வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஸ்கேல் மற்றும் டெய்லி காலண்டர் இரண்டையும் எடுத்துக்
கொண்டு, இக்கட்டுரையில் கூறப்பட்ட இரண்டு
மிக எளிய பரிசோதனைகளைச் செய்து பார்த்து
centre of mass கண்டறியுங்கள் வாசகர்களே.   

அறிவியல் விளக்கம்!
--------------------------------
வானியல் நிகழ்வுகள் (celestial events) மனிதர்களின்
மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவை. ஓராண்டில்
நிகழும் நான்கு முக்கியமான வானியல் நிகழ்வுகளில்
(இரண்டு equinox, இரண்டு solstice) இவற்றில் எந்த
ஒன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு
புத்தாண்டை உருவாக்கலாம். அப்படி
உருவாக்கப்படும் எந்தவொரு புத்தாண்டும்
அறிவியல் வழியில் சரியானதே.

அதே போல, ஒரு நெடுங்கணக்கு வேண்டுமெனில்
ஏதேனும் ஒரு நிகழ்வை reference pointஆக எடுத்துக்
கொண்டு ஒரு நெடுங்கணக்கை உருவாக்கலாம்.
ஐரோப்பியர்கள் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை
reference pointஆக எடுத்துக் கொண்டு கிறிஸ்து
சகாப்தத்தை உருவாக்கினார்கள்.

புத்தரின் பிறப்பு, வள்ளுவரின் பிறப்பு, தொல்காப்பியரின்
பிறப்பு இப்படி காலத்தால் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட
ஏதேனும் ஒரு reference pointஐ எடுத்துக் கொண்டு
ஒரு நெடுங்கணக்கை உருவாக்கலாம். அப்படி
உருவாக்கப்படும் நெடுங்கணக்கு அறிவியல் வழியில்
சரியானதே.

ஆனால் திரு மு கருணாநிதி வள்ளுவரின் பிறப்பை
தான்தோன்றித் தனமாக மாட்டுப் பொங்கலன்று
(தை 2) கொண்டு வந்தார். அதற்கு முன்பு அறிஞர்
அண்ணா முதல்வராக இருந்தபோது, வள்ளுவரின்
பிறப்பு வைகாசி மாதம் என்பதையே அண்ணா
ஏற்றுக் கொண்டிருந்தார்.

எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல், மாட்டுப்
பொங்கலை ஒழித்துக் கட்டும் நோக்குடனும்,
சில அமைப்புகளிடம் பணம் வாங்கிக் கொண்டு
வள்ளுவரின் பிறந்தநாள் தை 2 என்று அறிவித்தார்.
பெருங்கயமை இது. எனவே திருவள்ளுவர் ஆண்டு
என்று கருணாநிதி அறிவித்த நெடுங்கணக்கு
அறிவியல் வழியில் தவறானது. அறிவியல் அறிஞர்கள்
முடிவு செய்ய வேண்டியதை, கல்வி அறிவற்ற தற்குறிகள்
முடிவு செய்தது கயமை ஆகும். நிற்க.

சித்திரைப் புத்தாண்டா அல்லது தைப்புத்தாண்டா
எது சரி என்பதை பார்க்கலாம். பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு, நான் முன்னர்க் கூறிய
நான்கு வானியல் நிகழ்வுகளில், அன்றுள்ள
வசதி வாய்ப்புகளின்படி, மக்களால் எளிதில் உணரக்
கூடிய, எளிதில் அறியக் கூடியஒன்றாக தமிழ்நாட்டிலும்
இந்தியாவிலும் மார்ச் equinox நிகழ்வே இருந்தது.
எனவே அதை பின்பற்றி சித்திரைப் புத்தாண்டு
உருவானது.

Winter solsticeக்கு அடுத்து நிகழ்வதே சூரியன் மகர
ராசிக்குள் நுழையும் நிகழ்ச்சி. இதை வைத்துத்தான்
தைப்புத்தாண்டை உருவாக்க வேண்டும். ஆனால்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, Winter solstice நிகழ்வை
மக்கள் எளிதில் கண்டறிய வழியே இல்லை. ஏனெனில்
பெரும் மழைக்காலம். அந்த மழைக்காலத்தில்
வானம் எப்போதுமே இருண்டும் பொழிந்து கொண்டுமே
இருந்ததால், Winter solstice நிகழ்வை மக்களால்
அறிந்து கொள்ள இயலவில்லை. இன்று இந்த 2020ல்
ஒவ்வொரு வானியல் நிகழ்வையும் அறிவியல்
கருவிகளின் உதவியால் அறியலாம். ஆனால் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இது இயலாது.

எனவே  Winter solstice நிகழ்வை அடிப்படையாகக்
கொண்டு தைப்புத்தாண்டை உருவாக்கி இருக்க
வழியே இல்லை.
------------------------------------------------------------




             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக