ஞாயிறு, 20 மார்ச், 2016

புணர்ச்சியின்போது, அ) இயல்பு ஆ) மிகல்
இ) திரிபு ஆகிய மூவகையானும் புணர்தல் தனித்த சில
சொற்கள் புணரும்போதே ஆகும். எல்லா நிலைகளிலும்
இம்மூவகைப் புணர்ச்சி ஏற்கப்படவில்லை.
எ-கா: 1
பல+பல = பலபல (இயல்பு)
பல+பல = பலப்பல (மிகல்)
பல+பல = பற்பல (திரிபு) 
எ-கா:2
சில+சில = சிலசில, சிலச்சில, சிற்சில

பலசில எனுமிவை தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகரம் ஆதலும்.....
என்னும் நூற்பாவைக் கருதுக.

முகில்+கணிமை = முகிற்கணிமை (திரிபு) என்பது மட்டுமே
சரியான புணர்ச்சி. முகில்க்கணிமை (மிகல்), முகில்கணிமை (இயல்பு)
ஆகிய இருவகையும் பிழையானவை.
(திரு வேந்தன் அரசு அவர்கள் பார்வைக்கு)    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக