ஞாயிறு, 20 மார்ச், 2016

புகைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவு!
-------------------------------------------------------------------
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,
மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக, புகை பிடிப்பவர்கள்
அனைவருக்கும் நாளொன்றுக்கு இரண்டு பாக்கெட்டுகள் வீதம்
அண்ணன் வைகோவின் அருமைப் புதல்வரும்,
தென்னிந்திய சிகரெட் மொத்த வணிகரும் ஆகிய
இளம் புயல் துரை வையாபுரி அவர்கள் இலவசமாக
வழங்க இருக்கிறார் என்று தாயக வட்டாரங்கள்
பெருமையுடன் தெரிவிக்கின்றன.

அண்ணன் வைகோ அவர்களே,
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க! கோத்திரம் வாழ்க!
நீர் ஏற்படுத்தும் புற்றுநோய் வாழ்க!

புகை பிடிக்கும் அன்பர்களே, வாருங்கள்,
நாளொன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட்டை
இலவசமாக வழங்கும் அண்ணன் வைகோவின்
சிகரெட் கூட்டணிக்கு வாக்களிப்போம்!
சிகரெட் கூட்டணி வாழ்க!
********************************************************************** 

இனி எவனாவது மக்கள் நலக் கூட்டணின்னு சொன்னா
தொலிய உரிச்சிடுவேன். சிகரெட் கூட்டணின்னு சொல்லுங்கடா
என்று தாயகத்துத் தோழர்கள் எழும்பூரில் ரோட்டில் போவோர்
வருவோரை எல்லாம் அன்பாக மிரட்டிக் கொண்டு
இருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக