வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

மோடி அரசின் UPS திட்டமும் 
பழைய பென்ஷன் திட்டமும்; ஒரு ஒப்பீடு!
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் BSNL.
------------------------------------------------------------------- 
சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்காக 
ஒரு பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 
CCS Pension Rules 1972 என்னும் சட்ட திட்டப்படி அமைந்தது.

இது பழைய பென்ஷன் திட்டம் (Old Pension Scheme)    
என்று அழைக்கப் படுகிறது. பழைய திட்டம் என்பது 
அதன் அதிகாரபூர்வ பெயர் அல்ல. ஊடகத்தினராலும் 
மக்களாலும் வழங்கப் படுகிற பெயர் மட்டுமே.

வயதில் மூத்த தகுதி வாய்ந்த மத்திய அரசு ஊழியர்கள் 
அனைவரும் இத்திட்டத்தின் கீழ்தான் பென்ஷன் 
பெறுகின்றனர். போன மில்லேனியத்தில் பணிஓய்வு 
பெற்ற ஊழியர்கள் பெறுவது பழைய பென்ஷன் 
திட்டத்திலேயே. பழைய பென்ஷன் என்பது ஏகப் 
பொருத்தமான பெயரே.

(இக்கட்டுரை ஆசிரியரும் பழைய பென்ஷன் 
பெறுபவரே! முப்பதாண்டு கால தமது தொழிற்சங்கப் 
பணியினூடே இந்தியாவின் பென்ஷன் திட்டங்கள் 
குறித்த அகல்விரிவானதும் ஆழமானதுமான 
(comprehensive and deep) அறிவைப் பெற்றவர் 
இக்கட்டுரை ஆசிரியர்).

பழைய பென்ஷன் திட்டம் 31.12.2003ல் முடித்து வைக்கப் 
பட்டது. ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களைத் 
தவிர புதிதாக எவரும் இத்திட்டத்தில் உறுப்பினராக 
முடியாது. இத்திட்டம் முடிவுக்கு வந்த மறுநாள் 
முதல், அதாவது ஜனவரி 1, 2004 முதல் NPS எனப்படும் 
தேசிய பென்ஷன் திட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு 
வந்தது. இத்திட்டத்தைக் கொண்டு வந்தவர் 
அன்றைய பிரதமர் வாஜ்பாய் (1999-2004) ஆவார்.

இத்திட்டம் கொண்டு வரப்பட்ட ஜனவரி 2004ஐத் 
தொடர்ந்து அதே ஆண்டில் (மே 2004) காங்கிரசின்  
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகப் பதவி ஏற்றார்.
வாஜ்பாயின் NPS திட்டத்தை மன்மோகன்சிங் 
நிராகரிக்கவில்லை; அதை அப்படியே கடைப்பிடித்தார்.

இன்று கூச்சலிடும் கம்யூனிஸ்ட்டுகள் அன்று NPS திட்டத்தை 
எதிர்க்கவில்லை. NPS திட்டத்தை ரத்து செய்து விட்டு
பழைய பென்ஷன் திட்டத்திற்குத் திரும்ப வேண்டும் 
என்று CPI, CPM கட்சிகள் மன்மோகன்சிங்கிற்கு 
எவ்வித நெருக்குதலும் கொடுக்கவில்லை! நெருக்குதலை  
விடுங்கள்; ஒரு கோரிக்கைகூட வைக்கவில்லை.

இக்காலக்கட்டத்தில் (UPA-I 2004-2009) மன்மோகன் அரசுக்கு 
கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்கள்.  
தொழிலாளி விரோத NPS திட்டத்தை  எதிர்க்காத 
இவர்களை போலி கம்யூனிஸ்ட்கள் என்று 
மக்கள் சரியாகவே அழைக்கிறார்கள்.

பழைய பென்ஷன் திட்டத்தில் (OPS) இல்லாத என்னென்ன
நன்மைகள் மோடி அரசின் UPS திட்டத்தில் உள்ளன?
--------------------------------------------------------------------------------
1) OPSல் குடும்ப பென்ஷன் 30 சதவீதம் வழங்கப்படும்;
அதாவது ஊழியரின் Last pay drawnல் 30 சதவீதம்.

மோடி அரசின் UPSல் குடும்ப பென்ஷன் 60 சதவீதம் 
ஆகும். அதாவது ஓய்வூதியதாரர் இறக்கும் நாளன்று 
எவ்வளவு பென்ஷன் வாங்கினாரோ அதில் 60 சதவீதம் 
அவரின் மனைவிக்கு குடும்ப பென்ஷனாக 
வழங்கப் படும்.     
  
2) OPSல் பணிக்கொடை (gratuity) மட்டுமே பணிஒய்வு 
பெற்றவருக்கு கிடைக்கும் பெருந்தொகை ஆகும்.
மோடி அரசின் UPS திட்டத்தில் பணிக்கொடை 
மட்டுமின்றி, பென்ஷன்தாரருக்கு ஒரு பெருந்தொகை 
(lump sum grant) பணிஓய்வு பெறும்போது வழங்கப்
படுகிறது. இது இந்திய பென்ஷன் வரலாற்றில் 
முன்கண்டிராத ஒன்றாகும்.
---------------------------------------------------------------
பின்குறிப்பு;
UPS திட்டம் contributory scheme ஆகும். இன்றைய நிலையில் 
இது காலத்தின் கட்டாயமாக ஆகி உள்ளது எப்படி என்பதை 
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.  
*****************************************************
   
 .

    

   


புதன், 28 ஆகஸ்ட், 2024

 BA, MA படிப்பதுதான் உயர்கல்வி என்று 
கருதுவது ஒரு கன்சர்வேட்டிவ் பார்வை.
M.Sc படித்தது மட்டுமின்றி, நான் சாமுவேல் 
மார்ஸின் (Samuel Morse) தந்தி சிக்னலிங்கும்
படித்தேன் இது 4 மாத காலப் பயிற்சி.    
படித்தது மட்டுமின்றி அந்த சிக்கனலிங்கில் (
(both wired and wiresless) சில ஆண்டு காலம் 
வேலை பார்த்தேன். ஆங்கிலத்தில் மட்டுமின்றி 
இந்தியிலும் மார்ஸ் கோட் (code) பயிற்சி 
பெற்றவன் நான்.  

ஹாம் ஆபரேட்டர்கள் பற்றி அறிந்தவர்களுக்கு  
சாமுவேல் மார்ஸின் சிக்னலிங் கற்றவர்கள்
மட்டிலுமே ஹாம் ஆப்பரேட்டராக தகுதி பெற 
முடியும் என்ற உண்மை தெரியும். ராஜிவ் 
காந்தி ஒரு ஹாம் ஆப்பரேட்டர். இந்த உண்மை 
எத்தனை பேருக்குத் தெரியும்? சோனியா காந்தியும் 
ஹாம் ஆப்பரேட்டர்! என்னைப் போன்று
மார்ஸ் சிக்னலிங் கற்றுத் தகுதி படைத்த 
ஒருவர்தான் ராஜிவ் காந்திக்கு கற்றுக் கொடுத்தார்  
என்ற உண்மையை அறியுங்கள்.     

கற்பது அனைத்தும் கல்வியே! நான் கற்ற 
மார்ஸ் சிக்கனலிங்கும் சரி, திரு அண்ணாமலை கற்கும் சர்வதேச 
அரசியலும் சரி  கல்வியே! உயர் கல்வியே! 
திரு அண்ணாமலை ஏற்கனவே B.Tech படித்தவர். 
பிறகு MBA முடித்து அதன்பிறகு IPS தேறியவர. 
ஏற்கனவே உயர்கல்வி கற்றுள்ள அவர் இனி கற்பது 
அனைத்தும்  உயர்கல்வியே! அவர் என்ன LKG 
படிப்பதற்கா லண்டன் சென்றுள்ளார்?  

அவர் சென்ற இடம் ஜிம்கானா கிளப் அல்ல! 
அது பல்கலைக் கழகம். ஆக்ஸ்போர்டு! அந்தக் 
காலத்து பரூக் இன்ஜீனியரைப் போல 
(Indian opening batsman) கவுண்டி கிரிக்கெட் ஆட 
லண்டன் செல்லவில்லையே!  

   
 இது அகாடெமிக் பதிவு. அரசியல் பதிவு அல்ல.
பாலியல் ஒழுக்கமோ நேர்மையோ அற்ற 
பெற்றோர்களுக்குப் பிறந்த கருவின் குற்றங்கள் 
இதை அரசியல் பதிவாகக் கருதி தங்களின் 
அறியாமையை அரங்கேற்றுவார்கள். அப்படிப்பட்ட 
இழிந்த பீடைகளை நாண்டுக்கிட்டு நின்னு சாகச்  
சொல்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி. 


இதை நான் வரவேற்கிறேன். நான் ஒரு போலி முற்போக்கு!

மாநிலங்களவையில் பாஜகவின் NDA கூட்டணி 
பெரும்பான்மை பெற்று விட்டது.

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

 NPS திட்டத்தில் ஊழியர்களின் பணமும் அரசு 
செலுத்தும் பணமும் சேர்ந்து ஒரு FUND 
உருவாக்கப் பட்டு அதி நிர்வகிக்க ஒரு REGULATORY 
அமைப்பும் உள்ளது. இந்த நிதி பங்குச் சந்தையில் 
முதலீடு செய்யப் படுவதால், சந்தையின் ஏற்ற 
இறக்கங்களுக்கு ஏற்ப டிவிடெண்ட் மாறும்.
எனவே பென்ஷனும் மாறும்.  

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

மோடி அரசின் UPS என்னும் புதிய பென்ஷன் திட்டம்!(
UPS = Unified Pensionn Scheme )
முழுமையான விளக்கம்!
------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
முன்னாள் தொழிற்சங்கத் தலைவர், BSNL.
---------------------------------------------------------------------------------
1) இந்தியாவின் மத்திய மாநில அரசு ஊழியர்களின் 
பென்சன் பிரச்சினைகளுக்குத் தீர்வாக மோடி அரசு 
UPS எனப்படும் ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை 
அறிமுகம் செய்துள்ளது.  

2) இத்திட்டம் (UPS) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1, 2025 முதல் 
அமலுக்கு வரும்.

3) இத்திட்டத்தில் சேர, ஒரு அரசு ஊழியர் 10 ஆண்டு 
சேவை நிறைவு செய்திருக்க வேண்டும்.  பத்தாண்டிற்குக் 
குறைவான சேவை உடையோர் இத்திட்டத்தில் 
சேர இயலாது.

4) முழுமையான பென்சன் (full pension) பெறுவதற்கு ஓர் 
அரசு ஊழியர் 25 ஆண்டு சேவை நிறைவு செய்திருக்க 
வேண்டும்.  1970, 80களில் full pension பெறுவதற்கு 
33 ஆண்டு சேவை நிறைவு செய்திருக்க வேண்டும் 
என்ற நிலையை 5ஆவது சம்பளக் கமிஷன் 
அமலாக்கத்தின்போது நாம் கடந்து வந்ததை 
தோழர்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

5) UPS திட்டம் ஊழியரின் பங்களிப்பைப் பெறும்
திட்டம் ஆகும் (contributory scheme. ஊழியரின் அடிப்படைச் 
சம்பளத்தில் 10 சதவீதத்தை பென்ஷனுக்காகச் செலுத்த 
வேண்டும். அரசு 14 சதவீதம் செலுத்தும். இது 18.5 சதவீதமாக 
அரசால் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. 
  

6) இத்திட்டத்தில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன.

அ) மாதாந்திர பென்ஷன் தொகை உறுதி செய்யப் 
படுகிறது. Quantum of pension in Rupees is ensured. தற்போது 
நடப்பில் உள்ள தேசிய பென்ஷன் திட்டத்தில் (NPS) 
மாதாந்திர பென்ஷனின் தொகை உறுதி செய்யப் 
படவில்லை. இந்த மாதம் ஒருவருடைய பென்ஷன் 
ரூ 10,000 என்றால், அடுத்த மாதம் அது ரூ 8000
என்பதாக இருக்கும். இதைப்போல அல்லாமல்
மோடி அரசின் UPS திட்டத்தில் பென்ஷன் தொகை 
உறுதி செய்யப் படுகிறது.

ஆ) குறைந்தபட்ச பென்ஷன் தொகை மாதம் ரூ 10,000 
என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இ) ஒரு பென்ஷன்தாரர் இறந்து விட்டால், அவரின் 
மனைவிக்கு அல்லது வாரிசுக்கு பென்ஷன் வழங்கப்படும்.
இது குடும்ப பென்ஷன் (Family Pension) ஆகும். 
பென்ஷன்தாரர் எவ்வளவு பென்ஷன் வாங்கினாரோ 
அதில் 60 சதவீதம் குடும்ப பென்ஷனாக வழங்கப்படும்.
ரூ 20,000 மாத்திரை பென்ஷன் வாங்கிய பென்ஷன்தாரர் 
இறந்து விட்டால், அவரின் மனைவிக்கு மாதந்தோறும் 
ரூ 12,000 குடும்ப பென்ஷனாக வழங்கப்படும்.

ஈ) UPS திட்டப்படி பெறும் பென்ஷனுக்கு  பஞ்சப்படி உண்டு.
(Dearness  Allowance is applicable). பணியில் இருக்கும் 
அரசு ஊழியர் எவ்வளவு பஞ்சப்படி பெறுகிறாரோ,
அதே கணக்கீட்டின்படி பென்ஷன்தாரரும் பஞ்சப்படி 
பெறுவார்.
ரூ 20,000 Basic Pay உடைய, பணியில் இருக்கும் ஒரு 
அரசு ஊழியர் ரூ 30,000 பஞ்சப்படி வாங்கினால்,
ரூ 20,000 Basic Pension உடைய ஒரு பென்ஷன்தாரரும் 
அதே ரூ 30,000ஐ பஞ்சப்படியாகப் பெறுவார்.
விலைவாசிக் குறியீட்டு எண்ணான AICPI 
(All India Consumer Price Index) என்பது பணியில்
 இருப்பவருக்கும் பென்ஷன்தாரருக்கும் பொதுவானதுதானே!

(உ) இத்திட்டத்தின் ஐந்தாவது அம்சம் மிகவும் 
அதிரடியானது. இந்தியாவின் பென்ஷன் வரலாற்றில் 
இதுவரை இல்லாதது (unprecedented). பணிஓய்வின்போது, 
ஒய்வு பெறும் அரசு ஊழியருக்கு (பென்ஷன்தாரருக்கு)
 ஒரு பெருந்தொகையை மோடி அரசின் UPS திட்டம் 
வழங்குகிறது. (A lump sum grant). ஏற்கனவே பணிக்கொடை 
எனப்படும் DCRGஐ (Death cum Retirement Gratuity) 
பென்ஷன்தாரர் பெறுகிறார். அதுபோக 
இப்பெரும்தொகையையும் அவர் பெறுவார்.

ஊ) பெருந்தொகையாக எவ்வளவு தரப்படும் என்று 
பார்ப்போம். இந்தக் கணக்கீட்டுக்கு அரசு ஊழியரின் 
மாதச்சம்பளம் (monthly emoluments) கணக்கில் கொள்ளப் 
படுகிறது. இங்கு மாதச்சம்பளம் என்பது Pay plus DA              
 மட்டுமே. HRA, CCA போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது.

 மாதச்சம்பளத்தில் அதாவது Pay plus DAவில் 10 சதவீதம் 
கணக்கிடப்படும். ஊழியரின் Basic Pay ரூ 20,000 
என்றும் DA  ரூ 30,000 என்றும் கொண்டால் இவ்விரண்டின் 
மொத்தம் ரூ 50,000 ஆகும். இதில் 10 சதவீதம் என்பது 
ரூ  5000 ஆகும். இந்த 10 சதவீதம் என்பது ஆறு மாத 
காலத்திற்கானது. ஒரு ஊழியரின் சேவைக்காலத்தில் 
எத்தனை  ஆறுமாதம் உள்ளதோ, அத்தனை முறை 
10 சதவீதம் வழங்கப்படும். 

உதாரணமாக ஒரு ஊழியர் 30 ஆண்டு சேவை முடித்து
உள்ளார் என்று கொள்வோம். இங்கு 30 ஆண்டு என்பது 
60 ஆறுமாதங்களைக் கொண்டது. முதல் ஆறுமாதத்திற்கு 
ரூ 5000 என்றால், 60 ஆறுமாதங்களுக்கு ரூ 60 x 5000 = 3,00,000.
ஆக பெருந்தொகையாக ஊழியருக்கு ரூ 3 லட்சம் 
கிடைக்கும். 

7) ஆக UPS திட்டம் ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டது.
a) quantum of pension assured.
b) minimum pension ensured
c) Family Pension guaranteed.
d) Linked with price index and hence DA 
e) Lump sum grant.

8) பென்ஷனின் அளவு!
----------------------------------          
 ஒரு ஊழியர் கடைசியாக எவ்வளவு சம்பளம் 
வாங்குகிறாரோ  (last pay drawn) அதில் பாதி, அதாவது 
50 சதவீதம் அவருக்கு பென்ஷனாக வழங்கப்படும். 
இங்கு last pay drawn என்பது ஊழியர் பணிபுரிந்த கடைசி 
ஆண்டின் சராசரி ஆகும். இங்கு Pay என்பது Basic Payஐ 
 மட்டுமே குறிக்கும்.

உதாரணமாக ஒரு ஊழியர் கடைசியாக வாங்கிய 
சம்பளம், அதாவது அவரின் Basic Pay ரூ 20,000 
என்றால், அவருடைய பென்ஷன் ரூ 10,000 ஆகும்.
இந்த ரூ 10,000 Basic Pension எனப்படும். இதன் மீது 
பஞ்சப்படி கணக்கிடப்பட்டு சேர்க்கப்படும்.

9) UPS திட்டத்தில் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 
பயன் பெற இயலும். இதில் மாநில அரசு 
ஊழியர்களும் சேரலாம்.

10) இந்தியாவில் தற்போது மூன்று பென்ஷன் திட்டங்கள் 
உள்ளன. அ) மோடி அரசின் UPS திட்டம். ஆ) 2004ல் 
கொண்டு வரப்பட்ட தேசிய பென்ஷன் திட்டம் (NPS)
இ) 1950, 60 முதல் இன்றும் தொடரும் கடந்த 
மில்லேனியத்தைச் சேர்ந்த  பழைய பென்ஷன் திட்டம்.

இந்தியாவின் அரசு ஊழியர்களின் பென்ஷன் 
பிரச்சினைகள்  அனைத்துக்குமான தீர்வாக மோடி அரசு 
UPS திட்டத்தை முன்வைத்துள்ளது. 90 சத்வீதத்திற்கும் 
மேற்பட்ட பென்ஷன் பிரச்சனைகளை UPS திட்டம் 
தீர்த்து வைக்கும் என்பதை அனைவரும் உணரலாம்.
**********************************************************