வெள்ளி, 24 ஜனவரி, 2020

தமிழ்நாட்டில் உள்ள CBSE பள்ளி
மாணவர்களுக்கு 5, 8 வகுப்புகளுக்கு
பொதுத்தேர்வு கிடையாது! சமச்சீர்
பாடத்திட்டத்தில் மட்டுமே பொதுத்தேர்வு.

சூரியன் கிழக்கே உதிப்பதைப் போன்ற உண்மை.
CBSE, ICSC பள்ளிகளில் 5 , 8 வகுப்புகளுக்கு 
பொதுத்தேர்வு கிடையாது. 


முன் ஏர் சரியாக இருந்தால்தான் பின் ஏர்
சரியாக இருக்கும். 1960, 1970களில் தெ பொ மீ,
மு வ, வ சுப மாணிக்கனார், நெ து சு போன்ற
அறிஞர்களும் நேர்மையாளர்களும் துணைவேந்தர்களாக
இருந்தனர். இன்று துணை வேந்தர் பதவி
ரூ 50 கோடிக்கு விற்கப் படுகிறது.
எனவே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
ஊழல் ஆதிக்கம் செலுத்துகிறது. 

கீழக்கரை ஊழல் தெரிய வந்ததுமே, பலமுறை
TNPSC அலுவலகத்துக்கு அலைந்தேன். ஒரு நண்பரின்
உதவியால் TNPSCயின் ஓர் உயர் அதிகாரியைச்
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசியதன் 
அடிப்படையில், ஒரு CBI விசாரணை தேவைப்படும்
என்று கருதினேன்.

அதிர்ஷ்ட வசமாக, TNPSC நேர்மையான விசாரணை
நடத்தியது. எங்கே தேர்வு முடிவுகளை மொத்தமாக
ரத்து செய்து உயிரைக் கொடுத்துப் படித்தவர்களின்
வாழ்வில் மண்ணள்ளிப் போட்டு விடுவார்களோ
என்று அஞ்சிக் கொண்டே இருந்தேன்.

இன்று கிடைத்த முடிவு சரியானது; நியாயமானது.
இது அனைவருக்கும் மனநிறைவைத் தருகிறது.

பாதிக்கப் பட்டவர்கள் போராடும்போது, சமூகத்தின்
பிற பகுதியினரிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை
என்பது வருத்தம் தருகிறது. தாங்கள் கூறியது போல
ஆசிரியர் சங்கங்களோ மாணவர் சங்கங்களோ
இதில் அக்கறையே காட்டவில்லை என்பதும்
வருந்தத் தக்கது.


5ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக் கட்டணம்
ரூ 100. எட்டாம் வகுப்பு ரூ 200. செங்கோட்டையர்
அறிவிப்பு. இது தனியார் பள்ளிகளுக்கு மட்டும்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக