செவ்வாய், 22 ஜூலை, 2014

தன வினை தன்னைச் சுடும்!
---------------------------------------------- 
இன்றைய நாளின் ( ஜூலை 22, 2014) ஏடுகளில்
வந்த ஒரு செய்திநெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது.
( TIMES OF INDIA, CHENNAI , PAGE_3)

இணையதளம், மின்னஞ்சல் இன்ன பிற நவீன 
அறிவியலின் வாய்ப்புகளைத் தீயநோக்கத்துடன் 
பயன்படுத்தி காவல்துறையால் சிறைப்படுத்தப் பட்டு,  
சென்னை புழல் சிறையில் கம்பி எண்ணும்   
ஒரு இளைஞனைக் குறித்த செய்திதான் அது.

முஹம்மது அசார் ஷெரிப் என்ற 28 வயது இளைஞன்
திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவன். உடன் பணியாற்றிய
பெண்ணிடம் தனது காதலைத தெரிவித்தான். 
அந்தப் பெண் அவன் காதலை ஏற்கவில்லை.

எங்கிருந்தாலும் வாழ்க என்று அந்தப் பெண்ணை 
வாழ்த்தி விட்டு, வேறொரு பெண்ணைக் காதலிக்கத் 
தொடங்கி இருக்க வேண்டும் அந்த இளைஞன்.
ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. காதலிக்க 
மறுத்த பெண்ணைப் பழிவாங்க விரும்பினான்.

முகநூல்கள், மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த 
அப்பெண்ணின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு 
அதில் ஒட்டு,வெட்டு வேலைகள் செய்து
( morphed ) ஆபாசப் படமாக மாற்றி, பலருக்கும் 
மின்னஞ்சலில் அனுப்பி வைத்தான்.
மாட்டிக் கொண்டான். சிறையில் கம்பி எண்ணுகிறான்.

வக்கிர சிந்தனையும் நோய் மனமும் கொண்ட 
இந்த இளைஞன் ஓர்  எதிர்மறை உதாரணம். 
எப்படி வாழக் கூடாது  என்பதற்கான உதாரணம்.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் 
என்பது போல இத்தகைய தீச்செயலில் 
ஈடுபடுகிறவர்கள் பிடிபடுவது திண்ணம்;
தண்டிக்கப் படுவதும் திண்ணம். 
சமூகம் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும்.

   தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
   வீயாது அடியுறைந் தற்று.  .    

*******************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக