புதன், 23 மார்ச், 2016

சுத்தீஷின் புதுக் கோரிக்கை!
விஜயகாந்த் ஆதரவு! வைகோ கலக்கம்!
-------------------------------------------------------------------
தேமுதிகவுடன் இணைந்த பிறகு இக்கூட்டணி
கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்று அறிவிக்கப் படும்
என்று மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்தார் வைகோ.

இக்கூட்டணி கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்று பெயர்
பெற்றுள்ள படியால், இக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக
தேமுதிகவைச் சேர்ந்த ஒருவரே இருக்க வேண்டும் என்று
சுத்தீஷ் தமது மாமாவிடம் கூறியுள்ளார். இதற்கு பிரேமலதாவும்
ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் அவர்கள் வைகோவுக்கு போன்
செய்து, தன் மச்சான் சுத்தீஷுக்கு கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கொடுக்குமாறு கண்டிப்புடன்
கூறியுள்ளார்.

இதைக் கேட்ட வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளார். தம்பியிடம்
(சுத்தீஷ்) நானே பேசி சமாதானப் படுத்துகிறேன் என்று கூறிவிட்டு
சுத்தீஷிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். சுத்தீஷ்
தாறுமாறாக நாகூசும் வார்த்தைகளால் வைகோவைத் திட்டி
உள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக