செவ்வாய், 31 அக்டோபர், 2023

வெளியே போ!
---------------------
பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானியர்கள்
அகதிகளாக இருக்கின்றனர். அவர்கள் 
அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற 
வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு 
உத்தரவிட்டு உள்ளது. இதற்கான கடைசி 
தேதி நவம்பர் 1, 2023.

எனவே ஆபிகானியர்கள் பாகிஸ்தானை விட்டு 
வெளியேறி வருகின்றனர்.
*******************************************  

மனிஷ் சிசோடியாவுக்கு 10 ஆண்டு   பு 
கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும்!
சட்ட நிபுணர்கள் கருத்து!




கேஜ்ரிவாலின் சீடன் மனீஷ் சிசோடியா பிரிந்த 
ரூ 338 கோடி ஊழல் நிரூபிக்கப்பட்டது.
எங்கே போனான் திருட்டுப் பயல் அண்ணா ஹசாரே?


 

திங்கள், 30 அக்டோபர், 2023

பசும்பொன் தேவர் குறித்த மதிப்பீடு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
பசும்பொன் தேவர் அவர்கள் (1908-1963) 55 ஆண்டு 
காலமே இவ்வுலகில் வாழ்ந்தார். அவரின் காலம் 
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு நம் நாடு அடிமைப் 
பட்டுக் கிடந்த காலம்.

மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகத் 
தம் அரசியல் வாழ்வைத் தொடங்கிய தேவர் அவர்கள் 
இறுதி வரை சமரசமின்றி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை 
எதிர்த்து நின்றவர் ஆவார்.

தேச விடுதலைப்போரின் காலக்கட்டத்தில், ஒரு நபரின் 
பாத்திரத்தை மதிப்பீடு செய்யத் தகுந்த காரணி என்ன?
அவர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியா 
இல்லையா என்பதுதான் அக்காரணி ஆகும்; இதுவே 
தீர்மானகரமான காரணிஆகும். இதுவே மார்க்சிய 
அளவுகோலும் ஆகும்.

இதன்படி பார்த்தால் பசும்பொன் தேவர் அவர்கள் 
சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகத் 
திகழ்ந்த வரலாற்று உண்மை புலப்படுகிறது.

பசும்பொன் தேவரின் சமகாலத்து தலைவர்களுள் 
ஒருவரான ஈ வெ ராமசாமி தீவிர பிரிட்டிஷ் 
விசுவாசியாக இருந்து வரலாற்றுக் களங்கம் ஆனார்.

பிரிட்டிஷ் விசுவாசியான ஈ வெ ராமசாமி பசும்பொன் 
தேவர் மீது தீராத வன்மம் கொண்டவராக இருந்தார்.
தேவர் குறித்த அவதூறுகளை மட்டுமின்றி, தேச 
விடுதலைப் போரில் பங்களித்த அனைவரையும் பற்றிய 
அவதூறுகளை உருவாக்கிப் பரப்பினார்  ஈ வெ ராமசாமி.
அவற்றை முறியடித்து போற்றுதலுக்குரிய பசும்பொன் 
தேவரின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவது 
முற்போக்காளர்களின் கடமை ஆகும்.
*******************************************************.



     


ஞாயிறு, 29 அக்டோபர், 2023

பினராயி விஜயனிடம் தோற்றுப்போன
இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் 
12 மணி நேர வேலைநேரமும்! 
-----------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------
ஒரு தொழிலாளியின் வேலைநேரம் எவ்வளவு இருக்க 
வேண்டும் என்பது பற்றி காரல் மார்க்ஸ் மிகப்பெரிதும் 
அக்கறை கொண்டிருந்தார். என்றாலும் மார்க்சின் 
காலத்தில் எட்டு மணி நேர வேலை என்பது 
சட்டமாக்கப் படவில்லை. அப்போதெல்லாம் 
தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் 
வேலை செய்வது வழக்கமான நடைமுறையாக 
இருந்தது.  

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மே தினத்தில்,
அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தின் 
தொழிலாளர்கள் போராடி, உயிர்த் தியாகம் செய்து
எட்டுமணி நேர வேலையைச் சட்டமாக்கினர்.  

இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் இந்தியத் 
தொழிலாளர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை 
செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது 
தொழிலாளர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் 
வேலை செய்து வருகின்றனர்.

நாராயணமூர்த்தி அவர்கள் வாரத்துக்கு 70 மணி 
நேரம் வேலை என்பதன் மூலம் நாளொன்றுக்கு 
12 மணி நேரம் வேலை செய்வதைக் குறிப்பிடுகிறார்.
அதாவது நாளொன்றுக்கு 11 மணி 40 நிமிடம் 
(11-2/3 மணி) வீதம் ஆறு நாட்கள் வேலை செய்தால்,
வாரத்துக்கு 70 மணி நேர வேலை என்ற கணக்கு
வருவதை எவரும் அறிந்து கொள்ளலாம்.

நாராயணமூர்த்தி அவர்கள் ஐ ஐ டி கான்பூரில் 
எம் டெக் படித்தவர். இன்போசிஸ் நிறுவனத்தைத் 
தோற்றுவித்து வளர்த்தவர்களில் ஒருவர். நிறுவன 
மேலாண்மை, தொழிற்சாலை மேலாண்மை 
ஆகியவற்றில் நிறைந்த அனுபவம் பெற்றவர்.

என்றாலும், வாரத்துக்கு 70 மணி நேர வேலை என்ற 
கருத்து அவரின் சுயசிந்தனையின் வெளிப்பாடு அல்ல.
It is NOT his brain child! நாளொன்றுக்கு 12 மணி நேர 
வேலை என்ற கருத்தை அவர் கேரள மார்க்சிஸ்ட் 
முதல்வர் பினராயி விஜயனிடம் இருந்தே பெற்றார்.

கேரளத்தில் 12 மணி நேர வேலையைச் சட்டம் 
ஆக்கியவர் பினராயி விஜயன். ஏதோ ஒரு 
சிறிய தனியார் நிறுவனத்தில் 12 மணி நேர வேலை 
சட்டமாக்கப் பட்டுள்ளது என்றால் ஒழிந்து 
போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் 
மாநில அரசுத் துறையில், KSRTC எனப்படும் 
அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனத்தில் 
பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் 
பணிபுரியும் இடத்தில், எட்டு மணி நேர வேலையை 
ஒழித்துக் கட்டி விட்டு 12 மணி நேர வேலையைச் 
சட்டமாக்கி உள்ளார் பினராயி விஜயன்.

கொடிய சுரண்டலுக்குப் பேர்போன தனியார் நிறுவன 
முதலாளிகளே வேலைநேரத்தை அதிகரிப்பதற்கு  
அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் போலி 
மார்க்சிஸ்ட்டான பினராயி விஜயன் மிகவும் 
துணிச்சலுடன் பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் 
செய்து 12 மணி நேர வேலையைஅச் சட்டமாக்கி 
உள்ளார்.

பினராயி விஜயன் 12 மணி நேர வேலையைச் சட்டமாக்கிய 
பின்னரே, இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு 12 மணி 
நேர வேளை பற்றிப் பேசுவதற்கான தைரியம் 
வந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட தங்கம் தென்னரசுவும் மு க 
ஸ்டாலீனும் சேர்ந்து 12 மணி நேர வேலையை
நடைமுறைப் படுத்த முயன்றனர் என்பதை 
நினைத்துப் பாருங்கள்.

இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பவர் 
போலி கம்யூனிஸ்ட் பினராயி விஜயனே!

போலி நக்ஸல்பாரித் தற்குறிகளின் பேதைமை!
--------------------------------------------------------------------------
12 மணி நேர வேலை என்னும் பிற்போக்குச் சட்டம் 
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத நிலையில் 
கேரளத்தில் போலி மார்க்சிஸ்ட் விஜயனால் கொண்டு 
வரபட்டது. என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள போலி 
நக்சல்பாரித் தற்குறிகள் யாரும் இதைக் 
கண்டிக்கவில்லை. இந்தத் தற்குறிகளுக்கு 
கேரளத்தில் 12 மணி நேர வேலை சட்டமாகி விட்டது 
என்ற உண்மைகூடத் தெரியாது.

இந்த அநியாயத்தை முதன் முதலில் அம்பலப் படுத்தியது
நியூட்டன் அறிவியல் மன்றமே. ஆனால் போலி 
மாவோயிஸ்டுகளும் போலி நக்சல்பாரிகளும் வாயில் 
கொழுக்கட்டையை  அடைத்துக் கொண்டு
பினராயி விஜயனை அம்பலப் படுத்த மறுத்து 
தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் செய்தனர்.

இன்று நாராயண மூர்த்தி 12 மணி நேரம் வேலை 
செய்ய வேண்டும் என்று சொல்கிறார் என்றால், 
கேரளத்திலே எந்த எதிர்ப்பும் இல்லாமல் 12 மணி நேர 
வேலை சட்டமாகி விட்டது என்ற தைரியம்தான்!
பினராயி விஜயனும் மார்க்சிஸ்ட் கட்சியும்
இருக்கும் வரை இந்தியாவில் புரட்சி ஒருபோதும் 
வராது என்ற நம்பிக்கைதான்!
************************************************ 


            

 

 
  

   
       

திங்கள், 23 அக்டோபர், 2023

இந்திய வேளாண்மையில் சுவாமிநாதனின் பாத்திரம்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது 
நான் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த 
சிறுவன். ஆண்டு 1965! லால் பகதூர் சாஸ்திரி 
இந்தியப் பிரதமராக இருந்த நேரம்.

அவர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து 
இருந்தார். நாட்டில் கடும் உணவுப் பற்றாக்குறை 
நிலவுவதால், மக்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் 
ஒரு வேளை உணவு உண்ணாமல் பட்டினி இருக்க 
வேண்டும்  என்பதுதான் சாஸ்திரியின் வேண்டுகோள்.

எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் ஊர் மக்களை 
வரவழைத்து, பள்ளியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். 
பிரதமரின் வேண்டுகோளைத் தாம் ஏற்பதாகவும் 
வாரந்தோறும் செவ்வாய் இரவு உணவைக் 
கைவிடுவதாகவும் அறிவித்தார். ஊரில் பலரும் 
தலைமையாசிரியரைப் பின்பற்றி ஒரு வேளை 
உணவைக் கைவிட்டனர். எங்கள் பள்ளித் 
தலைமையாசிரியர் காங்கிரஸ்காரர் அல்லர்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் 
ஒரு கலாச்சாரம் அப்போது நாட்டில் இருந்தது.   
பல உணவகங்கள் அப்போது வாரத்தில் ஒரு 
நாள் இரவு நேரத்தில் மூடப்பட்டிருந்தன.
 

நாட்டு மக்கள் அனைவரும் ஒருவேளை பட்டினி 
கிடக்க வேண்டும் என்று பிரதமர் சாஸ்திரி 
வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவலநிலை 
1965ல் ஏன் ஏற்பட்டது?

அ) 1962ல் நேரு காலத்தில் இந்திய சீனப்போர் 
ஏற்பட்டது. போரில் இந்தியா தோற்றது. இப்போரின் 
விளைவாக தீவிரமான பொருளாதார நெருக்கடியும் 
கடுமையான உணவுப் பற்றாக்குறையம் ஏற்பட்டன.

ஆ) தொடர்ந்து 1965ல் இந்திய பாகிஸ்தான் போர் 
ஏற்பட்டது. மூன்றாண்டு இடைவெளியில் இரண்டு போர்கள்!
இப்போர் உணவுப் பஞ்சத்தின் விளிம்புக்கு 
இந்தியாவைக் கொண்டு சென்றது.

இ) அக்காலத்தில் உணவு தானிய உற்பத்தியில் 
இந்தியா தன்னிறைவு அடைந்திருக்கவில்லை.
பெரிதும் இறக்குமதியை நம்பியே இருந்தது.
பிஎல் 480 (Public Law 480) என்னும் திட்டத்தின் கீழ் 
மக்காச்சோளம், கோதுமை, பால்பவுடர் ஆகியவை 
அமெரிக்காவின் உதவியாக இந்தியாவுக்கு 
வந்துகொண்டு இருந்தன.

ஈ) இந்திய பாகிஸ்தான் போரின்போது (1965)
லிண்டன் பி ஜான்சன் அமெரிக்க அதிபராக 
இருந்தார். இந்தியா போரை நிறுத்தாவிட்டால் 
உணவு தானியங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா 
வழங்காது என்று மிரட்டினார் லிண்டன் ஜான்சன்.

உ) 1967 தேர்தலில் காங்கிரஸ் ஏன் தமிழ்நாட்டில் 
மோசமாகத் தோற்றது? அரிசிப் பஞ்சம்தானே 
காரணம்! அப்போதெல்லாம் ரேஷன் கடைகளில் 
காணப்படும் மிக நீண்ட கியூவரிசைகளில் மக்கள் 
தங்கள் நேரத்தைத் தொலைப்பார்கள். அரிசித் 
தட்டுப்பாடு தீவிரமாக இருந்த காரணத்தால்தான் 
திமுக தலைவர் அண்ணாத்துரையால் ரூபாய்க்கு 
மூன்று படி அரிசி என்ற வாக்குறுதியைக் 
கொடுத்து பாமர மக்களின் வாக்குகளை அறுவடை
செய்ய முடிந்தது!    

ஊ) சுருங்கக் கூறின் 1960களில் தொடங்கிய உணவு 
தானியப் பற்றாக்குறை நாளும் அதிகரித்துக் கொண்டே 
சென்று பஞ்சத்திற்கும் பட்டினிச்சாவுகளுக்கும்
நாட்டை இட்டுச் செல்லும் என்ற நிலை சுவரில் 
எழுத்தாக வெளிப்பட்டது.    

இந்த அவலநிலையில் இருந்து நாட்டை விடுவிக்க 
பிரதமர் சாஸ்திரி முடிவு செய்தார். அப்போது, 1965ல் 
இந்தியாவின் மக்கள்தொகை 50 கோடியாக இருந்தது.
சாஸ்திரியிடம் தமிழரான சி சுப்பிரமணியம் 
வேளாண்துறை அமைச்சராக இருந்தார். இருவரும் 
சேர்ந்து, நாட்டின் தலைசிறந்த வேளாண் 
விஞ்ஞானியாக இருந்த, தமிழரான எம் எஸ் 
சுவாமிநாதனை அழைத்து வந்து நாட்டில் உணவுப் 
பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் பொறுப்பை 
அவரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில்தான் 
ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கங்களை 
சாஸ்திரி உருவாக்கினார். எல்லையில் போர் புரியும் 
ராணுவ வீரனுக்கும் உள்நாட்டில் வேளாண்மை
செய்யும் உழவனுக்கும் மரியாதை வழங்கும் 
முழக்கங்கள் இவை.    

யார் இந்த எம் எஸ் சுவாமிநாதன்? (Mankombu Sambasivan Swaminathan 1925-2023).  தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பிறந்தவர் எம் எஸ் சுவாமிநாதன். 
இந்தியப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பின்னர் 
நெதர்லாந்தில் மரபணுவியல் கற்ற இவர் கேம்பிரிட்ஜ்  
பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய 
வேளாண் ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார்.  

இவரின் தந்தையார் ஒரு மருத்துவர். இவரையும் மருத்துவர் 
ஆகுமாறு குடும்பத்தார் கூறினார்கள். ஆனால் சுவாமிநாதன் 
ஆராய்ச்சியாளராக ஆனார். முன்னதாக 1948ல் இவர் 
ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். எனினும் அப்பணியில் 
சேரவில்லை.  அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலையில் 
வேலை கிடைத்தும் இவர் அதில் சேராமல், ஒடிஷா மாநிலத்தில் 
வேளாண் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார்.
கணக்கற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் 
இவர் எழுதி உள்ளார்.

2016ல் வெளியான ஒரு புள்ளி விவரப்படி சுவாமிநாதன் 33 தேசிய 
விருதுகளையும் 32 சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளையும் 
ரமான் மக் சே சே விருதையும் (Ramon Magsaysay award) இவர் 
பெற்றுள்ளார். முன்னதாக 1961ல் இவருக்கு இந்தியாவின் 
உயர்ந்த அறிவியல் விருதான பட்நாகர் விருது 
(Shanthi Swarup Bhatnagar award) வழங்கப்பட்டது.  1987ல்  
இவருக்கு உலக உணவுப் பரிசு (World Food prize) வழங்கப் 
பட்டது. உணவு உற்பத்தித்துறையின் நோபெல் பரிசாக
இப்பரிசு கருதப் படுகிறது. இப்பரிசின் மூலம்
கிடைத்த பணத்தைக் கொண்டு தம் பெயரிலான 
ஆய்வு அறக்கட்டளையை (M S Swaminathan Research Foundation)
சுவாமிநாதன் உருவாக்கினார்.  
   

எம் எஸ் சுவாமிநாதன் ஒன்றல்ல இரண்டல்ல, 84 கெளரவ 
டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார். சீனா, ஜப்பான்,
இஸ்ரேல், பிரான்ஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 
பல்வேறு நாடுகளின் மதிப்புமிக்க விருதுகளும்  
இவருக்கு வழங்கப்பட்டு உள்ளன. இவர் பெற்றுள்ள 
விருதுகளையும் கெளரவத்தையும் பட்டியலிட்டால் பெருகும்.    

பஞ்சம் வந்து விடாமல் தடுத்து உணவு உற்பத்தியைப் 
பெருக்கும் கனத்த பொறுப்பை இவரின் தோள்களில் 
சுமத்திய லால் பகதூர் சாஸ்திரி 1966ல் மறைந்து 
விட்டார். எனினும் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்ற 
இந்திரா காந்தி, எம் எஸ் சுவாமிநாதனுக்குத் 
தமது அரசின் ஆதரவைத் தொடர்ந்து அளித்தார்.

தானிய உற்பத்தி போன்று 1970ல் நாட்டின் பால் உற்பத்தியைப் 
பெருக்கும்பொருட்டு, "பெருகும் வெள்ளம்" (Operation Flood)
என்னும் நடவடிக்கை இந்திரா காந்தி அரசால் 
மேற்கொள்ளப் பட்டது. இதற்குப் பொறுப்பேற்றவர் 
டாக்டர் வர்கிஸ் குரியன் என்பது நமக்கு நினைவிருக்கும்.   

உணவு உற்பத்தியைப் பெருக்கும் சவால் நிறைந்த 
பணியை ஏற்றுக் கொண்ட சுவாமிநாதன், நார்மன் 
போர்லாக் (Norman Borlaug 1914-2009) என்னும் அமெரிக்க 
வேளாண் விஞ்ஞானியின் ஒத்துழைப்பை நாடினார். 
நார்மன் போர்லாக் உலக நாடுகள் பலவற்றிலும் 
உணவு தானிய உற்பத்தியை, குறிப்பாக கோதுமை 
உற்பத்தியைப் பெருக்கியவர். வீரிய ரக வித்துக்களை 
உருவாக்கி விளைச்சலில் இமாலய சாதனை புரிந்தவர். 
பின்னாளில் இவர் 1970ஆம் ஆண்டிற்கான உலக 
அமைதிக்கான நோபெல் பரிசைப்பெற்றவர்.

சுவாமிநாதனின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவுக்கு 
வந்த நார்மன் போர்லாக் பஞ்சாப், ஹரியானா 
உள்ளிட்ட மாநிலங்களைச் சுற்றிப் பார்த்தார்.அப்போது 
அவர் ஒரு வீரிய ரகக் கோதுமை வித்தை உருவாக்கி 
இருந்தார். மெக்சிகோவில் அதைப் பயிரிட்டதில் பல 
மடங்கு மகசூல் கிடைத்தது. இந்தியாவிலும் அது 
வெற்றி பெறும் என்று நார்மன் போர்லாக் கணித்தார்.  

மெக்சிகோவில் வெற்றி பெற்ற அந்தக் குட்டைரக 
கோதுமையை இந்தியாவில் பயிரிட சுவாமிநாதன் 
விரும்பினார். எனவே அங்கிருந்து 18,000 டன் 
கோதுமை வித்துக்களை இறக்குமதி செய்தார்.
பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் அந்த வீரிய 
ரகக் கோதுமை பயிரிடப் பட்டது.அது பல மடங்கு 
மகசூலைத் தந்தது. விவசாயிகளிடம் அந்த 
வீரிய வித்தைப் பயிர் செய்ய பெரும் ஆர்வம் 
நிலவியது. இந்த நேரத்தில் வீரிய வித்துக்களை 
கோணிப்பையில் அடைத்து பல ஊர்களின் 
விவசாயிகளுக்கும் அனுப்ப முயன்றார் 
சுவாமிநாதன். கோணிப்பைகளுக்கான தேவை 
அதிகரித்த நிலையில் சிறைக்கைதிகளை 
கோணிப்பை தயாரிக்கும் வேலையில் அரசு 
ஈடுபடுத்தியது.

இந்த வீரிய ரகக் கோதுமையைப் பயிரிட்டதில் 
பன்மடங்கு  உற்பத்தி அதிகரித்தது. 1965-66ல் 
1.91 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை 
மகசூல் அடுத்தடுத்த ஆண்டுகளில் 5.15 மில்லியன் 
டன்னாக உயர்ந்தது. கோதுமையைத் தொடர்ந்து 
நெல், உருளைக்கிழங்கு ஆகியவற்றிலும் வீரிய 
ரகங்களை உருவாக்கி விளைச்சளைப் பெருக்கினார் அவர். 


மேற்கூறிய உற்பத்திப் பெருக்கச் செயல்பாடுகள் 
பிற்காலத்தில் பசுமைப்புரட்சி என்று பெயர் பெற்றன.
பசுமைப் புரட்சி 1965ல் தொடங்கியதாகக் 
கொண்டால், பத்தே ஆண்டுகளில் இந்தியாவின் 
உணவு தானிய உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து 
இந்தியா தன்னிறைவு அடைந்தது. அமெரிக்காவின் 
இளக்காரத்துடன் கூடிய கருணையை நம்பி 
இருந்த அவலம் முடிவுக்கு வந்தது. தற்காலத்தில் 
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு என்பதையும் 
தாண்டி உபரி உற்பத்தி என்ற உச்சத்தை இந்தியா 
அடைந்துள்ளது. இதற்குக் காரணமான எம் எஸ் 
சுவாமிநாதனுக்கு இந்த நாடு கடன் பட்டுள்ளது.


ரசாயன உரங்களையும் பூச்சி கொல்லி மருந்துகளையும் 
வீரிய வித்துக்களையும் பயன்படுத்தி விவசாயம் செய்யும் 
முறையை எம் எஸ் சுவாமிநாதன் அறிமுகப்படுத்தியதால் 
சுற்றுச்சூழல் மாசடைகிறது; நிலத்தின் மண்வளம் 
பறிபோகிறது என்றெல்லாம் சுவாமிநாதன் மீது 
விமர்சனங்களும் எழுந்தன.

எனவே ரசாயன விவசாயத்தைக் கைவிட்டு 
இயற்கை விவசாயத்தை (organic farming)
மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்களும் 
சமகாலத்தில் உரத்தே ஒலிக்கின்றன. 1960கள் 
வரை இந்தியாவில் பாரம்பரிய விவசாயம்தான் 
மேற்கொள்ளப் பட்டது. மாட்டுச் சாணம்தான் 
உரமாகப் பயன்பட்டது.

ரசாயன உரங்களுக்குப் பதில் சாணி உரம் என்பது 
வரவேற்கத் தக்கதே. ஆனால் நாடு முழுவதும் உள்ள 
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடிக்கு 
எவ்வளவு சாணி உரம் தேவைப்படும்? வண்டி வண்டியாக 
மலை மலையாகத் தேவைப்படுமே! அதற்கு கோடிக்கணக்கான 
மாடுகள் வேண்டுமே! அவ்வளவு மாடுகள் நாட்டில் 
இருக்கின்றனவா? இல்லையே!

அரசுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில்  சாகுபடிக்கேற்ற 
நிலத்தின் பரப்பு 160 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே. 
இன்றைய இந்திய மக்கள் தொகை 140 கோடி. இன்னும் 
10 ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரித்து விடும். 
ஆனால் நிலத்தின் பரப்பளவு அதிகரிக்காது. மாறாக 
மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாக விளைநிலங்கள் 
குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படும். 

ஒரு பக்கம் பெருகிக் கொண்டே வரும் மக்கள்தொகை!
இன்னொரு பக்கம் சுருங்கிக் கொண்டே வரும் நிலப்பரப்பு!  
இந்நிலையில் ரசாயன உரங்களையும் வீரிய வித்துக்களையம் 
தவிர்க்க இயலுமா? அப்படித் தவிர்த்தால் தேவையான அளவு 
உணவு தானிய உற்பத்தியை எட்ட முடியுமா?  

1960களின் உணவுப்பஞ்சம் வெறும் கடந்த கால 
வரலாறாக மட்டுமே இன்று அறியப் படுகிறது. இன்று 
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு என்ற 
கட்டத்தையும் கடந்து உபரி உற்பத்தி என்னும் உயர்ந்த 
இடத்தில் இந்தியா உள்ளது. அரிசி ஏற்றுமதியில் 
உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான்! 

எடுத்துக்காட்டாக, 2022-23ல் இந்தியாவின் பாசுமதி அரிசி 
ஏற்றுமதி 45 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இதன் மதிப்பு 
38,000 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவின் வித்துச் சட்டம் 
1966ன்படி (Seeds act 1966) 34 வகையான பாசுமதி அரிசி 
வித்துக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. காஷ்மீர், 
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மலை  
அடிவாரத்திலும் பஞ்சாப் அரியானா மாநிலங்களிலும்  
பாசுமதி விளைகிறது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே 
விளைந்தபோதிலும் உலக அளவில் பாசுமதி ஏற்றுமதியில் 
நாம் முதலிடத்தில் இருப்பது மெய்யாகவே பிரம்மாண்டமான 
சாதனை ஆகும். 

உற்பத்தியிலும் மகசூலிலும் நமக்கு இருக்கும் இந்த 
அந்தஸ்தைத் தக்கவைக்க வேண்டுமெனில்,  
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேரா(து) இயல்வது நாடு 
என்று வள்ளுவர் வரையறுத்த நாடாக இந்தியா திகழ 
வேண்டுமெனில், சுவாமிநாதன் அறிமுகம் செய்த நவீன 
வேளாண்மையை புறக்கணிக்க இயலுமா?

மக்கள்தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு 
முதல் இடத்தை இந்தியா எட்டி விட்டதாகவே முன்கணிப்புப் 
புள்ளி விவரங்கள் (projected figures) தெரிவிக்கின்றன. உணவு 
உற்பத்தி சார்ந்த மாபெரும் எதிர்பார்ப்புகள் இந்தியா மீது 
இருக்கும் நிலையில், ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள், 
வீரிய வித்துக்கள் ஆகியவற்றைத் தவிர்த்த வேளாண்மையை 
சாத்தியப்படுத்த இயலுமா?   
  
தமது 98ஆம் வயதில், சென்னையில் 28.09.2023 அன்று 
பசுமைப் புரட்சியின் தந்தை எம் எஸ் சுவாமிநாதன் மறைந்தார்.
இந்திய வேளாண்மையின் வரலாற்றில் சுவாமிநாதனின் 
பாத்திரம் ஒரு திசைவழி மாற்றத்தை (paradigm shift) குறிக்கிறது.
அது இந்திய வேளாண்மையின் திசைவழியைத் தீர்மானித்து, வேளாண்மையை நவீனப்படுத்தி, உபரி உற்பத்தியைச் 
சாத்தியமாக்கியது. உலக அரங்கில் இந்தியாவைத் 
தலைநிமிரச் செய்த வேளாண் விஞ்ஞானி மறைந்த 
எம் எஸ் சுவாமிநாதனுக்கு  நமது அஞ்சலியைச் 
செலுத்துவோம்!
********************************************



 

   
  

    

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்!
சுரேஷ் கல்மாதி மீது வழக்கு! 
சிறையில் கம்பி எண்ணிய கல்மாதி! 

சனி, 21 அக்டோபர், 2023

காந்தியம் என்றால் என்ன?
------------------------------------------
பெரியாரியம் அம்பேத்காரியம் போன்று 
காந்தியமும் தனியுடைமையைப் பாதுகாக்கும் 
பிற்போக்கு சித்தாந்தமே. வர்க்க சமரசத்
தத்துவமே காந்தியம். 

மார்க்சியம் மட்டுமே வர்க்கப் போருக்கான 
ஒரே தத்துவம். மீதி அனைத்துத் தத்துவங்களும் 
வர்க்கப் போராட்டத்துக்கு எதிரான தத்துவங்களே.  
---------------------------------------------------------------------
பங்காரு அடிகளார் மறைவு!
குவாண்டம் சூப்பர் பொசிஷனும் 
இந்து சூப்பர் பொசிஷனும்! 
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
கடவுள் இல்லை என்பதே முழுமுதல் உண்மை!
ஆனால் மதம் இருக்கிறது! ஒரு மதம் அல்ல, 
ஒரு நூறு என்ற அளவில் மதங்கள் இருக்கின்றன.

இல்லாத கடவுளுக்கு கணக்கற்ற மதங்கள்! இதுதான் 
உலகம்! இல்லாத கடவுளை இருப்பவர் போல 
வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன மதங்கள்.

இந்து மதம் உலகின் ஏனைய மதங்களில் இருந்து
மிகப்பெரிதும் வேறுபட்டது. Of all the religions Hinduism is 
the most irreligious religion.

இந்து மதம் கணக்கற்ற கடவுள்களைக் கொண்டது.
மேலும் கணக்கற்ற cultகளையும் கொண்டது.
இங்கு cult என்பதன் சரியான பொருளை அறிந்திட 
வேண்டும்.   

இதில் பங்காரு அடிகளார் தமது முயற்சியில் தனித்த 
ஒரு cultஐ உருவாக்கினார்.

இன்றும் கூட உலகின் சில மதங்களில் பெண்களுக்கு 
வழிபாட்டு உரிமை வழங்கப் படுவதில்லை.
ஆனால் பங்காரு அடிகளார் மாதவிலக்கு 
நேரங்களிலும்கூட பெண்கள் கோவிலுக்கு வரலாம்; 
வழிபடலாம் என்று புதியதொரு நடைமுறையை 
ஏற்படுத்தினார். வேறு எந்த மதத்திலும் இப்படி 
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.

புட்டபர்த்தி சாய்பாபா மோதிரம் வரவழைப்பது,
விபூதி வரவழைப்பது போன்ற மந்திர தந்திரச்
செயல்களை செய்து தம்மை கடவுளின் 
அவதாரமாகக் கற்பிக்க முயன்றார். ஆனால் 
பங்காரு அடிகளாரோ இத்தகைய மாய மந்திரங்களை 
மேற்கொள்ளாமல் இந்து மதத்தில் நிலவும் 
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அதை நடைமுறைப் 
படுத்தினார்.

மாதவிலக்கு நேரத்தில், அந்த மூன்று நாட்களில் 
பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் வைத்துக் 
கொண்டு அலுவலகம் செல்வது போல, கோவிலுக்குச் 
செல்லலாம்; வழிபாடு செய்யலாம் என்ற 
ஒரு புதிய நடைமுறையை பங்காரு அடிகளார் 
அறிமுகப் படுத்தினார். அந்தரங்க சுத்தியுடன் 
அதை அவர் நடைமுறைப் படுத்தியதால் 
அப்பழக்கம் இன்று நிலைபேறு உடையதாக ஆகி விட்டது.

இந்து மதம் காலந்தோறும் நிகழும் மாற்றங்களுக்கு 
ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. 
வள்ளலார், பங்காரு அடிகளார் போன்றோர் இந்து  
சமய சீர்திருத்தவாதிகள். 

சமூகத்தின் மேல்தட்டுப் பெருமக்கள் முதல் அடித்தட்டு 
மக்கள் வரை  புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு பக்தர்கள் 
இருந்தனர். ஆனால் பங்காரு அடிகளாரோ ஒடுக்கப்பட்ட 
வர்க்கத்து மக்களையே தமது பக்தர்களாகக் 
கொண்டிருந்தார்.

தமது முதிர்ந்த வயதில் நேற்று (19.10.2023) பங்காரு 
அடிகளார் மறைந்தார் என்று அறிகிறோம். இந்து 
சமய சீர்திருத்தவாதியாக வரலாற்றில் அவர் இடம்
பெறுகிறார். இக்கட்டுரை அவர் ஈடுபட்ட பல்வேறு 
துறைகளில் அவரின் பங்களிப்பு பற்றிய 
முழுமையான மதிப்பீடு அல்ல.அப்படி ஒரு 
மதிப்பீட்டைச் செய்ய வேண்டிய தேவை எதுவும் 
எமக்கு இல்லை. இந்து மதம் vis-a-vis பங்காரு அடிகளார் 
என்ற பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே எமது
மதிப்பீடு அமைகிறது.

உலகின் மக்கள்தொகை இன்று 800 கோடியை எட்டி 
உள்ளது. இந்த 800 கோடியில் கிறித்துவ மதத்தைப் 
பின்பற்றும் மக்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
என்றாலும் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக
மேற்கில் கடவுள் நம்பிக்கை ஆட்டம் கண்டு கொண்டே 
வருகிறது. கிறித்துவத்தின் மீது நம்பிக்கை இழக்கும்
மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் பல்கிப் 
பெருகுவதால், போப்பாண்டவர்கள் நடுக்கத்துக்கு 
ஆளாகி நிற்கின்றனர்.  

இஸ்லாமிய சீக்கிய மதங்கள் மிகவும் கறார்த் 
தன்மையுடன் மாற்றங்களுக்கு இடம் கொடாமல் 
பழமையைப் பேணி நிற்கும் மதங்களாகத் 
திகழ்கின்றன. எனவே இவ்விரு மதங்களை விட்டு 
வெளியேறுவோர் மிக மிகக்குறைவு.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் லிபரலிசம் 
செல்வாக்குப் பெற்றுள்ளதால் கிறித்துவ மதத்திலும் 
அதே லிபரலிசத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாதபோது   
மக்கள் கிறித்துவத்தை விட்டு வெளியேறி 
விடுகின்றனர்.

அப்படியானால் இந்து மதம்? அதன் நிலைமை என்ன?
ஒரு மதம் என்ற வரையறைக்குள் இந்து மதத்தை 
அடக்க முடியாது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் 
Of all the religions Hinduism is the most irreligious religion என்று 
கூறி இருக்கிறேன். எனவே ஒரு மதத்திற்கு ஏற்படும் 
பாதிப்புகள் மதமற்ற மதமான (irreligious religion) இந்து 
மதத்திற்கு ஏற்படுவதில்லை. ஏனெனில் There is NO difference 
between  "to be a Hindu" and "NOT to be a Hindu".

குவாண்டம் தியரியில் வருகிற ஷ்ராடிங்கரின் பூனை 
ஒரே நேரத்தில் உயிருடன் இருக்கும்; செத்தும் இருக்கும்.
இது குவாண்டம் சூப்பர் பொசிஷன் எனப்படும். 
இந்து மதமும் குவாண்டம் தியரி போன்று ஒரு 
சூப்பர் பொசிஷியனுக்கு இடம் அளிக்கிறது.
இதற்கு "Hindu superposition" என்று பெயரிடுகிறேன் நான்.
இந்த சூப்பர் பொசிஷன்படி, ஒருவர் ஒரே நேரத்தில் 
இந்துவாகவும் இருக்கலாம்; இந்து அற்றவராகவும் 
இருக்கலாம் (Hindu and Non Hindu at the same time).
புரிகிறதா?
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அகல்விரிவானதும் ஆழமானதுமான (comprehensive and deep) 
வாசிப்பும் சிந்தனை வளமும் அறிவியல் பின்னணியும் 
இல்லாதவர்கள் பிறழ்புரிதலைத் தவிர்க்கும் பொருட்டு 
இக்கட்டுரையை வாசிக்காமல் இருந்து ஒத்துழைக்குமாறு 
அன்புடன் வேண்டுகிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.
*********************************************************** 
1) கறார்த் தன்மை 
2) கட்டுப்பாடுகள் 
3) பழமையை மாற்றத்துக்கு உட்படுத்தாமல் 
பேணிப் பாதுகாப்பது 
இம்மூன்றும் ஒரு மதத்தின் அடிப்படையான 
கூறுகள். இவை ஜனநாயக மறுப்புக்குச் 
சிறந்த உதாரணங்கள். மதம் என்றாலே 
ஜனநாயக மறுப்புத்தான்!

ஆனால் இந்து மதமானது ஒரு மதம் அல்ல.
எனவே மதத்தின் பண்புகள் அதற்கு
இருப்பதில்லை. அதாவது ஜனநாயக 
மறுப்பு அங்கு இல்லை.

பைபிள் அல்லது குரான் கிருத்துவ இஸ்லாமிய 
மதங்களின் புனித நூல் ஆகும். ஆனால் இந்து 
மதத்திற்கு அப்படி எந்தப் புனிதநூலும் கிடையாது.
புனிதநூல்கள் சர்வாதிகாரத்தின் அடையாளங்கள்.
புனித நூல் இல்லாதபோது சர்வாதிகாரத்திற்கான 
தேவை அங்கு இல்லை.

    
 

.      
  

  

      
   
 
     
 
        

வியாழன், 19 அக்டோபர், 2023

 மார்க்சியம் கற்பது எப்படி?
கற்றலை எங்கிருந்து தொடங்குவது?
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
1) மார்க்சியம் ஒரு அறிவியல் என்று மூச்சுக்கு 
முந்நூறு முறை முழங்குகிறோம். மார்க்சியம் 
ஒரு அறிவியல் என்பதால், அறிவியலைக் 
கற்காமல் மார்க்சியத்தைக் கற்க முடியாது.
No science means No Marxism.

2) அறிவியலைக் கற்கத் தொடங்குவதன் மூலம்
மார்க்சியத்தைக் கற்கத் தொடங்க வேண்டும்.

3) முதலில் 9, 10 வகுப்புகளின் கணிதம், அறிவியல்
பாடப் புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
அவற்றில் உள்ள பாடங்களை அக்கறையுடன் 
படிக்க வேண்டும். குறைந்தது மூன்று மாத 
காலம் மேற்கூறிய நான்கு புத்தகங்களையும் 
படிக்க வேண்டும். (IX Maths, IX Science, X Maths, X Science).

4) படிப்பது என்பது வாசிப்பு அல்ல. வாசிப்பையும் 
விடஉயர்ந்தது படிப்பு. 
(வாசிப்பு = Reading; படிப்பு = studying) 
கணிதப் புத்தகத்தில் உள்ள கணக்குகளைச்  
செய்து பார்க்க வேண்டும். அதுதான் படிப்பது 
என்பதற்கான அர்த்தம். 14 செமீ ஆரமுள்ள ஒரு 
வட்டத் தகட்டின் பரப்பளவு என்ன என்ற கணக்கு 
பாடப்புத்தகத்தில் இருக்கும். அதைச் செய்து 
பார்த்து பரப்பளவைக் காண வேண்டும்.

5) கணிதம் அறிவியலைக் கற்க வேண்டும் என்பதன் 
பொருள் இவற்றைத் தவிர வேறு எதையும் 
கற்கக் கூடாது என்பதல்ல. நீங்கள் எதை 
வேண்டுமானாலும் படிக்கலாம். அனால் 
கணிதம் அறிவியலைப் படிப்பது கட்டாயம்.

6) 9, 10 வகுப்புகளின் கணித அறிவியல் புத்தகங்களை 
குறைந்தது 3 மதம் படிக்க வேண்டும். மூன்று மாதம் 
கழிந்த பின்னர், அடுத்த கட்ட படிப்பிற்குச் செல்ல 
வேண்டும். 

7) எனவே 11,12 வகுப்புகளின் கணிதம், இயற்பியல், 
வேதியியல், உயிரியல் பாடப் புத்தகங்களை 
வாங்கிக் கொள்ளுங்கள்.
அவற்றை அக்கறையுடன் படிக்கத் தொடங்குகள்.
குறைந்தது இரண்டு ஆண்டு காலம் இப்புத்தகங்களைப் 
படிக்க வேண்டும். புரிந்து கொள்ள முயல 
வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும் என்பது 
கட்டாயம்.

8..  புத்தகங்களைப்  படிக்கும்போது முற்றிலுமாக 
உங்களுக்குப் புரியாத பாடங்கள் இருக்கும்.
உங்கள் வீட்டிலோ தெருவிலோ உள்ள 
ப்ளஸ் டூ மாணவர்கள் அல்லது கல்லூரி 
மாணவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள 
வேண்டும். இல்லையேல் டியூஷன் வைத்துக் 
கொண்டாவது கற்க வேண்டும்.

0) கணிதம் அறிவியல் பாட நூல்களை நீங்கள் 
படிப்பது ப்ளஸ் டூ தேர்வு எழுதுவதற்காக அல்ல.
அறிவியலில் குறைந்தபட்சத் புரிதலைப் 
பெறுவதற்காக என்பதை மனத்தில் 
கொள்ளுங்கள்.

10) இவற்றோடு Science Reporter, அறிவியல் ஒளி 
ஆகிய அறிவியல் இதழ்களையும் படிக்க 
வேண்டும். இவை நூலகங்களில் கிடைக்கும்.
இல்லையேல் சந்தா செலுத்தி வாங்கிப் படியுங்கள்.
வாழ்க்கையில் ஒரு அறிவியல் கட்டுரையைக்கூட 
முழுசாகப் படிக்காதவன் மார்க்சியம் பற்றிப் 
பேசுவதற்கான அருகதையற்றவன் ஆகிறான்.

11) மார்க்சியத்தைக் கற்பதற்கு வேறு குறுக்கு 
வழி எதுவும் இல்லை. அறிவியலைஃ கற்காதவனால் 
ஒருபோதும் மார்க்சியத்தைக் கற்க முடியாது;
பொருள்முதல்வாதத்தைக் கற்க முடியாது  
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) மெய்யான அக்கறையுடன் மார்க்சியம் கற்க 
விரும்புவோருக்கான வழிகாட்டி இது.

2) ஏற்கனவே அறிவியல் கற்றவர்களுக்கு 
இக்கட்டுரை தேவையில்லை.
********************************************************
          

4)    
ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள்!
உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு!
ஓரினச் சேர்க்கை சரியா தப்பா?
---------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
ஓரினச் சேர்க்கை சரியா தப்பா?
அது இயல்பானதா? அல்லது இயற்கைக்கு முரணானதா?

இந்தக் கேள்விக்கான சரியான பதில் என்ன?
யாரால் இதற்குப் பதில் சொல்ல இயலும்?

அறிவியலால் மட்டுமே இக்கேள்விக்குப் பதிலளிக்க
இயலும். அதற்கான அருகதை அறிவியலுக்கு 
மட்டுமே உண்டு.

அறிவியல் என்ன விடையளிக்கிறது என்று பார்க்கும் 
முன்னர், இப்பொருள்குறித்த சில அடிப்படை அறிவியல் 
விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக 
ஒருவரின் sexual orientation பற்றித் தெரிந்து கொள்ள 
வேண்டும்.     

Sexual orientation என்றால் என்ன? ஒருவரின் பாலியல் 
நாட்டம் எப்படி இருக்கிறது என்பதே பாலியல் ஈர்ப்புதிசை 
(sexual orientation) எனப்படும். இது இரண்டு வகையாக 
இருக்கிறது.
1) தன் பாலின ஈர்ப்பு (homo sexual) 
2) எதிர்பாலின ஈர்ப்பு (hetero sexual) 

ஒருவர் தன்பாலின ஈர்ப்பு உடையவராகவோ 
அல்லது எதிர் பாலின ஈர்ப்பு உடையவராகவோ 
இருக்கலாம் (either homo sexual or hetero sexual). எதிர்பாலின 
ஈர்ப்பு உடையவர்கள்தான் இந்த உலகில் 
99.9 சதவீதம் பேர். தன்பாலின ஈர்ப்பு உடையோர் 
உலகில் மிகக்குறைவே!


பாலின ஈர்ப்புதிசை (sexual orientation) குறித்து ஒரு 
முக்கியமான கேள்வி இப்போது எழுகிறது.
ஒருவரின் sexual orientation அவரின் உடலின் தன்மை 
காரணமாக ஏற்படுவதா? அல்லது அவரின் 
மன விருப்பத்தின்படி ஏற்படுவதா?

கேள்வியை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒருவரின் sexual orientation அவரின் தேர்வுக்கு அப்பாற்பட்ட 
உடலியல் தன்மை காரணமாக ஏற்பட்டு 
அவரின் தேர்வுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதா? 
அல்லது அவரின் தேர்வுக்கு உட்பட்டு அவரின் 
விருப்பத்தின்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளக் 
கூடியதா? சுருங்கக் கூறின் Is the sexual orientation 
of a person biological or psychological? If biological it can not 
be reversed but if psychological it can be changed at one's will.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். பருவ வயதடைந்த 
ஒரு ஆணுக்கு பெண்கள் மீது பாலியல் ஈர்ப்பு எதுவும் 
ஏற்படாமல் சக ஆண்கள் மீது பாலியல் ஈர்ப்பு
ஏற்படுகிறது என்றால், அவர் ஹோமோசெக்சுவல் 
ஆவார்.

இவரின் தன்பாலின ஈர்ப்பை மாற்ற முடியுமா?
எடுத்துச் சொல்லியோ, அறிவுரை வழங்கியோ, 
கண்டித்தோ, தண்டித்தோ இவரின் ஹோமோசெக்சுவல் 
தன்மையை மாற்ற முடியுமா? அதாவது இவரின் 
sexual orientationஐ மாற்ற முடியுமா?

மாற்ற முடியும் என்றுதான் மிக அண்மைக்காலம் 
வரை மேற்கத்திய சமூகம் கருதியது. ஏனெனில் 
ஒருவரின் sexual orientation அவரின் தேர்வைப் பொறுத்து 
அமைவதே என்று சமூகம் கருதியது.

ஆனால் அறிவியல் மேற்கத்திய சமூகத்தின் 
முடிவை தவறானது என்று அறிவித்தது.
ஒருவரின் sexual orientation அவரின் விருப்பத்தின்படி 
அமைவதல்ல என்றும் அது உடலியல் தன்மை 
காரணமாக அமைவது என்றும் அறிவியல் 
நிரூபித்தது. 

தன்னுடைய தேர்வுக்கு உட்படாமல் 
தன் உடலின் இயல்பின்படி அமைந்து விடும் 
sexual orientationஐ ஒரு நபர் தன் மன விருப்பப்படி
மாற்றிக்கொள்ள முடியாது என்று அறிவியல் 
எடுத்துக் கூறியது. இதன் மூலம் ஒருவரின் 
sexual orientation தன்பாலின ஈர்ப்பாக அமைந்து 
விடுமெனில் அதற்காக அந்த நபரைக் குற்றவாளி 
ஆக்க முடியாது என்றும் அறிவியல் விளக்கியது.      

இதன் பிறகுதான் மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கை 
குற்றநீக்கம் (decriminalisation) செய்யப்பட்டது.

கணிப்பொறியின் தந்தை என்று போற்றப்படும் 
ஆலன் டூரிங் என்னும் பிரிட்டிஷ் கணித மேதை 
தமது sexual orientationக்காக பிரிட்டிஷ் அரசால் 
1950களில் மிகவும் குரூரமாகத் தண்டிக்கப் பட்டார்.
பின்னர்தான் ஓரினச்சேர்க்கை குற்றநீக்கம் 
செய்யப்பட்டு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப் 
பட்டன. 

இந்திய சமூகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 
ஓரினச்சேர்க்கை உயிரியல் ரீதியான ஒன்றுதான் என்று 
அறிந்திருந்தது. எனவே மேற்கத்திய காட்டுமிராண்டித்
தனமும் குரூரமும் இந்திய சமூகத்தில் இல்லை.
---------------------------------------------------------------
பின்குறிப்பு:
சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் ஒளி இதழில் 
இக்கட்டுரையாசிரியர்  எழுதிய ஆலன் டூரிங் 
என்ற கட்டுரையைப் படியுங்கள். ஓரினச்சேர்க்கை 
குறித்த அறிவியல் விளக்கம் அக்கட்டுரையில் உள்ளது.
  ****************************************

 

  


  

     

  

திங்கள், 16 அக்டோபர், 2023

இந்தியாவில் முட்டாள்கள் அதிகம்! எனவே 
எவ்வளவு பொய் வேண்டுமானாலும் சொல்லலாம்!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------
ஒரு ஜெர்மானிய நிறுவனமும் அயர்லாந்து நிறுவனமும் 
இணைந்து, உலக நாடுகளில் பட்டினி எந்த அளவுக்கு 
இருக்கிறது என்று "கண்டுபிடித்து" ஒரு அறிக்கை 
வெளியிட்டு இருக்கின்றன. 

உலக நாடுகளை ஆராய்ந்து உலகப் பட்டினிக் குறியீட்டு 
எண் (Global Hunger Index) ஒன்றை ஒவ்வொரு நாட்டுக்கும் 
உருவாக்கி இருக்கின்றனவாம் இந்த நிறுவனங்கள்.

இவர்கள் கண்டு பிடித்து உருவாக்கிய பட்டினிக் 
குறியீட்டின்படி இந்தியா 111ஆவது இடத்தில் 
இருக்கிறதாம். (இந்தப் பட்டியலில் ஒரு நாடு பின்னே 
இருக்க இருக்க பட்டினி அதிகமுள்ள நாடு என்று 
பொருள்படுமாம்).  

125 நாடுகளை ஆராய்ந்து இந்தப் பட்டினிக் குறியீட்டை 
உருவாக்கி இருக்கின்றனவாம் இந்த நிறுவனங்கள்.

உலகில் மொத்தம் 193 நாடுகள் இருக்கின்றன. அதாவது 
இறையாண்மை உள்ள நாடுகள் (sovereign states) 193 
உள்ளன. இவை ஐநாவின் உறுப்பு நாடுகள். இவை தவிர 
பார்வையாளர் அந்தஸ்து பெற்ற நாடுகளும் உள்ளன.

193 நாடுகள் இருக்கும்போது இவர்கள் ஏன் 125 நாடுகளை 
மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்? பாதி 
அளவு நாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டு உலக 
அளவிலான ஆய்வு என்று ஏமாற்றுவது சரியா?
மீதி நாடுகள் என்ன பாவம் செய்தன போலி நிபுணர்களே?     

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியா 111ஆவது
இடத்தில் அதிகமான பட்டினி உள்ள நாடு என்ற 
நிலையில் இருக்கிறது என்கிறார்கள் போலி நிபுணர்கள்!.

அதே நேரத்தில் பாகிஸ்தான் இந்தியாவை விட 
முன்னேறி இருக்கிறதாம்! அங்கு பட்டினியே 
இல்லையாம்! கொஞ்ச காலம் முன்புதான் கோதுமை 
மாவு மூட்டைகளைச்  சுமந்து  வந்த ஒரு லாரியைக் 
கைப்பற்றி மாகிஸ்தானிய மக்கள் கோதுமை 
மாவைச் சூறையாடிக் சென்ற காட்சி எல்லா 
ஊடகங்களிலும் படமாக வெளிவந்தது. ஆனாலும் 
நமது போலி நிபுணர்கள் பாகிஸ்தானை 102ஆம் 
இடத்தில் வைத்திருக்கிறார்கள்!

அது மட்டுமல்ல, வங்கதேசம் 81ஆவது இடத்தில் 
இருக்கிறதாம்! ஸ்ரீலங்கா 60ஆவது இடத்தில் 
இருக்கிறதாம்!! கொஞ்ச காலம் முன்புதான் 
ஸ்ரீலங்காவில் ஒரு அரை லிட்டர் பால் பாக்கட்
ரூ 200க்கு விற்கப்பட்டதை இந்த உலகம் அறியும்.
இருந்தும் நமது போலி நிபுணர்கள் ஸ்ரீலங்காவுக்கு 
60ஆம் இடத்தை வழங்கி இருக்கிறார்கள்.

இந்தியா முட்டாள்களும் தற்குறிகளும் நிறைந்த 
தேசம் என்பதால் இங்கு எவ்வளவு பொய்
வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது ஜெர்மனியின் 
நினைப்பு! உலக அளவில் ஜிடிபி அடிப்படையில் 
நாகாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனி, தனது 
இடத்தைக் கூடிய விரைவில் இந்தியாவிடம் பறி 
கொடுக்கப் போகிறது என்ற கணிப்புகள் வெளியாகி 
உள்ள நிலையில், பொய்யை எழுதி  இந்தியாவை 
மட்டம் தட்டி தங்களின் அரிப்பைத் தீர்த்துக் 
கொள்கிறது ஜெர்மனி.

ஐரோப்பிய நாடுகளின் தீய உள்நோக்கத்துடன் 
(mala fide intention) கூடிய இந்தப் பொய்யை 
இந்தியாவில் விற்பது யார்? வேறு யார்? வேசி ஊடகமான 
தி வயர் (The Wire) என்னும் இணையப் பத்திரிகைதான்.

இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு வேசி ஊடகம் 
எவ்வளவு கையூட்டுப்பெற்றது என்ற உண்மை 
விரைவில் வெளியாகும். அன்று terror funding குற்றச் 
சாட்டில் UAPA சட்டத்தின் உரிய பிரிவுகளில் 
சவுண்டிப் பாப்பான் சித்த்தார்த் வரதராஜன் 
கம்பி எண்ணத்தான் போகிறான்!  அதைப் பார்க்கத் 
தயார் ஆகுங்கள் வாசகர்களே!
***************************************************         


ஞாயிறு, 15 அக்டோபர், 2023

விலைபோன  ஊடகங்கள் மறைத்த உண்மை!
ஜகத் ரட்சகனின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து! 
-------------------------------------------------------------------------------
Main stream ஊடகங்கள் திமுகவின் கையூட்டுப் 
பட்டியலில் இருந்து கொண்டு, திமுக ஊழல் 
பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு 
செல்லாமல் மறைத்துள்ளன.

ஆனால்  இவர்களால் மறைக்கப்பட்ட உண்மையை,
ஜகத் ரட்சகனின் பல்லாயிரம் கோடி ரூபாய்
ஊழல் சொத்தை யூடியூப் சானல்கள் வெளிச்சம் 
போட்டுக் காண்பிக்கின்றன.

1) ஜகத் ரட்சகன் குறித்து Real One Voice என்ற 
யூடியூப் சானலில் நான் பேசியதை (எனது நேர்காணல்)
இதுவரை இரண்டு லட்சம் பேர்  பார்த்துள்ளனர்.

2) iTamil என்ற யூடியூப் சானலில் நான் பேசியதை 
இதுவரை 40,000 பேர் பார்த்துள்ளனர்.

3) ஆதன் தமிழ் என்ற யூடியூப் சானலில் நான் பேசியதை 
இதுவரை 26,000 பேர் பார்த்துள்ளனர். தொடர்ந்து 
பார்த்து வருகின்றனர்.

4) மேலும் ஒரு சானலில் நான் பேசியதை  68,000  பேரும்  
இன்னொரு சானலில் பேசியதை  28,000 பேரும்
பார்த்துள்ளனர்.

5) இன்னும் சில சானல்களில் ஜகத் ரட்சகன் பற்றி 
பேசக் கூப்பிடுகிறார்கள். எனக்கே சலித்துப்
போனதால்  நான் போகாமல் இருக்கிறேன்.

நினைத்தான் மெயின் ஸ்டிரீம் மீடியா சோரம் 
போனாலும் தற்கால இணைய உலகில் 
உண்மையை மறைக்க முடியாது ஏற்பது 
நிரூபிக்கப் படுகிறது.


 

சனி, 14 அக்டோபர், 2023

எகிப்து அதிபர் அன்வர் சதாத்தை கொலை செய்து 
இஸ்ரேல் பாலஸ்தீன அமைதியை சீர்குலைத்தது யார்?
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
பாலஸ்தீனத்தை முன்னிட்டு 1960களின் பிற்பகுதியில் 
இஸ்ரேல் எகிப்து நாடுகளுக்கு இடையே போர் நடந்தது. 
பின்னர் பல ஆண்டு கால முயற்சியின் விளைவாக 
இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சு 
வார்த்தை நடந்தது. 

அமெரிக்காவுக்குச் சொந்தமான "காம்ப் டேவிட்"
(Camp David) என்ற இடத்தில் இரு நாட்டுத் 
தலைவர்களும் பேசினர். தொடர்புடைய பிற 
நாடுகளின் தலைவர்களும் பேச்சு வார்த்தையில் 
பங்கேற்றனர்.

இறுதியில் 1978 செப்டம்பரில் எகிப்து அதிபர் 
அன்வர் சாதத், இஸ்ரேல் அதிபர் மெனாச்சம் பெகின் 
ஆகிய இருவரும் வெள்ளை மாளிகையில் அன்றைய 
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் 
சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து 1978ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான 
நோபல் பரிசு எகிப்து அதிபர் அன்வர் சாதத், இஸ்ரேல் 
அதிபர் மெனாச்சம் பெகின் ஆகிய இருவருக்கும் 
பகிர்ந்து வழங்கப்பட்டது.

ஆக, பகைமை மட்டுப்பட்டு வந்தது. எல்லாம் 
நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் 
பகைமை மறைந்து அமைதி தோன்றுவதை 
பயங்கரவாதம் அனுமதிக்குமா? அனுமதிக்கவில்லை.

அது அக்டோபர் 1981ல் எகிப்து அதிபர் அன்வர் சாதத்தை 
கொலை செய்தது. பயங்கரவாதத்திற்கு பலியானார் சாதத்.
Egyptian Islamic Jihad என்ற அமைப்பு அன்வர் சாதத்தை 
படுகொலை செய்தது.

இதன் விளைவாக அமைதி முயற்சிகள் சீர்குலைந்தன.
இன்றைக்கு இந்த 2023ஆம் ஆண்டிலும் சமாதானம் 
ஏற்படவில்லை என்பதை இன்றைய தலைமுறை 
கண்ணாரக் காண்கிறது.

சமகால உலகில் பயங்கரவாதம் உலகிற்கும் மனித 
இனத்துக்கும் ஒரே அச்சுறுத்தலாக இருக்கிறது.
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டால் 
மட்டுமே உலகம் அமைதிக் காற்றைச் சுவாசிக்கும்.
-------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இக்கட்டுரையில் சொல்லி 
இருக்கிறேன். காரணம் இந்தக் கட்டுரை வாசிப்பு இல்லாத 
ஆங்கிலம் தெரியாத குட்டி முதலாளித்துவ அன்பர்களை 
மனதில் கொண்டு எழுதப்பட்டது. நாலைந்து விஷயங்களை 
ஒரே  கட்டுரையில் சொன்னால், விஷயத்தின் கனத்தை 
குட்டி முதலாளித்துவம் தாங்காது. 

எனவே படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேல் பிரதமர்  
இட்சாக் ரபின் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
***************************************************** 
முக்கிய பின்குறிப்பு: 
யாரும் எக்காரணம் கொண்டும் ஹமாஸ் அமைப்பின்  
பயங்கரவாதத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ 
ஆதரித்து இப்பதிவில் பின்னூட்டம் இடக்கூடாது என்று 
எச்சரிக்கை செய்கிறோம். காரணம் பயங்கரவாதம் 
எமக்கு ஏற்புடையது அல்ல,

மேலும் பயங்கரவாத ஆதரவுக் கருத்துக்கள் இடம் 
பெற்றால்  அந்த முகநூல் கணக்கை முகநூல் நிர்வாகம்
துடித்து விடுகிறது என்பதை அறிக.. 
**********************************************

படம்: இடமிருந்து வலம்:
எகிப்து அதிபர் அன்வர் சாதத்.  
இஸ்ரேல் அதிபர் மெனாச்சம் பெகின்.   
------------------------------------------------------------------------

றுள்ளதாக முகநூல் நிர்வாகம் கருதினால்      ண் 
  
  
   

       
   

வெள்ளி, 13 அக்டோபர், 2023

உலகின் மிக உயரமான மொபைல் டவரைக்
கட்டியது BSNL!   
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
சாதாரணமாக மொபைல் கோபுரங்கள் தரை மட்டத்தில் 
இருந்து 100 அடி அல்லது 150 அடி உயரத்தில் கட்டப்படும்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு (அக்டோபர் 2023)
உலகின் மிக உயரமான யுத்த களத்தில் BSNL நிறுவனம் 
ஒரு ம்பைலே கோபுரத்தைக் கட்டியுள்ளது.
எவ்வளவு உயரம் தெரியுமா? 16,000 அடி உயரத்தில்
BSNL இந்த மொபைல் கோபுரத்தைக் கட்டி யுள்ளது.

எந்த இடத்தில் தெரியுமா? லடாக்கில்! லடாக்கின் 
கிழக்குப் பகுதியில்! சியாச்சின் கிளைசியர் பகுதியில்

இந்த உலகிலேயே மிகவும் உயரமான மொபைல் 
கோபுரத்தை  இந்திய ராணுவத்துடன் இணைந்து 
BSNL நிறுவனம் கட்டி உள்ளது.

BSNLஐ எப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கும் 
அம்பானியின் கைக்கூலிகளும் சுனில் மிட்டலின் 
கைக்கூலிகளும் இந்தச் செய்தியைப் படித்தவுடன் 
தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகும்படி 
நியூட்டன் அறிவியல் மன்றம் கட்டளை இடுகிறது.
**************************************************

இந்தச் செய்தியை அதிகமாக ஷேர் செய்யுங்கள்
நண்பர்களே! வாட்சப் குழுக்களில் அனுப்புங்கள்.



 

  

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

ஹமாஸ் இஸ்ரேல் போர் என்பது 
நவீன கால சிலுவைப் போரே!
மீண்டும் மத்திய காலத்தை நோக்கி 
உலகை இழுத்துச் செல்லும் ஆபிரகாமிய மதங்கள்!   
-------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------
முன்குறிப்பு:
சிலுவைப் போர்கள் (The crusades), மத்திய காலம் 
(Medieval period), தீர்க்கதரிசி ஆபிரகாம், ஆபிரகாமிய 
மதங்கள் ஆகியவை பற்றி முதலில் நன்கு தெரிந்து
கொண்டு வந்து, அதன் பிறகு இக்கட்டுரையைப் 
படிக்கவும்).

சனிக்கிழமை (07.10.2023) திடீரென்று 5000 
ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசியது 
ஹமாஸ் என்னும் பாலஸ்தீனிய ஆதரவு 
இஸ்லாமிய அமைப்பு.

முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்து விட்ட 
இத்தாக்குதலால் நிலைகுலைந்து போனது 
இஸ்ரேல். இஸ்ரேல் தரப்பில் 300 பேர் இறந்து 
விட்டனர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்த 
ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 
மற்றும் சிவிலியன்கள் என்று 100 பேரைப் பணயக் 
கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.

இஸ்ரேலில் பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆயின.
பல தீக்கிரை ஆயின. 2000க்கும் மேற்பட்ட 
இஸ்ரேலியர்கள் காயம் அடைந்துள்ளனர்.

திகைப்பில் இருந்து மீண்ட இஸ்ரேல் தனது 
பதில் தாக்குதலைத் தொடங்கியது. காசா
பகுதியில் (Gaza strip) ஹமாஸ் படையினர் 
இருப்பதால், அங்கு விமானத் தாக்குதலைத்
தொடங்கியது. இதன் விளைவாக ஹமாஸ் தரப்பில் 
200 பேர் உயிரிழந்ததாக அறியப் படுகிறது.

இன்றும் ஹமாஸ் தரப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் 
தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. விமானத் 
தாக்குதலின் மூலம் இஸ்ரேலும் பதிலடி கொடுத்து 
வருகிறது.

ஒரு இஸ்ரேலியப் பெண்ணை நிர்வாணப் படுத்தி 
இஸ்ரேல் நகரத் தெருக்களின் வழியாக அந்தப் 
பெண்ணை ஊர்வலமாகக் கொண்டு வந்த ஹமாஸ் 
வெறியர்களின் செயல் மனித குலத்துக்கே எதிரானது.
பயங்கரவாதச் செயல்களின் வீடியோ காட்சிகளைப்
பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது.  

கட்டுரையின் முதல் பத்தி முதல் முந்தைய பத்தி 
வரையிலான செய்திகள் அனைத்தும் பிபிசி 
தொலைக்காட்சி வழங்கிய செய்திகளே. தமிழ் 
ஊடகங்கள் நம்பகத் தன்மை அற்றவை. மேலும் 
தமிழின் காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும்
தற்குறிகளே கோலோச்சுவதால், இவர்களில்
பலருக்கு அல்லது அனைவருக்குமே ஆங்கிலம் 
தெரியாது. இவர்களுக்குத் தெரிந்த பட்லர் 
இங்கிலீஷை ஆங்கிலமாக ஏற்றுக் கொள்ள இயலாது. 
எனவே பிபிசியை நாட வேண்டியதாகி விட்டது.

ஹமாஸ் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாக 
கருதப் படுகிறது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும் 
போர் புரிகின்றன என்றால் அதற்கான தர்க்க 
நியாயம் இரு தரப்பிலும் அவரவருக்கு உண்டு. ஆனால் 
பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஹமாஸ் 
அமைப்பு பாலஸ்தீனத்தின் சார்பாக இஸ்ரேலின் மீது 
பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுக்கும்போது 
அது பாலஸ்தீனத்தின் தரப்பை பலவீனப் படுத்தி 
விடுகிறது.

விளைவு ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதத் 
தாக்குதல்களுக்கு எதிராக உலக நாடுகள் 
சுலபமாக ஒன்று சேர்ந்து விடுகின்றன.பாலஸ்தீனம் 
தனிமைப் படுத்தப்பட்டு விடுகிறது. ஹமாஸ் அமைப்பு 
உலக நாடுகளின் கூட்டுத் தாக்குதலின் இலக்காக  
ஆகி விடுகிறது. 

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட
கதியை நினைத்துப் பார்க்க வேண்டும். இலங்கைத் 
தீவின் பூர்வ குடிகள் ஈழத் தமிழர்களே.பின்னர்தான் 
சிங்களர்கள் அங்கு வந்து குடியேறினர். எனவே தமிழ் 
ஈழத்திற்கு எல்லா விதமான நியாயங்களும் உண்டு.

ஆனால் அந்த நியாயங்கள் அனைத்தும் காயடிக்கப் 
பட்டு, புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு 
என்பதுதான் உலக நாடுகளின் பார்வையாக இருந்தது.

விளைவு: உலக நாடுகள் அனைத்தும் 
ஒன்று சேர்ந்து புலிகளைத் துடைத்தெறிந்து விட்டன.
தடம் தெரியாமல் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்.
சமகால உலகில் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும்
புலிகளுக்கு நேர்ந்த சோக முடிவில் இருந்து பாடம் 
கற்றுக் கொள்ள வேண்டும். வரலாறு தந்த இந்தப் 
படிப்பினையை ஹமாஸ் அமைப்பு உணர வேண்டும்.
தற்காலிக வெற்றிகள் ஒரு போதையைத் தரும்.
ஆனால் போதைகளுக்கு அப்பாற்பட்டது உண்மை!

ஆபிரகாமிய மதங்கள் அன்று முதல் இன்று வரை 
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகவே இருந்து 
வருகின்றன. வரலாற்றைப் படித்தவர்கள் 
சிலுவைப் போர்களைப் பற்றி அறிவார்கள்.
புனித நிலம் எனப்படும் ஜெருசலேமைக் கைப்பற்ற 
நடந்த போர்களே சிலுவைப் போர்கள். 

இப்போர்கள் மத்திய காலத்தில் நடைபெற்றன.
கிறிஸ்துவத் திருச்சபை முன்னின்று நடத்திய 
இப்போர்கள் இஸ்லாமியர்களிடம் இருந்து தங்களின் 
புனித நிலமான ஜெருசலேமைக் கைப்பற்ற 
நடந்த போர்கள்.

ஆபிரகாமிய மதங்கள் தங்களுக்குள் ஒரு 
இணக்கப்பாட்டுக்கு வராமல் ஆயிரம் 
ஆண்டுகளாகப் போரிட்டு வந்தன. இம்மதங்களைப்  
பின்பற்றுவோர் தங்களுக்குள் நடத்திய போர்களால் 
உலக அமைதி சீர்குலைந்து. கோடிக்கணக்கான 
அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.

மதபீடங்கள் அறிவியலுக்கு எதிராக இருந்தன.
கலிலியோவும் கோப்பர் நிக்கசும் மதபீடங்களால் 
தண்டிக்கப் பட்டனர். புரூனோ எரித்துக் கொல்லப் 
பட்டார். சார்லஸ் டார்வின் இகழப்பட்டார்.

இஸ்லாமின் பெயரால் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் 
உலகெங்கும் தோன்றி உள்ளன. தலிபான்கள் 
மானுட இனத்தின் எதிரிகளாக எப்படியெல்லாம் 
செயல்பட்டு வருகின்றனர் என்பதை நாளும் 
செய்திகள் அறிவிக்கின்றன. 

ஆபிரகாமிய மதங்கள் தங்களுக்குள் உடன்பாட்டுக்கு 
வர வேண்டும். பிரச்சினைகளை சுமுகமாகப் பேசித் 
தீர்த்துக் கொள்ள வேண்டும். போரிலும் பயங்கரவாதச் 
செயல்களிலும் இறங்கக் கூடாது. 

இந்தப் போர் முற்றிலும் தேவையற்ற போர். எனவே 
ஹமாஸ் தரப்பும், இஸ்ரேல் தரப்பும் உடனடியாக 
போரை நிறுத்த வேண்டும்.போருக்குச் சம்பந்தம் 
இல்லாத அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்பை  
ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
-------------------------------------------------------------------------------------

  

  
     

               

சனி, 7 அக்டோபர், 2023

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தை விஞ்சிய   
திமுக அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம்!
தமிழ்நாட்டுக்குப் பெருமை!
--------------------------------------------------------------------------------- 
1) 1995ல் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் 
சுதாகரனின் ஆடம்பரத் திருமணம் நடைபெற்றது.
செலவு = ரூ 114 கோடி மட்டுமே.

2) இந்த ரெக்கார்டை 2022ல், கால் நூற்றாண்டு 
காலத்திற்குப் பிறகுதான் முறியடிக்க முடிந்தது.
முறியடித்தவர் திமுக அமைச்சர் மாண்புமிகு மூர்த்தி.
பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருக்கிறார்.

3) திமுக அமைச்சர் மூர்த்தியின் மகன் பி எம் தயானேஷின்
திருமணம் 2022ல் மதுரையில் நடைபெற்றது.
இதற்கு ஆனா செலவு ரூ 300 கோடி என்று கூறப் 
படுகிறது.

4) இது தமிழ்நாட்டுக்குப் பெருமை.

5) போலி நக்சல்பாரிகள்,
போலி மாவோயிஸ்டுகள்,
போலி முற்போக்குகள் முக்கிய அனைவரும் 
இத்திருமணத்தைக் கண்டிக்கவில்லை.
பெருமைப்பட்டனர்.

6) ஆடம்பரத் திருமணங்களை ஆதரிப்போம்!
போலி மார்க்சிய லெனினியம் பேசி ஊரை ஏமாற்றுவோம்!
--------------------------------------------------------------------------------------
     
 
திரு பாமரன் அவர்களுக்கு,

சீனா ஏகாதிபத்திய நாடுதான். அது கம்யூனிஸ்ட் 
நாடு அல்ல. சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்று 
பேசும் எவருடனும் விவாதிக்க எனக்கு 
ஒன்றும் இல்லை.

 நியூஸ் கிளிக் பத்திரிக்கை குறித்து எதையும் 
தெரிந்து கொள்ளாமல் நீங்கள் பேசுகிறீர்கள்.
இந்தியாவின் வரைபடம் (map) என்று நியூஸ் கிளிக் 
வெளியிட்ட வரைபடம் அவர்களின் 
இணையதளத்தில் இருக்கிறது. அந்த வரைபடம் 
சீனா வெளியிட்ட வரைபடம் ஆகும். அதாவது 
இந்தியாவின் பகுதிகளை சீனாவின் பகுதியாகக் 
காட்டும் சீனா உருவாக்கிய போலி வரைபடம் ஆகும்.

சீனாவிடம் இருந்து வாங்கிய பணத்திற்கு ஈடாக 
services அனுப்பியதாகக் கூறியது நியூஸ் கிளிக்.
ஆனால் services அனுப்பியதற்கான ஆதாரத்தைக் 
காட்ட முடியவில்லை. 

நீங்கள் வழக்கின் விவரங்களைப் படிக்காமல் 
விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் 
பேசுகிறீர்கள். உங்கள் அறிவின் குறுகிய வரம்புக்கு 
அப்பால் உள்ள உண்மைகளை உங்களால் புரிந்து 
கொள்ள இயலாது. உங்களுக்கு அறிவூட்டி உங்களை 
கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்று எனக்கு எந்த 
அவசியமும் இல்லை.

நியூஸ் கிளிக் என்னும் கார்பொரேட் இணையதளத்தை
உங்களைப்  போன்றவர்கள்  ஆதரிக்கலாம். 
செந்தில் பாலாஜி முதல் ஜெகத் ரட்சகன் வரை 
ஆதரித்துக் கொண்டு திரிபவர்கள் சீனாக கைக்கூலி 
நியூஸ் கிளிக்கை ஆதரிக்கத்தான் செய்வார்கள்.


நீங்கள் நியூஸ் கிளிக் ஏட்டை வாசித்தது கூட
இல்லை என்பதை நான் அறிவேன். நான் நீண்ட 
காலமாக வாசித்து வருகிறேன் (ஆங்கிலம் மற்றும் 
இந்திப் பதிப்புகள்). BSNL குறித்த 
எனது கருத்துக்களை அந்த ஏடு பலமுறை 
வெளியிட்டு உள்ளது. அவர்களின் இணைய 
தளத்தில் காணலாம்.

திமுகவை ஆதரித்துக் கொண்டு பாதுகாப்பாக 
புரட்சி பேசுவது உங்களைப்போன்ற குட்டி 
முதலாளித்துவ ஆசாமிகளுக்கு, சீன ஆதரவாளர்களுக்கு 
கைவந்த கலை. உங்களை கியூ பிராஞ்சு போலீசுக்கு 
ஆள்காட்டும் ஆசாமி என்று மாவோயிஸ்டுகள் 
சொல்கிறார்கள். நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் 
அது சரிதான் என்று நிரூபணம் ஆகிறது.

போலிக் கம்யூனிஸ்டுகள், ஏகாதிபத்திய சீனாவை 
கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லும் கம்யூனிச 
எதிரிகள் ஆகியோருடன் விவாதிக்க எனக்கு 
ஒன்றுமே இல்லை.



  
    
 
  
   

வியாழன், 5 அக்டோபர், 2023

சீன ஏகாதிபத்தியமும் அதை ஆதரிக்கும் 
குட்டி முதலாளித்துவமும்!
---------------------------------------------------------------
சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு அல்ல. பின்?
அது ஒரு ஏகாதிபத்திய நாடு! 
எப்படி அமெரிக்கா ஒரு ஏகாதிபத்தியமோ 
அப்படி சீனாவும் ஒரு ஏகாதிபத்தியமே!

சீனா உலக மக்களின் எதிரி ஆகும். அது 
மட்டுமல்ல அவ்வப்போது இந்தியாவின் 
பிரதேசங்களை தனது பகுதிகளாகக் காட்டி 
வரைபடம் வெளியிடும் ஆக்கிரமிப்பு வெறி 
பிடித்த நாடு சீனா.

நம் நாட்டின் சில ஊடகங்களை விலைக்கு 
வாங்கியுள்ளது சீனா. சீனாவிடம் காசு 
பெற்றுக் கொண்டு நம் நாட்டுக்கு எதிராகச் 
செய்தி வெளியிட்ட ஒரு கார்ப்பொரேட் 
நிறுவனம் நியூஸ் கிளிக் என்பது. அதன் 
உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை தொடர்கிறது.


    

  

புதன், 4 அக்டோபர், 2023

 சீதாராம் யெச்சூரிக்கு இரண்டு பிள்ளைகள்.

மகள் அகிலா யெச்சூரி லண்டனில் 

வேலை பார்க்கிறார். மகன் அஷிஷ் 

யெச்சூரி சில ஆண்டுகளுக்கு முன்பு 

கொரோனாவில் இறந்து விட்டார்.


யெச்சூரியின் வீட்டில் தங்கியிருந்த 

கட்சிக்காரர் ஒருவர் கைது செய்யப் 

பட்டுள்ளார். யெச்சூரியின் குடும்ப 

உறுப்பினர்கள் எவரும் கைதாவில்லை.   


கைது, வழக்கு, சிறை என்பதெல்லாம் 

சாதாரணத் தொண்டர்களுக்குத்தான்.

யெச்சூரியின் குடும்பத்தில் யாரையும் 

அரசு கைவைக்காது. 


செவ்வாய், 3 அக்டோபர், 2023

இயற்பியல் நோபல் பரிசு 2023!
------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
பியரி அகஸ்டினி (அமெரிக்கா)
ஃபெரன்க் கிரௌஸ் (ஜெர்மனி)
பெண் விஞ்ஞானி ஆனி ஃகுயில்லியர் (சுவீடன்)
ஆகிய மூவருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான 
இயற்பியல் நோபல் பரிசு சமமாகப் பகிர்ந்து 
அளிக்கப் படுகிறது.     

அட்டோ வினாடி (atto second) நேரமே நீடிக்கக்கூடிய 
மிக மிகச்சிறிய ஒளித்துடிப்பை (light pulse)
தங்களின் பரிசோதனைகளில் உருவாக்கிய 
மேற்கூறிய மூவரும் பரிசைப் பகிர்ந்து 
கொள்கின்றனர்.

அட்டோ வினாடி (atto second) = 10^minus 18 second.
அதாவது 0.0 000 000 000 000 000 001 வினாடி.
***********************************************     

விஞ்ஞானிகளின் பங்களிப்பு! 
பரிசு எதற்காக வழங்கப் பட்டது?
---------------------------------------------
அணுக்களிலும் மூலக்கூறுகளிலும் 
எலக்ட்ரான்கள் உள்ளன.இவை மிகக் 
குறுகிய நேரத்தில் மாற்றங்களுக்கு 
உள்ளாகின்றன. அதாவது ஒரு 
அட்டோ வினாடி அல்லது அதற்கும் குறைந்த 
நேரத்தில் எலக்ட்ரான்கள் மாற்றங்களை 
அடைகின்றன. இவற்றை அளக்க 
தனிச்சிறப்பான தொழில்நுட்பம் 
தேவைப்படுகிறது.

தற்போது இம்மூவரும் மேற்கொண்ட 
பரிசோதனைகளின் விளைவாக அட்டோ 
வினாடிக்கும் குறைந்த நேரத்தில் 
மாற்றத்துக்கு உள்ளாகும் எலக்ட்ரான்களை 
அளக்க முடிகிறது.

இம்மூவரும் உருவாக்கிய அட்டோ வினாடி 
தொழில்நுட்பத்தின் மூலம் எலக்ட்ரான்களின் 
அதிநுட்பமான மாற்றங்களை அளக்க 
இயலும். இது எலக்ட்ரானிக்ஸ் துறையில் 
புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும்.


உண்மைதான்! அறிவியல் எல்லையற்றதுதான்!

நல்லது. நன்றி! நான் விழாவில் கலந்து 
கொள்ள சம்மதிக்கிறேன். விழா 
சென்னையில்தானே! டிசம்பர் மாதத்தில் 
என்ன தேதி என்று முடிவு செய்து விட்டீர்களா?
நான் வருகிறேன். நன்றி.
எனது மொபைல்: 94442 30176.
மின்னஞ்சல் ilangophysics@gmail.com 







 
  

     
  


கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியாவுக்கு
நோபல் பரிசு வழங்காமல் புறக்கணித்தது நியாயமா?
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------------
நடப்பாண்டிற்கான(2023) மருந்தியல் நோபல் பரிசு 
கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த இரு அமெரிக்க 
விஞ்ஞானிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. 
பெண் விஞ்ஞானி காட்டலின் காரிக்கோ மற்றும் 
டிரூ வெயிஸ்மான் ஆகிய இருவரும் mRNA 
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொரோனா 
தடுப்பூசி உருவாக்கினர். mRNA தொழில்நுட்பம் 
கொரோனாவைத் தடுப்பதில் அதிகபட்சத் திறன் 
கொண்டது. இத்தடுப்பூசிகளை Pfizer நிறுவனமும் 
Moderna நிறுவனமும் தயாரித்தன.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் 
கோவாக்சின் தடுப்பூசி முற்றிலும் சுதேசித் தயாரிப்பு. 
செயலற்ற வைரசை (inactivated virus)  பயன்படுத்தும் 
தொழில்நுட்பத்தில்  உருவான இதன் நோய் தடுக்கும் 
திறன் 81 விழுக்காட்டிருக்கும் அதிகம் என்று 
உலகளாவிய அறிக்கைகள் நிரூபித்துள்ளன.

mRNA தொழில்நுட்பத்திலும் இந்தியா ஒரு 
தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. மேலும்
DNA தொழில்நுட்பத்தில் உலகிலேயே முதன் 
முதலாக இந்தியா சைக்கோவ் டி (ZyCoV-D)
என்ற தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. 

கொரோனாவின் முடிவில் இந்தியாவில் 219 கோடி 
டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 
219 கோடி என்பது அசுரத்தனமான 
எண்ணிக்கை! இது ராட்சஸத் தனமான சாதனை!

இந்தியத் தடுப்பூசிகளின் நோய்த்தடுப்புத் திறன்
very effective. இந்தியாவில் கொரோனா மரணங்கள் 
குறைவாக இருந்ததற்குகான காரணங்களில் 
ஒன்று நமது தடுப்பூசிகளின் திறனே.

உலகில் கொரோனா மரணங்கள் = 69 லட்சம்.
அமெரிக்காவில் மரணங்கள் = 11.27 லட்சம்.
இந்தியாவில் மரணங்கள் = 5.32 லட்சம்.

உலக அளவில் கொரோனா மரணங்களில்
அமெரிக்கா 20ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 
152ஆவது இடத்தில் உள்ளது.  
----------------------------------------------------------
எனவே இந்தியாவிற்கும் மருந்தியல் நோபல் பரிசு 
வழங்கப் பட்டிருக்க வேண்டும். இந்தியா எல்லா 
விதத்திலும் மருந்தியல் நோபல் பரிசுக்குத் 
தகுதி உடையதே! வழங்கப்படாதது வருந்தத் 
தக்கதும் கண்டிக்கத் தக்கதும் ஆகும். 

இந்தியத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 
நோபல் பரிசு வழங்கச் சொல்லி பரிந்துரையோ 
விண்ணப்பமோ நோபல் பரிசு வழங்கும் ராயல் 
சுவீடிஷ் அகாடமிக்கு இந்திய அரசின் சார்பில் 
அனுப்பப் பட்டுள்ளதா? இதற்கு பதில் அறிய 
விரும்புகிறேன்.

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்
துறையின் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் MD  
அவர்கள். இவர் மருத்துவப் பேராசிரியர்.
ஸ்டான்லி  மருத்துவக் கல்லூரியில் MBBS 
பட்டம் பெற்ற இவர் மருத்துவ ஆராய்ச்சியாளரும்
ஆவார். இவர் அறிவியல் துறையின் இணையமைச்சர் 
(தனிப்பொறுப்பு).

இந்தியாவுக்கு 2023ஆம் ஆண்டிற்கான மருந்தியல் 
துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது 
குறித்த 140 கோடி இந்திய மக்களின் அதிருப்தியை 
ராயல் சுவீடிஷ் அகடாமிக்கு இந்திய அரசின் 
சார்பில் அறிவியல் அமைச்சர் அவர்கள் தெரிவிக்க 
வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.