திங்கள், 30 மே, 2022

பத்திரிகையாளர்கள் மீது 
கிஷோர் கே சுவாமி புகார்!
உண்மை வெளிவர வேண்டும்!
-----------------------------------------------
கிஷோர் கே சாமி என்னும் குட்டி முதலாளித்துவ 
அரசியல் ஆர்வலரை நம்மில் பலர் அறிந்திருக்கலாம்.
திமுக ஆட்சி வந்ததுமே கிஷோர் கே சுவாமி 
கைது செய்யப்பட்டார்.

அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதனால் 
ஆறு மாத காலம் அவர் சிறையில் இருக்க நேரிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரபல 
பத்திரிகையாளர்கள் கிஷோர் கே சுவாமியின்
விவகாரத்தில் தலையிட்டு உள்ளனர். அவர்கள் 
அ) குணசேகரன் ஆ) கார்த்திகைச் செல்வன் 

1) பார்ப்பனரான கிஷோர் கே சுவாமிக்கு 
சிறையில் சைவ உணவு கொடுக்கக் கூடாது என்றும் 
மாமிச உணவைக் கொடுக்க வேண்டும் என்றும்   
போலீஸ் அதிகாரிகளிடம் கார்த்திகைச் செல்வன் 
வலியுறுத்தியதாக கிஷோர் கே சுவாமி புகார் 
தெரிவிக்கிறார். (பார்க்க:: தாமரை யூடியூப்)

2) கிஷோர் கே சுவாமியை புழல் சிறையில் அடைக்கக் 
கூடாது என்றும், அதற்குப் பதிலாக செங்கல்பட்டு
சிறையில் அடைக்க வேண்டும் என்றும் 
சிறையில் அவரை நிர்வாணப் படுத்த வேண்டும் 
என்றும் குணசேகரன் கூறியதாக கிஷோர் கே
சுவாமி புகார் தெரிவிக்கிறார்.
(பார்க்க: தாமரை யூடியூப்)

குணசேகரன், கார்த்திகச் செல்வன் இருவர் மீதும்
கிஷோர் கே சுவாமி கூறியுள்ள புகார்கள் மிகவும் 
தீவிரமானவை. இந்தப் புகார்கள் உண்மையா 
என்று தெரியவில்லை.

புகார்கள் பொய் என்றால், கிஷோர் கே சுவாமி 
மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவர் 
சொன்னது பொய் என்று நிரூபிக்க வேண்டியது 
ஊடகவியலாளர்கள் குணசேகரன் கார்த்திகைச் 
செல்வன் ஆகிய இருவரின் கடமை ஆகும்.

எது உண்மை? தெரியப்படுத்துங்கள் குணசேகரன் 
அவர்களே! கார்த்திகைச் செல்வன் அவர்களே!
************************************************
         
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக