செவ்வாய், 13 ஜூன், 2023

 

உயிர் என்பது பொருளே என்பதற்கான நிரூபணம்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் ஆய்வியல் மன்றம் 
------------------------------------------------------------------------
ஒளியும் இருளும் இருமைகள் (binaries). அதாவது 
வெளிச்சமும் இருட்டும் இருமைகள் என்று புரிந்து 
கொள்க. இது போன்றதே உயிரும் உயிரின்மையும்.

இப்பிரபஞ்சத்தில் பல அடிப்படையான விஷயங்கள் 
(அனைத்தும் அல்ல) பைனரியாக இருக்கின்றன.
இன்னுமொரு உதாரணம்: காந்தத்தின் கவர்தல் 
மற்றும் விலக்கல் (attraction and repulsion) விசைகள்.

காந்தத்தின் கவர்ச்சி விசையும் விலக்கல் விசையும்
mutually exclusiveஆக இருக்கின்றன. அதாவது அவை 
இரண்டும் ஒன்றையொன்று விலக்கும் தன்மை 
உடையவை. ஒன்று நிகழும்போது 
மற்றொன்று நிகழாது; நிகழ இயலாது. ஒன்றின்மீது 
ஒரு காந்தத்தின் கவர்ச்சி விசை செயல்படும் 
அதே நேரத்தில் அதன் மீது அதே காந்தத்தின் விலக்கல் 
விசை செயல்படாது. இவ்விரு விசைகளும் 
mutually exclusiveஆக இருக்கின்றன. இதைப்போலவே 
உயிரும் உயிரின்மையும் ஒன்றையொன்று 
விலக்குபவை (mutually exclusive). நிற்க.

பொருட்கள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் 
துகள்களைக் கொண்டிருப்பவை என்று நாம் 
அறிந்திருக்கிறோம். இது அணுக்கரு இயற்பியல் 
கற்பித்த, பொருட்களைப் பற்றிய தொடக்கநிலை
அறிவு.

1920கள் முதற்கொண்டு குவாண்டம் விசையியல் 
திரட்சி அடைந்து, குவாண்டம் புலக்கொள்கை 
(quantum field theory) பிறந்தது. இது அதுகாறும் நிலவி 
வந்த துகள் கொள்கைக்கு முடிவு கட்டியது.
அ) Quantum Electro Dynamics
ஆ) Quantum Chromo Dynamics
ஆகியவை நிரூபிக்கப்பட்ட குவாண்டம் புலக் 
கொள்கைகள். 

இவற்றின்படி, துகள்கள் அல்ல, புலங்களே 
பிரதானமானவை. துகள்கள் என்பவை 
புலங்களின் மீதான கிளர்ச்சியுறுதல்கள் 
(excitations) மட்டுமே!   

உயிரைப் பற்றிய இக்கட்டுரையில் குவாண்டம் 
கொள்கைக்கு என்ன தேவை என்று வாசகர்கள் 
வியப்புறலாம். பொருட்களைப் பற்றிய நமது 
பார்வையை, அறிவை குவாண்டம் புலக்கொள்கை  
மாற்றி அமைத்திருக்கிறது என்பதை நாம் 
உணர வேண்டும்.

முன்பு அணுக்களும் துகள்களும் பெற்றிருந்த 
முக்கியத்துவத்தை இன்று புலங்கள் பெற்றிருக்கின்றன.
மின்புலம் (electric field)
காந்தப் புலம் (magnetic field)
ஈர்ப்புப் புலம் (gravitational field)
ஹிக்ஸ் புலம் (Higgs field)
ஆகிய புலங்கள் பற்றி நாம் அறிவோம்.

உயிர் என்றால் என்ன? உடலின் பிரதான உறுப்புகளின் 
ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுதான் உயிர் ஆகும்.
இக்கூட்டுச் செயல்பாடு தொடர்ச்சியாக இருப்பதால் 
உயிர் என்பதை உடலின் பிரதான உறுப்புகளின் 
ஒருங்கிணைந்த நிகர இயக்கம் (the resultant)  என்று 
வரையறுக்கலாம்.

தீப்பற்றி எரிதலை நாம் அறிவோம். தீப்பிடித்து எரிவது
என்பது ஒரு நிகழ்வு; ஒரு process; ஒரு வேதியியல் வினை 
(chemical reaction).  உயிரின் இயக்கம் என்பதும் தீயின் 
இயக்கம் போன்றதே; அதாவது தீப்பிடித்து எரிவது
போன்றதே. எரிபொருளோ அல்லது ஆக்சிஜனோ 
தீர்ந்து போனால், தீ அணைந்து விடும். 

அது போலவே  உயிரின் இயக்கத்திற்குத் தேவையான 
ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் உயிர் போய்விடும். 
ஆக்சிஜன்  மட்டுமின்றி, உடலின் இயக்கத்திற்குத் 
தேவையான எந்த ஒன்றும் கிடைக்காவிட்டாலும் 
அல்லது உறுப்புக்களின் செயல்பாடு முடங்கி 
விட்டாலும் உயிர் எனப்படும் நிகர இயக்கம் 
நின்று விடும். The infinitesimal functions of the body என்பவையே 
உயிரின் இயக்கத்தின் அடையாளம்
 
நிழல் விழுதல், கிரகணம் ஏற்படுதல் ஆகியவை 
நிகழ்வுகள். இவற்றுக்கு பௌதிக இருப்பு உண்டு.
இவற்றின் செல்வாக்கை (influence) அண்ட வெளியில்
உணர இயலும். புலங்கள் அனைத்துக்கும் பௌதிக 
இருப்பு உண்டு.

பொருள் பற்றிய அறிவியலின் இலக்கணம் இதுதான்:
பௌதிக இருப்பு உடையதே பொருள் என்பதுதான் 
பொருளின் இலக்கணம். எனவே மின்புலம், காந்தப் 
புலம் போன்ற புலங்கள் ஆகட்டும், நிழல் விழுதல் 
கிரகணம் போன்ற நிகழ்வுகள் ஆகட்டும் இவை  
அனைத்தும் பௌதிக இருப்பு உடையவை.  எனவே 
இவை பொருள் எனற வகைமையில் வரும்.

அது போலவே உயிரும் ஒரு புலச் செயல்பாடுதான்.
மின்புலம் போன்றதே உயிர்ப்புலம் ஆகும்.
முன்புறம் என்பது பொருள் ஆகும். எனவே உயிரும் 
பொருளே ஆகும். உயிர் என்பது பொருள் அல்ல 
என்று கொண்டால், உயிர் என்பது கருத்து என்றாகி 
விடும். இது அபத்தமான முடிவு ஆகும்.

பொருள் என்பதைப் பற்றிய வரையறையில் 
பிரதான அம்சம் பௌதிக இருப்பு என்பதுதான்.
உயிறானது பௌதிக இருப்பை உடையது 
என்பதால் அது  பொருளே; பொருளன்றி வேறெதுவும் 
அல்ல.  QED.
********************************************* 

 
   


உயிர் என்பது பொருளா? கருத்தா?
பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும்!
 
 
        


வெளியிட்டாச்சு! படிங்க!
    
    

   



   

    

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக