செவ்வாய், 3 ஜூன், 2014

இரண்டு கவிதைகள் 
-------------------------------- 

அழகு 
-------
முன்பு 
இந்த ஒற்றையடித் தடங்களும் 
மலைகளின் வளைவுகளும் 
அதற்குப் பின்னே மறையும் சூரியனும் 
அழகாய்த்தான் இருந்தன.

ஆனால்,
ஒரு மிகப் பெரிய யுத்தம் 
இந்த மலையில் நடந்த பின்பு 
இந்தக் கிராமத்தின் சுவர்களைக்
குண்டுகள் துளைத்த பின்பு......  

அவைகள் 
இந்தச் சுவர்களை மட்டுமின்றி 
இந்த மலைகளையும் 
முன்பு இருந்ததை விட 
எவ்வளவு அழகாய்
மாற்றி இருக்கின்றன.

......................மாவோ............................
---------------------------------------------------------------------------------


ரத்த சாட்சிகள் 
---------------------
ரத்த சாட்சிகளே 
உங்களுக்கு வாழ்த்துகள்!

உண்மைக்காக  உயிர்ப்பலி தந்த நீங்கள் 
வெற்றி பெற்று விட்டீர்கள்.

உங்களைப் பாலூட்டி வளர்த்த 
தாய்மார்களும் வெற்றி பெற்று விட்டார்கள்.

ரத்த சாட்சிகளின் மகுடத்தை 
தலையில் சூடிக்கொண்ட 
உங்களுக்கு வாழ்த்துகள்.

மரணத் தருவாயிலும் 
துடிக்கும் உதடுகளால் 
புரட்சி முழக்கங்களை 
உச்சரித்துக் கொண்டிருந்த 
உங்களுக்கு வாழ்த்துகள்.

எங்கள் தலைக்கு மேல் வீசிப் பறந்து 
பழி வாங்குங்கள்
என்று எங்கள்  செவிகளில் 
ஓதிக்கொண்டிருக்கும் 
உங்கள் ஆத்மாக்களுக்கு வாழ்த்துகள்.

................................ ஸ்டாலின்..................................

---------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக