ஞாயிறு, 13 மார்ச், 2022

குட்டி முதலாளித்துவத்தின் ஆட்டு மூளையில்
உதிக்கும் அபார யோசனைகள்!
ஐந்து மாநிலத் தேர்தல் பகுப்பாய்வு!
------------------------------------------------------------------
வெறும் வாயை மென்று கொண்டிருந்த 
குட்டி முதலாளித்துவத்துக்கு அவல் கிடைத்து விட்டது.
உபி தேர்தலைக் கையில் எடுத்துக்கொண்டு 
அவுத்துப்போட்டு ஆடிக்கொண்டு இருக்கிறது 
குட்டி முதலாளித்துவம்.

உபி தேர்தலில் காங்கிரஸ் மர்கயா! அதாவது செத்துப் 
போச்சு! அகிலேஷ் யாதவ், மாயாவதி என்று எல்லோருமே 
தோற்று விட்டார்கள்.

குட்டி முதலாளித்துவத்தின் ஆட்டு மூளை எலக்ட்ரானின் 
வேகத்தில் செயல்பட்டு, உபியில் எதிர்க்கட்சிகளின்
படுதோல்விக்குக் காரணம் என்ன என்று கண்டு பிடித்து  
உலகிற்கு அறிவித்து விட்டது.

அகிலேஷும் மாயாவதியும் தனித்துப் போட்டி 
விட்டதால்தான் இந்தத் தோல்வி என்ற முடிவுக்கு 
வந்த ஆட்டு மூளை அசடுகள், இருவரும் கூட்டணி 
மட்டும் அமைத்திருந்தால், மவனே, யோகியைப் 
பொளந்திருக்கலாம் என்று பிதற்றிக் கொண்டு 
திரிகிறார்கள்.
 
இந்தக் குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குஷ்ட 
ரோகிகளுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால்,
2019 நாடாளுமன்றத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும்
கூட்டணி வைத்துத்தான் போட்டியிட்டன என்ற 
உண்மைதான்.

ஆம், கணிகைக்குப் பிறந்த பயல்களே,

உபியில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற இடங்களில் 
SP, BSP ஆகிய இரு கட்சிகளும் சம அளவு தொகுதிகளில் 
போட்டி இடுவது என்ற அடிப்படையில் கூட்டணி 
அமைந்தது. SP, BSP இரண்டும் தலா 38 என்ற கணக்கில் 
76 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மீதியுள்ள 
4ல் சோனியா ராகுல் இருவரும் போட்டியிடும் தொகுதிகளில் 
அவர்களை ஆதரிப்பது என்றும், மீதி 2ஐ ஜாட் கட்சி
நடத்தும் அஜித்சிங்கிற்கு கொடுப்பது என்றும் முடிவாகியது.
அப்படியே கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தனர்.

ஆனால் முடிவு சோகமான முடிவாகிப் போச்சு. 
(2014 முடிவு பாஜக = 73, சமாஜ்வாதி = 5, காங் =2, பகுஜன் - 0).
2019ல் இதில் பெரிய மாற்றம் இல்லை. அகிலேஷ்-மாயாவதி 
கூட்டணி எந்த அதிசயத்தையும் நிகழ்த்தவில்லை.

2019 முடிவு: 
பாஜக = 64, சமாஜ்வாதி = 5, பகுஜன்= 10, காங் = 1)
இத்தேர்தலில்தான் காங்கிரசின் பாரம்பரியத் தொகுதியான 
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்கடிக்கப் பட்டார்.
ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிர்தி இராணி 
ராகுலைத் தோற்கடித்தார். 

தேர்தல் முடிவுகளைப் பார்த்ததுமே அகிலேஷுக்கும் 
மாயாவதிக்கும் ஒருவரை மற்றவர் ஏமாற்றி விட்டார் 
என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. இருவரும் பரஸ்பரம் 
கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். 
அத்தோடு மகாகாட்பந்தன் என்னும் கூட்டணி 
கிழிந்து நார் நாராகிப் போனது.

ஆட்டு மூளையைக் கொண்டுள்ள தமிழகக் குட்டி 
முதலாளித்துவத்துக்கு இது தெரியுமா? தெரியாது.
போலி இடதுசாரி,
போலி நக்சல்பாரி,
போலி மாவோயிஸ்ட், 
போலி முற்போக்கு 
என்று இத்தியாதி தற்குறிகளுக்கு இந்த வரலாறெல்லாம் 
தெரியாது.

கூட்டணி வைத்தாலும் தோல்விதான்!
கூட்டணி வைக்கவிட்டாலும் தோல்விதான்!
இதுதான் TRACK RECORD. எனவே கூட்டணி மலத்தை 
உன்ன வேண்டாம் என்று மாயாவதியும் அகிலேஷும் 
முடிவெடுத்த பின்னால், இங்குள்ள போலி முற்போக்குக்   
கபோதிகள் ஆசைப்பட்டு என்ன லாபம்?

களத்தில் பாஜகவைச் சந்திக்க வேண்டும்.
சந்தித்து அதை முறியடிக்க வேண்டும்.
முடியாவிட்டால் தற்கொலை செய்து கொண்டு 
சாக வேண்டும். வேறு குறுக்கு வழி இல்லை.
****************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக