வெள்ளி, 24 ஜனவரி, 2020

கீழக்கரை ராமேஸ்வரம் தேர்வு மையங்களில்
TNPSC Group IV தேர்வில் முறைகேடு!
விசாரணை முடிந்தது! குற்ற வழக்கு பதிவானது!
99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
கடந்த 12.11.2019 அன்று வெளியான TNPSC Group IV
முடிவுகளில் முதல் 100 இடங்களைப் பெற்றவர்கள்
கீழக்கரை, ராமேஸ்வரம் என்னும் இரண்டு மையங்களில்
தேர்வு எழுதியவர்கள் என்ற உண்மை அம்பலமானது.

இது குறித்து தேர்வர்கள், பயிற்சி மைய நிர்வாகிகள்,
கல்வி சார்ந்து இயங்கும் அமைப்புகள் ஆகியவை
TNPSCயின் கவனத்திற்கு கொண்டு சென்றன.

விசாரணை நடத்திய TNPSC தற்போது பின்வரும்
முடிவுகளை எடுத்து அறிவித்துள்ளது.

1) முறைகேடு செய்யும் தீய உள்நோக்கத்துடன்
வெளி மாவட்டங்களில் இருந்து மேற்கூறிய இரண்டு
தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதிய 99 பேர்
கண்டறியப் பட்டனர். அவர்களின் தேர்வு முடிவுகள்
ரத்து செய்யப் பட்டன. அவர்களுக்கு வாழ்நாள்
முழுவதும் TNPSC தேர்வெழுதத் தடை விதிக்கப்
பட்டுள்ளது.

2) இந்த 99 பேர் மீதும், இவர்களுடன் சேர்ந்து 
முறைகேட்டில் ஈடுபட்ட தாசில்தார் போன்ற
தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது
குற்ற வழக்குப் பதிவு செய்து FIR போடப்பட்டு உள்ளது.
இவர்கள் கைது செய்யப் படுவது உறுதி.

3) தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில்
வந்துள்ள 39 பேருக்குப் பதிலாக, வேறு தகுதியான
39 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு TNPSC வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, இரண்டு
வட்டாட்சியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வட்டாட்சியர் சிக்கந்தர் கைது செய்யப்படக்கூடும்
என்று தெரிய வருகிறது.

இந்நிகழ்வின் படிப்பினை!
-----------------------------------------
காலி இடங்கள் = 9398
தேர்வு நடந்த தேதி: 01.09.2019
தேர்வு எழுதியோர் = 16,29,865 (16 லட்சம் பேர்)
தேர்வு முடிவு வெளிவந்த தேதி: 12.11.2019
முறைகேடு நடந்ததை தேர்வர்கள் அறிந்தது: ஜனவரி 5, 2020.
முறைகேட்டின் மீது நடவடிக்கை: ஜனவரி 24, 2020.

அறிவியலின் துணை கொண்டு இந்த முறைகேடு
நடந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட தேர்வர்கள்,
எழுதிய சில மணி நேரங்களில் மறைந்து விடும்
விசேஷ மையினால் தேர்வர்கள் தேர்வு எழுதி
உள்ளனர். மை மறைந்ததும் சரியான விடைகளை
மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் விடைத்தாளில்
எழுதி உள்ளனர்.

இந்த முறைகேட்டைக் கண்டறிந்தது யார்?
இதை அம்பலப் படுத்தியது யார்?
இதை TNPSCக்கு புகார் அளித்தது யார்?
இதை எதிர்த்துப் போராடியது யார்?
இன்று இந்த முறைகேட்டை  முறியடித்து
மோசடிப் பேர்வழிகளுக்கு தண்டனை வாங்கித்
தந்தது யார்?

எல்லாக் கேள்விக்கும் பதில் ஒன்றுதான்!
அ) கஷ்டப்பட்டுப் படித்துத் தேர்வு எழுதிய தேர்வர்கள்
ஆ) இவர்களுக்குப் பயிற்சி அளித்த பயிற்சி மைய
நிர்வாகிகள்
இ) கல்வி சார்ந்து இயங்கும் நியூட்டன் அறிவியல்
மன்றம் போன்ற வெகு சில அமைப்புகள்.

இந்த மூன்று தரப்பைத் தாண்டி வேறு யார் எவரும்
இந்த முறைகேட்டுக்கு எதிராகத் துரும்பைக்
கூடத் தூக்கவில்லை.

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்
கட்சித் தலைவர்கள், போலியான சமூக ஆர்வலர்கள்,
தற்குறிகளான இடதுசாரிகள், பெண்ணுரிமைப் போராளிகள்,
இப்படி யாரும் இந்த முறைகேட்டைக் கண்டு கொள்ளாமல்
இருந்து இதற்குத் துணை போயினர்.

ஒரு இடதுசாரி என்பவன் சமூக அவலத்தைக் கண்டு
கொதிக்க வேண்டாமா? அதை எதிர்த்துப் போராட
வேண்டாமா?

ஒரு மெய்யான இடதுசாரி anti establishmentஆக  
இருக்க வேண்டாமா?

தமிழக இடதுசாரி முகாம் தற்குறிகளின் முகாம்!
சமூகத்தின் பொதுவெளியில் ஒரு துரும்பைக்
கூட நகர்த்த வக்கற்ற, வெறும் முகநூலில்
சுயஇன்பம் அனுபவிக்கும் தற்குறிகள் நிரம்பிய
முகாம்.

முறைகேட்டில் ஈடுபட்ட கயவர்களை விட,
இந்த முறைகேடு குறித்து ஒன்றும் தெரியாமல்
சுடுகாட்டு அமைதியுடன் இருக்கும் போலி
இடதுசாரித் தற்குறிகளே மிக மோசமான சமூக
விரோதிகள்!
********************************************** 
         

"ஐயா, நாங்கள் கல்வி அறிவற்ற தற்குறிகள்.
TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகள் பற்றி
எங்களுக்கு ஒரு இழவும் தெரியாது. இந்த
முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவது
என்பதெல்லாம் எங்களின் அறிவெல்லைக்கு
அப்பாற்பட்டது. தற்குறிகளாகிய  நாங்கள்
இதில் என்ன செய்ய முடியும்"? என்று போலி
இடதுசாரிகள் கேட்கலாம். அது நியாயமே!

அப்படியானால், இந்த முறைகேட்டை எதிர்த்துப்
போராடிய நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு
நீங்கள் அளித்த ஆதரவு என்ன? ஒன்றும் இல்லை
அல்லவா?

நீயம் செய்ய மாட்டாய்! செய்பவனையும் 
ஆதரிக்க மாட்டாய்! இது என்ன நியாயம்?
     
ஒவ்வொரு ஆண்டும் Group IV தேர்வை மட்டும்
20 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இந்த 20 லட்சம்
பேரைப் பாதிக்கும் ஒரு முறைகேட்டைப் பற்றி
ஒரு இழவும் தெரியாத தற்குறிகளான போலி
இடதுசாரிகளே, நீங்கள் உயிர் வாழ்ந்து என்ன பயன்?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக