செவ்வாய், 3 ஜூன், 2014

பாரதீய ஜனதாவின் வெற்றி கிட்டியது எப்படி?
---------------------------------------------------------------- 
பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 31 சதம் வாக்குகளையும், காங்கிரஸ் 19.3 சதம் வாக்குகளையும் 
பெற்றுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற 54 இடங்கள் வேண்டும். அதாவது, மொத்த இடங்களான 543-இல் 10 சதம் வேண்டும்.
காங்கிரசால் அதைக்கூடப் பெற முடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
(543-இல் ஒன்று).
மார்க்சியக் கட்சி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இவை இரண்டும் ஒற்றை இலக்கக் கட்சிகளாக மாறி விட்டன.
அங்கீகாரத்தையும் இழக்கின்றன.

போலி மதச்சார்பின்மைக் கட்சிகளான 
மாயாவதியின் பகுஜன் கட்சி, முலாயம்மின் சமாஜ்வாதிக் கட்சி,
பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய  ஜனதா தளம், நிதிஷ் குமாரின் 
ஐக்கிய ஜனதாதளம், திமுக ஆகிய அனைத்துக் கட்சிகளும் 
துடைத்து எறியப் பட்டுள்ளன. 

பாஜகவின் வெற்றியும், காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து விதமான போலி மதச்சார்பின்மைக் கட்சிகளின் தோல்வியும் ஒரே 
நாணயத்தின் இரு பக்கங்கள்.

பாஜகவின் வெற்றிக்கும் மேற்கூறிய கட்சிகளின் தோல்விக்குமான 
காரணம் என்ன?

காய்தல் உவத்தல் அகற்றிச் சிந்தித்தால் கிடைக்கும் விடை இதுதான்.
இசுலாமிய அடிப்படைவாதிகளின் அதிகரித்து வரும்
மதவெறிச் செயல்பாடுகளால் வரவிருக்கும் ஆபத்தைத் தடுக்க மோடியால் மட்டுமே முடியும் என்று நடுத்தர வர்க்கம், புதிய வாக்காளர்கள், 
நகர்ப்புற மக்கள் ஆகியோர் கருதியதே பாஜகவின் வெற்றிக்குக் காரணம்.
-----------------------------------------------------------------------------------------------------    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக