செவ்வாய், 27 ஜூன், 2023

குவாண்டம் தியரியைப் படித்துப் 
புரிந்து கொள்ளாமல், ஒருபோதும் 
பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்ள இயலாது!
---------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------  
1) குவாண்டம் தியரி 1900ஆம் ஆண்டில் பெர்லின் 
நகரில் நடைபெற்ற மாநாட்டில் மாக்ஸ் பிளாங்க் 
என்னும் விஞ்ஞானியால் முன்மொழியப்  பட்டது.

2) 1920-30களில் குவாண்டம் விசையியலாக 
(quantum mechanics) வளர்ந்து அறிவியல் உலகை 
ஆளத் தொடங்கியது.

3) மாக்ஸ் பிளாங்க் 2) ஐன்ஸ்டின் 3) நியல்ஸ் போர் 
4) வெர்னர் ஹெய்சன்பெர்க் 5) எர்வின் ஷ்ராடிங்கர்
6) பால் டிராக் ஆகியோர் குவாண்டம் தியரியை 
வளர்த்தெடுத்தவர்கள்.

4) எப்படிப் பார்த்தாலும், குவாண்டம் தியரியின்
இன்றைய வயது நூறு. 100 ஆண்டு ஆன பின்னரும்கூட
இந்தியாவில் குவாண்டம் தியரியைப் புரிந்தவர்கள் 
அரை சதவீதத்திற்கும் குறைவே. 

5) குவாண்டம் தியரியைப் படிக்காதவர்களும்
ஏன் அறிவியலையே பிடிக்காதவர்களும் 
தமிழ்நாட்டில் மார்க்சிய முகாமில்தான் அதிகம்.
Non-Marxistsதான் அறிவியல் கற்றவர்களாக 
இருக்கிறார்கள். தன்னுடைய வாழ்க்கையில் 
ஒரு அறிவியல் கட்டுரையைஅக்கோடா இதுவரை 
படித்திராதவன் மார்க்சிய முகாமில்தான் 
இருக்கிறான், எத்தகைய குற்ற உணர்வுமின்றி.

6) குவாண்டம் தியரியைத் தெரிந்து கொள்ளாமல் 
பொருள்முதல்வாதம் பற்றித் தெரிந்து கொள்ள 
முடியாது.

7) குவாண்டம் தியரி குறித்து தமிழில் இதுவரை 
யார் எவரும் ஒரு நூல் எழுதவில்லை. மறைந்த 
சுஜாதா கூட குவாண்டம் தியரி பற்றி எழுதவில்லை.

8) சமகால அறிவியல் எழுத்தாளர்களில் குவாண்டம் 
தியரி குறித்து காத்திரமான கட்டுரைகளை 
எழுதியவர்கள் எவரும் இல்லை, நியூட்டன் அறிவியல் 
மன்றத்தைத் தவிர.

9) 2022 நவம்பர் அறிவியல் இதழில் "தொலைவில் 
நிகழும் பயங்கரம் அல்ல" (Not a spooky action at a distance)
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளேன்.
குவாண்டம் தியரி குறித்த மிகவும் அதிரடியானதும் 
லேட்டஸ்ட் தகவல்களைக் கொண்டதுமான 
அக்கட்டுரை தமிழில் குவாண்டம் தியரி குறித்து 
எழுதப்பட்ட ஆகச்சிறந்த கட்டுரை ஆகும்.
அப்படிப்பட்ட ஒரு கட்டுரை ஆங்கிலத்தில்கூட 
இதுவரை எவராலும் எழுதப் பட்டதில்லை.
எனினும் அக்கட்டுரை போதிய அளவு வாசகர்களைப் 
பெறவில்லை.

10) தற்போது முகநூலில் குவாண்டம் தியரி குறித்து 
இதுவரை ஆறு கட்டுரைகள் எழுதி உள்ளேன்.
அவற்றைப் படியுங்கள். மீண்டும் மீண்டும் 
படியுங்கள். புரிந்து கொள்ள முயலுங்கள்.

11) Popular Science என்ற வகைமையில் எழுதும்போது 
12ஆம் வகுப்புத் தரத்தை அடிப்படையாகக் 
 கொண்டே எனது கட்டுரைகள் பெரும்பாலும் 
அமையும். ஆனால் குவாண்டம் தியரி குறித்த 
கட்டுரைகளில் M.Sc Physics portionsல் இருந்து 
சில பல விஷயங்களை சொல்ல வேண்டியுள்ளது.
அது தவிர்க்க இயலாதது.

12) இதுவரை வெளியிட்ட 6 கட்டுரைகளயும், இனி 
வெளியிட இருக்கும் கட்டுரைகளையும் இடதுசாரி 
முகாமில் உள்ளூர் வாசிக்க வேண்டும்.
வாசித்தல் உங்களுக்கு நல்லது. வாசிக்கவிட்டால் 
எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.
************************************************    
    
          
குவாண்டம் பிணைப்புறுத்தல் செய்வது எப்படி?
How to do Quantum Entanglement?
குவாண்டம்  கட்டுரைத் தொடரில் 6ஆம் கட்டுரை!
-----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
குவாண்டம் பிணைப்புறுதல்!
---------------------------------------------
பொருட்கள் அணுக்களாகவும், அணுக்கள் 
துகள்களாகவும் இருப்பதை  நாம் அறிவோம். 
புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான், ஃபோட்டான் 
ஆகியவை நன்கறியப்பட்ட துகள்கள்.  

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட 
துகள்களை பிணைப்புறுத்தலாம். அதாவது 
அத்துகள்களின் மீது  வினையாற்றி அவற்றுக்கு 
இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி விட்டால், 
அவை பிணைப்புற்ற  துகள்கள் (entangled particles) 
என்றாகி விடும்.   

உலகில் இதுகாறும் நடைபெற்றுள்ள பிணைப்புறுத்தும் 
பரிசோதனைகளில் (experiments of entanglement) மிகுதியும் 
ஃபோட்டான்களையே விஞ்ஞானிகள் பயன்படுத்தி 
உள்ளனர். இதற்குக் காரணம் ஃபோட்டான்களை 
எளிதாகப் பிணைப்புறுத்தலாம்  என்பதே.     

நோபல் பரிசாளரான ஆலன் ஆஸ்பெக்ட் நாற்பது 
ஆண்டுகளுக்கு  முன்பே, 1980களில், தமது 
குழுவினருடன் பிணைப்புறுத்தும் 
பரிசோதனைகளை நிறையச் செய்தவர். இன்னொரு  
பரிசாளரான கிளாசர் இதற்கும் முன்பே, தமது 
மாணவப்  பருவம்தொட்டே குவாண்டம் 
பிணைப்புறுத்தலில் ஆர்வம்  காட்டியவர். 

பெல் அசமத்துவம் (Bell inequality) சரியா தப்பா 
என்று சோதித்தறியும் நோக்குடன் 1972ல் தமது 
குழுவினருடன்  இவர் செய்த பிணைப்புறுத்தல் 
பரிசோதனை காலத்தை வென்று நிற்கிறது. 

அது போலவே ஆண்டன் ஸெய்லிங்கர் 1997ல் 
தமது குழுவினருடன்  செய்த பரிசோதனை 
குவாண்டம் தொலைச்செலுத்தலில் 
(quantum teleportation) முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட 
பரிசோதனை ஆகும். அறியப்படாத ஒரு 
குவாண்டம் நிலையை  (unknown quantum state) ஒரு 
துகளில் இருந்து இன்னொரு துகளுக்குக் 
கொண்டு செல்வது குவாண்டம் தொலைச்செலுத்துதல் 
(quantum teleportation)  ஆகும். 

இப்பரிசோதனைகளின் மகத்துவத்தை முப்பது 
நாற்பது  ஆண்டுகளுக்குப் பின்னரே அறிவியல் 
உலகம் உணர்ந்து  ஏற்றுக் கொண்டது. அதன் 
விளைவாகவே மேற்கூறிய மூன்று 
விஞ்ஞானிகளும் நீண்ட தாமத்தின் பின்னர் 
நோபல்  பரிசை அடைந்தனர்.   

ஆலன் ஆஸ்பெக்ட்டும் ஜான் கிளாசரும் தங்களின் 
பிணைப்புறுத்தும் பரிசோதனைகளில் கால்சியம் 
அணுக்களைப் பயன்படுத்தினர்.
அவ்வணுக்களை உயர் ஆற்றல் நிலைக்கு கிளர்ச்சியுறச்
செய்து (highly excited energy level), அந்நிலையில் அவற்றில் 
இருந்து ஒன்றன் பின் ஒன்றாக, சில நானோ நொடிகள் 
இடைவெளியில் இரண்டு பிணைப்புற்ற 
ஃபோட்டான்களைப் பெற்றனர்.   

ஒற்றைத் துகளை இரண்டாக்கலாம்!
--------------------------------------------------------
ஆஸ்பெக்ட், கிளாசர் காலத்திய பிணைப்புறுத்தல் 
பரிசோதனைகள்  இன்று பெரும் முன்னேற்றத்தைக் 
கண்டுள்ளன. இவை முன் கண்டிராத அளவு 
புரட்சிகரமான மாற்றங்களை   அடைந்துள்ளன. 
இதனால் சம கால உலகின் பிணைப்புறுத்தல் 
பரிசோதனைகளை இன்று மிக எளிதில்  
சிரமமின்றிச் செய்ய  முடிகிறது. பரிசோதனைகளின் 
துல்லியமும் வெகுவாக அதிகரித்துள்ளது.    

இன்றைய நடைமுறையில் பிணைப்புறுத்தல் 
பரிசோதனை  பொதுவாக பின்வருமாறு அமைகிறது.
பரிசோதனை ஏற்பாடு  (experimental setup) ஒரு 
இளங்கலை பட்ட வகுப்பு மாணவனால் 
கையாளத் தக்க  அளவுக்கு எளிமையானது. 

ஒரு ஒற்றை ஃபோட்டானை எடுத்துக் கொண்டு, 
அதை உயர் ஆற்றல்  நிலைக்குக் கொண்டு செல்ல 
வேண்டும். இப்போது நேரியல்பற்ற  ஒளியியல் 
படிகங்களை (non linear optical crystal) பயன்படுத்தி  
அந்த  ஒற்றை  ஃபோட்டானை இரண்டு 
ஃபோட்டான்களைக் கொண்ட ஒரு ஜோடியாக 
ஆக்கலாம். இந்த ஜோடியில் ஒவ்வொரு 
ஃபோட்டானும்  தொடக்கத்தில் இருந்த ஆற்றலில் 
பாதியைக் கொண்டிருக்கும்.     

எடுத்துக்காட்டாக, பீட்டா பேரியம் போரேட் 
(Beta Barium Borate) என்னும் வேதிப்பொருளால் 
செய்யப்பட்ட படிகத்தின் மீது ஒரு ஊதா லேசரை 
ஒளிரச் செய்து, ஃபோட்டான் ஜோடிகளைக் 
கொஞ்சம் பெறலாம். இவை  அகச்சிவப்புக்கு 
அருகிலுள்ள  ஃபோட்டான்களை (near infrared photons)
கொண்டிருக்கும். இம்முறையில் சற்றேறக்குறைய 
நூறு விழுக்காடு  பிணைப்புற்ற ஃபோட்டான்கள் 
(entangled photons) கிடைக்கும். 
--------------------------------------------------------------------
(நவம்பர் 2022 அறிவியல் ஒளி இதழில் பிரசுரமான 
"தொலைவில் நிகழும் பயங்கரம் அல்ல" என்ற 
தலைப்பிலான கட்டுரையில் இருந்து சில பத்திகள் 
மேலே தரப்பு பட்டுள்ளன).  இது Quantum Entanglement
(குவாண்டம் பிணைப்புறுத்தல்) பற்றிய கட்டுரை.
**************************************************   
  
 
தூரம் ஒரு பொருட்டல்ல!     
ஐன்ஸ்டினுக்கு மறுப்பா?
குவாண்டம் தியரி பற்றிய 
கட்டுரைத் தொடரின் 5ஆம் கட்டுரை!
---------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------- 
பூமியில் ஒரு எலக்ட்ரான் இருக்கிறது.
பூமியில் அது எங்கே இருக்கிறது?
சென்னையில் என் வீட்டில் இருக்கிறது என்று 
வைத்துக் கொள்வோம்.

அல்லது உங்கள் வீட்டில் இருக்கிறது என்றும்கூட 
வைத்துக் கொள்ளலாம். என் வீடு வண்ணார்ப் 
பேட்டையிலும் உங்கள் வீடு மயிலாப்பூரிலும்  
இருந்தாலும் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை.

வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர் இரண்டுமே 
சென்னைதான்! சென்னை என்றாலே 
13 டிகிரி அட்சரேகை; 80 டிகிரி தீர்க்க ரேகை 
என்றுதான் அர்த்தம்.
Latitude: 13° 05' 16.22" N
Longitude: 80° 16' 42.49" E.  

சரி, ஒரு எலக்ட்ரான் சென்னையில் இருக்கிறது.
இன்னொரு எலக்ட்ரான் வியாழன் கிரகத்தில் 
(Jupiter) இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

இந்த இரண்டு எலக்ட்ரான்களுக்கும் இடையிலான 
தூரம் என்ன? பூமிக்கும் வியாழனுக்கும் உள்ள 
தூரம்தான்.

பூமிக்கும் வியாழனுக்கும் இடையிலான தூரம் 
(Mean distance) 700 மில்லியன் கிலோமீட்டர்.
அதாவது 70 கோடி கிலோமீட்டர்.
(1 மில்லியன் = 10 லட்சம்).

இப்போது இரண்டு எலக்ட்ரான்கள். ஒன்று பூமியில்.
இன்னொன்று வியாழனில். 70 கோடி கிமீ தூரத்தில்.

பூமியில் சென்னையில் என் அறையில் என் இடது  
உள்ளங்கையில் எலக்ட்ரான் இருக்கிறது. இப்போது 
நான் ஒரு துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறேன்.
பெரும் ஓசை கேட்கிறது.

இந்த ஓசை கேட்ட நேரம்: காலை 10 மணி.
இந்த ஓசை வியாழனில் இருக்கும் இன்னொரு 
எலக்ட்ரானுக்கு எப்போது கேட்கும்? 

இந்தக் கேள்விக்கு ஐன்ஸ்டின் விடை அளிக்கிறார்.
இந்தப் பிரபஞ்சத்தில் அதிகபட்ச வேகம் 
ஒளியின் வேகம்தான். அதாவது நொடிக்கு 
3 லட்சம் கிமீதான். அதன்படி பார்த்தால்,
70 கோடி கிமீ தூரத்தைக் கடந்து அங்குள்ள 
எலக்ட்ரானை அந்த ஓசை சென்றடைய 
40 நிமிடம் ஆகும் என்கிறார் ஐன்ஸ்டின்.

40 நிமிடம் என்ற விடை ஐன்ஸ்டினுக்கு எப்படி 
வந்தது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
தூரம் = 70 கோடி கிமீ 
வேகம் = 3,00,000 கிமீ/நொடி  
நேரம் = தூரத்தை வேகத்தால் வகுத்தால் கிடைப்பது.
எனவே நேரம் = 70,00,00,000 km (divided by) 3,00,000 km.
= 2334 வினாடி = 40 நிமிடம் (தோராயமாக)

ஆக, பூமியில் உள்ள எலக்ட்ரான் ஒரு ஓசையை 
காலை 10:00 மணிக்கு உணர்கிறது. வியாழனில் 
உள்ள இன்னொரு எலக்ட்ரான் அதே ஓசையை 
40 நிமிடம் கழித்து 10:40க்கு உணர்கிறது.

இந்த விடை சரிதானா? குவாண்டம் கொள்கை 
வருவதற்கு முன்னால் இந்த விடை சரிதான்!
ஆனால் 1920களில் குவாண்டம் விசையியல் 
(quantum mechanics) வெளிவந்த பிறகு, இந்த விடை 
எல்லா சந்தர்ப்பங்களிலும் சரியானதல்ல 
என்ற உண்மை புலப்படுகிறது. அந்த உண்மை 
நிரூபிக்கவும் படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு 
மூவருக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டது. பரிசு எதற்காக?
இரண்டு துகள்கள் குவாண்டம் பிணைப்புற்று 
இருந்தால், அவை எவ்வளவு கோடி கிமீ தூரத்தில் 
இருந்தாலும், அவற்றுக்கு இடையிலான செய்திப் 
பரிமாற்றம் உடனே (instantaneously) நிகழ்ந்து விடும்.
அதற்கு நேரம் ஆகாது என்று பல்வேறு 
பரிசோதனைகளின் மூலம் நிரூபித்தமைக்காக 
நோபல் பரிசு கிடைத்துள்ளது.
(குவாண்டம் பிணைப்புறுதல் = Quantum entanglement)

எனவே வாசகர்களே,
ஐன்ஸ்டின் கூறியதற்கு மாறுபட்டுக் கூறிய 
விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
2022 இயற்பியல் நோபல் பரிசு குறித்து எழுதப்பட்ட 
கட்டுரைகளைத் தேடி எடுத்துப் படியுங்கள்.
************************************************

மிகவும் விளக்கமாக முன்பே ஒரு கட்டுரை 
எழுதினேன். அது அறிவியல் ஒளியில் 
பிரசுரமானது. அது சற்றுக் கடினமான 
சப்ஜெக்ட். அதை அறிமுமாக செய்யத்தான் 
இந்தச் சிறு கட்டுரையை இங்கு முகநூலில் 
எழுதினேன். இன்னும் சிறிது நேரத்தில் 
அக்கட்டுரையை வெளியிடுகிறேன்.
   
          
 


 

   

திங்கள், 26 ஜூன், 2023

நிலையாமை, உறுதியினமை இரண்டும் 
வெவ்வேறு பொருள் தருபவை. ஆங்கிலத்தில் 
நிலையாமை = INSTABILITY 
உறுதியின்மை = UNCERTAINTY.

யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை,
செல்வம் நிலையாமை ஆகியவை பற்றி தமிழ் 
நீதிநூல்கள் பேசுகின்றன. நேற்று இருந்த ஒன்று 
இன்று இல்லாமல் போவது நிலையாமை.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்திவ் வுலகு 
என்ற குரலில் நிலையாமை உணர்த்தப் 
படுகிறது. நிலையாமையை அழிவு 
உள்ளடங்கி இருக்கிறது. இதுதான் நிலையாமை.

உறுதியின்மை என்பது வேறு. ஒன்றைப் பற்றி 
உறுதியாகக் கூற முடியாத நிலையே 
உறுதியின்மை ஆகும். புதிதாக ஒருவரிடம் 
பழக்க நேருகிறது. அவர் நல்லவரா தீயவரா 
என்று நம்மால் உணர இயலவில்லை. இது 
உறுதியின்மை (UNCERTAINTY) ஆகும்.

ஓஷோவும் ஆதி சங்கரரும் ஜேகேவும் 
கருத்துமுதல்வாதிகள். அவர்களை 
"சில கம்யூனிஸ்டுகள்" பொருள்முதல்வாதிகளாகக் 
கருதுகிறார்கள் என்றால் அவர்கள்  
அறிவிலிகள் என்று பொருள்படும்.  

அருள்கூர்ந்து மதத்தையும் அறிவியலையும் 
முடிச்சுப் போட வேண்டாம். 



மதம் 
பிற்போக்கானது. அறிவியல் முற்போக்கானது.
அறிவியல் சரியானது;
நெருக்கடி நிலை என்னும் பாசிசத்தை 
வெட்கமின்றி ஆதரித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!
-----------------------------------------------------------------------------------
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஜூன் 25ஆம் நாள் 
அன்றைய பிரதமர் இந்திரா நாடு முழுவதும் 
உள்நாட்டு நெருக்கடி நிலையைப் பிரகடனம் 
செய்தார்.

நெருக்கடி நிலைக்காலத்தில் மக்களுக்கு உயிர் 
வாழும் உரிமை உண்டா என்று அன்று உச்ச 
நீதிமன்றத்தில் அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் 
நீதியரசர் கேட்டார். உயிர் வாழும் உரிமையை 
நெருக்கடிநிலை பறித்து விட்டது மை லார்ட்
என்று பதில் கூறினார் அரசுத் தலைமை வழக்கறிஞர்.

இவ்வளவு கொடிய நெருக்கடி நிலையை 
அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
ஆதரித்தது. அத்தனை எதிர்க்கட்சிகளையும்
(ஸ்தாபன காங்கிரஸ். ஜனசங்கம், சோஷலிஸ்டுகள்,
மார்க்சியக் கம்யூனிஸ்ட், நக்சல்பாரிகள்)  
பாசிச இந்திரா ஒடுக்கியபோது, இந்திராவை 
ஆதரித்து ஆதாயம் அடைந்தனர் போலிக் 
கம்யூனிஸ்டுகளான CPI கட்சியினர்.

இதுதான் CPI எனப்படும் போலிக் கம்யூனிஸ்ட் 
கயவாளிகளின் யோக்கியதை!
**********************************************    

   
மறைந்த தோழர் ஸ்ரீரெங்கன் பற்றி.
------------------------------------------------------  
A book titled "Anything but Mathematics" was authored
by M Srirengan during the mid 1990s. The book was an 
academic work which was a critical analysis about 
XII std Maths text book of TN state board.

The book being a maths text was written in English.
Anything but Mathematics means in Tamil  'கணிதத்தைத் தவிர 
வேறு எதுவோ!"
-----------------------------------
அக்காலக் கட்டத்தில் 1990களில் கணிதப் 
பேராசிரியை வசந்தா கந்தசாமி அவர்கள் 
ஐஐடியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் கணிதத்தில் பூஜ்யத்தால் 
வகுக்க முடியும் (Division by zero is possible) என்று 
கூறி இருந்தார். இது அக்காலக் கட்டத்தில் 
கணித உலகை அதிரடியாகக் கலக்கியது.

அப்போது ஸ்ரீரெங்கன் அது சாத்தியமற்றது 
என்று (Division by zero is NOT possible) என்று 
நிரூபித்தார். அப்போது நானும் அவரும் 
தொடர்ந்து ஒரு வார காலமாக இப்பொருள் 
குறித்து உரையாடினோம். அப்போது 
Division by zero is NOT possible என்று அவர் 
நிரூபித்தார். இதற்கு நான் கண்கண்ட சாட்சி.   

தோழர் ஸ்ரீரெங்கன் வெறும் பள்ளி ஆசிரியர் 
அல்ல; அவர் ஒரு மதிப்பு மிகுந்த கணித 
நிபுணர் என்பதற்கான ஆதாரமாக 
இந்நிகழ்வைக் கூறுகிறேன்.

அன்புடன் 
பி இளங்கோ சுப்பிரமணியன்
தேதி: ஜூன் 26, 2023.
------------------------------------------------   
 
செந்தில் பாலாஜி ஜிந்தாபாத்!
காரல் மார்க்ஸ் முர்தாபாத்!
பாலன் இல்லத்தில் முத்தரசன் பரவசம்!
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------- 
பாலன் இல்லத்தில் ஒரே கொண்டாட்டம்! ஆனந்த 
லஹரிதான், போங்கள்!

2024 தேர்தல் நெருங்குகிறது. இந்த முறை சபரீசனிடம் 
எவ்வளவு சி  கேட்க வேண்டும் என்பது குறித்து 
ஆளாளுக்கு அபிப்பிராயம் சொல்லிக் கொண்டு 
இருந்தார்கள்.

அங்கு நடுநாயகமாக ஒரு பெரிய நாற்காலிலயில் 
உட்கார்ந்து இருந்த டி ராஜா திடீரென பெருங்குரல் 
எடுத்துக் கத்தினார்: "முத்தரசன், கோட்டை 
விட்டுராதீங்க, 50 சிக்கு குறையக் கூடாது 
என்றார்.

தொடர்ந்து 50சி, 50சி என்று உற்சாகத்துடன் 
சொல்லிக் கொண்டே இருந்தார் டி ராஜா.
ஒவ்வொரு முறையும் அவர் 50சி என்று சொல்லச் 
சொல்ல, ஜிந்தாபாத், ஜிந்தாபாத் என்று வழிமொழிந்து 
கொண்டே இருந்தார் மு வீரபாண்டியன்.

ஒரு கட்டத்தில் மற்ற அனைவரின் பேச்சும் நின்று விட,
50சி என்ற ராஜாவின் சத்தமும் அதைத் தொடர்ந்து 
ஜிந்தாபாத் என்ற வீரபாண்டியனின் சத்தமும் 
மட்டுமே கேட்டன.    

50சி 
ஜிந்தாபாத்!
50சி 
ஜிந்தாபாத்! 

மொத்த பாலன் இல்லமும் சந்தோஷத்தில் மூழ்கிக் 
கிடந்தது. அப்போது அந்த அறையில் ஒதுக்குப் 
புறமாக உட்கார்ந்திருந்த ஆரென்கே ஒரு 
சந்தோஷத் துள்ளலோடு தனது வலது கையை 
விரித்து ஐந்து விரல்களை மட்டும் காட்டினார்.
இந்த சமிக்ஞை 50சிக்கு ஆரென்கே காட்டும் 
பச்சைக்கொடி என்று புரிந்து கொண்ட 
காம்ரேடுகளில் சிலர் விசிலடிக்கத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் காவேரி மருத்துவமனைக்கு 
தொலைபேசியில் பேசிய முத்தரசன், செந்தில் 
பாலாஜியின் உடல்நிலை குறித்து மிகவும் 
கவலையுடன் அங்குள்ள ஒரு நர்சிடம் விசாரித்தார்.
ஆனால் தான் செந்தில் பாலாஜிக்கு நேரடியாகச் 
சிகிச்சை அளிக்கும் லேடி டாக்டரிடம் பேசியதாகக் 
கூறினார்.

இப்போது மீண்டும் ஒரு போன் கால்! எடுத்துப் 
பேசினார் முத்தரசன். மறுமுனையில் கனகராஜ்!
ஆம், பங்குத்தந்தை கனகராஜ் என்று அழைக்கப்படும் 
மார்க்சிஸ்ட் கட்சியின் கனகராஜ்தான் அவர்.

கடந்த முறை சபரீசனிடம் வாங்கிய பல கோடிப் 
பணத்தை மேல்கமிட்டி ஆட்களே அமுக்கிக் 
கொண்டபோது, அதைக் கண்டித்து மாவட்டக் 
கமிட்டி வரை பங்கு கொடுக்க வேண்டும் என்று 
போராடியதால் பங்குத் தந்தை கனகராஜ்.என்று 
பெயர் பெற்றவர் அவர். 50சி பத்தாது என்றும் 
குறைந்தது 60சியாவது கேட்க வேண்டும் என்றும் 
முத்தரசனிடம் வலியுறுத்தினார் அவர். 
அவர் பேசி முடித்ததுமே 60சி கேட்காமல் 
நாம் குறைவாகக் கேட்டு விட்டோமோ என்ற 
குற்ற உணர்வுக்கு இலக்கானார் முத்தரசன்.


இந்த நேரம் கட்சி அலுவலகச் செயலாளர் 
(party office secretary) அந்த ஹாலுக்குள் வேகமாக 
நுழைந்தார். அவர் கையில் காகிதத்தால் 
சுற்றப்பட்ட பிரேம் போடப்பட்ட ஒரு படம் 
இருந்தது. பார்சல் காகிதத்தைப் பிரித்து 
உள்ளே உள்ள படத்தை பெருமிதத்தோடு 
எல்லோருக்கும் காட்டினார் அலுவலகச் 
செயலாளர். அது செந்தில் பாலாஜியின் படம்.

உடனே கூடியிருந்த அத்தனை பேரும் 
கை தட்டினர். செந்தில் பாலாஜிக்கு 
முட்டுக் கொடுப்பதால் அல்லவா இன்று தங்களால் 
சபரீசனிடம் 50சி கேட்க முடிகிறது என்று 
உணர்ந்த அனைவரும் நன்றி உணர்ச்சி மேலிட 
நின்றனர்.

தரையில் இருந்த ஸ்டூலை எடுத்துப்போட்டு,
அதன்மீது ஏறி நின்ற அலுவலகச் செயலாளர் 
செந்தில் பாலாஜியின் திருவுருவப் படத்தை 
சுவரில் மாட்ட இடம் தேடினார். இடமில்லை 
என்பதால், அங்கு சுவரில் மாட்டியிருந்த 
ஜெர்மன் தேசத்து ஒரு தாடிக்காரக் கிழவரின் 
படத்தைக் கழற்றி எரிச்சலுடன் தரையில் 
வீசி எறிந்து விட்டு, அந்த இடத்தில் செந்தில் 
பாலாஜியின் படத்தை மாட்டினார். மொத்த 
பாலன் இல்லமும் கைதட்டி ஆர்ப்பரித்தது.

முக்கியமான தருணங்களில் பொருத்தமாக கோஷம்  
போடுவதை குலத்தொழிலாகக் கொண்ட 
கோஷப்புலி BSNL கோபாலனின் கோஷங்களால் 
பாலன் இல்லம கனத்துக் கிடந்தது!

ஜிந்தாபாத் ஜிந்தாபாத்!
செந்தில் பாலாஜி ஜிந்தாபாத்! 

ஜிந்தாபாத் ஜிந்தாபாத்!
சபரீசன் ஜிந்தாபாத்!

முர்தாபாத் முர்தாபாத்!
காரல் மார்க்ஸ் முர்தாபாத்! 
*****************************************
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆரென்கே
என்பவர் யார்? ஆர் என் கே (RNK) என்பது 
மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு அவர்களைக் 
குறிக்கும்.

  
        

    



     

ஞாயிறு, 25 ஜூன், 2023

மார்க்சிஸ்ட்டாக இருப்பதற்கான நிபந்தனைகள்!
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
1) மார்க்சிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து, புரிந்து 
மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

2) ஏதேனும் ஒரு வர்க்க ஸ்தாபனத்தில் வேலை 
செய்ய வேண்டும். தொழிற்சங்கம், விவசாய 
சங்கம் போன்றவை வர்க்க ஸ்தாபனங்கள்.

3) தான் வாழும் நாட்டின் சமகால உற்பத்தி முறையைப் 
பற்றிய தெளிந்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான நிபந்தனை ஆகும்.

ஒருவர் இந்திய மார்க்சிஸ்ட் என்றால் அவர் இந்தியாவின் 
சமகால உற்பத்தி முறையைப் பற்றிய அறிவைப் 
பெற்றிருக்க வேண்டும்.உற்பத்தியானது எப்படி 
நடைபெறுகிறது? உற்பத்தியானது அறிவியல் 
மூலமாக நடைபெறுகிறது. எனவே அறிவியலில் 
குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருக்கும்போதுதான் 
சமகால உற்பத்தி முறையைப் பற்றிய அறிவைப் 
பெற முடியும்.

மார்க்ஸ் வரையறுத்த ஆலைப்பாட்டாளி 
(industrial proletariat) என்பவர் அறிவியல் கல்வி 
பெறாமல் இருந்தாலும், தமது பாட்டாளி வர்க்கத் 
தன்மை காரணமாக உற்பத்திமுறை பற்றிய 
அறிவைப் பெற இயலும். பாட்டாளி வர்க்கம் 
அப்படித்தான் உற்பத்தி குறித்த அறிவைப் 
பெறுகிறது.

ஆலைப்பாட்டாளி வர்க்கம் அல்லாத பிற 
வர்க்கத்தினர் குறிப்பாக குட்டி முதலாளித்துவ, 
 லும்பன் வர்க்கத்தினருக்கு பாட்டாளி 
வர்க்கத்தினருக்கு கிடைத்த வாய்ப்பு 
கிடைக்காத நிலையில், அவர்கள் அறிவியலைக் 
கற்றுத்தான்  உற்பத்தி பற்றிய அறிவைப் 
பெற இயலும்.

இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தொடங்கி 
நூறு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மார்க்சியம் 
மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒரு 
சரியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கூட இன்னும் 
கட்டப்படவில்லை.

இதற்கான பல காரணங்களில் இந்தியாவின் 
சமகால உற்பத்திமுறை பற்றிய அறிவை 
கம்யூனிஸ்டுகள் பெறாமல் இருப்பதுதான் 
பிரதான காரணம் ஆகும்.

மார்க்சிய அறிவு என்பதே அந்தந்த நாட்டின்
உற்பத்திமுறை பற்றிய அறிவைப் பெறுவதுதான்.
அப்போதுதான் மார்க்சியத்தைப் பிரயோகிக்க 
முடியும். உற்பத்தி உறவை மாற்றி அமைக்க 
முடியும். உற்பத்தி உறவை மாற்றி அமைப்பதுதானே 
கம்யூனிஸ்டுகளின் பிரதான கடமை.

இந்தியாவின் தொழில் துறை 
வங்கித் துறை 
ரயில்வேத் துறை 
தொலைதொடர்புத் துறை 
நெடுஞ்சாலைத் துறை 
துறைமுகம் மற்றும் கடல்சார் துறை 
போன்ற பல்வேறு துறைகளில் உற்பத்தி 
எப்படி நடக்கிறது என்ற அறிவு ஒரு மார்க்சிஸ்டுக்கு 
மிகவும் முக்கியம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக இந்திய மார்க்சிஸ்டுகள்,
மார்க்சிய லெனினிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் 
ஆகியோர் சமகால உற்பத்தி முறை பற்றிய 
தேவையான அறிவில் சிறிது கூடப் பெறாமல்
இருக்கிறார்கள்.

1940களில், 1950களில் இந்தியாவில் நிலவிய 
பின்தங்கிய உற்பத்தி முறையைப் பற்றிய 
அறிவுதான் 99.9 சதவீதம் கம்யூனிஸ்டுகளுக்கு 
இருக்கிறது. சமகால உற்பத்தி என்பது,
அதாவது இந்த 2023ல் உற்பத்தி என்பது அசுரத் 
தனமாக நவீனப் படுத்தப் பட்டுள்ளது. 

உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி 
சமகாலத்தில் தொழிற்புரட்சியின் நான்காவது 
வெர்ஷனில் நாம் இருக்கிறோம்.
(industrial revolution 4.0). இது AI எனப்படும் 
Artificial Intelligence, Digitalisation, Quantum computing
என்று விண்ணைத் தொடும் தொழில்நுட்பமாக 
உள்ளது. 

எனவே சமகால உற்பத்தி முறை பற்றிய அறிவைப் 
பெறவிரும்பும் எவர் ஒருவருக்கும் அடிப்படையானதும் 
அகல்விரிவானதுமான அறிவியல் கல்வி அவசியம்.

அறிவியல் கல்வியின் முக்கியத்துவம் 
முன்னெப்போதையும் விட தற்போது வெகுவாக 
முன்னுக்கு வந்துள்ளது. சமூகம் மொத்தமும் 
அறிவியல் கல்வியைப் பெருமளவில் பெற்று 
வருகிறது.

இந்த ஆண்டு ப்ளஸ் டூ (XII std) தேர்வு எழுதிய 
8 லட்சம் பேரில் அறிவியல் பிரிவு பாடங்களை 
(Science group) படித்தவர்கள் 5 லட்சம் பேர்;
வணிகபிரிவு 2.5 லட்சம் பேர்; வெறும் 45000
பேர் மட்டுமே arts group (அதாவது history literature
போன்ற பாடப் பிரிவினர்)

சமூகத்துக்கு வழிகாட்டவும் சமூகத்திற்குத் 
தலைமை தங்கவும் கடமைப்பட்டுள்ள 
மார்க்சிஸ்டுகள் அறிவியல் கல்வியைப் 
பெற்றிருக்க வேண்டாமா? நமது சமூகத்தின் 
சாதாரண உறுப்பினர்கள் அறிவியல் கல்வி 
பெற்றிருக்கும்போது சமூகத்திற்குத் 
தலைமை தாங்க விரும்பும் கம்யூனிஸ்டுகள் 
அறிவியல் கல்வி பெற்றிருக்க வேண்டாமா!

அறிவியல் கற்காமல் சமகால உற்பத்தி முறை 
பற்றிய அறிவைப் பெற இயலாது. உற்பத்தி முறை 
பற்றிய அறிவைப் பெறாமல் உற்பத்தி உறவை 
மாற்றியமைக்க முடியாது.

எனவே மார்க்சிடுகளே, மா-லெ தோழர்களே,
அறிவியலைப் படியுங்கள். கணிதம், இயற்பியல் 
படியுங்கள். அறிவியலைப் பரப்பும் 
நியூட்டன் அறிவியல் மன்றம் போன்ற அறிவியல் 
அமைப்புகளை ஆதரியுங்கள்.

ஆதரிப்பது என்றால் நாங்கள் எந்த விதமான 
நிதி உதவியையும் கோரவில்லை. நிதி எங்களுக்குத்  
தேவையில்லை. எங்களின் அறிவியல் பரப்பும் 
பணிகளை ஆதரியுங்கள். அறிவியலைப் படியுங்கள்.

நியூட்டன் அறிவியல் மன்றமானது
1) Print media
2) Electronic media
3) Social media
4) public forum 
உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிழும் அறிவியலைப் 
பரப்பி வருகிறோம்.

இதுவரை எங்களை ஆதரித்தவர்களும் சரி,
எங்களின் அறிவியல் போதனைகளுக்குச் செவி 
மடுத்து பயன் அடைந்தவர்களும் சரி வலதுசாரிகளே! 
இடதுசாரி முகாமின் தோழர்களும் இனிமேலாவது 
எங்களால் பயன் அடையத் தொடங்குவார்கள் என்று 
நம்புகிறோம்.
-----------------------------------------------------------------------  
பின்குறிப்பு:
இடதுசாரி முகாமில் உள்ளோர் எங்கலின் அறிவியல் 
பணிகளை ஆதரிக்காவிட்டாலோ எங்களின் 
அறிவியல் போதனைகளுக்குச் செவிமடுக்காமல் 
போனாலோ நஷ்டம் எங்களுக்கு அல்ல!
********************************************  
           
   
    


பொருளாதார மூடர்களும் குவான்டம் தியரியும்!
பெட்டியில் உள்ள ஒரு பூனை ஒரே நேரத்தில்
உயிருடனும் இறந்தும் இருப்பது எப்படி?
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
நேற்று பேப்பர் கடைக்குச் சென்றேன். SCIENCE REPORTER
பத்திரிக்கை வந்திருந்தது. வாங்கினேன். விலை ரூ
30 மட்டுமே. கடந்த ஆண்டில் இதன் விலை ரூ 20 தான்.

68 பக்கம். வழவழப்பான வண்ணக் காகிதம்.
பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள்.
தனியார் யார் நடத்தினாலும் இந்தப் பத்திரிகையின்
விலை ரூ 200 என்று விற்றால்தான் செலவு
கட்டுப்படியாகும்.

ஆனால் CSIR  நிறுவனம் வெளியிடும் பத்திரிக்கை
என்பதால் விலை ரூ 30 மட்டுமே.
CSIR =Council of Scientific and Industrial Research. இந்தியாவின்
அறிவியல் குடிமக்களின் அடையாளம்தான் இந்த
சயன்ஸ் ரிப்போர்ட்டர்.

இவ்வளவு மலிவு விலையில் கொடுத்தாலும் ஒரு
பயலும் வாங்க மாட்டேன் என்கிறான். தெருவுக்கு
நாலு மூதேவி இன்ஜினியரிங் படிக்கிறான். ஆனாலும்
சயன்ஸ் ரிப்போர்ட்டர் வாங்க வேண்டும் என்ற
எண்ணம் இருப்பதில்லை.

தற்கொலை பண்ணிச் செத்துப்போய் பிணத்தை
ஈ மொய்த்தாலும் சரி என்று இருப்பானே தவிர
30 ரூபாய் செலவழித்து சயன்ஸ் ரிப்போர்ட்டர்
வாங்க மாட்டான். இது மாதப் பத்திரிக்கை.
எனவே ஒரு மாதத்துக்கு 30 ரூபாய். அதாவது
ஒரு நாளுக்கு ஒரு ரூபாய். அவ்வளவுதான் செலவு.

CSIR என்பது அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்.
இது சுயேச்சையான ஓர் அமைப்பு (autonomous body)
மத்திய அரசு இதன் செலவை ஏற்றுக் கொள்கிறது.
பத்தாயிரம் விஞ்ஞானிகள் பணியாற்றும் மாபெரும்
அமைப்பு இது.

இதே CSIRஐ தனியார் மயமாக்கி, தனியார்
கைப்பற்றியவுடன் சயன்ஸ் ரிப்போர்ட்டர்
பத்திரிகையை ரூ 300க்கு விற்பான். அன்றைக்கு
பொண்டாட்டி தாலியை விற்று இந்தப்
பத்திரிகையை வாங்கி வீட்டில் வைப்பான்
நமது ஆள்.

நிற்க. சயன்ஸ் ரிப்போர்ட்டர் வாங்கிய பிறகு,
அருகில் உள்ள ஷெல்பில் EPW பத்திரிகை
இருந்தது. EPW = Economic and Political Weekly.
விலையைப் பார்த்தேன். ரூ 90 என்று இருந்தது.
அதை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

புத்தகம் வாங்குவதைப் பொறுத்து நான் பணத்தை
ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. என்றாலும்
EPW வாங்க வேண்டாம் என்று ஏன் முடிவு எடுத்தேன்?

ஏன்? EPW என்பது இந்தியாவில் உள்ள பொருளாதார
முட்டாள்கள், அரை வேக்காடுகள் ஆகியவர்கள்
தங்களின் அறியாமையை வெளிப்படுத்தும் ஒரு
பத்திரிக்கை. முட்டாள்களால் முட்டாள்களுக்காக
நடத்தப்படும் பத்திரிக்கை.

பொருளாதாரம் என்பதே ஒரு தோராயமான
விஷயம்தான். தோராயம் என்பது மிகவும்
கண்ணியமான வார்த்தை. அவ்வளவு கண்ணியம்
பொருளியலுக்குத் தேவையில்லை. எனவே
தேங்காயை உடைத்தது போலச் சொல்ல
வேண்டுமென்றால், பொருளாதாரம்
அல்லது பொருளியல் என்பது வெறும் குத்துமதிப்பான
விஷயம். அவ்வளவுதான். பொருளியலில் துல்லியம்
என்பது மயிருக்கும் கிடையாது.

எந்த ஒரு பொருளியல் கோட்பாட்டையும் சரி என்றோ
தவறு என்றோ கூற இயலாது. அது சில இடங்களில்
(context) சரியாக இருக்கும். சில இடங்களில் தவறாக
இருக்கும். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும்
சரியாக இருக்கும் ஒரு பொருளியல் கோட்பாடு
இதுவரை உலகிலேயே கண்டு பிடிக்கப்படவில்லை.

எனவே, பொருளியல் படித்த ஒரு மேதை சொல்வதும்
பொருளியல் படிக்காமல் டாஸ்மாக் சாராயக்
கடையில் குவார்ட்டர் வாங்கும் துலுக்காணம்
சொல்வதும், இரண்டுமே சரியாகத்தான் இருக்கும்.
எனவே என்ன மயிருக்கு EPW வாங்க வேண்டும்?

குவான்டம் தியரியில் SUPERPOSITION என்று ஒரு
விஷயம் உண்டு. இது என்ன? ஒரு சிஸ்டம்
ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில் இருக்கும்.
அதாவது ஒரு கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில்
ON ஆகவும் OFF ஆகவும் இருக்கும். இதுதான்
குவான்டம் SUPERPOSITION. குவான்டம் கம்ப்யூட்டர்
விற்பனைக்கு வரும்போது இதை ஒவ்வொருவரும்
சொந்த அனுபவத்தின் மூலம் அறியலாம்.

ஷ்ராடிங்கர் என்று ஒரு குவான்டம் PHYSICIST.
இவர் ஒரு பூனைக்கதை சொன்னார். அதில்
பெட்டியில் அடைக்கப்பட்ட ஒரு பூனை
ஒரே நேரத்தில் உயிருடனும் இருக்கும்,
இறந்தும் இருக்கும். எப்படி?
(இது பற்றிப் பின்னர் பார்ப்போம்).

குவான்டம் தியரியில் எப்படி ஒரு விஷயம்
ஒரே நேரத்தில் சரி தவறு என்ற இரண்டு நிலையிலும்
இருக்கிறதோ, அதைப் போலவே எந்தவொரு
பொருளியல் கோட்பாடும் ஒரே நேரத்தில்
சரியாகவும் இருக்கும்; தவறாகவும் இருக்கும்.
எனவே பொருளியல் மேதையின் கருத்தும்
கட்டணக் கழிப்பிடத்தில் மலங்கழிக்க கியூவில்
நிற்கும் முனியாண்டியின் கருத்தும் ஒன்றாகத்
தான் இருக்கும்.

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்ன?
EPW வாங்கத் தேவையில்லை என்பதுதான்!
ஆனால் சயன்ஸ் ரிப்போர்ட்டர் வாங்கியே
ஆக வேண்டும்!!
******************************************************* 
பின்குறிப்பு: EPWக்கான ரூ 90ஐ கடை வாசலில்
நிற்கும் குஷ்டரோகப் பிச்சைக்காரர்கள்
9 பேருக்கு தலா ரூ 10 வீதம் பிச்சை போட்டேன்.
****************************************************** 
  
உலகில் அறிவியல் மேதைகள்தான் உண்டே தவிர
பொருளியல் மேதைகள் என்று யாரும் கிடையாது.
அமர்த்தியா சென்னின் கருத்தும்  ஆடு மேய்க்கும் ஆரோக்கியசாமியின் கருத்தும் சரி சமம்தான்.
குத்து மதிப்பாகச் சொல்வதுதான் பொருளியல்.
குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போலத்தான்
பொருளியல் "மேதை"கள் சொல்லும் கருத்து பலிப்பது.
.
  EPW பத்திரிகையை வாங்க வேண்டாம் ஏன்?

"ஆனால்" என்பதை எடுத்து விட்டால் அது
SUPERPOSITIONதான். இருக்கிறது, இல்லை என்னும்
இரண்டும் ஒரே நேரத்தில் இருப்பதுதான்
SUPERPOSITION தான்.


MED என்னும் Modern Economic Development என்னும் பேப்பரில்
BA Economics படிக்கும் ஒரு பொருளாதார மாணவன்
30 பக்கம் .எழுதுவான். எல்லாம் வெறும் கதை!
Thermodynamics பேப்பர் எழுதும் ஒரு Physics மாணவன்
6 பக்கம்தான் எழுதுவான்.   


நான்தான் கடவுள் என்று
மீண்டும் நிரூபிக்கப் போகிறேன்!
-----------------------------------------------------------
நம்பர்கள் எழுதப்பட்ட சில அட்டைகளை
உங்களிடம் தருவேன். அந்த அட்டைகளில்
உள்ள ஏதேனும் ஒரு நம்பரை நீங்கள்
மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் நினைத்த நம்பரை நான் சொல்லி
விடுவேன். ஏனெனில் நான்தான் கடவுள்!

ஏற்கனவே நான்தான் கடவுள் என்று
கணித முறையில் நிரூபித்துள்ளேன்.
தற்போது மீண்டும் வேறு ஒரு முறையில்
நிரூபிக்கப் போகிறேன். இதுவும் கணித
முறைதான்.தயாராக இருங்கள்!

திங்களன்று இந்த நிரூபணத்தை
வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் மனதில் நீங்கள் நினைக்கும் நம்பர்
இரண்டே இரண்டு பேருக்குத்தான் தெரியும்.
1. நீங்கள் 2. கடவுள்.
ஆனால் நீங்கள் நினைத்த நம்மவர் என்ன
என்று எனக்குத் தெரிந்து, அதை நான் சொல்லி
விடுகிறேன் என்றால் என்ன பொருள்?
நான்தான் கடவுள் என்று பொருள்.

பின்குறிப்பு:
இங்கு கடவுள் என்பது சகல மதங்களின்
கடவுள்களையும் ஒருசேரக் குறிக்கும்.   
********************************************

நான்தான் கடவுள் என்று நான் நிரூபித்து
முடித்ததும் எனக்கு கோவில் கட்ட
ஆத்திகப் பெருமக்கள் கடமைப் பட்டுள்ளார்கள்.
நானே ஏக இறைவன்!
 

    

சனி, 24 ஜூன், 2023

சோதிடம் என்பது முன்தீர்மானவாதம் (Predeterminism)!
சோதிடம் மட்டுமல்ல, எந்த ஒரு 
முன்தீர்மானவாதமும் அறிவியலுக்கு எதிரானது!
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
நிகழ்வுகள் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப் 
பட்டவை என்று நம்புவதுதான் முன்தீர்மானவாதம் 
(Predeterminism). 

நேற்று நடந்தது,
இன்று நடப்பது,
நாளை நடக்க இருப்பது 
இப்படி அனைத்து நிகழ்வுகளும் முன்னரே தீர்மானிக்கப் 
பட்டவை. இந்த உலகில், இந்த பூமியில், இந்தப் 
பிரபஞ்சத்தில் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் 
எந்த நிகழ்வாயினும் அது முன்னரே தீர்மானிக்கப் 
பட்டது என்று நம்புவதுதான் முன்தீர்மானவாதம்.
மனிதர்களின் செயல்கள் அனைத்தும் முன்னரே 
தீர்மானிக்கப் பட்டு விட்டான். அதன்படிதான் 
மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள் என்கிறது 
முன்தீர்மானவாதம்.  

அந்த வகையில் சோதிடம் என்பது முன்தீர்மானவாதம் 
ஆகும்.  முன்தீர்மானவாதம் அறிவியலுக்கு எதிரானது;
முற்றிலும் தவறானது. இந்தப் பிரபஞ்சத்தின் 
நிகழ்வுகளோ மனிதர்களின் செயல்களோ 
ஒருபோதும் முன்தீர்மானிக்கப் பட்டவை அல்ல.

கடவுள் அனைத்தையும் முன்தீர்மானித்து 
வைத்திருக்கிறார் என்பதோ, பிரம்மன் மனிதனின் 
தலையில் என்ன எழுதி இருக்கிறானோ 
அதன்படிதான் எல்லாம் நடக்கும் என்பதோ 
முற்றிலும் அறிவீனம் ஆகும். இல்லாத கடவுளோ  
அல்லது வேறு யாருமோ பிரபஞ்ச நிகழ்வு எதையும் 
முன்தீர்மானிக்கவில்லை. வானில் உள்ள 
கோள்களின் சஞ்சாரப்படிதான் மனிதனின் 
செயல்கள் அமையும் என்னும் முன்தீர்மானவாதம் 
அடிப்படையிலேயே தவறானது; 100 சதவீதம் 
தவறானது ஆகும்.

முன்தீர்மானவாதம் தவறு என்பதற்கான நிரூபணம்!
--------------------------------------------------------------------------------
இந்த உலகில், பூமியில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் 
மாறிக்கொண்டே இருக்கின்றன; இந்த மாற்றம் 
தொடர்ச்சியானது என்கிறார் ஜெர்மானியத் 
தத்துவஞானி ஹெகல் (Georg W F Hegel 1770-1831).
ஹெகலின் இந்தக் கருத்தையே காரல் மார்க்சும் 
அங்கீகரித்து "மாறும் என்னும் விதியைத் தவிர்த்து 
அனைத்தும் மாறும்" என்கிறார்.

அனைத்தும் மாறும் என்னும் இந்த விதி 
முன்தீர்மானவாதத்தின் மண்டையில் ஓங்கி அடிக்கிறது.
மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றை எப்படி 
முன்தீர்மானிக்க இயலும்? 

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இயங்கிக் 
கொண்டே இருக்கின்றன. இயக்கத்தின் போக்கில் 
மாறிக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு மாறிக் 
கொண்டே இருக்கும் ஒன்றை எவர் ஒருவராலும் 
முன்தீர்மானிக்க இயலாது.

18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் லாப்லேஸ் என்னும் 
(Laplace 1749-1827) விஞ்ஞானி இருந்தார்; இவர் 
தத்துவஞானியும்கூட. இவர் படுபயங்கரமான 
முன்தீர்மானவாதியாக இருந்தார். இவரின் 
கோட்பாடு causal determinism ஆகும்.

லாப்லேஸின் முன்தீர்மானவாதம் தவறானது என்று 
அறிவியல் நிரூபித்துள்ளது. இருப்பினும் லாப்லேஸ்
மிகச்சிறந்த விஞ்ஞானி; கணித மேதை.
Laplace Transform படித்திருக்கிறீர்களா? கணிதத்தில் 
மிகப்பெரிதும் பயன்படுகிற ஒரு கருவி அது.

தலைவிதி (fate) என்று சொல்கிறோம். தமிழில் ஊழ் 
என்று சொல்லுகிறோம். 
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
என்கிறார் வள்ளுவர்.

"ஊழ்வினை உருத்து வந்தூட்டும்"  என்கிறார் 
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்.  

தலைவிதி (fate), ஊழ், கர்மா, வினைப்பயன் என்று 
பலவாறாகச் சொல்லப்படும் அனைத்தும் 
முன்தீர்மானவாதமே ஆகும். இவை அனைத்தும் 
தவறானவை! உணமை அற்றவை! அறிவியலுக்கு 
எதிரானவை. எனவே பிற்போக்கானவை!            
   
கயாஸ் தியரி (chaos theory) என்ற ஒன்று உண்டு.
குழப்பவாதக் கொள்கை என்று தமிழில்  இது
மொழிபெயர்க்கப் படுகிறது. 

"வண்ணத்துப்பூச்சி விளைவு" (Butterfly effect) என்ற 
ஒன்றை கயாஸ் தியரியைப் படித்தவர்கள் அடிக்கடி 
குறிப்பிடுவது உண்டு. அது என்ன விளைவு?
ராமன் விளைவு (Raman effect) போல நோபல் பரிசு 
பெற்றதா? இல்லை. வண்ணத்துப்பூச்சி விளைவு 
என்பது ஒரு அனுமானம்! அது என்ன சொல்கிறது?

சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வண்ணத்துப்பூச்சி
சிறகடித்தால் அதன் காரணமாக சிகாகோவில் 
மழை பெய்யும் என்பதுதான் வண்ணத்துப் பூச்சி 
விளைவு.

வண்ணத்துப்பூச்சி விளைவும் சரி, கயாஸ் தியரியும்
சரி முன்தீர்மானவாதத்தின் மண்டையில் ஓங்கி 
அடிப்பவை. Chaos என்பதே Determinismக்கு நேர் 
எதிரிதான்! கயாஸ் தியரியும் Butterfly effectம் 
ஓங்கி அடித்ததில் சோதிடத்தின் மண்டை 
பிளந்து விட்டது.    

குவாண்டம் தியரி வந்த பின்னால், இயற்கையிலும் 
இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் ஒரு நிச்சயமற்ற 
தன்மை (indeterminacy) இருப்பதை அறிவியல் 
உலகம் உணர்ந்து கொண்டது. பிரபஞ்சம்  
முழுவதிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருப்பதை 
குவாண்டம் தியரி நிரூபித்து உள்ளது.

எனவே எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று 
கூறுவதற்கோ அல்லது எதிர்காலத்தில் இன்ன இன்ன 
நடக்கும் என்று கூறுவதற்கோ குவாண்டம் தியரி 
சிறிதளவும் இடமளிக்கவில்லை.

சோதிடத்தை எதிர்ப்பதற்காக இந்தக் கட்டுரை 
எழுதப் படவில்லை. ஏனெனில் சோதிடம் என்பது 
பொய் என்றும் போலி அறிவியல் என்றும் என்றோ 
நிரூபிக்கப் பட்டுவிட்டது. 

ஆனால் உலகளாவிய சமூகத்தில் சோதிடம் மட்டுமே 
ஒரே ஒரு முன்தீர்மானவாதமாக இருக்கவில்லை.
வேறு பலவும் இருக்கின்றன. ஏகப்பட்ட 
முன்தீர்மானவாதங்கள் முற்போக்கு முகமூடியுடன் 
திரிந்து கொண்டிருக்கின்றன. அவை இன்னும் அம்பலப் 
படவில்லை; அவற்றை யாரும் இன்றும் அம்பலப் 
படுத்தவில்லை; அதற்குயாரும் துணியவில்லை.
மேலும் இதர முன்தீர்மானவாதம் பற்றி அறிந்தோர் 
மிகக் குறைவே!

இந்தக் கட்டுரை சகல முன்தீர்மானவாதங்களையும் 
முறியடிக்க விரும்பும் கட்டுரை. அந்த திசைவழியில் 
இது முதல் கட்டுரை! இதன் பேசுபொருளை 
நுண்மாண் நுழைபுலம் மிக்க வாசகர்கள் 
உய்த்து உணர்க!
**************************************************** 

வானிலை அறிக்கை என்பது நமது வளிமண்டலத்தைச்
சார்ந்தது; வளிமண்டலத்துக்குள் அடங்கி விடுவது.
வளிமண்டலத்து மேகங்களின் இயக்கம்,
கடலின் வெப்பம், பிற physical parametersன் இயக்கம் 
ஆகியவை ஒரு வரம்புக்குள் அடங்குபவை.
அவற்றின் இயக்கத்தை நுண்கருவிகளின் 
துணைகொண்டு நம்மால் கணிக்க இயலும்.

குக்கரில் சோறு வெந்து கொண்டு இருக்கிறது.
மூன்று விசில் வந்தால் குக்கரை அணைத்து 
விடலாம், சோறு வெந்திருக்கும் என்று
சமைக்கும் பெண் முடிவு செய்கிறாள். இது போன்ற 
எளிய தன்மை உடைய இயக்கங்களை மனிதனால் 
முன்கணிக்க இயலும். இதெல்லாம் முன்தீர்மானவாதம் 
ஆகாது.

தடையற்ற ஒரு பாதையில் நகரும் ஒரு பொருள் 
இன்ன நேரத்தில் சேர வேண்டிய இடத்தை அடையும் 
என்று அறிவியல் வழியில் கண்டிக்கிறோம். இது 
முன்தீர்மானவாதம் ஆகாது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறோம்.
அதன் பாதையை (trajectory) ஒவ்வொரு கணமும் 
தீர்மானிக்கிறோம். அது சந்திரயான் என்றால் 
சந்திரனைச் சுற்ற வேண்டும். மனிதனால் 
செயற்கைக்கோளை சந்திரனைச் சுற்ற வைக்க 
இயலும். இது முன்தீர்மானவாதம் ஆகாது.


இன்று காலை குவாண்டம் தியரி குறித்தும் 
அதன் தத்துவார்த்த விளைவு குறித்தும் 
ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளேன்.
வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் 
இந்த நேரத்தில் படித்து விடுவது நல்லது. 
       

 
   
           

வெள்ளி, 23 ஜூன், 2023

 கணக்கின் விடை!
---------------------------------
விடை: வெட்டப்பட்ட கம்பியின் இரு துண்டுகளின்
நீளம்: 12.32 மீ, 15.68 மீ. அதாவது கம்பியின் 
ஒரு முனையில் இருந்து 28pi /pi +4 மீ தூரத்தில் 
வெட்ட வேண்டும். 

இதை நேரம் இருந்தால் simplify பண்ணினால் 
போதும். நேரம் இல்லாவிட்டால் தேவையில்லை. 
இது தேர்வு எழுதும்போது. Board Examஇல் 12.32 மீ 
என்று simplify செய்து விடையைக் கொண்டு வர 
வேண்டிய தேவை இல்லை.
ஆனால் வகுப்பறையில் simplify செய்து விடையைத்
துல்லியமாகக் காட்ட வேண்டும்.
2) இந்தக் கணக்கு கால்குலஸில் வரும் 
மேக்சிமா மினிமா
அத்தியாயத்தில் உள்ள கணக்கு.
3) First derivative test, second derivative test ஆகிய 
இரண்டு test களையும் எடுக்க வேண்டும்.
4) First derivative testஇல் dy/dx =0 என்று கொண்டு 
x மதிப்பைக் காண வேண்டும்.
5) second derivative testஇல் dy/dx > 0 என்று 
இருந்தால் மட்டுமே, function ஆனது 
minimum மதிப்பைப் பெறும்.
------------------------------------------------

திங்கள், 19 ஜூன், 2023

சபாநாயகரின் அனுமதி பெறாமல் 
செந்தில் பாலாஜியைக் கைது செய்யலாமா?
சட்டம் சொல்வது என்ன?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------
ஒரு போலி நக்சல்பாரி அமைப்புடன் தொடர்புடைய 
ஒரு பழைய நண்பர் என்னிடம் இன்று காலை இந்தக் 
கேள்வியைக் கேட்டார்: சபாநாயகர் அப்பாவுவின் 
அனுமதி பெறாமல் எப்படி செந்தில் பாலாஜியைக் 
கைது செய்யலாம்? இது பாசிசம் அல்லவா என்றார்! 
அவருக்குப் பதிலளித்தேன்; எனது பதில்கள் பின்வருமாறு 
அமைந்தன..

1) செந்தில் பாலாஜியைக் கைது செய்தது சாதாரண 
போலீஸ் அல்ல; அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate).
சாதாரண போலீசுக்கு இல்லாத கூடுதல் அதிகாரமும் 
தனிச்சிறப்பு வாய்ந்த அதிகாரமும் (special powers) 
அமலாக்கப் பிரிவுக்கு உண்டு. 

2) அடுத்து செ.பாலாஜி எந்தச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டார் என்று பார்க்க வேண்டும். அவர் மீது 
ஊழல் தடுப்புச் சட்டம் மட்டும் (Prevention of corruption act) 
பிரயோகிக்கப் படவில்லை. கூடவே PMLA சட்டமும் 
பிரயோகிக்கப் பட்டுள்ளது. 
(PMLA = Prevention of Money Laundering Act 2002). தமிழில் 
சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம். 

3) கைது செய்தது அமலாக்கப் பிரிவு என்பதாலும்,
கைது செய்யப்பட்டது PMLA சட்டத்தின் கீழ் என்பதாலும்    
வழக்கமான CrPC நடைமுறைகள் இங்கு பொருந்தாது.
இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

4) வழக்கமான CrPC நடைமுறைகளின்படி, ஒரு 
சட்டமன்ற  உறுப்பினரைக் கைது செய்ய 
வேண்டுமென்றால் சபாநாயகரின் அனுமதியைப் 
பெற வேண்டும். ஆனால் செந்தில் பாலாஜி 
விஷயத்தில் அவ்வாறு சபாநாயகரின் அனுமதியைப் 
பெற்ற பிறகுதான் கைது செய்ய வேண்டும் என்ற 
நடைமுறை பொருந்தாது (Not applicable). 

5) PMLA சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு 
செந்தில் பாலாஜியைக் கைது செய்யும்போது 
சபாநாயகரையும் கேட்க வேண்டியதில்லை. 
செந்தில் பாலாஜியின் சலூன்காரரையும் கேட்க 
வேண்டியதில்லை என்றேன்.

6) PMLA போன்ற பாசிசச் சட்டமெல்லாம் 
பிரிட்டிஷ்காரன் காலத்துச் சட்டம் தோழ்ர் என்றார் 
நமது போலி நக்சல்பாரி; இதன் மூலம் தமது 
அறியாமையை வெளிப்படுத்தினார்.

7) நான் அவரிடம் சொன்னேன்: PMLA சட்டம் 
பிரிட்டிஷ்காரன் காலத்துப் பழைய சட்டம் அல்ல.
அது முற்றிலும் புதிய சட்டம்; நவீன சட்டம்.
இந்த மில்லேனியத்திற்குப் பின்னர் கொண்டுவரப்
பட்ட சட்டம். 2002ல்தான் இச்சட்டம் கொண்டுவரப் 
பட்டது.

8) 1995ல் நரசிம்மராவ் காலத்தில் LPG கொள்கைகள் 
இந்தியாவில் செயலாக்கப் பட்டன. உலகமயம் 
காரணமாகவும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் 
காரணமாகவும் பொருளாதாரக் குற்றங்கள் பெருகின.
இவற்றைத் தடுக்கும் பொருட்டு 2002ல் PMLA சட்டம் 
கொண்டுவரப் பட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் 
முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப் 
பட்டதே PMLA சட்டம் என்றேன்.

9) இந்திய சுதந்திரத்திற்குப் பின், 1950களில் அமலாக்கப் 
பிரிவு உருவாக்கப் பட்டது. எனினும் இன்று அதற்குள்ள 
அதிகாரம் 1950களில் இல்லை. தனிச்சிறப்பு வாய்ந்த 
அதிகாரங்கள் EDக்கு 2005ல்தான் வழங்கப் பட்டன.
காங்கிரஸ் ஆட்சியின்போது (UPA-1) மன்மோகன்சிங்,
ப சிதம்பரம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் 
இவ்வாறு தனிச்சிறப்பு மிக்க அதிகாரங்கள் EDக்கு 
வழங்கப் பட்டன. இந்தச் சட்டங்களும் சிறப்பு 
அதிகாரங்களும் அப்போது அமைச்சரவையில் 
பங்கேற்று இருந்த திமுகவின் முழு ஆதரவோடுதான் 
வழங்கப் பட்டன.   

10) தொடர்ந்து மேலும் கூடுதலான அதிகாரங்களும் 
வழக்கமான CrPC நடைமுறையில் இருந்து விதிவிலக்கும் 
அடுத்தடுத்த சட்டத் திருத்தங்கள் (amendments)
மூலம் EDக்கு வழங்கப் பட்டன. தேவையான எல்லா 
அதிகாரங்களும் விதிவிலக்குகளும் EDக்கு 
2012ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ்-திமுக கூட்டணி 
ஆட்சி நடைபெற்றபோதே வழங்கப் பட்டு 
விட்டன என்றேன். அப்படியானால் இது பிரிட்டிஷ் 
பாசிசம் இல்லை அல்லவா என்கிறார் நமது போலி.
இல்லை, இது இந்தியப் பாயாசம் என்றேன்.
**************************************************