ஞாயிறு, 27 மார்ச், 2016

முத்தரசன் ராமகிருஷ்ணனுக்கு புதிய பதவி!
வழங்கினார் விஜயகாந்த் மச்சான் சுத்தீஷ்!
பெருமிதத்துடன் ஏற்றனர் கம்யூனிஸ்ட் தலைவர்கள்!
-----------------------------------------------------------------------------------------
கோயம்பேடு தேமுதிக அலுவலகலத்தில் அமர்ந்து தேர்தல் 
வியூகங்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, 
விஜயகாந்த் மச்சான் சுத்தீஷ் திடீரென்று அங்கு வந்ததுமே 
எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர் முத்தரசனும் 
ஜி ராமகிருஷ்ணனும். பதில் வணக்கம் செலுத்தாத சுத்தீஷ்,
"சகாப்தம் பாத்துட்டீங்கதானே, எப்படி இருக்கு/" என்று 
கேட்டதும் திணறிப் போன முத்தரசன் "சகாப்தம்" என்று
இழுத்தார்.

"இன்னுமா நீங்க சகாப்தம் பாக்கல?" என்று மிரட்டும் தொனியில் 
சுத்தீஷ் கேட்டதுமே குற்ற உணர்வுக்கு இலக்கான தமிழகத்தின் 
மாபெரும் "கம்யூனிஸ்ட்" தலைவர்கள் கையைப் பிசைந்தனர்.
அப்போது குறுக்கிட்ட தேமுதிக அலுவலகப் பொறுப்பாளர், 
"விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த வெற்றிப் 
படம்தான் சகாப்தம்" என்றும் "அப்படத்தை இன்னும் பார்க்காமல் 
இருப்பது தேச விரோதம்" என்றும் தெரிவித்தார்.

குலை நடுங்கிப்போன "கம்யூனிஸ்ட்" தலைவர்களோ உடனடியாக 
சண்முக பாண்டியனின் படத்தைப் பார்க்கத் துடித்தனர்.
உடனே அப்படம் அவர்களுக்குப் போட்டுக் காட்டப் பட்டது.
படம் பார்த்து முடித்ததும், "இதைப் போன்ற ஒரு புரட்சிகரமான 
படத்தை எங்கள் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை" 
என்று ஒருசேரக் கூவினார்கள் முத்தரசனும் ஜியாரும்.

இதில் மகிழ்ந்து போன சுத்தீஷ், முத்தரசனுக்கும் ஜியாருக்கும் 
புதிய பதவிகளை வழங்கி கௌரவித்தார்.

ஆம், வடசென்னை மாவட்ட சண்முகபாண்டியன் ரசிகர் 
மன்றத் தலைவர் பதவி முத்தரசனுக்கும், தென்சென்னை 
மாவட்டத் தலைவர் பதவி ஜியாருக்கும் வழங்கப் பட்டது.

நடிகர் சண்முக பாண்டியன் ரசிகர் மன்றத் தலைவர் பதவியை 
ஏற்பதன் மூலம் தமிழ்நாட்டில் மார்க்சியத்தைப் பரப்ப 
முடியும் என்று கருத்துத் தெரிவித்தனர் வட தென் சென்னை
மாவட்ட சண்முக பாண்டியன் ரசிகர் மன்றத் தலைவர்கள்.

வாழ்க சண்முக பாண்டியன் புகழ்!
வளர்க மார்க்சிசம்!
------------------------------------------------------------------------------------------------------------
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக