சனி, 21 மே, 2022

 ராஜிவ் படுகொலை சி ஐ ஏவின் சதியே!

-----------------------------------------------------------

இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டில் 

மக்கள் செல்வாக்கு நிறைந்த 

வலிமை வாய்ந்த தலைவர்கள் பிரதமர்களாக 

வருவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பியதில்லை.


தேவ கவுடா போன்ற முட்டாள்கள் 

ஐ கே குஜ்ரால் போன்ற சொத்தைகள் 

சந்திரசேகர் போன்ற காட்டிக் கொடுப்பவர்கள் 

வி பி சிங் போன்ற சி ஐ ஏ ஏஜெண்டுகள் 

இத்தியாதி ஆட்கள்தான் இந்தியப் பிரதமர்களாக

இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் 

விருப்பம். விருப்பம் மட்டுமல்ல, அதுதான் 

அவர்களின் நிலைபாடும் ஆகும்.  

  

ராஜிவ் காந்தி போன்ற பிரதமர்களை 

அமெரிக்கா  விரும்பவே இல்லை. எனவே 

போலியான போபர்ஸ் ஊழல் என்னும் 

ஆதாரமேயற்ற ஒரு ஊழலை தன்னுடைய 

ஏஜென்ட் வி பி சிங் மூலமாகக் கிளப்பி

அதை ஊதிப்பெருக்கி பூதாகாரமாக ஆக்கி

ராஜீவை பதவி இழக்க வைத்தது அமெரிக்க சி ஐ ஏ. 


ராஜிவ் படுகொலை அமெரிக்க சி ஐ ஏ மற்றும் 

விடுதலைப் புலிகள் ஆகிய இருவராலும்

செய்து முடிக்கப்பட்ட ஒரு படுபாதகச்

செயல். இதில் விடுதலைப் புலிகள் 

EXECUTION என்ற பகுதியைச் செய்து

முடித்தனர்.


ராஜிவ் கொலைக்கான திட்டமிடலின் 

முதல் நடவடிக்கை வி பி சிங்கால் 

செய்யப் படுகிறது. அதுவரை ராஜீவுக்கு 

இருந்த SPG பாதுகாப்பை வி பி சிங் 

ஒரு உத்தரவைப் பிறப்பித்தத்தன் மூலம் 

ரத்து செய்கிறார்.


ஆக  ராஜிவ் படுகொலையின் பிள்ளையார் 

சுழி இதுதான். அதாவது ராஜீவுக்கு இருந்த 

SPG பாதுகாப்பை வாபஸ் பெற்றதுதான்.

வாபஸ் பெற்றவர் சி ஐ ஏ ஏஜண்டான

வி பி சிங்.


இது உண்மை. இது மட்டுமே உண்மை.

யார் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

***************************************************      .


ராஜிவ் படுகொலையின் முதல் நடவடிக்கை எது?


  

ஆக ராஜிவ் படுகொலையின் முதல் குற்றவாளி 

A1 யார் என்றால், அது வி பி சிங்தான்.   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக