புதன், 23 மார்ச், 2016

அவமானப் படுத்தும் சுத்தீஷ்!
-------------------------------------------------
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவை
அதிக அளவுக்கு அவமானப் படுத்தியவர் சுத்தீஷ்தான்
என்பது நாடறிந்ததே.

தற்போது வைகோ, திருமா, முத்தரசன், ஜியார் ஆகிய
மூத்த தலைவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாராம்
சுத்தீஷ். இது அவமானமாக இருக்கிறதாம் கம்யூனிஸ்டுகளுக்கு.

இது குறித்து முத்தரசன் வைகோவிடம் புகார் கூறியபோது,
இதெல்லாம் அனுசரிச்சுப் போங்க தோழர், அந்தப் பய்யன்
(சுத்தீஷ்) நம்மை விடப் பெரிய கட்சி; கொஞ்சம் திமிர்
இருக்கத்தான் செய்யும்; நாம்தான் அனுசரிச்சுப் போகணும்
என்றாராம் வைகோ.
------------------------------------------------------------------------------------------------
2014 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையின்போது,
பொன்னாரிடம் வைகோவைச் சுட்டிக் காட்டி, இவருக்கெல்லாம்
ஆறு சீட்டு எதுக்கு? ரெண்டு சீட்டு கொடுத்தால் போதாதா என்று
சத்தம் போட்டு வைகோ காதுபடக் கேட்டு கேவலப் படுத்தியவன்
சுத்தீஷ். அந்த அவமானங்களை எல்லாம்  ஒரு எம்.பி பதவிக்காக
சகித்துக் கொண்டு இருந்தவர்தான் வைகோ.

மேலே நான் சொன்னது ஒரு மாதிரி (sample)  தான்.
வைகோவை அடிக்க சுத்தீஷ் கையை ஓங்கியபோது
தடுத்த புரோக்கர் தமிழருவி மனியனிடம் கேளுங்கள்;
கதை கதையாகச் சொல்லுவார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக