ஞாயிறு, 23 மே, 2021

 எது எப்படியானாலும் நாம் வெல்வோம். வென்றுகொண்டிருக்கிறோம்.

தலைக்கு வந்தது நிச்சயம்
தலைப்பாகையுடன் போய்விடும்.
ஏனென்றால்
பிற நாட்டினரைக் கொன்று குவித்த
ஏகாதிபத்திய வெறியின் ரத்தக் கறை
நம் கரங்களில் இல்லை.
பூர்வ குடிகளின் பிணக்குவியலின் மேல்
நம் சாம்ராஜ்ஜியம் எழுப்பப்பட்டிருக்கவில்லை
அடிமைகளின் ரத்தத்தை உறிஞ்சி
நம் வயல்கள் செழித்திருக்கவில்லை
அந்நிய கலாசாரத்தை அழித்து
நம் மதம் வளர்திருக்கவில்லை
வர்க்க எதிரிகளின் மரண ஓலங்களினால்
நிறைந்திருக்கவில்லை நம் வான் வெளிகள்
நிச்சயம் நம் பூமியிலும்
நம்மால் கண்ணீர் துளிகள் சிந்தவைக்கப்பட்டிருக்கின்றன
ஆனால், நம்மைப் போல்
தன்னைத் தானே சீர்திருத்திக் கொண்ட நாடு தரணியில் வேறில்லை
நம் தேசத்தின் வழிகாட்டிகளின் ஆன்மாக்கள் சர்வே பவந்து சுகினஹ என்று அனைவரின் நலனுக்காகவுமே துடித்திருக்கின்றன
அது நம்மை வழிகாட்டும்வரை
அந்த முன்னோர்களின் ஆசிகள் நமக்கு இருக்கும்வரை அவர்களிடமிருந்து நாம் விலகாமல் இருக்கும்வரை
எந்தப் பேரிடரையும் எதிர்த்து
இந்த நம் தேசம் எழுந்து நிற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக