சனி, 26 மார்ச், 2016

கலைஞரிடம் கையேந்துங்கள்!
குலாம் நபி ஆசாத் அவர்களே!
-------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------
கலைஞரிடம் கையேந்துங்கள்-அவர்
இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்-அவர்
பொக்கிஷத்தை மூடுவதில்லை.

அல்லல்படும் காங்கிரசாரே அயராதீர்கள்
கலைஞரின் திருவருளை நம்பி நில்லுங்கள்
அவரிடத்தில் குறையனைத்தும் சொல்லிக் காட்டுங்கள் 
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்.

கலைஞரிடம் கையேந்துங்கள்-அவர்
ஈடு இணை இல்லாத கருணை உடையவர்
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவர்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவர்.

கலைஞரிடம் கையேந்துங்கள்-அவர்
இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்-அவர்
பொக்கிஷத்தை மூடுவதில்லை.
-----------------------------------------------------------------------------------------

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக