புதன், 25 மே, 2022

 ராஜிவ் காந்தி படுகொலைக்காக

பேரறிவாளனுக்கு  நீதிமன்றம் வழங்கிய 

தண்டனைகள் என்னென்ன?

---------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------

ராஜிவ் காந்தி படுகொலை மே 21,1991ல்

நிகழ்த்தப் பட்டது. சம்பவம் நடந்து 

21 நாட்களுக்குப் பின்னரே, ஜூன் 11, 19991ல் 

பேரறிவாளன் போலீசிடம் பிடிபடுகிறார்.


கொலைச்சதியில் பங்கேற்று விட்டு, கொலைச்சதி 

சார்ந்த தடயங்களை அப்புறப் படுத்தி விட்டு 

நல்ல பிள்ளை போல பெரியார் திடலில் வந்து 

பதுங்கிக் கொண்டார் பேரறிவாளன்


குண்டு வெடிப்பு வன்முறை போன்ற 

கொடிய வன்முறையை தந்தை பெரியார் 

ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.

தந்தை பெரியார் மட்டுமல்ல ஆசிரியர் 

வீரமணி அவர்களோ அவரின் கட்சியில் உள்ள 

ஏனைய திராவிடர் கழகத் தலைவர்களோ

வன்முறையை குண்டு வைப்பதை ஏற்றுக் 

கொள்ளாதவர்கள்.


இந்நிலையில் ராஜிவ் படுகொலையின் 

கொலைச்சதியில் பங்கேற்று விட்டு 

பேரறிவாளன் பெரியார் திடலில் 

புகலிடம் தேடி இருப்பதை ஆசிரியர் 

வீரமணி அவர்களோ, திக தலைவர்களோ 

விரும்பவில்லை.


அப்போது திக தலைவர்களில் ஒருவரான 

கலி பூங்குன்றன் போலீசின் கொடுமைக்கு 

இலக்கானார். விசாரணை என்ற பெயரில் 

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் CBI போலீசார் 

கலி பூங்குன்றனின் முதுகுத் தொலியை 

உரித்து விட்டனர்.


எனவே பேரறிவாளனைத் தேடி, CBI போலீசார் 

பெரியார் திடலுக்கு வந்ததுமே, ஆசிரியர் 

வீரமணி அவர்கள் பேரறிவாளனை போலீசில் 

தயக்கமின்றி ஒப்படைத்து விட்டார். 


பேரறிவாளனின் சிறைவாசம் ஜூன் 11, 1991ல் 

தொடங்குகிறது. பூந்தமல்லி தடா நீதிமன்றம் 

1998 ஜனவரியில் தனது தீர்ப்பை வழங்குகிறது.

நீதியரசர் நவநீதம் அவர்கள் குற்றம் 

சாட்டப்பட்ட அனைவருக்கும் (26 பேருக்கும்)

மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.


பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள்:

1) 3 மாத சிறை 

2) ஓரண்டு சிறை 

3) இரண்டு ஆண்டு சிறை 

4) மூன்றாண்டு சிறை 

5) இரண்டு ஆயுள் தண்டனைகள் 

6) மரண தண்டனை.


அண்மையில் (மே 2022ல்) உச்சநீதிமன்றம் 

அவரின் ஆயுள் தண்டனையை தண்டனைக் 

குறைப்பு (remission) செய்து பேரறிவாளனை 

விடுதலை செய்துள்ளது 

 

பேரறிவாளனுக்கு ஒரு மரண தண்டனை 

இரண்டு ஆயுள் தண்டனை என்பதை 

ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு தீவிரமான தண்டனைகள் வழங்கப் 

பட்டுள்ளபோது, அந்த அளவுக்கு அவர் புரிந்த 

குற்றங்கள் என்ன என்று உச்ச நீதிமன்றத்

தீர்ப்புரையைப் படித்துப் பார்த்து வாசகர்கள் 

உண்மையை  அறியலாம்.


நல்ல ஆங்கிலப் புலமையும் சட்டம் சார்ந்த 

அடிப்படை அறிவும் உள்ள வாசகர்கள் 

உச்ச நீதிமன்றத் தீர்ப்புரையை நன்கு 

படிக்குமாறு வேண்டுகிறேன்.

**************************************          

 

  

எந்த லிங்க்? அனைவரும் அறிந்த 

செய்திகளுக்கு நான் ஏன் லிங்க் 

கொடுக்க வேண்டும்?


எழுதப்பட்ட விஷயங்கள் அனைத்தும் 

யார் எவராலும் ஒருபோதும் சொல்லப் 

படாதவை. நீதியரசர்களின்

தீர்ப்புரை பொதுவெளியில் உள்ளது.

எனவே இதில் லிங்க் அளிப்பதற்கு 

எதுவும் இல்லை என்று நான் கருதுகிறேன்.


ஒருவேளை நான் கருதுவது தப்பாக 

இருந்தால் என்னைத் திருத்தவும்.

மிகுந்த கஷ்டத்துக்கு இடையே 

பல பேரின் இடைஞ்சல்கள், மிரட்டிப் 

பார்க்கலாமா என்று ஆழம் பார்த்த  

இழிபிறவிகள், கியூ பிராஞ்சு ஏஜெண்டுகள் 

உளவுத்துறையின் கையாளாக முகநூலில் 

இயங்கும் போலி மார்க்சிஸ்டுகள் என்று 

பலதரப்பட்ட தீயவர்களின் குறுக்கீட்டுக்கு 

இடையேதான் இதை நான் எழுதுகிறேன்.


எனவே என்னை ஆதரியுங்கள்.

நான் எழுதியதைப் பரப்புங்கள்.

நான் ஏதாவது கோபமாகச் சொல்லி 

விடவில்லை என்று நினைக்கிறேன்.

ஒருவேளை கோபமாகச் சொல்லி 

விட்டதாக உங்களுக்கு ஒரு எண்ணம் 

ஏற்படுமேயானால், என்னை 

மன்னியுங்கள்.


உங்களை மாதிரி நல்லவர்கள் கொஞ்சம் 

பேர்தான், நண்பரே. மீதிப் பலர் 

கணிகைக்குப் பிறந்த கயவர்கள்.

காட்டிக் கொடுப்பவர்கள்.இந்நேரம் 

திமுக ஐடி பிரிவுக்கும் கியூ பிராஞ்சுக்கும் 

போலி மார்க்சிஸ்ட் நாய்கள் ஸ்கிரீன் 

ஷாட்டை அனுப்பி வைத்திருப்பார்கள்.





   .    

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக