செவ்வாய், 31 மார்ச், 2020

குரோனி முதலாளித்துவமும்!
கொரோனா நிவாரணமும்!
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
1995ல் நரசிம்மராவ் காலத்தில் LPG கொள்கைகள்
அறிமுகமாகி நாட்டின் பொருளாதாரத்தையே
திசை திரும்பின. உலக வர்த்தகக் கழகத்தில்
நாம் உறுப்பினர் ஆனோம். இந்தியச் சந்தையில்
அந்நிய நாட்டுப் பொருட்கள் மண்டின.

ஒவ்வொரு ஊரிலும் புதுப் பணக்காரர்கள்
தலையெடுத்தார்கள். இவர்கள் அனைவருமே
அரசியலில் ஈடுபட்டு தங்களின் செல்வாக்கை
அரசியலில் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள்.

இந்த மில்லேனியத்தின் பிறகான காலக்கட்டத்தில்
இவர்கள் குரோனி முதலாளிகளாக ஆகிப்போனார்கள்.
இத்தகைய குரோனி முதலாளியத்துக்கு ஆக்கமும்
ஊக்கமும் தந்த டாக்டர் மன்மோகன் சிங்கின்
ஆட்சியில் இவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ச்சி அடைந்தார்கள்.

பாரம்பரிய முதலாளிகளின் ஒழுங்கோ சட்ட திட்டமோ
குரோனிகளுக்குக் கிடையாது. எந்த ஒரு ORDERம் அவர்கள்
அறிய மாட்டார்கள். எந்தச் சட்டத்தையும் அவர்கள்
மதிக்க மாட்டார்கள். இவர்களே குரோனிகள்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ராமலிங்க ராஜூவை
உங்களுக்குத் தெரியுமா? இவன் ஒரு குரோனி.

நம்மூர் மாறன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறன்
ஒரு குரோனி; இவர் ஒரு பெருங்குரோனி ஆவார்.

ராஜாத்தி அம்மாள் இன்னொரு பெருங்குரோனி. பாரம்பரிய
பூர்ஷ்வா ரத்தன் டாட்டாவின் கண்ணில் விரலை விட்டு
ஆட்டியவர் குரோனி ராஜாத்தி அம்மாள். டாட்டாவின்
சொத்துக்களைத் தான் அபகரித்துக் கொண்டவர்
பெருங்குரோனி ராஜாத்தி அம்மாள். மனிதகுல வரலாறு
கண்டும் கேட்டும் இராத புழுவினும் இழிந்த ஈனத்
தற்குறியான ராஜாத்தி அம்மாள் பாரம்பரிய
பூர்ஷ்வாவான ரத்தன் டாட்டாவின் சொத்துக்களை
அபகரித்துக் கொள்ள முடிகிறது என்றால், குரோனி
முதலாளியத்தின் செல்வாக்கு எத்தகையது என்று
புரிந்து கொள்ளலாம்.

ரத்தன் டாட்டாவுக்கு போன் செய்து அவர் ஒரு குறிப்பிட்ட
துறையில் செய்து வரும் தொழிலை விட்டு விட
வேண்டும் என்று மிரட்டியவர் தயாநிதி மாறன்.
ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு
இந்தச் செய்தி நினைவிருக்கும்.

கொரோனா நிவாரணத்துக்காக பிரதமரும் மாநில
முதல்வர்களும் நிதி கேட்கிறார்கள். பாரம்பரிய
பூர்ஷ்வாக்கள் அனைவரும் கொடுக்கிறார்கள்.
முதல் ஆளாக ரூ 1500 கோடியை டாட்டா கொடுத்துள்ளார்.
முகேஷ் அம்பானி ரூ 500 கோடி கொடுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா சிகிச்சைக்கான இந்தியாவின் முதல்
மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்துள்ளார்.

குரோனி முதலாளிகளுக்கு இத்தகைய கட்டு திட்டம்
எதுவும் கிடையாது. கொள்ளை அடிப்பது தவிர
வேறு எதிலும் அவர்களுக்கு அக்கறை கிடையாது.
அவர்களும் நன்கொடை கொடுப்பார்கள். எப்போது
தெரியுமா? அரசுக்கு ரூ 1 கோடி நன்கொடை கொடுத்தால்
ரூ 100 கோடி கொள்ளை அடிக்கலாம் என்று இருந்தால்
குரோனிகளும் நன்கொடை கொடுப்பார்கள்.

எனவே தமிழ்நாட்டுக் குரோனிகள் மாறன் குழுமமும் சரி,
ராஜாத்தி அம்மாளும் சரி கொரோனா நிவாரணம் எதுவும்
வழங்கப் போவதில்லை. இதுவே உண்மை!
*****************************************************************











  .   


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக