சனி, 3 மே, 2014

மார்க்சியத்தைப் புதுப்பிப்போம்!
(பகுதி நான்கு) 
------------------------------------------------------     
எனினும் காலத்தை மீறி நிற்கும் தத்துவம், நிலைபேறு உடைய தத்துவம் என்று இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. இது மார்க்சியத்துக்கும் பொருந்தும்.1848-இல் மார்க்ஸ் தமது முப்பதாவது வயதில் எங்கல்சுடன்  இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டார்.
இன்று 166 ஆண்டுகள் கடந்து விட்டன. காலம் தன சுவடுகளை 
மார்க்சியத்துக்குள்ளும் அழுத்தமாகவே பதித்துள்ளது. 

மார்க்சியத்தைப் பயில்வது, பிரயோகிப்பது என்ற இயக்கப் போக்கில் மெய்யான அக்கறையுடனும் தீவிரத்துடனும் செயல்பட்டுவரும் எவர் ஒருவரும் காலச் சூழலுக்கு ஏற்ப மார்க்சியம் புதுப்பிக்கப் படவேண்டும் 
என்ற இயல்பான முடிவுக்குத் தமது பட்டறிவு மூலம் வந்து சேர்வது இயற்கை.

மார்க்சியத்தைப் புதுப்பிப்பது என்ற உடனே, தீயை மிதித்தது போல் அலறுபவர்கள் மார்க்சியர்கள் அல்லர்; மதவாதிகள்!
இவர்களுக்கு மார்க்சியம் வெறும் மதமே! இவர்கள் மார்க்சியத் தலிபான்கள்!

மாறும் என்ற விதியைத் தவிர அனைத்தும் மாறும் என்ற மார்க்சின் போதனை இவர்களின் மண்டையில் ஏறுவதே இல்லை.

...............பகுதி நான்கு முற்றியது...........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக