வியாழன், 31 மார்ச், 2016

தேமுதிக கிச்சன் காபினெட் கூடி தொகுதிகளை
இறுதி செய்தது! படுபட்சி இல்லாத நாளில்
தொகுதிகளை அறிவிக்க சுத்தீஷின் மாமியார் உத்தரவு!
---------------------------------------------------------------------------------------
தேமுதிக தான் போட்டியிடும் 124 தொகுதிகளை இறுதி
செய்து விட்டது. வைகோ முத்தரசன் கம்பெனிக்கு
ஒதுக்க வேண்டிய 110 தொகுதிகளும் அடையாளம்
காணப்பட்டு விட்டன. தேமுதிக கிச்சன் காபினெட்
சுத்தீஷின் கொழுந்தியாள் தலைமையில் கூடி
தொகுதிகளை இறுதி செய்து விட்டது.

எனினும் தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப் படுவது
தாமதம் ஆகிறது. இதற்கான காரணத்தை விசாரித்து
அறிந்தோம். சுத்தீஷின் மாமியார் ஒரு முக்கிய
உத்தரவைப் பிறப்பித்து உள்ளார். படுபட்சி இல்லாத
நாளாகப் பார்க்க வேண்டும் என்றும் சித்த நாம யோகம்
உள்ள நாளாக இருக்க வேண்டும் என்றும் சுத்தீஷின்
மாமியார் கறாரான உத்தரவைப் பிறப்பித்து உள்ளாராம்.

அண்ணியார் பிரேமலதாவின் குடும்ப ஜோதிடர்
தலைமையில் ஜோதிட பூஷணங்களும் வேத
விற்பன்னர்களும் கேப்டனுக்கு ராசியான முஹூர்த்த
நாளை ஜோதிட ரீதியில் கணித்துக் கொண்டு
இருக்கின்றனர். விரைவில் பட்டியல் வெளியாகும்.
-------------------------------------------------------------------------------------------

110 தொகுதிகளின் பெயர்களை எழுதி
அந்த 110 தொகுதிகளின் பட்டியலையும் வைகோ
பார்வையிட்டு விட்டார் unofficially. படுபட்சி இல்லாத
நாளில்தான், நாங்கள் உங்களுக்கான 110 தொகுதிகளின்
பட்டியலையும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்  என்று
சுத்தீஷ் சொல்லி விட்டார். திருமாவளவனுக்கு எந்தத்
தொகுதிகள் என்பதை வைகோவும் முத்தரசனும் ஜீயாரும்
முடிவு செய்வார்கள். அதை தேமுதிக கிச்சன் காபினெட்
முடிவு செய்யாது.
**
ஆனால், சுத்தீஷ் ஒரு முக்கியமான
ஆலோசனையை வைகோ-முத்தரசன்-ஜீயார் கம்பெனியிடம்
கூறியுள்ளாராம். அது இதுதான். எந்தக் காரணம் கொண்டும்
திருமாவுக்கு அதிகம் தொகுதிகளைக் கொடுத்து விடாதீர்கள்;
பிரசாதியினரின் வாக்குகளை நாம் இழக்க நேரிடும் என்று.
இதற்கு வைகோ-முத்தரசன்-ஜீயார் சம்மதித்து உள்ளனராம்.


படுபட்சி என்றால் என்ன என்று விளக்கம் அளித்துக்
கொண்டிருக்க என்னால் இயலாது. உங்கள் ஊரில்
உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் பாஜகவின் பிராமணப்
பிரமுகர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தத்ரூபம்


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக