திங்கள், 28 மார்ச், 2016

கொடுப்பது தொகுதிகள் அல்ல, ஆக்சிஜன்!
மடிப்பிச்சை கேட்கும் சோனியா அம்மையாரே!
ராகுல் காந்தியே, குலாம் நபி ஆசாத் அவர்களே!
-------------------------------------------------------------------------------
1967இல் தமிழக மக்கள் காங்கிரசை ஓட ஓட விரட்டி
அடித்தார்கள். கொம்மளி ராமச்சந்திர மேனனும்
போலி கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரமும் சேர்ந்து
மீண்டும் காங்கிரசுக்கு செல்வாக்குச் சேர்த்தார்கள்.

ஒரு மைனாரிட்டி ஆட்சியை நடத்திய போதும்கூட,
உங்களுக்கு கலைஞர் ஆட்சியில் பங்கு தரவில்லை.
இன்றைக்கு மாறிய சூழ்நிலையை நினைத்துப் பார்த்து,
கலைஞர் கொடுபாதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில், கலைஞர் கொடுப்பது தொகுதிகள்  அல்ல;
ஆக்சிஜன்! 

கலைஞர் கழகத் தலைவர் மட்டும் அல்ல.
கடவுளும் கூட.

கரங்களை உங்களுக்கு இறைவன் படைத்தது
கலைஞரிடம் கையேந்தவே..

மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் உரிமை
பேத்திகளுக்கு மட்டுமே பாட்டிகளுக்கு அல்ல.

இரவலர் புலவு கோருதல் இல்.

சோனியாவின் கலிங்கம் குலையாமல்
பட்டணத்தில் இருத்தி
தூது வந்த நும் மடியில்
நுகர்ச்சிப் பண்டங்களை இடும் கலைஞருக்கன்றோ
நும் அவைக்களப் புலவர் பரணி பாடுதல் வேண்டும்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக