சனி, 3 மே, 2014

மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்!
பகுதி  மூன்று 
----------------------- 
இதன் விளைவாக இன்று தத்துவ அரங்கில் இரண்டே இரண்டு 
தத்துவங்கள் மட்டுமே நிலவுகின்றன.
ஒன்று: முதலாளித்துவம், 
மற்றொன்று: மார்க்சியம். 
கடந்த காலத்தில் இவை இரண்டும் கடுமையாகச் 
சமர் புரிந்தன. சமரின் இறுதியில் 
முதலாளித்துவம் தோற்றது; மார்க்சியம் வென்றது.

எனினும் முதலாளித்துவம் தோற்றதே தவிர வீழ்ந்து விடவில்லை.
புதிய ஒப்பனைகளுடனும் புதிய திருத்தங்களுடனும் சூழலுக்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டு , முதலாளித்துவம் மார்க்சியத்தைச் சமருக்கு அழைக்கிறது. போர்முனைகள் இன்னும் பல மிச்சம் இருக்கின்றன.

இறுதிக் கட்டப் போரில் மார்க்சியம் முதலாளித்துவத்தை வெல்லும்!
வெல்ல வேண்டும்!! ஏனெனில் முதலாளித்துவம் மக்களை அடிமைப் படுத்தும் தத்துவம். மார்க்சியமோ மக்களின் விடுதலைக்கான தத்துவம்.

உலகில் இதுவரை தோன்றி வளர்ந்து மறைந்த அல்லது வாழ்ந்து வரும் 
தத்துவங்கள் எவையும் ஒட்டுமொத்த மானுடத்தின் விடுதலைக்கான,
விடுதலையைச் சாதிக்கக்கூடிய செயல் திட்டம் கொண்ட தத்துவங்களாக  இல்லை, மார்க்சியத்தைத் தவிர. 

வரலாற்றில் மானுட விடுதலையை மெய்யாகவே நேசித்த சில தத்துவங்கள் அதை அடைவதற்கான வழி முறைகள் இன்றி வெற்றுக் கற்பனையாக அடங்கி விட்டன.

ஆனால் கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்த மார்க்சியம் மட்டும்தான்,  தான் பிரகடனம் செய்த மானுட விடுதலையை 
அடைய வல்ல ஆற்றல் கொண்டதாகத் திகழ்கிறது. எனவே மார்க்சியத்தை விட்டால் மானுடத்துக்கு வேறு கதி இல்லை. 1848 முதல் இன்று வரை இதுதான் நிலைமை. 

..............பகுதி மூன்று முற்றியது.................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக