செவ்வாய், 15 மார்ச், 2016


கருத்து எதுவும் சொல்லாத கலைஞரின் மௌனமும்
பெருகும் கண்டனங்களும்!
--------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------------------
1) எத்தியோப்பிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 
பாதிப்பேருக்கு கடந்த 48 மணி நேரமாக கடும் வயிற்றுப் போக்கு 
ஏற்பட்டு இருக்கிறது. WHO (World Health Organisation) அமைப்பைச் 
சார்ந்த மருத்துவ நிபுணர்கள் இதை சீதபேதி என்று நிர்ணயம் 
(diagnosis) செய்துள்ளனர். இது குறித்து வெள்ளை மாளிகை 
அதிகாரிகளும் கிரெம்ளின் அதிகாரிகளும் கருத்துச் சொல்லி 
உள்ளனர். ஆனால் கலைஞர் அவர்கள் அபாயகரமான இந்த சீதபேதி 
குறித்து கருத்து எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்து வருகிறார். 

2) பாரக் ஒபாமாவின் துணைவியாருக்கு இம்மாதம் (March)
வரவேண்டிய மாதவிடாய் தாமதமாகி உள்ளது. இதில் ஏதேனும் 
சர்வதேச சதி இருக்குமா என்பது குறித்து சி.ஐ.ஏ அதிகாரிகள் 
ஆராய்ந்து வருகின்றனர். சர்வதேச ராஜதந்திரிகள் அனைவரும் 
பான்  கி மூன் உட்பட இது குறித்து தம் கவலையை வெளிப்படுத்தி 
உள்ளனர். ஆனாலும் கலைஞர் அவர்கள் கனத்த மௌனம் காத்து 
வருகிறார்.

3) கலைஞரின்  மௌனம் குறித்து தமிழ்நாட்டின் மூத்த  
பத்திரிகையாளர்களான ஞானி, சமஸ் போன்றோர் கண்டனம் 
தெரிவித்து உள்ளனர்.

4) பத்திரிகையாளர்களின் கண்டனம் நியாயமானதே. ஏனெனில் 
கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக கலைஞர் அவர்கள்
உலகப் புரட்சியின் தலைமைச் செயலகமாக இருந்து வருகிறார்.
எனவே பிரான்சு அதிபரின் விவாகரத்து முதல், சவூதி இளவரசரின் 
காதல் திருமணம் வரை கலைஞர் அவர்கள் கருத்துக் கூற 
வேண்டும் என்று சர்வதேசப் பத்திரிகையாளர்கள் முதல் உள்ளூர்ப் 
பத்திரிகையாளர்கள் வரை எதிர்பார்ப்பது இயல்பே.
----------------------------------------------------------------------------------------------------------
    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக