ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

BSNL நிறுவனத்தை யாரும் விழுங்கவில்லை.
யாரும் விழுங்கவும் இயலாது. தனியார்
நிறுவனங்கள் (ஏர்டெல், ஜியோ போன்றவை)
திட்டமிட்டு BSNLக்கு எதிராக, இழிந்த பொய்களைத்
திட்டமிட்டுப் பரப்புகின்றன. தங்களைப்
போன்றவர்கள் முகநூலில் BSNLக்கு எதிராகவும்
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் எழுதி
வருகிறீர்கள்.

BSNLல் பல்லாயிரம் கோடிரூபாய் செலவில்
புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப் பட்டு
வருகிறது. BSNL  மறுமலர்ச்சிப் பாதையில்
பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
4G service roll outக்கான பணிகள் அதிதீவிரமாக
கொண்டிருக்கிறன. ஊழியர்கள் VRSல் செல்வது
என்பது புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி.

லட்சக் கணக்கான BSNL தொழிலாளர்களும்
அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட CPI, CPM
தொழிற்சங்கங்களும் இந்தப் புத்தாக்கத் திட்டத்தை
வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளன.

BSNL என்பது முற்றிலும் அறிவியல் தொழில்நுட்பம்
சார்ந்த ஒரு நிறுவனம். குறைந்தபட்சமான அறிவியல்
தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே
BSNL குறித்துப் புரிந்து கொள்ள முடியும். எனவே
அருள்கூர்ந்து BSNL க்கு எதிரான கருத்துக்களைப்
பரப்புவதை உடனே நிறுத்தவும்.
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக