ஞாயிறு, 13 மார்ச், 2016

தா பாண்டியன் தனி ஆவர்த்தனம்!
பதினாறு  சீட்டுகள் கேட்கிறார்!
----------------------------------------------------
அதிமுகவின் கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளின்
தலைவர்களை இன்று ஜெயலலிதா சந்திப்பதாக அறிவிக்கப்பட்டு
இருந்தது. இதையொட்டி தா பாண்டியன் தோட்டத்திற்குச்
சென்றதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் இரு கட்சிகளும் (CPI, CPM) கூட்டணி சேர
விரும்புவதாகவும் தலைக்கு எட்டு இடங்கள் கொடுத்தாலே
போதும் என்றும் தா பாண்டியன் தோட்டத்தில் கோரிக்கை
வைத்ததாகக் கூறப் படுகிறது. பதிலை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறாராம் தா பா.

கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ஜெயா மறுத்த ஒரே காரணத்தால்
மட்டுமே ம ந கூவுக்குச் சென்றுள்ளனர் காம்ரேடுகள் என்பது
நாடறிந்ததே. சுதாகர் ரெட்டியாரிடம் ஒரு வார்த்தை சொல்லி
விட்டே தா பா தோட்டத்துக்குச் சென்றுள்ளாராம்.

எட்டும் எட்டும் பதினாறு இடங்கள் தரப்பட்டால் அதிமுகவுடன்
கூட்டணி சேர இரு கட்சிகளின் அகில இந்தியத் தலைமைக்கு
ஆட்சேபம் இல்லையாம்.
--------------------------------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக