திங்கள், 27 ஜனவரி, 2020

TNPSC Group IV ஊழலும் செயலற்ற இடதுசாரிகளும்!
உதயநிதியின் சைக்கோ பட விமர்சனம் எழுதிய
"வினவு"  இணையதளமும்
சில்லுக் கருப்பட்டி பட விமர்சனம் எழுதிய 'கீற்று'ம்!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
1) ஊழல்களும் முறைகேடுகளும் பல்வேறு வழிகளில்
நடக்கின்றன. எனினும் ஒரு புரிதலை ஏற்படுத்திக்
கொள்ள, பிரதானமாக ஊழல்கள் நடைபெறும்
வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

2) ஊழல்கள் மூன்று வகைப்படும்.
அ) அமைச்சர்கள் மட்டும் ஈடுபடும் ஊழல்கள்
ஆ) அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து
கொண்டு செய்யும் ஊழல்கள்
இ) அதிகாரிகள் மட்டும் செய்கின்ற ஊழல்கள்.

3) TNPSC Group IV ஊழல் வெளியாகி தற்போது
CB CID போலிசாரின் கைதுப் படலம் நடந்து
கொண்டிருக்கிறது. இந்த ஊழல் மேற்கூறிய
வகைகளில் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.
அதாவது அதிகாரிகள் மட்டும் செய்யும் ஊழல்.

4) 50 கோடி ரூபாய்க்கு விலை போகிறது VC பதவி.
(VC = பல்கலைத் துணை வேந்தர்). இது அமைச்சர்களின்
ஏரியா.

5) உயர் அதிகாரிகளுக்கான Group I பதவி நியமனத்தில்
நடைபெறும் ஊழலானது அமைச்சர்களும்
அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஊழல் ஆகும்.
ஒரு போஸ்டிங்கிற்கு 50 லட்சம் முதல் 1 சி வரை விலை
போகும் நியமனம் இது. Group I என்றால் சும்மாவா?

6) ஆனால் Group IV என்பது அப்படி அல்ல. இதில்
அதிக பட்சமாக ஒரு போஸ்டிங்கிற்கு ரூ 5 லட்சம்
வரை மட்டுமே பெற இயலும். ஏனெனில் Group IV
நியமனம் என்பது VAO, இளநிலை எழுத்தர்,
டைப்பிஸ்ட் போன்ற சிறிய பதவிகளுக்கானது.
இந்தப் பதவிக்கு ரூ 50 லட்சம் கொடுக்க யாரும்
தயாராக இருக்க மாட்டார்கள்.

7) எனவே Group IV ஊழல் என்பது சில அதிகாரிகள்
தங்களுக்குள் சரிக்கட்டிக் கொண்டு, லஞ்சப்
பணத்தைப் பகிர்ந்து கொண்டு செய்யும் சிறிய
அளவிலான ஊழல் ஆகும்.

8) 1969 முதலான திமுக ஆட்சியிலும் தொடர்ந்து
இன்று வரை நடந்து வரும் திராவிட ஆட்சியிலும்
ஊழல் என்பது நிறுவனமயப் படுத்தப் பட்டதோடு
decentralise ஆகியும் இருக்கிறது என்பதன் அடையாளம் இது.

9) சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற Group I தேர்வு
முறைகேடு குறித்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு
உள்ளது. இது அமைச்சர்களும் அதிகாரிகளும்
கூட்டுச் சேர்ந்து நடத்திய ஊழல் ஆகும். இதில்
குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கான நிகழ்தகவு
0.000003 ஆகும்.

10) அதிமுக ஆட்சியில் நடக்கும் இந்த ஊழலை எதிர்க்
கட்சியான திமுக கண்டு கொள்ளாது. அதே போல
திமுக ஆட்சியின்போது நடைபெறும் ஊழலை அதிமுக
கண்டு கொள்ளாது. இருவருக்கும் இடையில்
பரஸ்பரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.

11) Group IV ஊழலை எந்த ஊடகமோ, எந்தத் தலைவரோ
அம்பலப் படுத்தவில்லை. தேர்வு எழுதியவர்களே
அதைக் கண்டறிந்தனர்.நேர்மையான பயிற்சி மைய
நிர்வாகிகளும், கல்வி சார்ந்து இயங்கும் நியூட்டன்
அறிவியல் மன்றம் போன்ற சிறிய அமைப்புகளுமே
இந்த ஊழலை அம்பலப் படுத்தின; எதிர்த்துப் போராடி
முறியடித்தன.

12) 16 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் நடந்த
இந்த ஊழலை அம்பலப் படுத்துவதிலோ, எதிர்த்துப்
போராடுவதிலோ இடதுசாரிகளின் பங்கு என்ன?
பூஜ்யம்! பூஜ்யம்!! பூஜ்யம்!!!

13) தமிழக அரசு ஊழியர்கள் தொடர்புடைய எந்த
ஊழலையும் CPI, CPM கட்சிகள் கண்டு கொள்ளாது.
அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களில்
இக்கட்சிகளின் ஆதரவாளர்களே உறுப்பினர்களாக
இருப்பதாலும், இவர்கள் தரும் சந்தா, லெவி,
நன்கொடை ஆகியவற்றின் மூலமே இக்கட்சிகள்
வயிறு வளர்ப்பதாலும், அவர்கள் இத்தகைய
ஊழல்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

14) CPI, CPM தவிர்த்த பிற இடதுசாரிகள் இந்த
விஷயத்தில் என்ன செய்து கிழித்து விட்டார்கள்?
இவர்கள் மக்களுக்குப் பயன்படாதவர்கள்.

15) Group IV தேர்வை டாட்டா பிர்லா வீட்டுப் பிள்ளைகளா
எழுதுகிறார்கள்? குப்பன், சுப்பன், ராமசாமி,
துலுக்காணம், செல்வராஜ் போன்ற அடிமட்டத்து
வாழ்நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகள்தானே
எழுதுகிறார்கள்?

16) பதினாறு லட்சம் பேர் எழுதிய தேர்வில் முறைகேடு
என்பது சும்மா கண்டு கொள்ளாமல் விடக் கூடிய
ஒன்றா? மக்களின் பிரச்சினைக்கு முகம்
கொடுக்கத் துப்பில்லாமல் எவர் ஒருவரும் தன்னை
இடதுசாரி என்று அழைத்துக் கொள்ள அருகதை உண்டா?

17) மக்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துப்
போராடாமல், மக்களை நம் பக்கம் ஈர்க்க முடியுமா?

18) DPI அலுவலகம் முன்போ அல்லது TNPSC அலுவலகம்
முன்போ ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லாத
வெத்துவேட்டு இடதுசாரிகளே, உங்களின்
மார்க்சிய அருகதை என்ன?

19) பிரபல "நக்சல்பாரி" இணையதளமான "வினவு"
உதயநிதி நடித்த சைக்கோ பட விமர்சனத்தை
எழுதி முகப்பில் வைத்துள்ளது! இந்த விமர்சனம்
தாமதமானால் புதிய ஜனநாயகப் புரட்சியும்
தாமதமாகி விடும் என்று "வினவு" கருதுகிறது போலும்!
       
20) உலகப் புரட்சியை இணையதளத்தில் மட்டும்
நடத்திக் கொண்டிருக்கும் பெரும் முற்போக்கு(???)
"கீற்று" இணைய தளத்தில் சில்லுக் கருப்பட்டி என்ற
பட விமர்சனம் மிகுந்த ரசனையோடு எழுதப் பட்டுள்ளது.

21) Group IVல் ஊழல் நடந்தால் என்ன? எங்களுக்கு சினிமா
விமர்சனம்தான் முக்கியம் என்கிறார்கள் இவர்கள்!
இன்னும் பல்வேறு புரட்சிகரச் சுயஇன்ப மாணவர்,
இளைஞர் அணிகள், வெண்முகில் செம்முகில் போன்ற
உலகப் புரட்சியாளர்கள் எவரையும் களத்தில் காணோம்.

22) நியூட்டன் அறிவியல் மன்றம் Group IV ஊழலைக்
கையில் எடுத்துக் போராடியபோது, TNPSC
அலுவலகத்துக்கு நடையாய் நடந்த போது, நீங்களெல்லாம்
மேற்கொண்ட புரட்சிகரத் திருப்பணி என்ன?

23) இந்த விஷயத்தில் தானும் செயல்படாத, செயல்பட்ட
நியூட்டன் அறிவியல் மன்றத்தையும்  ஆதரிக்காத,
மக்களுக்குப் பயன்படாத  "இடதுசாரி"களை
மக்கள் விரோதிகள் என்று பிரகடனம் செய்ய,
தன் சக்திக்கேற்ற விதத்தில் தளராது மக்களுக்காக
உழைக்கும் நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு
உரிமை உண்டு. 
****************************************************    .
ஒலி அலைகளைப் பொறுத்தமட்டில், மொழி வேறுபாடு
இல்லை. சமஸ்கிருதம், தமிழ், இலத்தீன், ஆங்கிலம்
ஆகிய எந்த மொழியில் மாந்தன் பேசினாலும்,
அப்பேச்சு ஒலி அலைகளாகவே வெளியே செல்லும்.
மொழி வேறுபாடு என்பது various permutations and combinations
மட்டுமே.

ஒலி அலைகள் நெட்டலைகளாகச் செல்லும்போது
(longitudinal waves) இறுக்கம் தளர்வு என்னும்
compression and rarefactionஐ காற்றில் (காற்று ஒரு ஊடகம்)
ஏற்படுத்தும். சமஸ்கிருதமோ தமிழோ எதுவாயினும்
நிகழ்வது என்னவோ இறுக்கமும் தளர்வும்தான்.

ஒலி அலைகளின் வேகம் மிக மிகக் குறைவு.
அவற்றால் அணுக்களை ஆட்டிப் படைக்க இயலாது.

ஒலியால் ஒருபோதும் எந்த ஒளியையும் ஏற்படுத்த
இயலாது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒலியை
மட்டுமே மனிதச் செவிகளால் கேட்க இயலும்.
Human audible limit உண்டு. எனவே சம்ஸ்கிருத
ஒலி அலைகளைக் கொண்டு, சம்ஸ்கிருத
மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம்
ஒரு குறிப்பிட்ட வீச்சிலான (range) ஓசையை
அல்லது இரைச்சலை (sound or noise) மட்டுமே
உண்டு பண்ண முடியும். பல்வேறு ஒலிகளின்
intensity குறித்த டெசிபெல் அட்டவணையைப் பார்க்கவும்.

ஒலியின் இடப்பெயர்ச்சி அல்ல, மனிதர்களின்
இடப்பெயர்ச்சியே ஒரு மொழியை பல்வேறு
பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றிருக்கும். 
        
 



               



-  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக