புதன், 30 மார்ச், 2016

அய்யா,
சிவகாமி அம்மையார் திமுகவில் இணைய விரும்பவில்லை.
காரணம் அவரின் என்.ஜி.ஓ தொடர்பு. அவர் "நடத்தி" வரும்
புதிய கோடங்கி இதழ் உண்மையில் ஒரு ப்ராஜெக்ட் ஆகும்.
இது குறித்து அ மார்க்ஸ் நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பே
கவிதாசரண் இதழில் எழுதி வந்ததை தாங்கள் அறியாமல்
இருக்க வாய்ப்பில்லை.
**
மனுஷ்ய புத்திரனைப் போல, சிவகாமியும் திமுகவில்
இணைவதை யார் தடுத்தார்கள்? யாரும் தடுக்கவில்லை.
திமுகவில் இணைந்த பின்னால், என்.ஜி.ஓ நிதியுதவி
கிடைக்குமா? சமூக சமத்துவப் படை என்ற அமைப்பை
நடத்தினால் மட்டுமே அந்நிய நிதியுதவி கிடைக்கும்.
**
பெரியாரை கேவலமாகப் பேசி வந்த சிவகாமி,
விடுதலைப் புலிகளைக் கேவலமாகப் பேசிவந்த சிவகாமி
மன்னிப்புக் கேட்கத் தயாரா? எம்.எல்.ஏ போன்ற பதவிகளை இருந்தால், என்.ஜி.ஒக்களின் மூலம் மேலதிகமான நிதியைப்
பெறலாம் என்பதற்காகவே மேத்தா  பட்கர், உதயகுமார்
போன்றோர் ஆம் ஆத்மியில் சேர்ந்தனர்.
**
உதயகுமார் ராதாபுரம் தொகுதியில் போட்டி இடுவதற்கும்,
சிவகாமி திமுக வேட்பாளராகப் போட்டி இடுவதற்கும் ஒரே
காரணம்  தங்களின் என்.ஜி.ஓ மூலம் கோடி கோடியாக
அந்நிய நிதி பெறுவதற்கே.
**
எனவே ஐயா அவர்களே,
புண்ணுக்குப் புனுகு பூச வேண்டாம்!
புளித்த கள்ளுக்குப் புனிதம் கற்பிக்க வேண்டாம்!!         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக