சனி, 18 ஜனவரி, 2020

மனிதர்கள் அடையாளம் அற்றவர்கள் என்று
மரு. ஷாலினியால் பெரியார் திடலுக்குச் சென்று
ஆசிரியர் வீரமணி அவர்களிடம் சொல்ல முடியுமா?
ஒவ்வொரு திககாரனும் கருப்புச் சட்டை அணிகிறானே,
அது தேவையில்லை என்று இவரால் ஆசிரியர்
வீரமணியிடம் சொல்ல முடியுமா?

இறக்கும் வரை கருப்புச் சட்டை என்னும்
அடையாளத்தைச் சுமந்து கொண்டு திரிந்தாரே
பெரியார், அது முட்டாள்தனமானது என்று இவரால்
கூற முடியுமா?

திருமதி/செல்வி ஷாலினியே மற்றப் பெண்களைப்
போல் இல்லாமல் தலைமுடியை கிராப் வெட்டிக்
கொண்டும் pant shirt அணிந்து கொண்டும் தமக்கென்று
ஒரு தனித்த அடையாளத்தைப் பேணி வருகிறாரே!
மனிதர்களுக்கு அடையாளம் இல்லை என்று பேசும்
இந்த hypocrite தன் விஷயத்தில் மட்டும், தனித்த
அடையாளத்தை ஏன் பேணி வருகிறார்?
  


தேசிய இனக் கோட்பாடு என்பது உலகிலேயே
ஐரோப்பாவில்தான் முதலில் தோன்றியது.
நிலவுடைமைச் சமூக அமைப்பில் தேசிய இனக்
கோட்பாடு உருவாகவில்லை. காரணம்
நிலவுடைமைச் சமூகம் பல தேசியஇனங்களையும்
ஒரு குடையின் கீழ் ஆண்டது.

இது மிகவும் ஆழமான சப்ஜெக்ட். இது குறித்து
எந்த ஒரு படிப்போ புரிதலோ இல்லாமல்,
தான்தோன்றித் தனமாக எதையோ கூறும்போது
அதற்கு எதிர்வாதம் புரிய இயலாது.

அறிவியலுக்கு எதிரானது என்ற வார்த்தைப்
பிரயோகம் திமிர்த் தனமானது.

அடுத்தது எமது பதிவுகள்  ஒருவழிப்பாதை ஆகும்.
படித்து விட்டுச் செல்ல மட்டுமே அனுமதி உண்டு.
உரிய தர்க்கங்களுடன் மறுத்துரைக்கலாம்.
தர்க்கம் இல்லாமல், கல்வி இல்லாமல் பேசப்படும்
விஷயங்களுக்கு இங்கு அனுமதி இல்லை.

   
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக