புதன், 22 ஜனவரி, 2020

தடுப்பூசிகளும் பிற்போக்குப் பிண்டங்களும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தடுப்பூசி போட
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி
நியூட்டன் அறிவியல் மன்றம் பிரச்சாரம்
செய்து வருகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தடுப்பூசிக்கு
எதிரான பிரச்சாரம் உச்சத்தில் இருக்கிறது.

அண்மையில் ஜனவரி 19 அன்று நாடு முழுவதும்
வாய் வழி போலியோ சொட்டு மருந்தை ஐந்து
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கும்
நிகழ்வு நடந்தேறியது.

கேரள மாநிலத்தில் 25 லட்சம் பேருக்கு போலியோ
சொட்டு மருந்து அளிக்க கேரள அரசு சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆனால் 20 லட்சம்
குழந்தைகள் மட்டுமே சொட்டு மருந்தை ஏற்றுக்
கொண்டனர். ஐந்து லட்சம் குழந்தைகளுக்கு
அவர்தம் பெற்றோர் சொட்டு மருந்து அளிக்க
அனுமதிக்கவில்லை.

இந்த ஐந்து லட்சம் பேரும் பிரதானமாக மலப்புரம்
மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமியர்கள்
நிறைந்துள்ள மாவட்டம் இது. இஸ்லாமிய மூட
நம்பிக்கைப்படி, தடுப்பூசி  ஹராம் ஆகும்.
(ஹராம் = விலக்கப்பட்டது). இஸ்லாமிய மதவெறி
அமைப்புகள் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு
தடுப்பூசி போடப் பெற்றோரை அனுமதிப்பதில்லை.

இன்று நேற்றல்ல, மலப்புரம் மாவட்டத்தில் பல
ஆண்டுகளாகவே எந்த விதமான தடுப்பூசியும்
அங்குள்ள இஸ்லாமிய மதவெறிச் சக்திகளால்
அனுமதிக்கப் படுவதே இல்லை.

சரி, தமிழகத்துக்கு வருவோம். தமிழகத்தில்தான்
தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் அதன் வெறித்தனமான
உச்சத்தில் இருக்கிறது. என்றாலும் இங்கு இஸ்லாமிய
மதவெறியர்களின் தடுப்பூசி எதிர்ப்பு என்பது மிகவும்
குறைவாகவே இருக்கிறது.  கேரள இஸ்லாமியர்களைப்
போல் தமிழக இஸ்லாமியர்கள் நடுவில் தடுப்பூசி
எதிர்ப்புப் பிரச்சாரம் பெரிய அளவில் இல்லை.

பின் யார் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள்? முற்போக்கு
முகாம் என்று அறியப்படும் போலி முற்போக்கு முகாமின்
ஆசாமிகளே தடுப்பூசி எதிர்ப்பில் தமிழ்நாட்டில்
முன்னணியில் இருக்கிறார்கள்.

ஹீலர் பாஸ்கர் போன்ற போலி வைத்தியர்கள்,
கல்பாக்கம் புகழேந்தி போன்ற மருந்து நிறுவனக்
கைக்கூலிகள், சீமான் வகையறாக்கள், தமிழ்
தேசியம் பேசும் பல்வேறு பிற்போக்காளர்கள்,
போலி இடதுசாரிகள், போலி மார்க்சிஸ்டுகள்,
போலி நக்சல்பாரிகள் என்று போலி முற்போக்கு
முகாமில் உள்ள ஆசாமிகள்தான் தடுப்பூசிக்கு
எதிராக வரிந்து கட்டிக் கொண்டு, பேசியும் எழுதியும்
செயல்பட்டும் வருகிறார்கள்.

தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் அறிவியலுக்கு எதிரானது.
பிற்போக்கானது; முட்டாள்தனமானது. சமூகத்துக்கு
எதிரான பெருங்கொடுமையை இழைப்பது.
கடுமையாக எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டிய
விஷயம் இது.தடுப்பூசியை எதிர்ப்பவர்கள்
கொலைகாரப் பாவிகள். குழந்தைகளுக்கு
எதிரான கொடுங்குற்றவாளிகள்.

பெரியாரின் பெயரால் கட்சி நடத்தும் யாராவது அல்லது
எந்த அமைப்பாவது தடுப்பூசியை எதிர்க்கும்
பிற்போக்குத் தனத்தை என்றாவது கண்டித்து
இருக்கிறார்களா?

முகநூலில் புரட்சிகரச் சுயஇன்பம் அனுபவிக்கும்
குட்டி முதலாளித்துவத் தற்குறிகள் என்றாவது
தடுப்பூசியை எதிர்க்கும் பிற்போக்குத் தனத்தை
எதிர்த்து இருக்கிறார்களா? கிடையாது.

போலி இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள் என்று
பலவாறான முற்போக்குகள் என்றாவது தங்களின்
அமைப்பு வலிமையை தடுப்பூசிக்கு ஆதரவாக
என்றாவது பயன்படுத்தி இருக்கிறார்களா?

ஒரு போலி நக்சல்பாரி இணையதளம் தடுப்பூசிக்கு
எதிராக கட்டுரைகளை வெளியிட்டு, தனது
பிற்போக்குப் பாத்திரத்தை நாடறியச் செய்தது.
இதுதான் தமிழ்நாட்டு முற்போக்குகளின் லட்சணம்!

தடுப்பூசிகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும்
பிற்போக்குப் பிண்டங்களை முறியடிப்போம்!
உரிய தடுப்பூசிகளை உரிய நேரத்தில் அரசின்
மருத்துவத் துறையின் அறிவுரைப்படி போட்டுக்
கொள்வோம்!
********************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக