திங்கள், 5 மே, 2014

updating dielectical materialism

மார்க்சியத்தைப் புதுப்பிப்போம் !
(பகுதி ஆறு )
----------------------------------------------------------------------  

மார்க்சியம் ஒரு முப்பரிமாண தத்துவம்.
1) இயங்கியல் பொருள்முதல்வாதம் 
2) அரசியல் பொருளாதாரம் 
3)விஞ்ஞான சோஷலிசம்
ஆகிய முப்பரிமானங்களைக் கொண்டது மார்க்சியம்.
 இவற்றுள் பொருள்முதல்வாதமே தலையாயது.
உடனடியாகப் புதுப்பிக்கப் படவேண்டியது. 

இந்தக் கட்டுரையும் இதன் தொடர்ச்சியாக வரும் கட்டுரைகளும் 

இயங்கியல் பொருள்முதல்வாதத்தைப் புதுப்பிக்க 
வேண்டியதன் அவசியத்தையும், எவ்வாறு புதுப்பிப்பது 
என்ற விளக்கத்தையும் தெளிவு படுத்துவன  ஆகும்.

மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டமே 

இயங்கியல் பொருள் முதல்வாதம்தான்.
அரசியல் பொருளாதாரம்,விஞ்ஞான சோஷலிசம் 
ஆகியவை இயங்கியல் பொருள்முதல்வாத 
வெளிச்சத்தில்தான் படைக்கப்பட்டன. 
இயற்கை விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய கோட்பாடுகளும் மேலெழுந்த போதெல்லாம் அவற்றுக்குத் தக்கவாறு 
இயங்கியல் பொருள்முதல்வாதம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது; வளர்த்துக் கொண்டது.

மார்க்சும் எங்கல்சும் தாங்கள் வாழ்ந்த காலம் வரையிலான 
நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளை எல்லாம் உள்ளடக்கி 
இயங்கியல் பொருள்முதல்வாததைச் செழுமைப் படுத்தினர்.

எனினும் 1901 முதல் இன்று 2014 வரையிலான 

இந்த 114 ஆண்டுகளில், அறிவியல் வளர்ச்சியிடம் இருந்து 
தன்னைத் துண்டித்துக் கொண்டு நிற்கிறது 
இயங்கியல் பொருள்முதல்வாதம்.

அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாத பொருள்முதல்வாதம்  
போர்க்குணம் மிக்கதாகவோ பொருள்முதல்வாதமாகவோ 
கூட இருக்காது என்கிறார் லெனின்.

எனவே, அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, 

இயங்கியல் பொருள் முதல்வாதத்தைப் புதுப்பிப்பது  
மார்க்சியத்தின் மீது மெய்யான அக்கறை உடைய 
ஒவ்வொரு மார்க்சியரின் கடமை ஆகும். 
----------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை முற்றியது.
----------------------------------------------------------------------------------------------------- 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக