சனி, 19 மார்ச், 2016

இஸ்ரோ நாசா விஞ்ஞானிகளுடன்
தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்திப்பு!
-----------------------------------------------------------------
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததை
ஒட்டி தேர்தல் ஆணையம் தன்னுடைய நடுநிலையை
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்து வருகிறது.
மறைந்த தேசத் தலைவர்களின் சிலைகளை மட்டுமின்றி
வள்ளுவரின் சிலைகளையும் சாக்குத் துணி கொண்டு
மூடி மறைத்து வருகிறது. சென்னைக் கடற்கரையில்
வரிசையாக நிற்கும் கம்பர், ஒளவையார் சிலைகளையும்
விரைவில் மூட இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள்
தெரிவித்தன.

இதன் உச்சக்கட்டமாக, தேர்தல் முடியும் வரை, சூரியனை
மறைப்பதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகள், இஸ்ரோ
மற்றும் நாசா விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆலோசனை
நடத்தி வருகின்றனராம். செயற்கையாக சூரிய கிரகணங்களை
உருவாக்கி சூரியனை மறைக்க ஆவன செய்ய வேண்டும்
என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் விஞ்ஞானிகளிடம்
கோரிக்கை விடுத்துள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
******************************************************************
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக