புதன், 30 மார்ச், 2016

சக்தி வாய்ந்த தேமுதிக கிச்சன் காபினெட்!
-----------------------------------------------------------------------
தேமுதிக குறித்த எந்தவொரு முக்கியமான முடிவையும்
(INCLUDING POLICY DECISIONS) எடுப்பது கட்சித் தலைவர்
விஜயகாந்த் அல்ல.மாறாக, அக்கட்சியின் கிச்சன்
காபினெட்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறது.

ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் கிச்சன் காபினெட்
கூடி கொள்கை முடிவுகளை எடுக்குமாம். மற்ற
முடிவுகளை அவ்வப்போது கூடி எடுக்குமாம்.

இந்த கிச்சன் காபினெட்டில், 1) அண்ணியார் பிரேமலதா
2) மச்சான் சுத்தீஷ் 3) சுத்தீஷின் மனைவி 4) சுத்தீஷின்
மாமியார் 5) சுத்தீஷின் கொழுந்தியாள் ஆக மொத்தம்
ஐந்து பேர் இருக்கின்றனராம்.

இந்த அடிப்படையில்தான் எங்கள் அணி பஞ்ச பாண்டவர்
அணி என்று கம்யூனிஸ்ட் பெருந்தலைகள் கூறினராம்.

கிச்சன் காபினெட் கூட்டத்திற்கு எப்போதும் சுத்தீஷின்
கொழுந்தியாள்தான் தலைமை தாங்குவாராம்.
யார் யாருக்கு என்னென்ன பதவி என்பதை இந்த கிச்சன்
காபிநெட்தான் முடிவு செய்யுமாம்.

வைகோ துணை முதல்வர், முத்தரசன் உள்ளாட்சி அமைச்சர்
என்றெல்லாம் முடிவு செய்வது இந்த கிச்சன்
காபிநெட்தானாம். ஜி ராமகிருஷ்ணனுக்கு நிதித்துறையை
ஒதுக்கலாம் என்று  முதன்முதலில் புரப்போஸ்
பண்ணியது யார் தெரியுமா? சுத்தீஷின் மாமியார்தானாம்.

வாழ்க கிச்சன் காபினெட்! வளர்க கம்யூனிசம்!
---------------------------------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக