செவ்வாய், 27 மே, 2014

காற்றில் கரைந்த கற்பூரமாய் கம்யுனிஸ்ட்டுகள்!
-------------------------------------------------------------------- -------------------
                       இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------------- 

நடந்து முடிந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 
வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 543 இடங்களில் 
கம்யூனிச்ட்டுகளுக்குக் கிடைத்தது ஒரே ஒரு இடம்தான் 
என்பது குறிப்பிடத் தக்கது.கேரளத்தில் இருந்து அந்த ஒரு வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இதனால் தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைக் 
கம்யூனிஸ்ட்டுகள் இழக்கிறார்கள். 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்; 
இந்த 11 தொகுதிகளும் குறைந்த பட்சம் மூன்று மாநிலங்களில் 
இருக்க வேண்டும். இதுதான் தேர்தல் ஆணையம் கூறும் வரையறைகளில் ஒன்று. 
இதன்படி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியக்கட்சி என்ற   
அங்கீகாரத்தை இழந்து விட்டது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்தது 
பற்றிக் கவலை இல்லை. மக்களின் அங்கீகாரத்தை  இழந்தது 
தான் சிக்கல்.

இனி அடுத்த கட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைப்பதுதான்.
அந்த நன்னாளை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக