செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

நாற்பதாண்டு காலமாக தான் நேசித்த, தனது வாழ்க்கை
முழுவதையும் அர்ப்பணித்த  மகஇக மற்றும் மாநில
அமைப்புக் கமிட்டியில் இருந்து (SOC CPI ML) விலகிக்
கொண்டிருக்கிறார் தோழர் மருதையன். இந்தத் துயரமான
நேரத்தில் நான் தோழர் மருதையனின் கரங்களை
பேரன்புடன் இறுகப் பற்றிக் கொள்கிறேன்.

வெளியேறுகிறேன் என்பதை விட வெளியேற்றப்
படுகிறேன் என்பதே உண்மை என்கிறார் தோழர்
மருதையன்.ஆம், அமைப்பு சார்ந்த இது போன்ற
விஷயங்களைப் பொறுத்து மார்க்சிய லெனினிய
அமைப்புகளில், செய்வினைக்கும் செயப்பாட்டு
வினைக்கும் வேறுபாடே கிடையாது.

அதிகபட்ச அர்ப்பணிப்பு, அதிகபட்ச தியாகம், கடும்
உழைப்பு ஆகியவற்றால் ஆயிரக் கணக்கான
இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்த தோழர் மருதையன்
ஒரு மார்க்சிய லெனினிய அமைப்பில் நீடிக்க
முடியவில்லை என்பது சமகாலத்தின் துயரங்களில் ஒன்று.
இதற்கு எவ்விதத்திலும் தோழர் மருதையன்
காரணம் அல்ல என்ற என் கருத்தில் மிகப்பலரும்
உடன்படக்கூடும்.





    
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக