சனி, 3 மே, 2014

 மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்!
மார்க்சியம் மதம் அல்ல, தேங்கிக் கிடப்பதற்கு!
-----------------------------------------------------------------------------  
       பி.இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------
(தட்டச்சு வசதியைக் கருத்தில் கொண்டு இக்கட்டுரை ஆறு பகுதிகளாக வெளியிடப் படுகிறது)

மார்க்சியத்துக்குப் பின் கணக்கற்ற தத்துவங்கள் வந்து விட்டன.
மார்க்சியம் நவீன தத்துவம் ( modernism ) எனப்படுகிறது. எனவே மார்க்சியத்துக்குப் பின்னர்  வந்த தத்துவங்கள்   பின்நவீனத்துவம் 
( post modernism ) என அறியப் படுகின்றன.

"இருத்தலியல்" (existentialism ) என்ற புதியதொரு தத்துவத்தை
பிரஞ்சு தத்துவஞானி ஜீன் பால் சார்த்தர் ( JEAN PAUL SARTRE )
முன்வைத்தார். 1950களில் இத்தத்துவம் பெரும் புகழுடன் விளங்கியது.

பெர்டினண்ட் சசூர் (FERDINAND SAUSSURE ) என்ற அறிஞர் 
"அமைப்பியல்" என்ற தத்துவத்தை முன்மொழிந்தார்.
ழாக் டெரிடா (JACQUES DERRIDA ) என்ற அறிஞர் "கட்டுடைத்தல்"
என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார்.
தொடர்ச்சியாகவும் வரிசையாகவும் பல கோட்பாடுகள் 
முன்மொழியப் பட்டன.

மிஷல் பூக்கோ ( MICHAEL FOUCALT ) 
ரொலான் பார்த் (ROLAND BARTHES )
ழாக் லக்கான் (JACQUES LACAN )
பெலிக்ஸ் கட்டாரி (FELIX  GUATTARI )
ஜீன் போத்ரியார் ( JEAN BAUDRILLARD )
ள்ளிட்ட பலப்பல அறிஞர்கள் புதிய புதிய கோட்பாடுகளை 
முன்மொழிந்தனர். மேற்கூறிய அனைத்துக் கோட்பாடுகளின் திரட்சி 
பின்நவீனத்துவம் என வழங்கப்படுகிறது.
(உதாரணத்துக்காக ஒரு சில அறிஞர்கள் மட்டுமே  
குறிப்பிடப் பட்டுள்ளனர்.)

பினநவீனத்துவம் மார்க்சியத்தைத் திறனாய்வு செய்தது;
மார்க்சியத்தின் போதாமையை அம்பலப் படுத்தியது.
இந்திய-தமிழகச் சூழலில் பின்நவீனத்துவம் செல்வாக்குப்  
பெற்றதைத் தொடர்ந்து, தலித்தியமும் பெண்ணியமும்
பெருத்த கவனிப்பைப் பெற்றன.
பெண்ணியம் சார்ந்த சிக்கல்களுக்கு
மார்க்சியத்தில் தீர்வு இல்லை என்ற 
கண்டுபிடிப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. 

ஐரோப்பியச் சூழலில் முகிழ்த்த மார்க்சியம் 
இந்தியத் துணைக்கண்டத்தின் சாதியத் தடைகளைக் 
கடக்க முடியாமல் மூச்சுத் திணறியது.

இவற்றின் விளைவாக, 
சமூகத்தின் அனைத்து நோய்களுக்குமான 
மாமருந்தாக (சர்வ ரோக நிவாரணி) மார்க்சியம் இல்லை 
என்பது புலப்பட்டது.
மார்க்சியத்தின் பற்றாக்குறைகளும் போதாமைகளும் 
தெளிவாக வெளிப்பட்டன.
தீர்வுக்கான தேடலின் அவசியம் உணரப் பட்டது. 

............ பகுதி  ​ ஒன்று முடிவுற்றது ........





1 கருத்து: