------------------------------------------------------------------------------

விழித்திமையார் நின்ற நிலை என்ற ஈற்றடி கொண்ட
குரலை ஈண்டு ஒப்பு நோக்குக.
       

திங்கள், 21 மார்ச், 2016

பித்தகோரஸ் தேற்றத்தைக் கண்டு பிடித்தது யார்?
உரிமைகோரல்களும் உண்மையும்!
---------------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------------
இவ்வாண்டிற்கான இந்திய அறிவியல் மாநாடு 2015 மும்பையில் 
சனவரி 3 முதல் 7 வரை சில நாட்கள் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை 
அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்த்தன் பித்தகோரஸ் தேற்றத்தைக் 
கண்டுபிடித்தது இந்தியாதான் என்று கூறினார். 
தமிழ்ச் சூழலில் சிலர் பித்தகோரஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்
தவர்கள் தமிழர்கள் என்று கூறி வருகின்றனர். இதற்கான வலுவான 
ஆதாரம் எதுவும் எவராலும் இன்றுவரை தரப்படவில்லை. 
இந்நிலையில் ஒரு பழஞ்செய்யுள் இதற்கு  
ஆதாரமாகக் காட்டப் படுகிறது. அதை இப்போது பார்ப்போம்.


”ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறாக்கி
கூறதில் ஒன்றைத் தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால்
நீடிய கர்ணந் தானே!”
- கோதையனார்



இதன் பொருள்: முக்கோணத்தின் கர்ணம் கண்டுபிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இத்தோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும்.-
எடுத்துக்காட்டு: 3,4,5 அளவுகளைக் கொண்ட முக்கோணம்.
நீளம் 4. அதில் எட்டில் ஒரு பாகம் 0.5. அதை நீளத்தில் கழித்தால் 3.5. இத்தோடு உயரத்தில் பாதி (1.5) சேர்க்க 3.5 + 1.5 = 5. ஆக BC (கர்ணம்) = 5.
பிதாகரஸ் தேற்றப்படி கர்ணம் காண சூத்திரம்
AB^2 + AC^2 = BC^2
4^2 + 3^2 = 16 + 9 = 25 = 5^2
BC = 5 


கோதையனாரின் சூத்திரத்தைப் பின்வருமாறு எடுத்துக் 
கொள்ளலாம். ஒரு செங்கோண முக்கோணத்தில்,
செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்களை a , b என்று 
எடுத்துக் கொண்டால், கர்ணம் என்பது (7a+4b)/8க்குச் சமம்.
இங்கு a , b இவ்விரண்டில், a என்பது b ஐ விடப் பெரியதாக 
இருக்க வேண்டும். (கோதையனார் இவ்வாறு கூறவில்லை;
அவரின் சூத்திரத்தை கணித மொழியில் கூறுவதானால்,
இவ்வாறுதான் கூற முடியும்.)   

 கோதையனாரின் சூத்திரம் எல்லா பித்தகோரசின் மும்மைகளுக்கும் (Pythagorian triplets)
 பொருந்தவில்லை. எடுத்துக்காட்டு:
1) 8,15,17 என்கிற பித்தகோரசின் மும்மைக்கு 
பொருந்தவில்லை. கர்ணம் 17.25 வருகிறது. இது தவறு. 17 என்பதே சரியான விடை.
**
2) 7,24,25 என்கிற எண்களுக்கும் பொருந்தவில்லை. கர்ணம் 24.25 வருகிறது.
இது தவறு. கர்ணம் 25 என்பதே சரியான விடை.
**
3) 9,40,41 என்கிற எண்களுக்குப் பொருந்தவில்லை. கர்ணம் 39 வருகிறது.
41 என்பதே சரியான விடை.


1000 வரையிலான எண்களில், 158 பித்தகோரசின் மும்மைகள் 
(PYTHAGORIAN TRIPLETS) உள்ளன. இவற்றுள், 3,4,5 மற்றும் 
5,12,13 ஆகிய இரண்டு பித்தகோரசின் மும்மைகளுக்கு

மட்டுமே கோதையனாரின் சூத்திரம் பொருந்துகிறது. மீதி 
எதற்கும் பொருந்தவில்லை. எனவே, கோதையனாரின் சூத்திரம் 

பித்தகோரஸ் தேற்றம் ஆகாது.  சில எளிய பித்தகோரசின் மும்மைகள் 
பற்றிய பட்டறிவு மட்டுமே என்பது தெரிய வருகிறது.

கணிதச் செயல்பாடுகளை மேற்கொண்ட எந்த ஒரு சமூகமும் 
பித்தகோரஸ் தேற்றத்தின் அடிப்படைகளை "முயற்சியும் 
பிழையும்"(trial and error) என்ற முறையில் கண்டறிந்து 
இருக்க முடியும். ஏனெனில், எண்ணியல், வடிவியல் 
ஆகியவற்றில், பித்தகோரஸ் தேற்றம் மிகவும் அடிப்படை
யானது. இதைத் தவிர்த்த கணிதச் செயல்பாடுகள் இருக்க 
முடியாது.

கணிதத்தின் வரலாற்றை எழுதிய கணித அறிஞர்கள், கி. மு 
2500ஆம் ஆண்டிலேயே அன்றைய மெசபட்டோமியா நகரில் 
வாழ்ந்த பாபிலோனியர்கள் பித்தகோரசின் மும்மைகள் பற்றி 
அறிந்து இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். சிறிய 
எண்களான 3,4,5 மற்றும் 5,12,13 ஆகியவை பற்றிய அறிவு 
அக்கால மக்களுக்கு இருந்தது. எனினும் இது முழுமையான 
பித்தகோரஸ் தேற்றமாகப் பரிணமிக்கவில்லை. அதற்கு 
மேலும் பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் பிடித்தன.

இந்தியாவில்தான் முதன் முதலாக, கி.மு 800இல் பித்தகோரஸ் 
தேற்றம் ஒரு கூற்றாக (statement) எழுத்து மூலம் பதிவு செய்யப் 
பட்டது. பண்டை இந்தியாவின் கணித அறிஞர் பௌதயானர் 
(Baudhayana) கி.மு 800இல்  தமது சுல்ப சூத்திரங்களில் (Sulba sutras)
பித்தகோரஸ் தேற்றத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளார்


என்றாலும் பௌதயானர் இதற்கு எந்த நிரூபணமும் 
அளிக்கவில்லை.இத்தேற்றம் இங்கிருந்து சீனா சென்றபோது,
சீனர்கள் இதை அறிந்து கொண்டனர். அவர்கள் இத்தேற்றத்துக்கு

ஒரு கறாரான நிரூபணத்தை அளித்தனர். சீனர்கள் இத்தேற்றத்தை
கௌகு தேற்றம் என்பர். இத்தேற்றத்தை நிரூபித்தவரான கௌகு 
(Gougu) என்பவரின் பெயரால் இப்படிக் கூறினர். இவை நிகழ்ந்த 
காலம் உறுதியாக கி.மு 800க்குப் பிறகே. 

இந்தியாவில் பிறந்த கணித நிபுணர் டாக்டர் மஞ்சுள பார்கவா 
பின்வருமாறு கூறுகிறார்: 
"பித்தகோரஸ் தேற்றம் பற்றிய எளிய தொடக்கநிலை அறிவை 
முதன் முதலில் பெற்று இருந்தவர்கள் எகிப்தியர்கள்; 
இத்தேற்றத்துக்கு முதன்முதலில் எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் 
இந்தியர்கள்; இதற்கு முதன் முதலில் நிரூபணம் தந்தவர்கள் 
சீனர்கள். எப்படிப் பார்த்தாலும், எகிப்தியர்கள், இந்தியர்கள்,
சீனர்கள் ஆகியோருக்குப் பிறகே, பித்தகோரஸ்  இதை அறிந்து கொண்டார். 
எனவே, பித்தகோரஸின் பெயரால் இத்தேற்றம் வழங்கப் படுவது 
என்பது முற்றிலும் பிழையானது.


நான்காண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கணிதக் கழகம் 
(International Mathematics Union) கணிதத்தில் சிறந்த இளம் 
நிபுணர்களுக்கு ஃபீல்ட்ஸ் மெடல் (Fields Medal) என்னும் 
உயர்ந்த விருதை வழங்கி வருகிறது. கனடா நாட்டின் கணித 
மேதை ஃபீல்ட்ஸ் என்பவரின் பெயரால் இவ்விருது வழங்கப் 
படுகிறது. இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் 
பல்கலையில் பணியாற்றி வரும் டாக்டர் மஞ்சுள பார்கவா 
இவ்விருதை 2014இல் பெற்றார். 
தேற்றத்தை  முதலில் கூறிய இந்தியாவுக்கும், அதை   நிரூபித்த 
சீனாவுக்கும் மட்டுமே இத்தேற்றத்தின் மீது உரிமை உள்ளது.
அப்படியானால்,  பித்தகோரஸ்! அவர் யாரோ ஒரு வழிப்போக்கர்!
--------------------------------------------------------------------------------------------------------------