ஞாயிறு, 27 மார்ச், 2016

கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்!
மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணனுக்கு
அண்ணியார் பிரேமலதா கடும் எச்சரிக்கை!
--------------------------------------------------------------------------
தேமுதிக தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சிகள்,
வி.சி.க, மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
இது புதிய கூட்டணி. எனவே இதற்கு "கேப்டன் விஜயகாந்த்
கூட்டணி" என்று கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்
அண்ணன் வைகோ பெயர் வைத்துள்ளார்.

ஆனால் மார்க்சிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் கேப்டன்
விஜயகாந்த் கூட்டணி என்ற பெயரை ஏற்க முடியாது என்று
கூறுகிறார். இது சரியல்ல. ஒருங்கிணைப்பாளர் வைகோ
அறிவித்த பெயரையே  கம்யூனிஸ்ட் தலைவர்கள்  ஏற்றுக்
கொள்ள வேண்டும். இதற்கு சம்மதம் இல்லை என்றால்
கம்யூனிஸ்ட்கள் கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று
அண்ணியார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கம்யூனிஸ்டுகள் வெளியேறினால் பாஜகவுடன் தேமுதிக
கூட்டணி அமைக்கும் என்பது  அண்ணியாரின்
மன ஓட்டம் என்கின்றனர் தேமுதிகவினர்.
----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக