வியாழன், 5 ஜூன், 2014

வரலாற்றின் பக்கங்களில் இருந்து 
---------------------------------------------------------
தியனான்மென் படுகொலைகள்:
உயிர் நீத்தவர்களின் 
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவாஞ்சலி!
ஜூன் 4, 2014
------------------------------------------------------------------------------------------------------------ 
                     பி. இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------------------------
"சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டேன்" 
என்றான் ஜெனெரல் டயர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்
பஞ்சாப்பில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில்
ஆயிரக்கணக்கான இந்திய மக்களைச் சுட்டு வெறி தீர்ந்தான்
கொடியவன் டயர்.

இதை விடவும் மோசமான கொடிய நிகழ்வு அண்மைக்கால
வரலாற்றில் நடைபெற்றது. சீனாவில் பெய்ஜிங் நகரில்,
(பழைய பெயர் பீகிங்) 1989 ஜூன் 4-ஆம் நாளில்
தியனான்மென் சதுக்கத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான
மாணவர்களும் பொதுமக்களும் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்.

பத்தாயிரம் உயிர்களை வெறி அடங்கும் வரை சுட்டுக் கொன்ற  
இந்த சோக  நிகழ்வின்போது உயிர்நீத்தவர்களின் 
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவாஞ்சலி 
உலகெங்கும் ஜூன் 4, 2014 அன்று அனுசரிக்கப் படுகிறது.

இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியவன் கொடியவன்
டெங் சியோ பிங் . மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்
பெயரால் இந்தக் கொடிய படுகொலைகள் நடைபெற்றன.

லஞ்ச ஊழலை எதிர்த்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும்
மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில்   ஈடுபட்டபோது
டெங் சியோ பிங்  ராணுவத்தை அனுப்பிப் போராட்டத்தை ஒடுக்கினான்.
சுட்டுக் கொல்லப் பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை
மறைத்து, சில நூறு பேர்களே இறந்து போனதாகக் கணக்குக் காட்டி
உலகை ஏமாற்ற முயன்றான். ஆனால் உண்மை வெளிப்பட்டபோது,
மாணவர்களின் போராட்டம் என்பது சீனாவின் சோஷலிச
அமைப்புக்கு எதிரான சதி என்றான்; தியனான்மென் போராட்டம் ஒரு எதிர்ப்புரட்சி ( counter revolution ) என்றான் கொடியவன் டெங்.

ஆனால் உலகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மைகள் டெங்கின் முகத்தில் காரி உமிழப் பட்டன.

லட்சக் கணக்கான மக்களைப் படுகொலை செய்த ஹிட்லர்
தற்கொலை செய்து கொண்டு செத்தான். ஹிட்லரின் கூட்டாளி
முசோலினி தூக்கிலிடப் பட்டுச் செத்தான்.உப்பைத் தின்ற
இக்கொடியவர்கள் தண்ணீர் குடித்தார்கள். ஆனால் இவர்களை விட
மோசமான கொடியவன் டெங் சியோ பிங் எந்தத் தண்டனையும் பெறாமல்
வயது மூப்பின் காரணமாகச் செத்துப்போனான்.

தியனான்மென் தியாகிகளுக்கு அஞ்சலி!
கொடியவன் டெங் சியோ பிங்கின் உருவப் படங்களில்
காறித் துப்புவோம்.  
*********************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக