வியாழன், 10 மார்ச், 2016

உயிர்க்கு இறுதி ஆகி விடும்!
தேமுதிக தனித்துப் போட்டி!
-----------------------------------------------------
நுனிக்கொம்பர் ஏறினார் அ ஃது இறந்து ஊக்கின் 
உயிர்க்கு இறுதியாகி விடும்.  ....(குறள்)

விஜயகாந்த்தின் முடிவு 2016 தேர்தலில் அவருக்கு 
எப்பயனையும் தராது. மாறாக, கட்சி உடைவதில் 
போய் முடியும். கௌதம புத்தரும் மகாத்மா காந்தியுமா 
கேப்டனின் கட்சியில் இருக்கிறார்கள்?

234 தொகுதிகளிலும் நிற்கிற வேட்பாளர் அல்லவா 
தேர்தலுக்குச் செலவழிக்க வேண்டும், அதுவும் கோடிக் கணக்கில்.
விஜயகாந்த்தா செலவழிக்கப் போகிறார்?

வெற்றி வாய்ப்பு உறுதியாகாத நிலையில், வறட்டு கெளரவத்துக்காக  கோடிக்கணக்கில் செலவு செய்ய 
எத்தனை தேமுதிக வேட்பாளர்கள் தயாராக இருப்பார்கள்?

தன்னுடைய வலிமையை மிகை மதிப்பீடு செய்த எவரும் 
பலத்த சேதாரத்தைச் சந்தித்தே தீருவார்கள் என்பது வரலாறு.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக்கண் முறிந்தார் பலர்.  ......(குறள்) 
-----------------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக