ஞாயிறு, 27 மார்ச், 2016

தொப்புளில் பம்பரம் விடும் காட்சி புகழ்
நடிகர் சண்முக பாண்டியன் சூறாவளிப் பிரச்சாரம்!
விஜயகாந்த் கூட்டணியின் நட்சத்திரப் பிரச்சாரகர்!
சீத்தாராம் எச்சூரியுடன் ஒரே மேடையில் பேசுகிறார்!
---------------------------------------------------------------------------------------
நடிகர் சண்முக பாண்டியன் யாரென்று உங்களுக்குத்
தெரியவில்லையா? அப்படியானால் நீங்கள் ஒரு
பிற்போக்குப் பிண்டம் என்கிறார் தா பாண்டியன்.
ஆம் என்று வழிமொழிகிறார்கள் முத்தரசனும் ஜீயாரும்.

தமிழ்நாட்டின் லெனின் என்று CPI, CPM கட்சியினரால்
போற்றப்படும் கேப்டன் விஜயகாந்த்தின் கனிஷ்ட
புத்திரர்தான் நடிகர் சண்முக பாண்டியன். கதாநாயகியின்
தொப்புளில் பம்பரம் விடும் காட்சிகள் மூலமாக, பட்டி
தொட்டி எங்கும் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்து
வருபவர் சண்முக பாண்டியன் என்று CPI, CPM கட்சித்
தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.

தற்போது விஜயகாந்த் கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடெங்கும்
சண்முக பாண்டியன் சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்க
இருக்கிறார். இவரது கால்ஷீட் மன்னிக்கவும் சுற்றுப் பயணத்
திட்டத்தை வகுப்பதில் முத்தரசனும் ஜி ராமகிருஷ்ணனும்
மும்முரமாக இருந்து வருகிறார்கள்.

சண்முக பாண்டியனின் கம்யூனிசப் பிடிப்பைக் கண்டு
வியந்து போன சீத்தாராம் எச்சூரி, அவருடன் ஒரே மேடையில்
பேச மிகவும் ஆர்வமாக உள்ளாராம். ஆனாலும்
அக்கூட்டத்திற்கு நடிகர் சண்முக பாண்டியன் இன்னும் தேதி கொடுக்கவில்லையாம். இதனால் வருத்தத்தில்
இருக்கிறார்களாம் காம்ரேடுகள்!
-------------------------------------------------------------------------------------------------------------
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக