செவ்வாய், 29 மார்ச், 2016

உலக ரெட்டியார்களே ஒன்றுபடுங்கள்!
ரெட்டியார் ஓட்டுக்களைக் கவர
தா பாண்டியன் முத்தரசன் திட்டம்!
----------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் 
பொதுச் செயலாளராக பெருமதிப்பிற்குரிய
சுதாகர் ரெட்டியார் அவர்கள் இருக்கிறார். இந்த 
நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, ரெட்டியார் சமூக 
வாக்குகளைக் கவர ஒரு மாஸ்டர் பிளானை 
வகுத்துள்ளனர் தா பாண்டியனும் முத்தரசனும்.

ரெட்டியார் சமூகத்தினர் கணிசமாக வாழும் தொகுதிகளை 
விஜயகாந்த்-வைகோவிடம் கேட்டுப் பெறுவது என்றும், 
சுதாகர் ரெட்டியார் தலைமையில் ஆந்திராவில் உள்ள புரட்சிகர  ரெட்டியார்களை அழைத்து வந்து சூறாவளிப் பிரச்சாரத்தில்
ஈடுபடுத்துவது என்றும் தா பாண்டியன் முடிவு செய்துள்ளார்.

தளி எம்.எல்.ஏவும் புரட்சிகர ரெட்டியாரும் ஆகிய 
ராமச்சந்திர ரெட்டியார் இதற்கான நிதி உதவியை 
அளிக்கச் சம்மதித்து விட்டார் என்பது எங்களுக்கு 
கிடைத்துள்ள முதல் வெற்றி என்கிறாராம் முத்தரசன்.

உலக ரெட்டியார்களே ஒன்று படுங்கள் என்ற கொள்கை 
முழக்கமும் புரட்சிப்பாடலும் தயாரித்து முடித்து 
விட்டார்களாம் கலை இலக்கியப் பெருமன்றத்தினர்.

ரெட்டியார்களைத் திரட்டாமல் இந்தியப் புரட்சி 
ஒருநாளும் வெற்றி பெறாது என்று அடித்துக் 
கூறுகிறார் தா பாண்டியன். உண்மைதானே!
----------------------------------------------------------------------------------------------------------      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக