புதன், 30 மார்ச், 2016

சட்டத்தின் பெயரால் மகா பெரியவாளைத்
துன்புறுத்துதல் தகாத காரியம்!
எச்சூரி நன்னா சூடு கொடுத்தாரோன்னோ!
------------------------------------------------------------------------
மஹா  பெரியவா ஜகத்குரு ஜெயேந்திர
சுவாமிகளிடம் இருந்து ஏதேனும் தகவல்
வேண்டுமென்றால் மேதகு நீதியரசர்கள் மடத்துக்கே
நேரில் சென்று கேட்டுத் தெளிவு பெறலாமே!

மஹா பெரியவா மௌன விரதம் இருக்காத தேதிகள்
என்ன என்ன என்று மடத்துக் காரியஸ்தரை
விசாரித்துத் தெரிந்து கொண்டு மேதகு
நீதியரசர்கள் மடத்துக்கே நேரில் சென்றால்
பெரியவா தரிசனமும் கிட்டும்; அவா தர்ற
வியாக்கியானமும் கிட்டுமோன்னோ!

இத விட்டு சாட்சிக் கூண்டு குற்றவாளிக் கூண்டு
இப்படிக் கூண்டுலல்லாம் அடைக்கறதுக்கு
பெரியவா என்ன பட்சியோன்னோ!

அவா இவாளக் கைது பண்றச்சேயே கைது பண்ணப்
படாதுன்னுட்டு சூட்டோட சூடா அறிக்கை
கொடுத்தாரோன்னோ எச்சூரி! எச்சூரில்லாம் எப்பேர்ப்பட்ட
ப்ராமண சிரேஷ்டா! ராமாமூர்த்திக்கு அப்புறம் இவாதானே
நமக்கெல்லாம் ஆபத்பாந்தவனா இருக்கா!
------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இப்படி உரையாடல் நீண்டு கொண்டே
செல்கிறது. மயிலாப்பூர், மேற்கு மாம்பலம்,
திருவல்லிக்கேணி ஏரியாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட்
கட்சிப் பிரமுகர்களின் உரையாடல்.
-----------------------------------------------------------------------------------------------------   

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக